Saturday, January 15, 2005

கிட்டு

வல்வை மண் தந்த - வீரத்

தமிழ்ப் பொட்டு!

வெல்வோம் நாம் என்று

நல்ல தமிழ் மண் மீட்கத்

துள்ளியெழுந்த தூய புலிவீரன் -

அவன் கிட்டு!

இல்லை என்ற சொல் துறந்து

கால் இல்லை என்று ஆன பின்னும்

தன் பணியை மண் பணியாய்

தன் நெஞ்சில் சுமந்தான் -

தன் நலம் விட்டு!



தலைவனுக்கு ஒரு கையாய்

தமிழ் மண்ணிற்கோ தளபதியாய்

நிலை இழந்த மக்களிற்கு நீதிபதியாய்

கலையுள்ளம் கொண்ட காளை - இவன்

வாழ்ந்த காலமதோ மிக மட்டு!



தாய் மண்ணைத் துறந்தது மட்டுமல்ல

தன் பெண்ணையும் துறந்திங்கு

அந்நிய மண்ணில் அவனிருந்தாலும்

எண்ணியதெல்லாம் ஈழமண் விடிவுதான்!

மண்ணைப் பொன்னாக்க

அவன் செய்த புண்ணியங்கள்

ஆயிரம் ஆயிரம்!



இதயம் பிழியும் இடர்கள் நேர்ந்து -

ஏழு ஆண்டுகள்!

நெஞ்சம் மகிழ........தன் மண் நோக்கிப்

புறப்பட்ட மாவீரன்!

என்ன நினைத்திருப்பான்?



வங்கக் கடலலையும்

வழியனுப்பி வாழ்த்திசைக்க -

இந்தியமோ -

இன்னோர் இழிசெயலை

இருளில் திணித்து விட

நம் வீரர் தமக்காக வாழ்பவரல்லவே!

திண் வீரர் - மண் காக்க -

விண்ணை உடைத்தொருகால்

வீர இடிமுழங்க -



தண்ணென்ற நீரலையில்

தம்மைக் கரைத்தனரே!

விண் வீரன் - கிட்டு

நீ எங்கள் காவிய நாயகன்.



சந்திரா இரவீந்திரன்

28.11.2000