சொல்லப் படாது. இந்த மனுசனுக்கு ஒண்டும் சொல்லப்படாது.
அப்பிடித்தான் எப்பவும் நினைக்கிறனான்.
ஆனாலும்.......எங்கை.......? சில நேரத்திலை பொறுமை கெட்டுப் போயிடுது.
எத்தினைக் கெண்டு தான் நானும் பொறுமை காக்கிறுது?
காலைமை எழும்பினதிலையிருந்து ஆற அமர நேரமில்லை. வேலை.
ம்......கூம் வேலை எண்டு மட்டும் இந்த மனுசன்ரை காது படச் சொல்லக் கூடாது.
உடனை "என்னப்பா உனக்கு இஞ்சை வேலை......?"
"ஊரிலை மாதிரி என்ன இங்கையும் கல்லிலை அடிச்சு உடுப்புத் தோய்க்கிறியளோ....? அல்லது
ஆட்டுக் கல்லிலையும் அம்மியிலையும் அரைக்கிறியளோ.....? அல்லது அடுப்பைத் தன்னும் பச்சை விறகை வைச்சிட்டு ஊதி ஊதி எரிக்கிறியளோ.......?" எண்டு பன்மையிலை கேட்கத் தொடங்கீடும்.
எனக்கு வரும் கோவம். ஊரிலை என்ன மிக்சி இல்லையோ? அல்லது எலெக்றிக் குக்கர்தான் இல்லையோ? வாய்க்கு வசதியாக ஏதும் சொல்லேலுமெண்டால் எதையும் சொல்லலாமெண்டு நினைக்குது இந்த மனுசன்.
நானும் சொல்லுறதெண்டால் சொல்லுவன்.
"நீங்கள் மட்டுமென்ன....? ஊரிலை எண்டால் சைக்கிளைத்தான் தூக்கிக் கொண்டு வெளிக்கிடுவியள்.
இங்கை எண்டால் கார் இல்லையெண்டால் ஒரு அடி எடுத்து வைக்க மாட்டியள். அது மட்டுமே-விறகு கொத்துறது, தண்ணி அள்ளிக் கொண்டு வாறது......... எண்டு எத்தினை வேலையள் அங்கை உங்களுக்கும். இங்கை அப்பிடியே சாமான்கள் வேண்டுற வேலையையும் பொம்பிளையளின்ரை தலையிலை போட்டிட்டு, நான் என்ரை மனுசிக்கு சுதந்திரம் குடுத்திருக்கிறன் எண்டுவியளே! உங்கடை சுதந்திரக் குடுப்பனவு பற்றி எங்களுக்குத் தெரியாதாக்கும்.
வேலைக்குப் போறதும், சாமான் வேண்டப் போறதும் தான் பெண் விடுதலைக்கான அர்த்தம் எண்டு நீங்களெல்லாருமா ஒரு அகராதியே தயாரிச்சு வைச்சிருக்கிறீங்களே! "
ம்........இதையெல்லாம் சொல்லுறதிலை ஏதும் பிரயோசனமிருக்கே! அதாலைதான் நான் எப்பவும் நினைக்கிறதோடை நிப்பாட்டிப் போடுவன். சொல்லுறேல்லை.
சரி அதை விட்டிட்டு இப்ப பிரச்சனைக்கு வருவம்.
நான் காலைமை எழும்பி வரவே போர்வை சோபாவிலை அப்பிடியே குழம்பின படி போட்டுக் கிடக்கு. எனக்கு உடனையே எரிச்சல் வந்திட்டுது. நேற்றிரவு இந்த மனுசன்தான் போர்த்திக் கொண்டு படுத்திருந்து ரிவீ பார்த்துக் கொண்டிருந்தது. எழும்பிப் போகேக்கை போர்வையையும் எடுத்துக் கொண்டு போய் மடிச்சு வைக்கலாம்தானே. அதில்லை அப்பிடியே போர்வையை விட்டிட்டுப் போய்ப் படுத்திட்டுது.
"ஏனப்பா நீங்கள் இன்னும் சின்னப் பிள்ளையே......? உங்களுக்கு எத்தினை தடவை சொல்லிப் போட்டன். இந்தப் போர்வையை எடுத்து வைச்சால் குறைஞ்சு போயிடுவிங்களே? நாவுற்றுக்குக் கழிச்ச மாதிரி ஏன் எப்பவும் கோலுக்குள்ளை போர்வையை வைக்கிறிங்கள்?"
எண்டு கேட்க வந்த வார்த்தைகளை அப்பிடியே தொண்டையோடை நிப்பாட்டிப் போட்டன்:.
பிறகு மனுசன் சொல்லும் "விடியக் காத்தாலை தொடங்கீட்டாய் எண்டு." சும்மா சொன்னாலும் பரவாயில்லை. தன்ரை பிழையை மறைக்கிறேக்காண்டி நாய்க்கத்தல் கத்தத் தொடங்கீடும்.
எனக்கு அந்தக் கத்தலை கேட்கவே ஏலாது. எனக்கு மட்டும் என்ன விடியக் காத்தாலை இல்லையே? எனக்கும் விடியக் காத்தாலை இந்த மனுசன் அப்பிடிக் கத்தினால் மூட் அவுட்டாகும்தானே. ஆனால் மனுசன் நினைக்குது தனக்கு மட்டுந்தான் விடியக் காத்தாலை, வேலைக்களைப்பு, பஞ்சி, அலுப்பு எல்லாம் இருக்கெண்டு. எனக்கும் இதெல்லாம் இருக்கெண்டு இந்த மனுசன் நினைச்சுப் பார்த்ததாவே தெரியேல்லை.
போர்வை மட்டுந்தான் பிரச்சினை யெண்டால் தூக்கி மடிச்சு வைச்சிட்டு இருந்திடுவன். எல்லா விசயத்திலையும் அப்பிடித்தான். பேப்பரை விரிச்சு வாசிச்சா மடிச்சு வைக்கிறேல்லை. புத்தகத்தை புத்தக அலுமாரியிலையிருந்து எடுத்தா திருப்பிக் கொண்டே வைக்கிறேல்லை............. உப்பிடியே இந்த மனுசனும், பிறகு மனுசனைப் பார்த்து பிள்ளையளும் வீட்டிலை விதைச்சு விடுற சாமான்களெல்லாத்தையும் எடுத்து அந்தந்த இடத்திலை வைக்கவே எனக்கு ஒரு நாளிலை அரைவாசி போயிடும். அதுக்குள்ளை மனுசன் கேட்கும் "உனக்கென்ன வேலை...?" எண்டு.
காலைமை எழும்பினதிலையிருந்து வேலை எண்டெல்லே சொன்னனான். அதுதான் போர்வையை மடிச்சு வைக்கிறதிலை தொடங்கி ஒண்டொண்டா எல்லாத்தையும் அடுக்கி வைச்சு, சமைச்சு ........மற்ற வேலையளையெல்லாம் முடிச்சு....... நான் வேலைக்கு வெளிக்கிடக்கிளை அப்பிடியே வீடு பளிச்செண்டு இருந்திச்சு. எனக்கு அதைப் பார்க்கவே ஒரு சந்தோஷம்.
அந்த சந்தோஷத்தோடையே வேலைக்குப் போயிட்டன்.
வேலைக்குப் போனால் வேலை செய்யோணும் தானே. ஆனால் என்ரை மனுசன்ரை நினைப்பு, தான் மட்டும்தான் வேலையிடத்திலை வேலை செய்யிறது. நான் எண்டால் சும்மா இருந்திட்டு வாறதெண்டு. சரி ஏதோ நினைச்சிட்டுப் போகட்டும்.
எனக்கு வேலை முடிஞ்சால் நிம்மதி. இனி வீட்டை போகலாமெண்டு.
அப்பிடித்தான் வேலை முடிய நிம்மதியா வீட்டை வந்தன். அதையேன் பேசுவான். பளிச்செண்டு நான் விட்டிட்டுப் போன வீடு என்னைப் பார்த்து இளிக்கிற மாதிரி.......எல்லாம் தலை கீழாய். மேசையிலை புத்தகங்கள், பேப்பருகள், கடிதங்கள்.............. குசினிக்குள்ளை ஒரு குவியல் கோப்பையள்...........
கட்டிலுக்குப் பக்கத்திலை சுருட்டின படி மனுசன்ரை சொக்ஸ்..........
மனுசன் சோபாக்குள்ளை சுருண்டபடி அந்தப் போர்வையாலை போர்த்திக்கொண்டு பேசாமல் படுத்திருந்து ரிவீ பார்க்குது...... மனுசனுக்கு வேலைக்களைப்பு அதுதான். எனக்கு வந்துதே கோபமும் எரிச்சலும். கூட்டித் துடைச்சு அடுக்கி வைக்கத்தான் முடியேல்லை. அடுக்கினதுகளையாவது குழப்பாமல் இருக்கலாம்தானே.
ஆனால் நான் ஒண்டுமே சொல்லேல்லை. மனசுக்குள்ளை குமைச்சலாத்தான் இருந்தது. ஆனாலும் பேசாமல் மனுசனுக்கு தேத்தண்ணியை போட்டுக் குடுத்திட்டு -தேத்தண்ணியை உடனை போட்டுக் குடுக்காட்டி மனுசன் பிறகு மூஞ்சையை நீட்டிக் கொண்டு இருக்கும். எனக்கு இருக்கிற குமைச்சலும் எரிச்சலும் போதும். இன்னும் கூட்ட வேண்டாம் எண்டிட்டு அந்த வேலையை உடனை செய்திட்டு.... பிள்ளையள் சாப்பிட்டுதுகளோ குடிச்சுதுகளோ எண்டு பார்த்து..... இண்டைக்கு என்ன படிச்சது....... வெளியிலை என்ன நடந்தது........ எல்லாம் கேட்டு முடிச்சிட்டு.... பழையபடி அடுக்கல் கூட்டல் துடைத்தல்.... எண்டு எல்லாம் முடிய 11 மணியாச்சு. காலும் வேலை விட்ட போலை நோகத் தொடங்கீட்டுது. சரி இனி இண்டைக்கு ஒண்டும் செய்யேலாது படுப்பம் எண்டு நினைச்சுக் கொண்டு போனால் ரிவீ தன்ரை பாட்டிலை போய்க் கொண்டிருக்கு.... அது மட்டுமே!!. பழைய படி போர்வை சோபாவிலை...............
மனுசன் நைசா அதை அப்பிடியே விட்டிட்டுப் போய்ப் படுத்திட்டுது போலை........
எனக்கு வந்துதே கோபம். விறுவிறென்று போய் படுக்கையறையைப் பார்த்தன். மனுசன் ஒய்யாரமாப் படுத்திருந்து புத்தகம் வாசிக்குது.
சொல்லப்படாது எண்டுதான் முதல்லை நினைச்சனான். ஆனால் என்னையறியாமல் பொறுமை கெட்டுச் சொல்லிப்போட்டன்.
"ஏனப்பா அந்தப் போர்வையை எடுத்து வைக்கிறதுக்கென்ன......?
எத்தினை தரமெண்டு உங்களுக்குச் சொல்லுறது....!"
நான் சொல்லி முடிக்கேல்லை. மனுசன் இரவெண்டும் பாராமல் பொரிஞ்சு தள்ளிச்சே.
"நீ என்னத்துக்குப் பெண்டாட்டியெண்டு இருக்கிறாய்? எடுத்து வைக்கிறதுதானே!
மனுசருக்கு இருக்கிற பிரச்சனையள் தெரியாமல்... உனக்கு இப்ப போர்வைதான் பிரச்சனையாக்கும்."
எனக்குத்தானே முதலே பொறுமை கெட்டிட்டு. நானும் விடேல்லை.
"என்னப்பா உங்களுக்கு அப்பிடிப் பிரச்சனை." எண்டு கேட்டிட்டன்.
என்ன இவள் இப்பிடி பதில் சொல்லேலாத கேள்வியாப் பார்த்துக் கேக்கிறாளே எண்டு நினைச்சுதோ என்னவோ - மனுசனுக்கு வந்துதே ஒரு கோபம். அப்பிடியே முழுசி என்னை ஒரு பார்வை பார்த்திச்சு.
ஏதோ தான் பெரிய கௌசிக முனிவர். அவற்றை பார்வையிலை நான் எரிஞ்சு சாம்பலாயிடுவன் எண்ட நினைப்பு.
"என்னை என்ன கொக்கெண்டு நினைச்சியோ கொங்கணவா...?"
எண்டு கேக்கத்தான் எனக்கு மனம் வந்திச்சு.
ம்..........பிறகேன் பிரச்சினையை வளர்ப்பான் எண்டிட்டு பேசாமல் வெளிலை வந்திட்டன்.
மனுசன் நினைச்சிருக்கும் தன்ரை பார்வேலை நான் பயந்திட்டனெண்டு.
சந்திரவதனா
யேர்மனி
2001
Wednesday, June 23, 2004
என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையே...?
எனக்கு வாற கோவத்துக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.
நான் பாத்ரூமுக்குள்ளை போய் தலையிலை சீப்பை வைக்குது வைக்க முன்னமே திரும்பவும் இந்த மனுசன் கத்துது. "என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே..?" எண்டு.
எனனெண்டு முடியிறது?
காலைமை எழும்பி, வீட்டை ஒரு நிலைப் படுத்தி, அவசரமாய்ச் சமைச்சு, அதுக்கிடையிலை சின்னச் சின்னதா வீட்டிலை உள்ள மற்ற வேலையளைப் பார்த்து, அதோடை சமையலையும் முடிச்சு இந்த மனுசனுக்கு சாப்பாடும் குடுத்திட்டன்.
மனுசன் நித்திரையாலை எழும்பி படுக்கையைக் கூட விரிக்காமல் வந்து இருந்து நான் போட்டுக் குடுத்த கோப்பியைக் குடிச்சிட்டு, நான் கீழை போய் தபால்பெட்டிகக்குள்ளை இருந்து எடுத்துக் கொண்டு வந்த பேப்பரை வைச்சு நீட்டிலை வாசிச்சுக் கொண்டு இருந்திச்சு.
நான் பம்பரமாய் சுழண்டனே!. ஓரு உதவி செய்வம் எண்டில்லை.
சரி உதவத்தான் முடியேல்லை. உபத்திரமாவது தராமல் இருந்துதே!
இருந்து கொண்டு---- "இஞ்சரும் அந்தக் கண்ணாடியை எடுத்துத் தாரும்.
இஞ்சரும் இந்தக் கோப்பி கொஞ்சம் ஆறிப்போட்டுது. புதுசா ஒண்டு போட்டுத் தாரும்..........." .எண்டு தொல்லை வேறை.
அது மட்டுமே-
"எங்கையப்பா அண்டைக்கொரு என்வெலப் தந்தனே. அதையொருக்கால் தாரும்."
ம்...... தானே வைக்கலாம்தானே. கொண்டு வந்ததை என்னட்டைத் தாறது.
பிறகு எங்கையப்பா அது எண்டுறது.
இதெல்லாம் நல்ல புத்தி சாதுரியமான வேலையள் எண்டு மட்டும் எனக்குத் தெரியாதே. கதிரைக்குள்ளை இருந்து கொண்டு காரியம் சாதிக்கிற தன்மையள்.
சரி பேப்பரை வாசிச்சு முடிச்சிட்டு பாத்ரூமுக்குள்ளை போன மனுசன் சேவ்
பண்ணுறன் அது இது எண்டு சொல்லி ஒரு மணித்தியாலமாய் வெளிலை வரேல்லை.
அதுக்குள்ளை நான் பிள்ளையளின்ரை வேலையளை ஓடி ஓடி முடிச்சிட்டன்.
அதுகளும் எங்கை.......? அப்பா கதிரைக்குள்ளையும் சோபாவுக்குள்ளையும் இருக்க அம்மாதானே வேலையெல்லாம் செய்யிறா. அப்பிடியெண்டால் வேலையெல்லாம் அம்மாக்குத்தான் சொந்தம் எண்டு நினைக்குதுகள்.
அல்லது அம்மா வேலை செய்யிற மெஷின் எண்டு நினைக்குதுகுளோ!!!
மனுசன் குளிச்சிட்டு வெளிலை வருறதுக்கு முன்னமே சாப்பாட்டை ரெடியா மேசையிலை வைச்சிட்டன். மனுசன் ஏதோ நான் சமைக்கிறதுக்கெண்டே பிறந்தவள் எண்டு நினைச்சுதோ என்னவோ, நல்லாயிருக்கப்பா எண்டு ஒரு வார்த்தை பேசேல்லை. வேறை ஏதோ எனக்குத் தேவையில்லாத கதையளைச் சொல்லுறதும் "நாளைக்கு அந்த வேலையை செய். அங்கை அபபொயிண்ட்மெண்ட் எடுத்து வை" எண்டு எனக்கு கட்டளைகள் இடுவதுமாய் இருந்திச்சு.
எனக்கு பயங்கர எரிச்சல் மனசுக்குள்ளை. என்ரை எரிச்சலை இந்த மனுசனுக்குக் காட்டி ஏதும் பிரயோசனமிருக்கோ எண்டு நினைச்சுக் கொண்டு மனுசன் சாப்பிட்டு முடிச்ச கையோடை ரீ யைப் போட்டுக் குடுத்தன்.
ரீ யைக் குடிச்சுக் கொண்டே மனுசன் தொடங்கீட்டுது.
"என்னப்பா நீ இன்னும் வெளிக்கிடேல்லையே எண்டு...?"
எனக்கு கோவம் தான் வந்துது.
என்னெண்டு வெளிக்கிடுறது?
கொஞ்சம் கூட ஒத்தாசை பண்ணாமல் ..............
சாப்பிட்டு முடிய சாப்பாட்டைக் கூட மேசையிலை இருந்து எடுத்து வைக்காமல்....
போய் ரீவீ க்கு முன்னாலை இருந்து கொண்டு..........
எனக்கு வந்த கோவத்துக்கு
"ஏனப்பா இஞ்சை வாங்கோ. இதுகளை நீங்கள் எடுத்து வைச்சீங்களெண்டால்-- நான் டக் கெண்டு வெளிக்கிட்டிடுவன்தானே." எண்டு சொல்லோணும் போலை இருந்திச்சு.
ம்...... இப்ப சொல்லப் போய், அதுவும் வெளிக்கிடுற நேரம்
பிறகு மனுசன் "நான் என்ன உன்னைப் போலை சும்மா வீட்டிலையே இருக்கிறன். வேலைக்குப் போற மனுசனை ஒரு நேரம் ஆறுதலா இருக்க விடமாட்டாய்" எண்டு தொடங்கீடும்.
பிறகு எனக்கு மூட் அவுட் ஆகி--------- ஏன் பிரச்சனையை எண்டிட்டு
வாயை மூடிக்கொண்டு எல்லாத்தையும் எடுத்து வைச்சன்.
மனுசன் ஆற அமர இருந்து ரீ யைக் குடிச்சுக் கொண்டு ரீவீ யை ரசிச்சுக் கொண்டு இருந்திச்சு. எனக்கு குளிச்சுப் போட்டு வரவும் வேர்த்துக் கொட்டிச்சு.
ஒரு மாதிரி சாறியை உடுத்திட்டு வந்து தலையை இழுக்கிறதுக்கு சீப்பை தலையிலை வைக்கவே மனுசன் திரும்பத் தொடங்கீட்டுது. "என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே எண்டு...?"
நல்லா திருப்பிக் குடுக்கோணும் போலை எனக்குக் கோவம் பொத்துக் கொண்டு வருது. ம்........ குடுத்தென்ன!. மனுசன் பிறகு இன்னும் சிடுசிடுக்கும்.
சரி ஒரு மாதிரி வெளிக்கிட்டாச்சு.
மனுசன் இப்ப எழும்பிப் போய் வெளிக்கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிண்டு......
"நீ வெளிக்கிட்டு வாறதுக்கிடையிலை அங்கை புரோக்கிராம் முடிஞ்சு எல்லாரும் வீடடையும் போடுவாங்கள். ஏன் தான் இந்தப் பொம்பிளையள் வெளிக்கிட இவ்வளவு நேரமோ.....?" எண்டு என்னை மட்டுமில்லாமல் பொம்பிளை வர்க்கத்தையே பேசிக்கொண்டு நிக்குது.
நானும் ஏதும் சொல்லோணும் எண்டு துடிக்கிற நாக்கை அப்படியே மடக்கி வாயை இறுக்கி மூடிப்போட்டன்.
வெளிலை போறதுக்கு முன்னம் வீட்டிலை எல்லாம் சரியா இருக்கோ எண்டு பார்த்தன். அதையேன் பேசுவான்.
வழக்கம் போலை லைற் எரியுது- ரீவீ நிற்பாட்டேல்லை. அது மட்டுமே..........?
மனுசன் வாசிச்ச பேப்பர் மேசையிலை விரிச்ச படி இருக்கு.
குடிச்ச கோப்பை கதிரைக்குப் பக்கத்திலை கீழை நிலத்திலை கிடக்குது.
எனக்கு என்ரை மனுசனிலை வந்த கோவம், சும்மா கொஞ்ச நஞ்ச மில்லை.
எண்டாலும் வந்த கோவத்தை அப்பிடியே எனக்குள்ளையே அடக்கிட்டன்.
ஏனெண்டால் மனுசன் கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிக்குது. இப்ப போய் நான் என்ரை கோவத்தைக் காட்டுறன் எண்டு சொல்லிக் கத்த---
எதிர் வீட்டுக் காரர் சொல்லுவினம் "ஒரு அடக்கமில்லாத பொம்பிளை, என்னமா புருஷனைத் திட்டுது. கலிகாலம் முத்திப்போச்சு. பாவம் அந்த மனுசன்...“ எண்டு.
அதுதான் சாறியை இழுத்து இடுப்பிலை செருகிக்கொண்டு ஓடி ஓடி லைற்றை நிற்பாட்டி, ரீவீ யை நிற்பாட்டி, பேப்பரை மடிச்சு வைச்சு, கோப்பையையும் எடுத்து வைச்சிட்டு.......
மனுசனோடை மௌனமா நடந்து போறன். மனசுக்குள்ளை மட்டும்..............கோவம்
ஆறாமல் இருக்குது. அது ஆரை என்ன செய்யப் போகுது.
-முற்றும்-
சந்திரவதனா
யேர்மனி
பிரசுரம் - ஈழமுரசு(25-31 ஒக்டோபர் 2001)
நான் பாத்ரூமுக்குள்ளை போய் தலையிலை சீப்பை வைக்குது வைக்க முன்னமே திரும்பவும் இந்த மனுசன் கத்துது. "என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே..?" எண்டு.
எனனெண்டு முடியிறது?
காலைமை எழும்பி, வீட்டை ஒரு நிலைப் படுத்தி, அவசரமாய்ச் சமைச்சு, அதுக்கிடையிலை சின்னச் சின்னதா வீட்டிலை உள்ள மற்ற வேலையளைப் பார்த்து, அதோடை சமையலையும் முடிச்சு இந்த மனுசனுக்கு சாப்பாடும் குடுத்திட்டன்.
மனுசன் நித்திரையாலை எழும்பி படுக்கையைக் கூட விரிக்காமல் வந்து இருந்து நான் போட்டுக் குடுத்த கோப்பியைக் குடிச்சிட்டு, நான் கீழை போய் தபால்பெட்டிகக்குள்ளை இருந்து எடுத்துக் கொண்டு வந்த பேப்பரை வைச்சு நீட்டிலை வாசிச்சுக் கொண்டு இருந்திச்சு.
நான் பம்பரமாய் சுழண்டனே!. ஓரு உதவி செய்வம் எண்டில்லை.
சரி உதவத்தான் முடியேல்லை. உபத்திரமாவது தராமல் இருந்துதே!
இருந்து கொண்டு---- "இஞ்சரும் அந்தக் கண்ணாடியை எடுத்துத் தாரும்.
இஞ்சரும் இந்தக் கோப்பி கொஞ்சம் ஆறிப்போட்டுது. புதுசா ஒண்டு போட்டுத் தாரும்..........." .எண்டு தொல்லை வேறை.
அது மட்டுமே-
"எங்கையப்பா அண்டைக்கொரு என்வெலப் தந்தனே. அதையொருக்கால் தாரும்."
ம்...... தானே வைக்கலாம்தானே. கொண்டு வந்ததை என்னட்டைத் தாறது.
பிறகு எங்கையப்பா அது எண்டுறது.
இதெல்லாம் நல்ல புத்தி சாதுரியமான வேலையள் எண்டு மட்டும் எனக்குத் தெரியாதே. கதிரைக்குள்ளை இருந்து கொண்டு காரியம் சாதிக்கிற தன்மையள்.
சரி பேப்பரை வாசிச்சு முடிச்சிட்டு பாத்ரூமுக்குள்ளை போன மனுசன் சேவ்
பண்ணுறன் அது இது எண்டு சொல்லி ஒரு மணித்தியாலமாய் வெளிலை வரேல்லை.
அதுக்குள்ளை நான் பிள்ளையளின்ரை வேலையளை ஓடி ஓடி முடிச்சிட்டன்.
அதுகளும் எங்கை.......? அப்பா கதிரைக்குள்ளையும் சோபாவுக்குள்ளையும் இருக்க அம்மாதானே வேலையெல்லாம் செய்யிறா. அப்பிடியெண்டால் வேலையெல்லாம் அம்மாக்குத்தான் சொந்தம் எண்டு நினைக்குதுகள்.
அல்லது அம்மா வேலை செய்யிற மெஷின் எண்டு நினைக்குதுகுளோ!!!
மனுசன் குளிச்சிட்டு வெளிலை வருறதுக்கு முன்னமே சாப்பாட்டை ரெடியா மேசையிலை வைச்சிட்டன். மனுசன் ஏதோ நான் சமைக்கிறதுக்கெண்டே பிறந்தவள் எண்டு நினைச்சுதோ என்னவோ, நல்லாயிருக்கப்பா எண்டு ஒரு வார்த்தை பேசேல்லை. வேறை ஏதோ எனக்குத் தேவையில்லாத கதையளைச் சொல்லுறதும் "நாளைக்கு அந்த வேலையை செய். அங்கை அபபொயிண்ட்மெண்ட் எடுத்து வை" எண்டு எனக்கு கட்டளைகள் இடுவதுமாய் இருந்திச்சு.
எனக்கு பயங்கர எரிச்சல் மனசுக்குள்ளை. என்ரை எரிச்சலை இந்த மனுசனுக்குக் காட்டி ஏதும் பிரயோசனமிருக்கோ எண்டு நினைச்சுக் கொண்டு மனுசன் சாப்பிட்டு முடிச்ச கையோடை ரீ யைப் போட்டுக் குடுத்தன்.
ரீ யைக் குடிச்சுக் கொண்டே மனுசன் தொடங்கீட்டுது.
"என்னப்பா நீ இன்னும் வெளிக்கிடேல்லையே எண்டு...?"
எனக்கு கோவம் தான் வந்துது.
என்னெண்டு வெளிக்கிடுறது?
கொஞ்சம் கூட ஒத்தாசை பண்ணாமல் ..............
சாப்பிட்டு முடிய சாப்பாட்டைக் கூட மேசையிலை இருந்து எடுத்து வைக்காமல்....
போய் ரீவீ க்கு முன்னாலை இருந்து கொண்டு..........
எனக்கு வந்த கோவத்துக்கு
"ஏனப்பா இஞ்சை வாங்கோ. இதுகளை நீங்கள் எடுத்து வைச்சீங்களெண்டால்-- நான் டக் கெண்டு வெளிக்கிட்டிடுவன்தானே." எண்டு சொல்லோணும் போலை இருந்திச்சு.
ம்...... இப்ப சொல்லப் போய், அதுவும் வெளிக்கிடுற நேரம்
பிறகு மனுசன் "நான் என்ன உன்னைப் போலை சும்மா வீட்டிலையே இருக்கிறன். வேலைக்குப் போற மனுசனை ஒரு நேரம் ஆறுதலா இருக்க விடமாட்டாய்" எண்டு தொடங்கீடும்.
பிறகு எனக்கு மூட் அவுட் ஆகி--------- ஏன் பிரச்சனையை எண்டிட்டு
வாயை மூடிக்கொண்டு எல்லாத்தையும் எடுத்து வைச்சன்.
மனுசன் ஆற அமர இருந்து ரீ யைக் குடிச்சுக் கொண்டு ரீவீ யை ரசிச்சுக் கொண்டு இருந்திச்சு. எனக்கு குளிச்சுப் போட்டு வரவும் வேர்த்துக் கொட்டிச்சு.
ஒரு மாதிரி சாறியை உடுத்திட்டு வந்து தலையை இழுக்கிறதுக்கு சீப்பை தலையிலை வைக்கவே மனுசன் திரும்பத் தொடங்கீட்டுது. "என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே எண்டு...?"
நல்லா திருப்பிக் குடுக்கோணும் போலை எனக்குக் கோவம் பொத்துக் கொண்டு வருது. ம்........ குடுத்தென்ன!. மனுசன் பிறகு இன்னும் சிடுசிடுக்கும்.
சரி ஒரு மாதிரி வெளிக்கிட்டாச்சு.
மனுசன் இப்ப எழும்பிப் போய் வெளிக்கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிண்டு......
"நீ வெளிக்கிட்டு வாறதுக்கிடையிலை அங்கை புரோக்கிராம் முடிஞ்சு எல்லாரும் வீடடையும் போடுவாங்கள். ஏன் தான் இந்தப் பொம்பிளையள் வெளிக்கிட இவ்வளவு நேரமோ.....?" எண்டு என்னை மட்டுமில்லாமல் பொம்பிளை வர்க்கத்தையே பேசிக்கொண்டு நிக்குது.
நானும் ஏதும் சொல்லோணும் எண்டு துடிக்கிற நாக்கை அப்படியே மடக்கி வாயை இறுக்கி மூடிப்போட்டன்.
வெளிலை போறதுக்கு முன்னம் வீட்டிலை எல்லாம் சரியா இருக்கோ எண்டு பார்த்தன். அதையேன் பேசுவான்.
வழக்கம் போலை லைற் எரியுது- ரீவீ நிற்பாட்டேல்லை. அது மட்டுமே..........?
மனுசன் வாசிச்ச பேப்பர் மேசையிலை விரிச்ச படி இருக்கு.
குடிச்ச கோப்பை கதிரைக்குப் பக்கத்திலை கீழை நிலத்திலை கிடக்குது.
எனக்கு என்ரை மனுசனிலை வந்த கோவம், சும்மா கொஞ்ச நஞ்ச மில்லை.
எண்டாலும் வந்த கோவத்தை அப்பிடியே எனக்குள்ளையே அடக்கிட்டன்.
ஏனெண்டால் மனுசன் கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிக்குது. இப்ப போய் நான் என்ரை கோவத்தைக் காட்டுறன் எண்டு சொல்லிக் கத்த---
எதிர் வீட்டுக் காரர் சொல்லுவினம் "ஒரு அடக்கமில்லாத பொம்பிளை, என்னமா புருஷனைத் திட்டுது. கலிகாலம் முத்திப்போச்சு. பாவம் அந்த மனுசன்...“ எண்டு.
அதுதான் சாறியை இழுத்து இடுப்பிலை செருகிக்கொண்டு ஓடி ஓடி லைற்றை நிற்பாட்டி, ரீவீ யை நிற்பாட்டி, பேப்பரை மடிச்சு வைச்சு, கோப்பையையும் எடுத்து வைச்சிட்டு.......
மனுசனோடை மௌனமா நடந்து போறன். மனசுக்குள்ளை மட்டும்..............கோவம்
ஆறாமல் இருக்குது. அது ஆரை என்ன செய்யப் போகுது.
-முற்றும்-
சந்திரவதனா
யேர்மனி
பிரசுரம் - ஈழமுரசு(25-31 ஒக்டோபர் 2001)
என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையே...?
எனக்கு வாற கோவத்துக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.
நான் பாத்ரூமுக்குள்ளை போய் தலையிலை சீப்பை வைக்குது வைக்க முன்னமே திரும்பவும் இந்த மனுசன் கத்துது. "என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே..?" எண்டு.
எனனெண்டு முடியிறது?
காலைமை எழும்பி, வீட்டை ஒரு நிலைப் படுத்தி, அவசரமாய்ச் சமைச்சு, அதுக்கிடையிலை சின்னச் சின்னதா வீட்டிலை உள்ள மற்ற வேலையளைப் பார்த்து, அதோடை சமையலையும் முடிச்சு இந்த மனுசனுக்கு சாப்பாடும் குடுத்திட்டன்.
மனுசன் நித்திரையாலை எழும்பி படுக்கையைக் கூட விரிக்காமல் வந்து இருந்து நான் போட்டுக் குடுத்த கோப்பியைக் குடிச்சிட்டு, நான் கீழை போய் தபால்பெட்டிகக்குள்ளை இருந்து எடுத்துக் கொண்டு வந்த பேப்பரை வைச்சு நீட்டிலை வாசிச்சுக் கொண்டு இருந்திச்சு.
நான் பம்பரமாய் சுழண்டனே!. ஓரு உதவி செய்வம் எண்டில்லை.
சரி உதவத்தான் முடியேல்லை. உபத்திரமாவது தராமல் இருந்துதே!
இருந்து கொண்டு---- "இஞ்சரும் அந்தக் கண்ணாடியை எடுத்துத் தாரும்.
இஞ்சரும் இந்தக் கோப்பி கொஞ்சம் ஆறிப்போட்டுது. புதுசா ஒண்டு போட்டுத் தாரும்..........." .எண்டு தொல்லை வேறை.
அது மட்டுமே-
"எங்கையப்பா அண்டைக்கொரு என்வெலப் தந்தனே. அதையொருக்கால் தாரும்."
ம்...... தானே வைக்கலாம்தானே. கொண்டு வந்ததை என்னட்டைத் தாறது.
பிறகு எங்கையப்பா அது எண்டுறது.
இதெல்லாம் நல்ல புத்தி சாதுரியமான வேலையள் எண்டு மட்டும் எனக்குத் தெரியாதே. கதிரைக்குள்ளை இருந்து கொண்டு காரியம் சாதிக்கிற தன்மையள்.
சரி பேப்பரை வாசிச்சு முடிச்சிட்டு பாத்ரூமுக்குள்ளை போன மனுசன் சேவ்
பண்ணுறன் அது இது எண்டு சொல்லி ஒரு மணித்தியாலமாய் வெளிலை வரேல்லை.
அதுக்குள்ளை நான் பிள்ளையளின்ரை வேலையளை ஓடி ஓடி முடிச்சிட்டன்.
அதுகளும் எங்கை.......? அப்பா கதிரைக்குள்ளையும் சோபாவுக்குள்ளையும் இருக்க அம்மாதானே வேலையெல்லாம் செய்யிறா. அப்பிடியெண்டால் வேலையெல்லாம் அம்மாக்குத்தான் சொந்தம் எண்டு நினைக்குதுகள்.
அல்லது அம்மா வேலை செய்யிற மெஷின் எண்டு நினைக்குதுகுளோ!!!
மனுசன் குளிச்சிட்டு வெளிலை வருறதுக்கு முன்னமே சாப்பாட்டை ரெடியா மேசையிலை வைச்சிட்டன். மனுசன் ஏதோ நான் சமைக்கிறதுக்கெண்டே பிறந்தவள் எண்டு நினைச்சுதோ என்னவோ, நல்லாயிருக்கப்பா எண்டு ஒரு வார்த்தை பேசேல்லை. வேறை ஏதோ எனக்குத் தேவையில்லாத கதையளைச் சொல்லுறதும் "நாளைக்கு அந்த வேலையை செய். அங்கை அபபொயிண்ட்மெண்ட் எடுத்து வை" எண்டு எனக்கு கட்டளைகள் இடுவதுமாய் இருந்திச்சு.
எனக்கு பயங்கர எரிச்சல் மனசுக்குள்ளை. என்ரை எரிச்சலை இந்த மனுசனுக்குக் காட்டி ஏதும் பிரயோசனமிருக்கோ எண்டு நினைச்சுக் கொண்டு மனுசன் சாப்பிட்டு முடிச்ச கையோடை ரீ யைப் போட்டுக் குடுத்தன்.
ரீ யைக் குடிச்சுக் கொண்டே மனுசன் தொடங்கீட்டுது.
"என்னப்பா நீ இன்னும் வெளிக்கிடேல்லையே எண்டு...?"
எனக்கு கோவம் தான் வந்துது.
என்னெண்டு வெளிக்கிடுறது?
கொஞ்சம் கூட ஒத்தாசை பண்ணாமல் ..............
சாப்பிட்டு முடிய சாப்பாட்டைக் கூட மேசையிலை இருந்து எடுத்து வைக்காமல்....
போய் ரீவீ க்கு முன்னாலை இருந்து கொண்டு..........
எனக்கு வந்த கோவத்துக்கு
"ஏனப்பா இஞ்சை வாங்கோ. இதுகளை நீங்கள் எடுத்து வைச்சீங்களெண்டால்-- நான் டக் கெண்டு வெளிக்கிட்டிடுவன்தானே." எண்டு சொல்லோணும் போலை இருந்திச்சு.
ம்...... இப்ப சொல்லப் போய், அதுவும் வெளிக்கிடுற நேரம்
பிறகு மனுசன் "நான் என்ன உன்னைப் போலை சும்மா வீட்டிலையே இருக்கிறன். வேலைக்குப் போற மனுசனை ஒரு நேரம் ஆறுதலா இருக்க விடமாட்டாய்" எண்டு தொடங்கீடும்.
பிறகு எனக்கு மூட் அவுட் ஆகி--------- ஏன் பிரச்சனையை எண்டிட்டு
வாயை மூடிக்கொண்டு எல்லாத்தையும் எடுத்து வைச்சன்.
மனுசன் ஆற அமர இருந்து ரீ யைக் குடிச்சுக் கொண்டு ரீவீ யை ரசிச்சுக் கொண்டு இருந்திச்சு. எனக்கு குளிச்சுப் போட்டு வரவும் வேர்த்துக் கொட்டிச்சு.
ஒரு மாதிரி சாறியை உடுத்திட்டு வந்து தலையை இழுக்கிறதுக்கு சீப்பை தலையிலை வைக்கவே மனுசன் திரும்பத் தொடங்கீட்டுது. "என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே எண்டு...?"
நல்லா திருப்பிக் குடுக்கோணும் போலை எனக்குக் கோவம் பொத்துக் கொண்டு வருது. ம்........ குடுத்தென்ன!. மனுசன் பிறகு இன்னும் சிடுசிடுக்கும்.
சரி ஒரு மாதிரி வெளிக்கிட்டாச்சு.
மனுசன் இப்ப எழும்பிப் போய் வெளிக்கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிண்டு......
"நீ வெளிக்கிட்டு வாறதுக்கிடையிலை அங்கை புரோக்கிராம் முடிஞ்சு எல்லாரும் வீடடையும் போடுவாங்கள். ஏன் தான் இந்தப் பொம்பிளையள் வெளிக்கிட இவ்வளவு நேரமோ.....?" எண்டு என்னை மட்டுமில்லாமல் பொம்பிளை வர்க்கத்தையே பேசிக்கொண்டு நிக்குது.
நானும் ஏதும் சொல்லோணும் எண்டு துடிக்கிற நாக்கை அப்படியே மடக்கி வாயை இறுக்கி மூடிப்போட்டன்.
வெளிலை போறதுக்கு முன்னம் வீட்டிலை எல்லாம் சரியா இருக்கோ எண்டு பார்த்தன். அதையேன் பேசுவான்.
வழக்கம் போலை லைற் எரியுது- ரீவீ நிற்பாட்டேல்லை. அது மட்டுமே..........?
மனுசன் வாசிச்ச பேப்பர் மேசையிலை விரிச்ச படி இருக்கு.
குடிச்ச கோப்பை கதிரைக்குப் பக்கத்திலை கீழை நிலத்திலை கிடக்குது.
எனக்கு என்ரை மனுசனிலை வந்த கோவம், சும்மா கொஞ்ச நஞ்ச மில்லை.
எண்டாலும் வந்த கோவத்தை அப்பிடியே எனக்குள்ளையே அடக்கிட்டன்.
ஏனெண்டால் மனுசன் கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிக்குது. இப்ப போய் நான் என்ரை கோவத்தைக் காட்டுறன் எண்டு சொல்லிக் கத்த---
எதிர் வீட்டுக் காரர் சொல்லுவினம் "ஒரு அடக்கமில்லாத பொம்பிளை, என்னமா புருஷனைத் திட்டுது. கலிகாலம் முத்திப்போச்சு. பாவம் அந்த மனுசன்...“ எண்டு.
அதுதான் சாறியை இழுத்து இடுப்பிலை செருகிக்கொண்டு ஓடி ஓடி லைற்றை நிற்பாட்டி, ரீவீ யை நிற்பாட்டி, பேப்பரை மடிச்சு வைச்சு, கோப்பையையும் எடுத்து வைச்சிட்டு.......
மனுசனோடை மௌனமா நடந்து போறன். மனசுக்குள்ளை மட்டும்..............கோவம்
ஆறாமல் இருக்குது. அது ஆரை என்ன செய்யப் போகுது.
-முற்றும்-
சந்திரவதனா
யேர்மனி
பிரசுரம் - ஈழமுரசு(25-31 ஒக்டோபர் 2001)
நான் பாத்ரூமுக்குள்ளை போய் தலையிலை சீப்பை வைக்குது வைக்க முன்னமே திரும்பவும் இந்த மனுசன் கத்துது. "என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே..?" எண்டு.
எனனெண்டு முடியிறது?
காலைமை எழும்பி, வீட்டை ஒரு நிலைப் படுத்தி, அவசரமாய்ச் சமைச்சு, அதுக்கிடையிலை சின்னச் சின்னதா வீட்டிலை உள்ள மற்ற வேலையளைப் பார்த்து, அதோடை சமையலையும் முடிச்சு இந்த மனுசனுக்கு சாப்பாடும் குடுத்திட்டன்.
மனுசன் நித்திரையாலை எழும்பி படுக்கையைக் கூட விரிக்காமல் வந்து இருந்து நான் போட்டுக் குடுத்த கோப்பியைக் குடிச்சிட்டு, நான் கீழை போய் தபால்பெட்டிகக்குள்ளை இருந்து எடுத்துக் கொண்டு வந்த பேப்பரை வைச்சு நீட்டிலை வாசிச்சுக் கொண்டு இருந்திச்சு.
நான் பம்பரமாய் சுழண்டனே!. ஓரு உதவி செய்வம் எண்டில்லை.
சரி உதவத்தான் முடியேல்லை. உபத்திரமாவது தராமல் இருந்துதே!
இருந்து கொண்டு---- "இஞ்சரும் அந்தக் கண்ணாடியை எடுத்துத் தாரும்.
இஞ்சரும் இந்தக் கோப்பி கொஞ்சம் ஆறிப்போட்டுது. புதுசா ஒண்டு போட்டுத் தாரும்..........." .எண்டு தொல்லை வேறை.
அது மட்டுமே-
"எங்கையப்பா அண்டைக்கொரு என்வெலப் தந்தனே. அதையொருக்கால் தாரும்."
ம்...... தானே வைக்கலாம்தானே. கொண்டு வந்ததை என்னட்டைத் தாறது.
பிறகு எங்கையப்பா அது எண்டுறது.
இதெல்லாம் நல்ல புத்தி சாதுரியமான வேலையள் எண்டு மட்டும் எனக்குத் தெரியாதே. கதிரைக்குள்ளை இருந்து கொண்டு காரியம் சாதிக்கிற தன்மையள்.
சரி பேப்பரை வாசிச்சு முடிச்சிட்டு பாத்ரூமுக்குள்ளை போன மனுசன் சேவ்
பண்ணுறன் அது இது எண்டு சொல்லி ஒரு மணித்தியாலமாய் வெளிலை வரேல்லை.
அதுக்குள்ளை நான் பிள்ளையளின்ரை வேலையளை ஓடி ஓடி முடிச்சிட்டன்.
அதுகளும் எங்கை.......? அப்பா கதிரைக்குள்ளையும் சோபாவுக்குள்ளையும் இருக்க அம்மாதானே வேலையெல்லாம் செய்யிறா. அப்பிடியெண்டால் வேலையெல்லாம் அம்மாக்குத்தான் சொந்தம் எண்டு நினைக்குதுகள்.
அல்லது அம்மா வேலை செய்யிற மெஷின் எண்டு நினைக்குதுகுளோ!!!
மனுசன் குளிச்சிட்டு வெளிலை வருறதுக்கு முன்னமே சாப்பாட்டை ரெடியா மேசையிலை வைச்சிட்டன். மனுசன் ஏதோ நான் சமைக்கிறதுக்கெண்டே பிறந்தவள் எண்டு நினைச்சுதோ என்னவோ, நல்லாயிருக்கப்பா எண்டு ஒரு வார்த்தை பேசேல்லை. வேறை ஏதோ எனக்குத் தேவையில்லாத கதையளைச் சொல்லுறதும் "நாளைக்கு அந்த வேலையை செய். அங்கை அபபொயிண்ட்மெண்ட் எடுத்து வை" எண்டு எனக்கு கட்டளைகள் இடுவதுமாய் இருந்திச்சு.
எனக்கு பயங்கர எரிச்சல் மனசுக்குள்ளை. என்ரை எரிச்சலை இந்த மனுசனுக்குக் காட்டி ஏதும் பிரயோசனமிருக்கோ எண்டு நினைச்சுக் கொண்டு மனுசன் சாப்பிட்டு முடிச்ச கையோடை ரீ யைப் போட்டுக் குடுத்தன்.
ரீ யைக் குடிச்சுக் கொண்டே மனுசன் தொடங்கீட்டுது.
"என்னப்பா நீ இன்னும் வெளிக்கிடேல்லையே எண்டு...?"
எனக்கு கோவம் தான் வந்துது.
என்னெண்டு வெளிக்கிடுறது?
கொஞ்சம் கூட ஒத்தாசை பண்ணாமல் ..............
சாப்பிட்டு முடிய சாப்பாட்டைக் கூட மேசையிலை இருந்து எடுத்து வைக்காமல்....
போய் ரீவீ க்கு முன்னாலை இருந்து கொண்டு..........
எனக்கு வந்த கோவத்துக்கு
"ஏனப்பா இஞ்சை வாங்கோ. இதுகளை நீங்கள் எடுத்து வைச்சீங்களெண்டால்-- நான் டக் கெண்டு வெளிக்கிட்டிடுவன்தானே." எண்டு சொல்லோணும் போலை இருந்திச்சு.
ம்...... இப்ப சொல்லப் போய், அதுவும் வெளிக்கிடுற நேரம்
பிறகு மனுசன் "நான் என்ன உன்னைப் போலை சும்மா வீட்டிலையே இருக்கிறன். வேலைக்குப் போற மனுசனை ஒரு நேரம் ஆறுதலா இருக்க விடமாட்டாய்" எண்டு தொடங்கீடும்.
பிறகு எனக்கு மூட் அவுட் ஆகி--------- ஏன் பிரச்சனையை எண்டிட்டு
வாயை மூடிக்கொண்டு எல்லாத்தையும் எடுத்து வைச்சன்.
மனுசன் ஆற அமர இருந்து ரீ யைக் குடிச்சுக் கொண்டு ரீவீ யை ரசிச்சுக் கொண்டு இருந்திச்சு. எனக்கு குளிச்சுப் போட்டு வரவும் வேர்த்துக் கொட்டிச்சு.
ஒரு மாதிரி சாறியை உடுத்திட்டு வந்து தலையை இழுக்கிறதுக்கு சீப்பை தலையிலை வைக்கவே மனுசன் திரும்பத் தொடங்கீட்டுது. "என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையே எண்டு...?"
நல்லா திருப்பிக் குடுக்கோணும் போலை எனக்குக் கோவம் பொத்துக் கொண்டு வருது. ம்........ குடுத்தென்ன!. மனுசன் பிறகு இன்னும் சிடுசிடுக்கும்.
சரி ஒரு மாதிரி வெளிக்கிட்டாச்சு.
மனுசன் இப்ப எழும்பிப் போய் வெளிக்கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிண்டு......
"நீ வெளிக்கிட்டு வாறதுக்கிடையிலை அங்கை புரோக்கிராம் முடிஞ்சு எல்லாரும் வீடடையும் போடுவாங்கள். ஏன் தான் இந்தப் பொம்பிளையள் வெளிக்கிட இவ்வளவு நேரமோ.....?" எண்டு என்னை மட்டுமில்லாமல் பொம்பிளை வர்க்கத்தையே பேசிக்கொண்டு நிக்குது.
நானும் ஏதும் சொல்லோணும் எண்டு துடிக்கிற நாக்கை அப்படியே மடக்கி வாயை இறுக்கி மூடிப்போட்டன்.
வெளிலை போறதுக்கு முன்னம் வீட்டிலை எல்லாம் சரியா இருக்கோ எண்டு பார்த்தன். அதையேன் பேசுவான்.
வழக்கம் போலை லைற் எரியுது- ரீவீ நிற்பாட்டேல்லை. அது மட்டுமே..........?
மனுசன் வாசிச்ச பேப்பர் மேசையிலை விரிச்ச படி இருக்கு.
குடிச்ச கோப்பை கதிரைக்குப் பக்கத்திலை கீழை நிலத்திலை கிடக்குது.
எனக்கு என்ரை மனுசனிலை வந்த கோவம், சும்மா கொஞ்ச நஞ்ச மில்லை.
எண்டாலும் வந்த கோவத்தை அப்பிடியே எனக்குள்ளையே அடக்கிட்டன்.
ஏனெண்டால் மனுசன் கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிக்குது. இப்ப போய் நான் என்ரை கோவத்தைக் காட்டுறன் எண்டு சொல்லிக் கத்த---
எதிர் வீட்டுக் காரர் சொல்லுவினம் "ஒரு அடக்கமில்லாத பொம்பிளை, என்னமா புருஷனைத் திட்டுது. கலிகாலம் முத்திப்போச்சு. பாவம் அந்த மனுசன்...“ எண்டு.
அதுதான் சாறியை இழுத்து இடுப்பிலை செருகிக்கொண்டு ஓடி ஓடி லைற்றை நிற்பாட்டி, ரீவீ யை நிற்பாட்டி, பேப்பரை மடிச்சு வைச்சு, கோப்பையையும் எடுத்து வைச்சிட்டு.......
மனுசனோடை மௌனமா நடந்து போறன். மனசுக்குள்ளை மட்டும்..............கோவம்
ஆறாமல் இருக்குது. அது ஆரை என்ன செய்யப் போகுது.
-முற்றும்-
சந்திரவதனா
யேர்மனி
பிரசுரம் - ஈழமுரசு(25-31 ஒக்டோபர் 2001)
Subscribe to:
Posts (Atom)