சில மணிநேரத்திற்கு முன்பு, என்றைக்குமில்லாத சந்தோசத்துடன் அந்தப் பெரிய நாற்சார வீட்டில் வளைய வந்த மகேஸ்வரி, இப்போதுதான் அவளின் வீட்டுக்குள் இருந்து நடு ரோட்டுக்கு இழுத்துக் கொண்டு வந்து இருத்தப் பட்டாள்.
தெருவிளக்குகள் கூட எரியாத அந்த நடு இரவின் கும்மிருட்டுக்கும் அவளது அன்றைய அசாதாரண சந்தோசத்துக்கும் எந்தவிதமான பொருத்தமும் இல்லாவிட்டாலும், அவளது அன்றைய சந்தோசத்துக்குக் காத்திரமான காரணம் இருந்தது.
இளம் வயதிலேயே நாட்டைக் காக்க என்று வீட்டை விட்டுப் போன அவள் மகன் ராஜன் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்தான் வெள்ளை என்ற பெயருடன் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான்.
கொப்புளிப்பான் அவனில் கொப்புளங்களை அள்ளிப் போட்டதால்தான் நண்பர்கள் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள்.
பத்து மாதம் சுமந்து பெற்ற மகனை ராஜா போல் அந்த வீட்டில் வளர்ந்தவனை வாடிவதங்கியபடி கண்டதும் மகேசு, சந்தோசம் துன்பம் எல்லாம் கலந்த ஒன்று நெஞ்சிலிருந்து பீறிட்டுக் கண்ணீராய்ப் பாய "பெத்த வயிறு எப்பிடித் துடிக்குதடா....?!" என்றபடி அவனைக் கட்டியணைத்துக் கதறினாள்.
„களத்தில் நின்றபோதும் அம்மா...!, உன்னை ஒரு கணமும் நான் மறக்கவில்லை“ என்று மனதுக்குள் கூறிய படி ராஜனும் மகேஸ்வரியைக் கட்டிப் பிடித்தான். கலங்காத அவன் நெஞ்சும் ஒரு தரம் குலுங்கியது. ஒரு வருடப் பிரிவையும் அதனால் ஏற்பட்ட இதயம் நிறைந்த பாசத்தாகத்தையும் சில நிமிட நேரத் தழுவலில் ஓரளவுக்காவது தீர்த்துக் கொண்டார்கள்.
கொப்புளங்கள் ராஜனின் மேனியில் அள்ளிப் போட்டிருப்பதால்தான் அவனால் இங்கு வரமுடிந்தது என்றாலும், இந்தச்சாட்டிலாவது அவனை அருகிருந்து கவனிக்க முடிந்ததில் மகேஸ்வரிக்குச் சந்தோசமாக இருந்தது. அந்தச் சந்தோசத்தையும் அவளால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் நெருஞ்சி முள்ளாய் பய நினைவொன்று நெஞ்சத்தில் குத்திக் கொண்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன் வியாபார விடயமாகக் கிளிநொச்சிவரை போன கணவன் சோமசுந்தரம் இன்னும் வந்து சேராததுதான் அவளுக்குள் கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இன்று வருவான், நாளை வருவான் என்றெண்ணிக் காத்திருப்பதும், போக்குவரத்து வசதி சரியாக அமையவில்லைப் போலும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வதுமாயே மூன்று மாதங்கள் ஓடி விட்டன.
இப்போ வராத மகன் வந்து இரண்டு நாட்களாகியும் இந்த மனுசனைக் காணவில்லையே. வந்து மகனைக் கண்டால் எப்படி மகிழ்ந்து போவான். என்ற எண்ணம் ஏக்கமாய் அவளை வதைக்க எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்;.
பக்கத்துக் கோயில் வைரவரையும், புட்டளைப் பிள்ளையாரையும், மந்திகை அம்மனையும், வல்லிபுர ஆழ்வாரையும் மனதுக்குள் மன்றாடினாள்.
"என்ரை மனுசன் நல்ல படி வந்து சேர்ந்து விடவேண்டும். நான் பட்டுச் சாத்துவேன், பொங்கிப் படைப்பேன்....!" என்றெல்லாம் மனதுக்குள் கடவுள்களுக்கு வாக்குறுதிகொடுத்தாள்.
அவள் மன்றாட்டம் வீண்போகவில்லை. சரியாக மகன் வந்த மூன்றாம் நாள் மாலை, அதுதான் இன்று மாலை சோமுவும் வந்து சேர்ந்து விட்டான்.
மகேஸ்வரியின் மகிழ்வைச் சொல்லவும் வேண்டுமா! அப்படியொரு சந்தோஷத் துள்ளல் அவளிடம்.
நீண்ட மாதங்களின் பின் நிறைவான குடும்பமாய் இருந்ததில் அவள் மனமும் நிறைந்திருந்தது. கணவன் கொண்டு வந்த மரக்கறிகளை மணக்க மணக்கச் சமைத்துப் பரிமாறினாள். சோமுவுக்குக் கூட அவளது குழந்தைத்தனமான சந்தோசத் துள்ளலில் குதூகலம் பிறந்திருந்தது. அவளது மூத்தமகள் கவிதாவும், கடைக்குட்டி தீபிகாவும், களத்திலிருந்து வந்த மகன் ராஜனும் அந்தக் குதூகலத்துக்கு எந்தக் குந்தகமும் வந்து விடாதபடி கூடியிருந்து கதைத்துவிட்டுப் பத்து மணியளவில் படுக்க ஆயத்தமானார்கள்.
அகிம்சையைப் போதித்த காந்தி பிறந்த மண்ணிலிருந்து அமைதி காக்க என்று வந்த இந்தியப்படை தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியபின் பருத்தித்துறை மக்களைப் பற்றிக் கொண்ட பீதி கிராமக் கோட்டில் வாழ்கின்ற மகேஸ்வரியையும் தொற்றிக்கொள்ளத் தவறவில்லை.
இந்திய இராணுவத்தின் கற்பழிப்புகளும் காட்டுமிராண்டித் தனங்களும் இன்னும் மகேஸ்வரியின் வீடுவரை வரவில்லையென்றாலும் முன்னெச்சரிக்கையாக அவள் கவிதாவையும் தீபிகாவையும் அவர்களின் அறைகளில் படுக்க விடாமல் தனது படுக்கையறையிலேயே படுக்க வைப்பாள். மகன் ராஜனையும் இந்த இரண்டு நாட்களும் தனது பெரிய படுக்கை அறையின் ஒரு மூலையிலேதான் படுக்க வைத்தாள். இன்றும் கொப்பளிப்பான் ஆக்கிரமிப்பு இன்னும் அவனில் இருந்ததால் அவனைக் கைத்தாங்கலாய் பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் தனது அறையிலேயே படுக்க வைத்தாள்.
சோமு மாங்காய்ப் பூட்டைக் கொண்டுபோய் கேற்றைப் பூட்டுகையில் மெதுவாக வெளியில் ரோட்டையும் எட்டிப்பார்த்தான். வலதுபக்கம் கிராமக்கோட்டுச் சந்தியை நோக்கிய ரோட்டிலும் சரி இடதுபக்கம் பல்லப்பையை நோக்கிய ரோட்டிலும் சரி எந்தவித மனித நடமாட்டமும் தெரியவில்லை. ஊரே அடங்கிப் போயிருந்தது. எந்த வீடுகளிலும் வெளிச்சம் தெரியவில்லை.
பத்து மணிக்கே ஊரடங்கிப் போகும் படியாக நாட்டுக்கு வந்த நிலையை மனதுக்குள் எண்ணி வருந்தியவாறே கேற்றைப் பூட்டிவிட்டு உள்ளே வந்தவன் படுத்கையறைக்குள் புகுந்து கொண்டான்.
மூன்று பிள்ளைகளும் கணவனும் தன் அருகிலேயே இருக்கிறார்கள் என்ற எண்ணம் மகேஸ்வரியின் மனதை நிறைத்திருக்க படுக்கையிலேயே கணவனுடன் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே து}ங்கிவிட்டாள். இரவு பன்னிரண்டு மணியையும் தாண்டிய அந்த அர்த்த ராத்திரியில் கனவுபோல் அந்தச் சத்தம் கேட்டது.
“சோமசுந்தரம்...... சோமசுந்தரம்...... கதவைத்திற“
முதலில், ஏதோ கனவென்றுதான் மகேஸ்வரி நினைத்தாள். கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டபோதுதான் ஆழ்ந்து து}ங்கியிருந்தவள் துடித்துப் பதைத்து எழுந்தாள்.
“மூன்று மாதங்களின் பின் இன்றுதானே என் வீட்டில் என் மனைவி குழந்தைகளுடன் து}ங்குகிறேன.;“ என்ற நிம்மதியுடன் து}ங்கிக் கொண்டிருந்த சோமுவும் திடுக்கிட்டுக் கண்விழித்து, விபரம் புரியாமல் விழித்து, எதுவோ உறைக்க விறைத்துப் போய் விட்டான்.
அது இந்தியப்படைதான். பிறழ்ந்த அவர்களின் தமிழில் புரிந்துகொண்ட சோமுவும் மகேஸ்வரியும் செய்வதறியாது திகைத்தார்கள். தடுமாறினார்கள்.
“சோமசுந்தரம்.....! “
அதட்டலான கூப்பிடுகையில் மீண்டும் அதிர்ந்து பதறினார்கள்.
“டேய் அப்பு எழும்படா. இந்தியன் ஆமி வந்திட்டானடா“
மகேஸ்வரி குரல் எழுப்பிக் கதைக்கவும் முடியாமல் பயத்தில் குரலைத் தனக்குள் அடக்கிக் கிசுகிசுப்பாகத் தழதழத்த குரலில், ராஜனைக் கட்டிப்பிடித்து எழுப்பினாள்.
“சோமசுந்தரம் கதவைத்திற!“
மீண்டும் கர்ணகடுரமாய் ஒலித்த அந்தக்குரல் மகேஸ்வரியினதும் சோமுவினதும் செவிப்பறைகளில் அறைந்தது. இதற்குள் கவிதாவும் தீபிகாவும் உசாராகிவிட கொப்புளிப்பானில் சுருண்டு போயிருந்த ராஜனும் உசாராகிவிட்டான்.
“அப்பு நான் போய் முன் கதவைத் திறக்க முன்னம் நீ பின்பக்கத்தாலை ஓடிப்போயிடடா“
மகேஸ்வரியிடமிருந்து அழுகை பீறிட்டது. ராஜன் மனதளவில் உசாராகி விட்டாலும் கொப்புளிப்பானில் வெந்து துவண்டு போயிருந்த அவனின் உடல் அவன் மனதின் வேகத்துக்கேற்ப இயங்க மறுத்தது.
“தம்பி வா. நான் உன்னைக் கூட்டிக் கொண்டு போய் பின்னுக்கு விடுறன்.“ கவிதா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு நாற்சார வீட்டின் நடு முற்றத்தில் இறங்கினாள். குரோட்டன்கள், மல்லிகைக்கொடிகள், ரோஜாச்செடிகள் எல்லாம் அவர்கள் இருவரையும் தழுவி, உரசி பின் தவிப்போடு நிற்க அவை பற்றிய எந்த வித பிரக்ஞையும் இல்லாமல் ராஜனும் கவிதாவும் முன்னேறி குசினி விறாந்தையில் ஏறினார்கள்.
கவிதா குசினிக்குப் பக்கத்திலிருந்த பின்பக்கக் கதவை மெதுவாகத் திறக்க ராஜன் எதுவும் தெரியாத கும்மிருட்டில் வெளியில் காலை வைத்தான்.
அவன் கால் நிலத்தில் படமுன்னரே படபடவென்று துப்பாக்கி வேட்டுக்கள் வெடித்தன.
கவிதா வெலவெலத்துப் போனாள். „தம்பி போகாதை இங்காலை வா“ மெல்லிய குரலில் பதைப்புடன் கூப்பிட்டுக் கொண்டு அப்படியே குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்றாள். அவளுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.
இதே நேரம் தயங்கித் தயங்கி முன் கதவைத் திறந்த மகேஸ்வரி வெடிச்சத்தத்தில் அவள் நெஞ்சே அதிர, குளறியடித்துக்கொண்டு, வாசலில் நின்ற அந்தக் கொடிய இந்திய இராணுவத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் திரும்பி வீட்டுக்குள் ஓடினாள்.
அவள் இரண்டடிதான் ஓடியிருப்பாள். ஒரு முரட்டுக்கை அவளை முரட்டுத்தனமாக அழுத்திப் பிடித்தது. "இங்கை புலி இருக்குது.“ பார்வையால் அவளை விழுங்கியபடியே அந்த மிருகம் கர்ச்சித்தது. „இல்லை இல்லை“ மகேஸ்வரி நடுங்கியபடி மறுத்தாள். அந்த மிருகம் தன் அழுங்குப் பிடியை சற்றும் தளர்த்தாமல் அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் வீட்டின் முன் நடுரோட்டில் இருத்தியது.
„ஐயோ என்ரை பிள்ளையளும் மனுசனும் உள்ளை“ கதறினாள். அவள் கதறலில் கொஞ்சம் கூடக் கலக்கமடையாத கல்நெஞ்சுக் காரர்களில் ஒருவன் தீபிகாவையும் சோமுவையும் வெளியிலே கூட்டிக் கொண்டு வந்து மகேஸ்வரியின் அருகில் இருத்தி விட்டு அவர்கள் பக்கம் துப்பாக்கியைக் குறிபார்த்து நீட்டியபடி நின்றான்.
சோமுதான் முதலில் கதவைத் திறக்கப் போனவன். மகேஸ்வரிதான் அவனை அனுப்பப் பயந்து அவனை அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான் வந்து கதவைத் திறந்தவள். எப்படியாவது புருசனையும் பிள்ளைகளையும் இவர்கள் கண்ணில் படவிடாது காப்பாற்றி விடலாம் என்றுதான் முதலில் நம்பிக்கையுடன் எண்ணினாள். இப்படி நடுச்சாமத்தில் நடுரோட்டில் இருத்தப் படுவாள் என்று அவள் துளி கூட நினைக்கவில்லை. இதெல்லாம் நியமாக நடக்கிறதா அல்லது கெட்ட கனவா என்று அவளுக்குப் புரியவில்லை.
பின் பக்கம் போன கவிதாவும் ராஜனும் என்ன ஆனார்கள் என்பது கூடத் தெரியவில்லை. ஹஎப்பிடியாவது என்ரை பிள்ளை தப்பியோடியிருப்பான்ஹ
பொங்கி வந்த கண்ணீருக்கு நம்பிக்கை நினைவுகளால் அணை போட்டாள்.
அவள் நெஞ்சைத் துளைப்பது போல் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்கள் மௌனமாகி விட்டன. ஆனால் அவளின் சிறு அசைவைக் கூட அவதானித்த படி துப்பாக்கி முனையொனன்று அவளை நோக்கி நீண்டிருந்தது. வீட்டு வாசலில் அருவருத்த முகங்களுடனான இந்தியன் ஆமிகள் காவலுக்கு நிற்க அவர்களுக்குள் முகமூடி போட்ட எட்டப்பன் ஒருவனும் நின்றான்.
„என்ரை பிள்ளையைக் காட்டிக் கொடுக்கவோடா இந்தப் பிசாசுகளைக் கூட்டிக் கொண்டு வந்தனீ? நீ ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்பிடிச் செய்யலாமோடா?....“ மகேஸ்வரிக்கு அவன் நெஞ்சுச் சட்டையைப் பிடித்து இழுத்துக் கேட்க வேண்டும் போல ஒரு வெறி வந்தது.
பிள்ளைகள் இரண்டு பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியாத பயத்தில் வெறி கோபமாய் மாறி அதைக் கொப்புளிக்க முடியாமல் திணறி அழுகையாய் சிதறியது. நடுரோட்டு என்றும் பாராமல் ரோட்டில் புரண்டு புலம்பினாள்.
கண்ணுக்கெட்டிய தூத்திலிருக்கும் அந்த வைரவர் கோயில் வைரவரையும் புட்டளையிலிருக்கும் புட்டளைப்பிள்ளையாரையும் கூப்பிடக் கூடத் திராணியின்றிப் பிதற்றினாள்.
இதேநேரம் குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்ற கவிதாவின் கண்கள் அந்த இருட்டிலும் ராஜனைத் தேடின.
„தம்பி தம்பி எங்கையடா நீ “ கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.
சத்தம் இல்லை.
மெதுவாகச் சுவரோடு ஒட்டியபடியே வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று அவளை „அக்கா.......!“ என்ற படி ராஜன் கட்டிப்பிடித்தான்.
„அக்கா....... தண்ணி......!“
திக்கிய படி அவன் முனகலுடன் கேட்டான். கவிதாவின் நெஞ்சுச் சட்டையின் உள்ளே எதுவோ பிசுபிசுத்தது.
„தம்பி....!“ இறுகக் கட்டிப் பிடித்தாள்.
„அக்கா...தண்ணி...!“
சில முரட்டுக் கைகள் அவர்களை இழுத்துப் பிரித்தன.
„விடு....என்ரை தம்பி“ கவிதா திமிறினாள்.
„தம்பிக்குத் தண்ணி.....“ அவள் முடிக்கு முன்னே இன்னுமொரு முரட்டுக்கை அவளை கைகளால் பிடித்து இழுத்துக்கொண்டு போனது.
„அ..க்..கா!“ மெலிதாக ராஜன் முனகும் ஒலியைத் தொடர்ந்து தொப்பென்று எதுவோ விழுந்த சத்தம் கேட்டது.
இழுத்து வரப்பட்ட கவிதாவும் இப்போது நடுரோட்டில் இருத்தப் பட்டாள்.
இருட்டிலும் அவள் நெஞ்சுச்சட்டை சிவப்பாக இருப்பது தெரிந்தது.
புpசுபிசுத்தது தம்பியின் குருதி என்பது அவளுக்குத் தெளிவாகப்; புரிந்ததும், „தம்பி....!“ குழறிய படி வீட்டை நோக்கி ஓடினாள். மீண்டும் முரட்டுக்கை அவளை இறுகப்பிடித்து இழுத்துக்கொண்டு வந்து நடுவீதியில் இருத்தியது.
நாலுமணி நேரத்துக்கு முன்பு சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் குசினி விறாந்தையில், இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ராஜனை இந்திய இராணுவத்தினர் வெற்றிக்களிப்புடன் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தனர். ராஜன் கொப்புளிப்பானில் வீட்டுக்கு வந்திருப்பதை மோப்பம் பிடித்து இந்திய இராணுவத்திடம் காட்டிக்கொடுத்த அந்த முகமூடித் தமிழன் அவர்களைப் பின்தொடர...!
சோமு அவர்களிடம் போய் „என்ரை பிள்ளை.....!?“ கேட்டான்.
„நாளைக்கு மந்திகை ஆஸ்பத்திரிக்கு வந்து அவன் புலி எண்டு சொல்லிக் கையெழுத்துப் போட்டிட்:டு எடுத்துக்கொண்டு போ.“ சொல்லிக் கொண்டு போனார்கள் அந்தப் படுபாதகர்கள்.
களத்தில் காவியமாக வேண்டிய ராஜன், எட்டப்பன் வழி வந்த காட்டிக் கொடுப்பவனால், அவன் தவழந்த வீட்டிலேயே உயிரையும் உதிரத்தையும் சிந்திய கொடுமையைத் தாங்க முடியாமல் அந்த வீடே ஆழ்ந்த சோகத்தில் அசாதாரண அமைதியில் மூழ்கிக்கிடக்க, நடைப்பிணங்களாக சோமசுந்தரமும், மகேஸ்வரியும், கவிதாவும், தீபிகாவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
(4.12.1987 அன்று நடந்த உண்மைச்சம்பவம் இது.)
இயற்பெயர்-விஸ்ணுபாலன்.
செல்லப்பெயர்-ராஜன்
போராளியாக-றோகன்.
சந்திரவதனா
யேர்மனி
செப்டெம்பர் 1999
பிரசுரம் - ஈழமுரசு(11 - 17 நவம்பர் - 1999)
Monday, July 12, 2004
பொட்டுகிளாஸ்
டொமினிக் ஜீவா அவர்களின் எழுதப் படாத கவிதைகளும் வரையப் படாத சித்திரங்களும் என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து மனதின் அடிநாதத்திலிருந்து ஏதேதோ நினைவுகள் எழுந்து வந்து அலை மோதிக் கொண்டிருக்கின்றன. கட்டியக் காரனாக நின்று அவர் எழுதிய வரிகளைத் தாண்டி என்னால் மேலே செல்ல முடியாமல் உள்ளது. மீண்டும் மீண்டும் சில வரிகளை வாசிப்பதுவும் அப்படியே மாண்டு போகாது என் மனசுக்குள்ளே பதிந்து போயிருக்கும் சிறுவயது நினைவுகள் மீட்டப் பட்டு அந்த சம்பவங்களுடன் நான் சங்கமித்துப் போவதும் சில வாரங்களாகவே நடந்து கொண்டு தானிருக்கிறது.
நானும் பார்வையால் பேச்சால் செயலால் பஞ்சமரை வதை செய்த கர்வம் பிடித்த சமூகத்தில் இருந்து வந்தவள்தான்.
இன்றும் அவரது அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். என் மனசு ஓடிப் போய் என் வீட்டு ஒட்டிலும் பொட்டுக் கிளாஸிலும் அமர்ந்து கொண்டு விட்டது. தாய்க்காரி எவ்வளவுதான் சொல்லி விட்டாலும் வெள்ளத்தைக் கண்டதும் நின்று விடும் பள்ளிப் பிள்ளை போல மனசு தொடர்ந்து வாசிக்க மறுத்தது. வெள்ளத்தைக் கண்ட பிள்ளையின் மனதிலாவது வெள்ளத்துடனான லயிப்பிலும் தப்பலிலும் சந்தோசமாவது இருக்கும். என்னுள்ளே இனம் புரியாத அசௌகரியமான ஸ்தம்பிதம்.
துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போகும் பாட்டாவை நேர் எதிரே கண்டதும் தனது துண்டை இழுத்து கக்கத்துள் வைத்துக் கொண்டு உடையார் என்று குழைந்து கூழைக் கும்பிடு போடும் - எங்களுர் சாவுச் சடங்குகளுக்குப் பறையடிக்கும் - மாணிக்கம்....
எங்கள் அழுக்குத் தலை மயிரைப் பிடித்து அழகாகக் கத்தரித்து விட்டு எங்கள் வீட்டு ஒட்டில் மட்டும் அமர அனுமதிக்கப் படும் நாவிதன் கதிரமலை...
எங்கள் தென்னையில் ஏறி கள்ளுச் சீவும் கந்தசாமி...
எங்கள் அழுக்குத் துணிகளையெல்லாம் மூட்டையாகக் கட்டி தோளிலே சுமந்து சென்று தோய்த்துக் கொண்டு வந்து தரும் வயதான கோபால்.... இப்படி ஒவ்வொருவராக என் முன்னே தோன்றிக் கொண்டிருந்தார்கள்.
இவர்களில் நாங்கள் கட்டாடி என்று சொல்லும் கோபால் சில சமயங்களில் எங்கள் வீட்டுச் சடங்குகளுக்காக வீட்டுக்குள்ளே வர அனுமதிக்கப் படுவான். ஆனாலும் மூத்தவர்களை வாங்கோ போங்கோ என்று கதைக்க வேண்டும் என்று சொல்லித் தந்த அம்மாதான் அவனை அவன் இவன் என்று நான் அழைக்க அனுமதித்தா.
அப்பாவின் வயதை ஒத்த அவனை
"கோபாலு.."
என்று கூப்பிட்டு
"எனக்கு திங்கட்கிழமை வெள்ளைச் சட்டை கட்டாயம் வேணும். கொண்டு வந்து தந்திடு."
என்று சொல்வேன். அவன் சின்னப்பெண்ணான என்னைப் பார்த்து
“ஓமுங்கோ..! நான் கொண்டு வந்து தாறன்.
என்று பணிவோடு சொல்வான். திங்கட்கிழமை விடிய கொண்டு வந்தும் விடுவான். ஊத்தை உடுப்புகளைத் தனது பின் முதுகில் சுமந்துதான் அவன் முதுகில் அப்படியொரு கூனல் விழுந்ததோ..?
கள்ளுச் சீவும் கந்தசாமி தென்னையில் ஏறும் லாவகமே ஒரு தனி அழகுதான். ஆனால் அவன் எங்கள் வீட்டு ஒட்டில் கால் வைத்து நான் கண்டதில்லை. ஒட்டுக் கரையோடு முற்றத்தில் நின்றுதான் அம்மாவோடும் அப்பாவோடும் கதைப்பான்.
பறையடிக்கும் மாணிக்கம் ஒட்டிலிருந்து எட்டடி தள்ளி நின்றே கதைப்பான். கிட்ட வந்தாலே ஏதாவது ஒட்டி விடும் என்று நினைத்து அவனை அப்படித் தள்ளி வைத்தார்களோ..?
கதிரமலை எங்கள் வீட்டில் குழந்தைகளுக்குத் தலைமயிர் வெட்ட வேண்டுமென்றால் மட்டும் ஒட்டில் வந்து இருந்து வெட்டுவான். மற்றும் படி எட்டத்தான் இருப்பான்.
ஒட்டு என்றால் என்ன என்ற யோசனை உங்களுக்கு வரலாம். எனக்குக் கூட ஆரம்பத்தில் ஏன் அந்த ஒட்டு என்று விளங்கவில்லை. வழுவழுப்பான எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையுடன் சேர்த்து ஒரு சொருசொருப்பான விறாந்தை கட்டப் பட்டிருந்தது. ஆனால் அது எங்கள் பெரிய விறாந்தையிலிருந்து அரை அடி பதிவாகவே இருந்தது. மிகச் சின்ன வயசில் அது எனக்கு தொங்கி விளையாட நல்ல சாதகமான சாதனமாய் இருந்தது.
எனக்குள் சிந்தனைகள் விரியத் தொடங்கிய - ஒவ்வொரு விடயத்திலும் பூராயம் தேடத் தொடங்கிய - ஏன் என்ற கேள்விகளை மற்றவர்களிடம் அடுக்கத் தொடங்கிய ஒரு கால கட்டத்தில்தான் நான் எனது அம்மம்மாவிடம் அந்த ஒட்டு பற்றி விசாரித்தேன்.
”அம்மம்மா..! ஏன் அதுக்கு ஒட்டு எண்டு பெயர்...? அதேன் பெரிய விறாந்தையை விடப் பதிஞ்சிருக்கோணும்;....?"
br />
அதற்கு அம்மம்மா சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நம்ப முடியாதிருந்தது. அவ பஞ்சமர்களின் பெயர்களை அநாயசமாக அடுக்கி
"அவையள் வந்தால் இருக்கிறதுக்குத்தான்"
என்று சொன்னா. உண்மையிலேயே நான் ஆச்சரியப் பட்டுப் போனேன். அதற்காக என்றே ஒரு விறாந்தையை எமது விறாந்தையுடன் ஒட்டி விட்டுள்ளார்களா? என்ன மனிதர்கள் இவர்கள்....!
"ஏன் அம்மம்மா..! அவையள் இந்த மேல் விறாந்தையிலை இருந்தால் என்ன..?
சீ..... மொக்குப் பிள்ளை மாதிரிக் கதைக்காதை. நாங்கள் இந்த விறாந்தையிலை இருந்து கதைக்கிற பொழுது அவையளும் இதிலை இருந்தால் என்ன மாதிரி..? அவையள் எங்களுக்குக் கீழைதான் இருக்கோணும்."
அம்மம்மாவின் பதில் எனக்குள் ஒருவித அதிருப்தியான உணர்வையே தோற்றுவித்தது. எமது வீட்டின் ஒவ்வொரு காரியத்திலும் பங்கு கொள்ளும் - அவர்களைத்(பஞ்சமர்) தாழ்த்தி வைத்துப் பார்க்கும் இந்தக் குரோதம் இவர்களுக்குள் எப்படி வந்தது. ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். எனக்குள் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன.
அதன் பின்தான் நான் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். எனக்கு எதுவுமே பிடிக்க வில்லை. ஆனாலும் என் வீட்டுப் பெரியோரைச் சீர் திருத்தும் அளவுக்கு எனக்கு வயது போதவில்லை. என் சொற்களோ செயல்களோ அங்கு எடு படவில்லை. என்ன கதைத்தாலும் மொக்குப் பிள்ளை..! ஆள்தான் வளர்ந்திருக்கிறாளே தவிர இவளுக்கு அறிவு வளரேல்லை.. போன்ற ஆலாபனைகள் தான் எனக்குக் கிடைத்தன.
ஆனாலும் எனக்குள் எழுந்த சிந்தனைகள் அறுபட வில்லை. அவை இன்னும் இன்னும் பெரிதாக விரிந்தன. கதிரமலையோ கோபாலுவோ வீட்டுக்கு வந்தால் அவர்களும் மனிதர்கள்தான் என்ற நினைப்போடு அவர்களோடு நானும் போய் ஒட்டில் இருந்து கதைக்கத் தொடங்கினேன். இவைகளைப் பார்த்து அம்மா என்ன நினைத்தாவோ தெரியாது. ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை.
அவ சொந்தமான எந்த சிந்தனையையும் வெளிப் படுத்தும் தைரியம் இன்றி அவவின் பெற்றோரான எனது பாட்டாவும் அம்மம்மாவும் வகுத்த படி சமூகக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு வளர்ந்திருக்கிறா. - இது தப்பு, இது சரி. - என்று பகுத்தாயும் தன்மையோ திறனோ அவவுக்குள் இருந்தாலும், இவைதான் நியதி என்று எண்ணி அதன் படி வாழும் மனப் பக்குவமும் அவவுக்குள் தாரளமாக இருந்தது. மற்றும் படி அவவிடம் சாதித் தீயோ மனிதர்களை மண்டியிட வைக்கும் மனிதமல்லாத குணமோ இல்லை. அதனால்தான் அவ எதுவும் சொல்லவில்லையோ..!
ஆனால் நான் அப்படி சமமாக இருந்து கதைப்பதை பாட்டாவோ அம்மம்மாவோ கண்டு விட்டால் போதும். நான் அவர்களின் கடுமையான கோபத்துக்காளாகி வசைமாரிகளை வாங்கிக் கட்டிக் கொள்வேன். எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அம்மா பேசினால் மட்டுந்தான் எனக்கு அழுகை வரும். மற்றவர்கள் பேசினால் என்னில் பிழை இல்லை என்று தெரிந்தால் மனம் கொண்ட மட்டும் என் மனசுக்குள்ளேயே அவர்களைத் திட்டி விட்டு இருந்து விடுவேன்.
அன்று சனிக்கிழமை. இற்றைக்கு 30 வருடத்துக்கு (1972) முந்திய காலகட்டம். கதிரமலை வந்திருந்தான். எனது தம்பிமார், சித்தப்பாமார் எல்லோரும் ஒவ்வொருவராக முற்றத்தில் கதிரை போட்டமர கதிரமலை நின்ற படி அவர்களுக்குத் தலைமயிர் வெட்டி விட்டான். கனபேருக்கு வெட்டியதால் களைத்தும் விட்டான்.
அம்மா இன்று இரண்டாவது தேநீர் அவனுக்காகப் போட்டு விட்டு வழமை போல அவனுக்கென வைத்த தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி என்னைக் கூப்பிட்டுத் தந்தா. எனக்கு என்னவோ போல இருந்தது. அம்மாவோடு இது பற்றி ஏற்கெனவே கதைத்திருந்தும் அம்மா யோசிப்பதாகச் சொன்னாவே தவிர செயற் படுத்துவதாய்த் தெரியவில்லை. எனக்கு கோபமுமில்லை. கவலையுமில்லை. இரண்டுக்கு மிடைப்பட்ட ஏதோ ஒரு உணர்வு.
"அம்மா இண்டைக்கு நான் அவனுக்குக் கிளாசிலைதான் ரீ குடுக்கப் போறன்."
எனது அந்தத் தீர்க்கமான பேச்சு அம்மாவைச் சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் அம்மாவிடம் தான் நினைப்பதைத்தான் தனது பிள்ளைகள் செய்ய வேண்டுமென்ற திணிப்புத் தன்மையோ கண்டதையும் எதிர்க்கும் தன்மையோ இல்லாததால் என்னை மௌனமாகப் பார்த்த படி நின்றா. அவவையும் பஞ்சமரைத் தாழ்த்தும் இந்தப் பண்பற்ற செயல்கள் புண் படுத்தியிருந்தனவோ..? எனக்குத் தெரியவில்லை.
நான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பொட்டுக் கிளாஸை எடுத்து அதனுள் அந்தத் தேநீரை ஊற்றிக் கொண்டு போய் களைத்துப் போயிருந்த கதிரமலையிடம்
"இந்தா கதிரமலை..! ரீ யைக் குடி..!"
என்று நீட்டினேன்.
அவன் தீப் பட்டவன் போலத் துடித்துப் பதைத்து எழுந்து அந்தப் பொட்டுக் கிளாஸையும் என்னையும் கண்கள் அகல விரிய ஆச்சரியமாய்ப் பார்த்தான்.எனக்கு சந்தோசமாய் இருந்தது. ஒரு ஜீவனை அசைத்திருக்கிறேன். அதுவும் சந்தோசமாக அசைத்திருக்கிறேன் என்ற சந்தோசம்.
"பிடி கதிரமலை. - உனக்குத்தான்."
அவன் கண்களுக்குள் என்ன உணர்வோ! நிட்சயமாய் நன்றி கலந்த உணர்வு! அதற்கு மேலும் ஏதோ சொல்ல விளையும் தவிப்பு.
"இருந்து குடி கதிரமலை."
ஏதோ ஒரு சந்தோசம் அவன் முகத்தில் தவழ கிளாஸை பக்குவமாகப் பிடித்துக் குடிக்கத் தொடங்கினான்.
எனக்கு அன்று மனசு நிறைந்திருந்தது. அம்மாதான்
"இக்கணம் பாட்டா கண்டால் பேசப் போறார்."
என்று பயந்து கொண்டிருந்தா.
"ஏதும் ஒட்டிக் கொண்டு வந்திடும் எண்டு பயமெண்டால் நல்லாச் சாம்பல் போட்டு மினுக்குங்கோ. அல்லது விம் போட்டுக் கழுவித் துடைச்சு வையுங்கோ."
தொண்டை வரை வந்த வார்த்தைகளை வெளியே சிந்த முன் அப்படியே முழுங்கிக் கொண்டேன்.ரீ
அன்றைய பொழுது எனக்கு அர்த்தமுள்ளதாய் ஆனந்தமானதாய் இருந்தது. சிட்டுக் குருவியின் சிறகசைப்பு எனக்குள். அடுத்தநாள் விடிய எழும்பி பல்லு மினுக்கும் போது குசினிக்குள் அம்மா ஆட்டுப் பால் தேநீரை ஆத்தும் வாசம் கிணற்றடி வரை வந்து மூக்கைத் தொட்டது.
ஆசையோடு தேநீருக்காய் குசினிக்குள் நுழைந்த போது
"பொட்டுக் கிளாசுக்குள்ளைதான் எனக்கு ரீ வேணும்..!"
என்று தம்பி அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அம்மா ஒன்றும் பேசாமல் தேநீரை கிளாசுகளுக்குள் ஊற்றிக் கொண்டிருந்தா. அவைகளுக்குள் பொட்டுக் கிளசைக் காணவில்லை.
அது குசினிக்குப் பின்னால் வெளியில் உள்ள விறகு வைப்பதற்கென இறக்கப் பட்ட பத்தி மூலைக்குள் பத்திரமாகக் கழுவிக் கவிழ்க்கப் பட்டிருந்தது.
-முற்றும்-
சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி
19.11.2002
பிரசுரம் - முழக்கம் - கனடா - 17.01.2003
நானும் பார்வையால் பேச்சால் செயலால் பஞ்சமரை வதை செய்த கர்வம் பிடித்த சமூகத்தில் இருந்து வந்தவள்தான்.
இன்றும் அவரது அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். என் மனசு ஓடிப் போய் என் வீட்டு ஒட்டிலும் பொட்டுக் கிளாஸிலும் அமர்ந்து கொண்டு விட்டது. தாய்க்காரி எவ்வளவுதான் சொல்லி விட்டாலும் வெள்ளத்தைக் கண்டதும் நின்று விடும் பள்ளிப் பிள்ளை போல மனசு தொடர்ந்து வாசிக்க மறுத்தது. வெள்ளத்தைக் கண்ட பிள்ளையின் மனதிலாவது வெள்ளத்துடனான லயிப்பிலும் தப்பலிலும் சந்தோசமாவது இருக்கும். என்னுள்ளே இனம் புரியாத அசௌகரியமான ஸ்தம்பிதம்.
துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போகும் பாட்டாவை நேர் எதிரே கண்டதும் தனது துண்டை இழுத்து கக்கத்துள் வைத்துக் கொண்டு உடையார் என்று குழைந்து கூழைக் கும்பிடு போடும் - எங்களுர் சாவுச் சடங்குகளுக்குப் பறையடிக்கும் - மாணிக்கம்....
எங்கள் அழுக்குத் தலை மயிரைப் பிடித்து அழகாகக் கத்தரித்து விட்டு எங்கள் வீட்டு ஒட்டில் மட்டும் அமர அனுமதிக்கப் படும் நாவிதன் கதிரமலை...
எங்கள் தென்னையில் ஏறி கள்ளுச் சீவும் கந்தசாமி...
எங்கள் அழுக்குத் துணிகளையெல்லாம் மூட்டையாகக் கட்டி தோளிலே சுமந்து சென்று தோய்த்துக் கொண்டு வந்து தரும் வயதான கோபால்.... இப்படி ஒவ்வொருவராக என் முன்னே தோன்றிக் கொண்டிருந்தார்கள்.
இவர்களில் நாங்கள் கட்டாடி என்று சொல்லும் கோபால் சில சமயங்களில் எங்கள் வீட்டுச் சடங்குகளுக்காக வீட்டுக்குள்ளே வர அனுமதிக்கப் படுவான். ஆனாலும் மூத்தவர்களை வாங்கோ போங்கோ என்று கதைக்க வேண்டும் என்று சொல்லித் தந்த அம்மாதான் அவனை அவன் இவன் என்று நான் அழைக்க அனுமதித்தா.
அப்பாவின் வயதை ஒத்த அவனை
"கோபாலு.."
என்று கூப்பிட்டு
"எனக்கு திங்கட்கிழமை வெள்ளைச் சட்டை கட்டாயம் வேணும். கொண்டு வந்து தந்திடு."
என்று சொல்வேன். அவன் சின்னப்பெண்ணான என்னைப் பார்த்து
“ஓமுங்கோ..! நான் கொண்டு வந்து தாறன்.
என்று பணிவோடு சொல்வான். திங்கட்கிழமை விடிய கொண்டு வந்தும் விடுவான். ஊத்தை உடுப்புகளைத் தனது பின் முதுகில் சுமந்துதான் அவன் முதுகில் அப்படியொரு கூனல் விழுந்ததோ..?
கள்ளுச் சீவும் கந்தசாமி தென்னையில் ஏறும் லாவகமே ஒரு தனி அழகுதான். ஆனால் அவன் எங்கள் வீட்டு ஒட்டில் கால் வைத்து நான் கண்டதில்லை. ஒட்டுக் கரையோடு முற்றத்தில் நின்றுதான் அம்மாவோடும் அப்பாவோடும் கதைப்பான்.
பறையடிக்கும் மாணிக்கம் ஒட்டிலிருந்து எட்டடி தள்ளி நின்றே கதைப்பான். கிட்ட வந்தாலே ஏதாவது ஒட்டி விடும் என்று நினைத்து அவனை அப்படித் தள்ளி வைத்தார்களோ..?
கதிரமலை எங்கள் வீட்டில் குழந்தைகளுக்குத் தலைமயிர் வெட்ட வேண்டுமென்றால் மட்டும் ஒட்டில் வந்து இருந்து வெட்டுவான். மற்றும் படி எட்டத்தான் இருப்பான்.
ஒட்டு என்றால் என்ன என்ற யோசனை உங்களுக்கு வரலாம். எனக்குக் கூட ஆரம்பத்தில் ஏன் அந்த ஒட்டு என்று விளங்கவில்லை. வழுவழுப்பான எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையுடன் சேர்த்து ஒரு சொருசொருப்பான விறாந்தை கட்டப் பட்டிருந்தது. ஆனால் அது எங்கள் பெரிய விறாந்தையிலிருந்து அரை அடி பதிவாகவே இருந்தது. மிகச் சின்ன வயசில் அது எனக்கு தொங்கி விளையாட நல்ல சாதகமான சாதனமாய் இருந்தது.
எனக்குள் சிந்தனைகள் விரியத் தொடங்கிய - ஒவ்வொரு விடயத்திலும் பூராயம் தேடத் தொடங்கிய - ஏன் என்ற கேள்விகளை மற்றவர்களிடம் அடுக்கத் தொடங்கிய ஒரு கால கட்டத்தில்தான் நான் எனது அம்மம்மாவிடம் அந்த ஒட்டு பற்றி விசாரித்தேன்.
”அம்மம்மா..! ஏன் அதுக்கு ஒட்டு எண்டு பெயர்...? அதேன் பெரிய விறாந்தையை விடப் பதிஞ்சிருக்கோணும்;....?"
br />
அதற்கு அம்மம்மா சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நம்ப முடியாதிருந்தது. அவ பஞ்சமர்களின் பெயர்களை அநாயசமாக அடுக்கி
"அவையள் வந்தால் இருக்கிறதுக்குத்தான்"
என்று சொன்னா. உண்மையிலேயே நான் ஆச்சரியப் பட்டுப் போனேன். அதற்காக என்றே ஒரு விறாந்தையை எமது விறாந்தையுடன் ஒட்டி விட்டுள்ளார்களா? என்ன மனிதர்கள் இவர்கள்....!
"ஏன் அம்மம்மா..! அவையள் இந்த மேல் விறாந்தையிலை இருந்தால் என்ன..?
சீ..... மொக்குப் பிள்ளை மாதிரிக் கதைக்காதை. நாங்கள் இந்த விறாந்தையிலை இருந்து கதைக்கிற பொழுது அவையளும் இதிலை இருந்தால் என்ன மாதிரி..? அவையள் எங்களுக்குக் கீழைதான் இருக்கோணும்."
அம்மம்மாவின் பதில் எனக்குள் ஒருவித அதிருப்தியான உணர்வையே தோற்றுவித்தது. எமது வீட்டின் ஒவ்வொரு காரியத்திலும் பங்கு கொள்ளும் - அவர்களைத்(பஞ்சமர்) தாழ்த்தி வைத்துப் பார்க்கும் இந்தக் குரோதம் இவர்களுக்குள் எப்படி வந்தது. ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். எனக்குள் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன.
அதன் பின்தான் நான் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். எனக்கு எதுவுமே பிடிக்க வில்லை. ஆனாலும் என் வீட்டுப் பெரியோரைச் சீர் திருத்தும் அளவுக்கு எனக்கு வயது போதவில்லை. என் சொற்களோ செயல்களோ அங்கு எடு படவில்லை. என்ன கதைத்தாலும் மொக்குப் பிள்ளை..! ஆள்தான் வளர்ந்திருக்கிறாளே தவிர இவளுக்கு அறிவு வளரேல்லை.. போன்ற ஆலாபனைகள் தான் எனக்குக் கிடைத்தன.
ஆனாலும் எனக்குள் எழுந்த சிந்தனைகள் அறுபட வில்லை. அவை இன்னும் இன்னும் பெரிதாக விரிந்தன. கதிரமலையோ கோபாலுவோ வீட்டுக்கு வந்தால் அவர்களும் மனிதர்கள்தான் என்ற நினைப்போடு அவர்களோடு நானும் போய் ஒட்டில் இருந்து கதைக்கத் தொடங்கினேன். இவைகளைப் பார்த்து அம்மா என்ன நினைத்தாவோ தெரியாது. ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை.
அவ சொந்தமான எந்த சிந்தனையையும் வெளிப் படுத்தும் தைரியம் இன்றி அவவின் பெற்றோரான எனது பாட்டாவும் அம்மம்மாவும் வகுத்த படி சமூகக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு வளர்ந்திருக்கிறா. - இது தப்பு, இது சரி. - என்று பகுத்தாயும் தன்மையோ திறனோ அவவுக்குள் இருந்தாலும், இவைதான் நியதி என்று எண்ணி அதன் படி வாழும் மனப் பக்குவமும் அவவுக்குள் தாரளமாக இருந்தது. மற்றும் படி அவவிடம் சாதித் தீயோ மனிதர்களை மண்டியிட வைக்கும் மனிதமல்லாத குணமோ இல்லை. அதனால்தான் அவ எதுவும் சொல்லவில்லையோ..!
ஆனால் நான் அப்படி சமமாக இருந்து கதைப்பதை பாட்டாவோ அம்மம்மாவோ கண்டு விட்டால் போதும். நான் அவர்களின் கடுமையான கோபத்துக்காளாகி வசைமாரிகளை வாங்கிக் கட்டிக் கொள்வேன். எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அம்மா பேசினால் மட்டுந்தான் எனக்கு அழுகை வரும். மற்றவர்கள் பேசினால் என்னில் பிழை இல்லை என்று தெரிந்தால் மனம் கொண்ட மட்டும் என் மனசுக்குள்ளேயே அவர்களைத் திட்டி விட்டு இருந்து விடுவேன்.
அன்று சனிக்கிழமை. இற்றைக்கு 30 வருடத்துக்கு (1972) முந்திய காலகட்டம். கதிரமலை வந்திருந்தான். எனது தம்பிமார், சித்தப்பாமார் எல்லோரும் ஒவ்வொருவராக முற்றத்தில் கதிரை போட்டமர கதிரமலை நின்ற படி அவர்களுக்குத் தலைமயிர் வெட்டி விட்டான். கனபேருக்கு வெட்டியதால் களைத்தும் விட்டான்.
அம்மா இன்று இரண்டாவது தேநீர் அவனுக்காகப் போட்டு விட்டு வழமை போல அவனுக்கென வைத்த தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி என்னைக் கூப்பிட்டுத் தந்தா. எனக்கு என்னவோ போல இருந்தது. அம்மாவோடு இது பற்றி ஏற்கெனவே கதைத்திருந்தும் அம்மா யோசிப்பதாகச் சொன்னாவே தவிர செயற் படுத்துவதாய்த் தெரியவில்லை. எனக்கு கோபமுமில்லை. கவலையுமில்லை. இரண்டுக்கு மிடைப்பட்ட ஏதோ ஒரு உணர்வு.
"அம்மா இண்டைக்கு நான் அவனுக்குக் கிளாசிலைதான் ரீ குடுக்கப் போறன்."
எனது அந்தத் தீர்க்கமான பேச்சு அம்மாவைச் சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் அம்மாவிடம் தான் நினைப்பதைத்தான் தனது பிள்ளைகள் செய்ய வேண்டுமென்ற திணிப்புத் தன்மையோ கண்டதையும் எதிர்க்கும் தன்மையோ இல்லாததால் என்னை மௌனமாகப் பார்த்த படி நின்றா. அவவையும் பஞ்சமரைத் தாழ்த்தும் இந்தப் பண்பற்ற செயல்கள் புண் படுத்தியிருந்தனவோ..? எனக்குத் தெரியவில்லை.
நான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பொட்டுக் கிளாஸை எடுத்து அதனுள் அந்தத் தேநீரை ஊற்றிக் கொண்டு போய் களைத்துப் போயிருந்த கதிரமலையிடம்
"இந்தா கதிரமலை..! ரீ யைக் குடி..!"
என்று நீட்டினேன்.
அவன் தீப் பட்டவன் போலத் துடித்துப் பதைத்து எழுந்து அந்தப் பொட்டுக் கிளாஸையும் என்னையும் கண்கள் அகல விரிய ஆச்சரியமாய்ப் பார்த்தான்.எனக்கு சந்தோசமாய் இருந்தது. ஒரு ஜீவனை அசைத்திருக்கிறேன். அதுவும் சந்தோசமாக அசைத்திருக்கிறேன் என்ற சந்தோசம்.
"பிடி கதிரமலை. - உனக்குத்தான்."
அவன் கண்களுக்குள் என்ன உணர்வோ! நிட்சயமாய் நன்றி கலந்த உணர்வு! அதற்கு மேலும் ஏதோ சொல்ல விளையும் தவிப்பு.
"இருந்து குடி கதிரமலை."
ஏதோ ஒரு சந்தோசம் அவன் முகத்தில் தவழ கிளாஸை பக்குவமாகப் பிடித்துக் குடிக்கத் தொடங்கினான்.
எனக்கு அன்று மனசு நிறைந்திருந்தது. அம்மாதான்
"இக்கணம் பாட்டா கண்டால் பேசப் போறார்."
என்று பயந்து கொண்டிருந்தா.
"ஏதும் ஒட்டிக் கொண்டு வந்திடும் எண்டு பயமெண்டால் நல்லாச் சாம்பல் போட்டு மினுக்குங்கோ. அல்லது விம் போட்டுக் கழுவித் துடைச்சு வையுங்கோ."
தொண்டை வரை வந்த வார்த்தைகளை வெளியே சிந்த முன் அப்படியே முழுங்கிக் கொண்டேன்.ரீ
அன்றைய பொழுது எனக்கு அர்த்தமுள்ளதாய் ஆனந்தமானதாய் இருந்தது. சிட்டுக் குருவியின் சிறகசைப்பு எனக்குள். அடுத்தநாள் விடிய எழும்பி பல்லு மினுக்கும் போது குசினிக்குள் அம்மா ஆட்டுப் பால் தேநீரை ஆத்தும் வாசம் கிணற்றடி வரை வந்து மூக்கைத் தொட்டது.
ஆசையோடு தேநீருக்காய் குசினிக்குள் நுழைந்த போது
"பொட்டுக் கிளாசுக்குள்ளைதான் எனக்கு ரீ வேணும்..!"
என்று தம்பி அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அம்மா ஒன்றும் பேசாமல் தேநீரை கிளாசுகளுக்குள் ஊற்றிக் கொண்டிருந்தா. அவைகளுக்குள் பொட்டுக் கிளசைக் காணவில்லை.
அது குசினிக்குப் பின்னால் வெளியில் உள்ள விறகு வைப்பதற்கென இறக்கப் பட்ட பத்தி மூலைக்குள் பத்திரமாகக் கழுவிக் கவிழ்க்கப் பட்டிருந்தது.
-முற்றும்-
சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி
19.11.2002
பிரசுரம் - முழக்கம் - கனடா - 17.01.2003
குண்டுமணிமாலை
அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள் வீடுகள் லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை. ரெயின் ஓடிக் கொண்டிருந்தது.
ரெயினின் அந்த சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்த சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது.
நான் இப்படித்தான். யேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும்போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன்.
எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும் ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு பாடசாலை லீவுக்கும் குடும்பமாக, குதூகலமாக ரெயினில் பயணித்ததை என்னால் மறக்க முடிவதில்லை. நினைக்கும் போதெல்லாம் குப்பென்று என்னில் சந்தோச வாசனை வீசும்.
ரெயினுக்குள் என்னைத் தவிர எல்லோருமே தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் ஆழ்ந்து தூங்குவதாகத் தெரியவில்லை. பயம்...! பயம்...! கொழும்பு(கோட்டை) ரெயில்வே ஸ்ரேசனில் பார்த்த போதே உணர்ந்து கொண்டேன். யாருமே இயல்பாக இல்லை என்பதை. என்னைப் போல அதீத பயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் யார் கண்ணிலும் துறுதுறுப்பு இருக்க வில்லை.
பொட்டு வைக்கவே துணிவில்லாத பாழடைந்த நெற்றிகள். குலுங்கிச் சிரிப்பதை மறந்தே போய் விட்ட குமருகள். உறவுகளைத் தொலைத்து விட்டு சோகங்களை மட்டும் துணையாக்கிக் கொண்ட சொந்தங்கள் என்று அங்கு நின்ற தமிழர்கள் எல்லோருமே முகமிழந்து நின்றார்கள். அவர்கள் எல்லோருமே வவுனியாவை நோக்கித்தான்.
ரெயின் வந்ததும் எல்லோரும் ஏதோ அவசரத்துடன் விரைந்து ஓடி ஏறினார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டும் சிலிப்பரேட்ஸ் கதவுகள் திறக்கும் வரை காத்திருந்து திறந்ததும் ஏறி தாம் ஏற்கெனவே பணம் கொடுத்துப் பதிவு செய்து வைத்த நம்பர் இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள்.
சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவுகளை வெளியில் இருந்து யாராலும் திறக்க முடியாது என்பதால் கொழும்பிலிருந்து வவுனியா போவதற்கிடையில் காடையர்களால் தமக்கு எந்த வித ஆபத்தும் நேராதென அவர்கள் நம்பினார்கள்.
அந்தக் கொம்பார்ட்மெண்டில் ஏறியவர்களில் அனேகமானோர் வவுனியாவில் ரீச்சராகவோ, அல்லது வேறு நல்ல பதவியிலோ இருப்பவர்கள் என்பதை அதற்குள் ஏறிய பின்தான் அறிந்து கொண்டேன். அவர்கள் எல்லோருமே அனேகமான வெள்ளிகளில் கொழும்பு வந்து, ஞாயிறு இரவு ரெயினில் வவுனியா திரும்புவது வழக்கமாம்.
எனக்குப் பகல் ரெயினில் வவுனியாவுக்குப் பயணஞ் செய்யத்தான் விருப்பமாக இருந்தது. ஆனால் நான் எனது தாய்நாட்டில் நடமாட எனக்குப் பொலிஸ் ரிப்போர்ட் வேண்டுமாம். விமான நிலையத்தில் வைத்தே மாமா சொன்னார்.
"ஏன் அப்பிடி? என்னட்டை யேர்மனியப் பாஸ்போர்ட் இருக்குது. ஐசி இருக்குது. இது போதாதோ என்னை அடையாளம் காட்ட..!" சற்று எரிச்சலுடன் கேட்டேன்.
"இதுக்கே எரிச்சல் பட்டால்....! இன்னும் எத்தனை அலங்கோலங்களையெல்லாம் நாங்கள் இங்கை காணுறம். தமிழராய்ப் பிறந்திட்டம். தாங்க வேணுமெண்ட விதி." சலிப்பும் கோபமும் இழைந்தோட மாமா சொன்னார்.
என் எரிச்சல் யாரை என்ன செய்தது? பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கத்தான் வேணும். வேறு வழியிருக்கவில்லை. இரண்டு தரமாகப் பொலிஸ் ஸ்டேசன் வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கையில் ஒரு நாளைத் தொலைத்திருந்தேன். இன்னுமொரு நாளைத் தொலைக்க விரும்பாத நான் இரவு ரெயினிலேயே மாமாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.
ஓடிக் கொண்டிருக்கும் ரெயினின் யன்னலினூடாக இருளில் ஒளிந்திருக்கும் என் தாயகத்தின் அழகைத் தேடித் தேடிப் பார்த்தேன்.
அடிக்கடி விழித்துக் கொண்ட மாமா கேட்டார் "என்ன சந்தியா நீ நித்திரையே கொள்ளேல்லையோ..? நேற்றிரவும் செக்கிங் அது இதெண்டு நித்திரையே இல்லை. இனி வவுனியா போய்ச் சேர்ந்தால் பன்னிரண்டு வருஷக் கதையளை அம்மா அப்பாவோடை கதைக்கோணுமெல்லோ..!" நான் மாமாவைப் பார்த்து முறுவலித்தேன்.
பன்னிரண்டு வருஷத்தில் மாமாவில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. தளர்ந்து போயிருந்தார். கொழும்பு வாழ்க்கை என்றாலும் கொடுமைகளில் மனம் குமுறிப் போயிருந்தார்.
மாமா மீண்டும் து}ங்கிப் போய் விட்டார். சிங்களக் குடில்களும் வீடுகளும் இருளில் ஓடிக் கொண்டிருந்தன. எனக்குக் குருநாகல் ரெயில்வே ஸ்டேசனையும் பார்த்த பின் கொஞ்ச நஞ்சம் இருந்த பஞ்சியும் பஞ்சாய்ப் பறந்து விட்டது.
குருநாகல் ரோட்டில் நாங்கள் அப்பாவுடன் கைகோர்த்து நடந்ததை விட, அடுத்து வரப்போகும் நாகொல்லகம வில், ரெயில்வே குவார்ட்டர்ஸில், நாங்களெல்லோரும் லீவில் வந்து நிற்கும் போது குருநாகல் வரை அப்பா போய் தேங்காய்ப் பூரான் எங்களுக்கு வாங்கி வந்த நாட்கள் தான் அதிகம்.
நாகொல்லம ரெயில்வே ஸ்ரேசன் ஒரு சின்ன அடக்கமான ரெயில்வே ஸ்டேசன். சின்னனென்று புகையிரதப் பெட்டியிலேயே அமைக்கப் பட்ட ரெயில்வே ஸ்டேசன் அல்ல. அழகாகக் கட்டப் பட்ட பெரிய கட்டடம். அழகான பெரிய Flatform. Flatform இற்கு நேர் எதிரே தண்டவாளங்களுக்கு மற்றைய பக்கத்தில் ஒரு புல்வெளி.
அங்குதான் அப்பா தன் சக வேலையாட்களுடன் வொலிபோல் (Volleyball) விளையாடுவார். அந்த இடத்திலிருந்து இருநூறு மீற்றர் நடந்து போனால், பெரிய தாமரைக்குளம். தாமரையும் அல்லியுமாகப் படர்ந்திருக்க அழகிய சிங்களப் பெண்கள் நீண்ட கூந்தலுடன் முங்கி முங்கி எழுந்து மீன் போல நீந்தும் காட்சியால் குளம் அழகின் உச்சத்தில் நிற்கும்.
அந்தக் குளத்தில்தான் அப்பா எனக்கு நீச்சல் கற்றுத் தந்தார். "நான் மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு..!" தயங்கிய என்னைத் தன் கைகளில் ஏந்தி இரண்டு நாட்களில் பயம் தெளிய வைத்து.....
ரெயினின் ஓட்டத்துக்கு எதிர்ப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் மரங்கள் வீடுகள் லைற்கம்பங்கள் எல்லாவற்றையும் விட வேகமாக என் நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன.
நாகொல்லகமவுக்கு அப்பா மாற்றலாகிய இரண்டு கிழமைகளில் எங்களுக்குப் பாடசாலை லீவு. அப்பா பருத்தித்துறைக்கு வந்து எங்களையும் கூட்டிக் கொண்டு எல்லோருமாக நாகொல்லகமவுக்கு வந்து சேர்ந்தோம்.
ரெயினால் இறங்கும் போதே போர்ட்டர் மார்ட்டீன் வந்து "மாத்தயா..! மாத்தயா..!"
என்று குழைந்து கொண்டு நின்றான். எங்கள் சூட்கேஸ்களில் இரண்டைத் தூக்கிக் கொண்டு எங்களுடன் நடந்தான்.
சண்டிங்ரூமிலிருந்து வெளியே வந்த சில்வாவிடம் பணம் கொடுத்து "நல்ல ரோஸ் பாணும் கோழிக்கூடு(கப்பல்) வாழைப்பழமும் வாங்கி வா." என்று அப்பா சிங்களத்தில் சொன்னார். அண்ணன் எங்கள் வீட்டுக் கோழிக்கூட்டை நினைத்துக் கொண்டு சிரிசிரியென்று சிரித்தான். நானும் அவனோடு சேர்ந்து சிரித்தேன்.
சிலிப்பர் கட்டைகளால் எல்லை போடப் பட்ட அந்த வீட்டின் சிலிப்பர் கட்டை கேற்றைத் திறக்கும் போதே பொன்னாங்கண்ணிச் செடிகள் இரண்டு பக்கமும் பரந்திருக்க பாதை மிகவும் சுத்தமாக வீட்டு முகப்பு வரை நீண்டிருப்பது தெரிந்தது. வீட்டின் இடதுபக்க முற்றம் வழைகளால் நிறைந்து வாழைப் பொத்திகளும் வாழைக்குலைகளுமாய் எம்மை வரவேற்றது. வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மாவுக்கு அந்த வீடு நன்றாகப் பிடித்து விட்டது என்பது அம்மாவின் பிரகாசித்த முகத்தில் தெரிந்தது.
முன்னுக்குத் தனியாக இருக்கும் அறையில் அப்பாவின் - அஸிஸ்டென்ட் டிக்சன்- இருக்கிறார் என அப்பா சொன்னார். டிக்சன் அங்கிளின் அறைக்கு முன்னால் கதவுக்கு மேலே குருவிக்கூடு இருந்தது. குருவிகள் வந்து கீச்சிட்டு, சண்டை பிடித்துச் சென்றன. தம்பி ஆர்வமாய் அவைகளைப் பார்த்தான்.
அப்பா சூட்கேஸ் தூக்கிய மார்ட்டீனின் கையில் சில்லறையைத் திணிக்க, அம்மா தேநீர் தயாரிக்க, நானும் அண்ணனும் குசினியின் பின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தோம்.
பின் முற்றத்தில் பெரிய பெரிய பப்பாளிப் பழங்களுடன் பப்பாளி மரங்களும், மரவெள்ளி மரங்களும் நிறைந்து நின்றன. அங்காலை ஒரு கிணறு. ஆழம் பார்க்கும் ஆர்வம் எங்களுக்கு. ஓடிப்போய் எட்டிப் பார்த்தோம். அண்ணன் ஒரு சின்னக் கல்லை எடுத்துப் போட்டு விட்டு, கல் விழுந்ததால் அழகாகக் கலங்கிய கிணற்று நீரைப் பார்த்து ரசித்தான்.
"அது சரியான ஆழம். இங்காலை வாங்கோ." அறைக்குள் உடை மாற்றுகையில் யன்னலால் எம்மைக் கண்டு விட்ட அப்பா சத்தம் போட்டார்.
அப்போதுதான் கண்டேன் அந்த மரத்தை. அது பெரிய மரமில்லை. செடி போன்ற சிறிய மரம். அதன் கீழே குண்டுமணிகள். ஒரு பக்கம் சிவப்பும் மறுபக்கம் கறுப்புமான குண்டுமணிகள்.
"வாவ்..! குண்டுமணி மரம்." வாழ்க்கையில் முதன் முதலாகக் குண்டுமணி மரத்தைக் கண்டதில் என் எட்டு வயது மனம் துள்ளிக் குதிக்க நான் துள்ளினேன்.
பயித்தங்காய் போல. ஆனால் பயித்தங்காய் போல நீளம் நீளமாய் இல்லாமல் சின்னச் சின்னக் காய்கள் அந்த மரத்தில். ஒரு காயைப் பிய்த்துப் பார்த்தேன். உள்ளே குண்டுமணிகள். ஆனால் காயாமல். அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸின் சந்தோசம் எனக்கு.
அன்று மாலையே நிறையக் குண்டுமணிகள் பிடுங்கிச் சேர்த்து மாலை கோர்க்க ஆரம்பித்தேன். தம்பி பாலு குண்டுமணிகள் சேர்க்க எனக்கு உதவி செய்தான்.
குண்டுமணி காயாமல் ஈரத்தன்மையுடன் பச்சையாக இருந்ததால் ஊசி சுலபமாக ஏறியது.
மாலை கோர்த்த பின் தும்புத் தடியில் கொழுவி ஓட்டில் காய வைத்தேன். எனக்குப் பெருமையோ பெருமை. ஊரில் பருத்தித்துறையில் நான் ஒருநாளும் குண்டுமணி மரம் பார்க்கவில்லை. லீவு முடிந்து போகும் போது குண்டுமணி மாலையுடன் போய் எனது சினேகிதிகளைப் பொறாமைப் பட வைக்கலாம்.
அன்றிரவு குண்டுமணி மாலைக் கனவுகளுடனேயே தூங்கிப் போனேன். அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாய் ஓடிப் போய் காயவைத்த குண்டுமணி மாலையைப் பார்த்தேன். காணவில்லை. சோகமாகிப் போனேன்.
"குருவி து}க்கிக் கொண்டு போயிருக்கும்." அப்பா சொன்னார்.
குருவிக் கூட்டில் கீச்சிட்ட குருவிகளைக் கலைத்தேன்.
"நங்கி......! நங்கி.....!"
குரல் வந்த திசையைப் பார்த்தேன். டிக்சன் அங்கிள் சற்றுக் கோபமாக..
"துரத்தாதை குருவிகளை..! வீட்டிலை உள்ள செல்வமெல்லாம் போயிடும்."
சிங்களத்தில் தடுத்தார்.
இப்போது அவரது நீண்ட மூக்கு எனக்கு விகாரமாகத் தெரிந்தது.
"கிளி மூக்கு" மனதுக்குள் திட்டிக் கொண்டேன். வெளியில் அசடு வழிந்த படி "சொறி அங்கிள்" என்றேன்.
எனக்குக் கவலை. எப்படி ஒரு குண்டுமணி மாலை கோர்த்துக் காய வைத்து ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று. வீட்டுக்குள்ளே காயவைத்தால் குண்டுமணி சுருங்கிப் போகிறது. வெளியிலே காயவைத்துப் பலதடவைகள், கோர்த்த குண்டுமணி மாலையைக் குருவிக்குக் கொடுத்து விட்டேன். எப்படித்தான் ஒளித்துக் காயவைத்தாலும் கண்டு பிடித்து விடுகின்றனவே இந்தக் குருவிகள். லீவும் முடிகிறது. மரத்திலும் முற்றிய குண்டுமணிகள் முடிந்து பிஞ்சுகள்தான் எஞ்சியிருக்கின்றன. தம்பி பாலுவும் என் கவலையில் கொஞ்சம் பங்கு எடுத்துக் கொண்டு தேடித் தேடி கொஞ்சம் குண்டுமணிகள் பொறுக்கித் தந்தான்.
இரண்டு நாளில் ஊர் திரும்பப் போகிறோம். முற்றத்தில் ஒரு பேப்பர் போட்டு, நான் கோர்த்த மாலையை அதன் மேல் வைத்து வெயிலில் காய விட்டேன். நானும் பக்கத்தில் இருந்து காய்ந்தேன்.
தங்கையை இடுப்பில் தூக்கிய படியே "உச்சி மண்டையிலை வெய்யில் சுடுது. உள்ளை வா..!" அம்மா சத்தம் போட்டா. எள்ளேன் காயுது எண்ணெய்க்காக. எலிப்புழுக்கை ஏன் காயுது கூடக் கிடந்த குற்றத்துக்காக." என்றும் ஏதேதோ புறுபுறுத்தா. ஆனாலும் குண்டுமணிகளை மாலையாக்க நான் படும் பாடு தெரிந்ததாலோ என்னவோ என்னை வலுக் கட்டாயமாக உள்ளே அழைக்க வில்லை.
ஊர் திரும்புகையில் ஒரு குண்டுமணி மாலை என்னிடம் பத்திரமாக இருந்தது. எனக்குப் பெருமையோ பெருமை.
"நானே கோர்த்தேன்." என்று பெருமையாகச் சொல்ல, ஊரில் என் நண்பிகள் நம்பாது வியந்து வியந்து பார்த்தார்கள்.
ரெயின் ஒரு தரம் குலுங்கி ஓடியது.
"ஏன் எல்லாவற்றையும் விட்டிட்டு ஓடிப்போனேன். பதினெட்டு வருடங்களாகப் பொத்தி வைத்திருந்த குண்டுமணி மாலையை மட்டுமா..?! எல்லாவற்றையும் விட்டிட்டு ஏன் யேர்மனிக்கு ஓடிப் போனேன்!"
"ஏன்.....? ஏன்.....?"
பருத்தித்துறைக் கடலிலிருந்து காலம் நேரம் பாராது எம்மை நோக்கி வந்த ஷெல்களாலா? ஹெலியிலிருந்து நீண்ட துப்பாக்கிகளிலிருந்து எங்கள் வீட்டிலும் சன்னங்கள் சிதறியதாலா? வீடு வீடாகச் சென்ற சிங்கள இராணுவம் ஆண்களைச் சுட்டு வீழ்த்தி, பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக எண்ணி தம் இச்சை தீர்த்துக் கொண்டதாலா? குறுக்கே கட்டியபடி, குளித்த குறையில், துலாக் கயிற்றை இழுத்துத் தண்ணிவாளியைப் பிடித்துக் கொண்டு, நேரம் போவதே தெரியாமல் தங்கையுடன் கதையளந்த காலம், எங்கே ஷெல் வந்து எம் தலையில் விழுந்து விடுமோ! எந்தப் பக்கத்தால் ஆமி எங்கள் வீட்டுக்குள் குதிப்பானோ! என்ற அச்சத்தில் காக்காக் குளிப்புக் குளிக்கும் காலமாக மாறியதாலா? என் பிள்ளைகளும் இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற சுயநலம் கலந்த பயத்தாலா?
"ஏன் ஓடிப் போனேன்?"
"போய்.... என்ன கண்டேன் யேர்மனியில்..!"
வெறுமை, தனிமை, குளிரின் கொடுமை, பாஷை தெரியாத பரிதவிப்பு, "தொங்கிக் குதிக்கக் கூட தடையா இங்கே..?" என்ற வினா முகங்களில் தொக்கி நிற்க மனம் வாடி நின்ற என் பிள்ளைகள். எதையோ பறிகொடுத்து விட்ட வேதனையை முகத்தில் தெரிய விடாமல் மறைக்கப் பிரயத்தனப் படும் எனது கணவன். இவை தவிர வேறு என்ன கண்டேன். தமிழ் முகங்களையே காணமுடியாத ஒரு நகரம்.
பல்லைத் தீட்டித் துலாவிலை தண்ணியை இழுத்து வாய் கொப்பளித்து முகம் கழுவி வர, சுடச்சுட ஆட்டுப்பால்தேநீர் தரும் அம்மா இல்லை. களைத்துப் போய் வந்தால், "அக்கா நல்லாக் களைச்சுப் போட்டியள் போலை இருக்கு. முதல்ல இதைக் குடியுங்கோ." அன்போடு கோப்பையை நீட்டும் தங்கைமார் இல்லை.
"அக்கா நல்ல கிளிச்சொண்டு மாங்காய் கொண்டு வந்திருக்கிறன். நைஸா அம்மாக்குத் தெரியாமல் உப்பும் து}ளும் கொண்டு வாங்கோ." என்கிற தம்பிமார் இல்லை. என் பிள்ளைகளை இடுப்பில் து}க்கி வைத்துக் கொண்டு தோட்டத்து மாதுளம் பழத்தைப் பிரித்து மணிமணியாக எடுத்து பிள்ளைகளின் வாய்க்குள் நசித்து சாறைச் சுவைக்க விட்ட படியே காகமும் வடையும், குரங்கும் அப்பமும்...... கதைகள் சொல்லும் அப்பா இல்லை.
இன்னும் எத்தனை இல்லைகள்.!
"இருந்தும் ஏன் போனேன் யேர்மனிக்கு..?"
..........? ................?
போகாமலிருந்திருந்தாலும் எப்படி அல்லல் பட்டிருப்பேன். தம்பியைத் தேடி வந்த இந்தியன் ஆமி எங்கட குடும்பத்தைப் படுத்தின பாட்டைத் தங்கை பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாள். நின்றிருந்தால் நானும் பட்டிருப்பேன். அவள் அந்தக் கொடுமைகளைக் கூட கதை போல நேர்த்தியாக எழுதி அனுப்பிக் கொண்டேயிருப்பாள்.
ஓரு கடிதத்தில் "அக்கா...! அந்தச் சண்டாளர் ஒவ்வொரு முறை வரும் போதும் உங்கடை அலுமாரியைக் குடைஞ்சு குடைஞ்சு கொஞ்சங் கொஞ்சமாக எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போறாங்கள். சாறியள், எவர்சில்வர் சாமான்கள்.... என்று எல்லாத்தையும் கொண்டு போறாங்கள்....." என்று எழுதியிருந்தாள்.
"அதையிட்டு ஒண்டும் கவலைப் பட வேண்டாம். உங்களுக்கு ஒண்டும் நடக்காதது தெய்வசெயலே.....!" நானும் ஆறுதல் கூறிக் கடிதங்களாய் எழுதினேன்.
என்ன கஷ்டத்திலும் "அக்கா...!" என்று அன்பைத் தோய்த்து எழுதும் தங்கையின் கடிதங்கள் நாளுக்கு நாள் சோகத்தால் நிறைந்து கனமாகவே வந்தன.
அப்படி வந்ததில் "தம்பியை இந்தியப் படையினர் 500 பேர் ஒன்றாகச் சுற்றி வளைத்து, அவனுடன் நேர் நின்று போராட முடியாத கட்டத்தில - பசூக்கா ஷெல்லால் அடித்து வீழ்த்தி விட்டார்கள். கடைசி மூச்சு வரை போராடி தம்பி வீரமரணமடைந்து விட்டான்......!" என்ற வாக்கியங்களுடன் சுமைதாளாத சோகத்துக்கு என்னை ஆளாக்கிய அந்தக் கடிதத்துக்கு முதல் கடிதத்தில் வந்த செய்தி...
"அக்கா..! இம்முறை இந்தியன் பிசாசுகள் ஐந்து பேர் வந்தார்கள். ஒருவன் என்னை இழுத்து வீழ்த்தி என் நெஞ்சின் மேல் காலை வைத்துக் கொண்டு "தம்பி மொறிஸ் எங்கே..?" என்று கேட்டு உறுமினான். இன்னொருவன் எங்கள் குட்டித் தங்கையின் அழகிய பின்னல்களைப் பிடித்து இழுத்து, நெஞ்சிலே துவக்கின் பின் பக்கத்தால் இடித்து, "எங்கே மொறிஸ்..? சொல்லு..!" என்று அதட்டினான். அவள் வலி தாங்காமல் வார்த்தை வராமல் புரண்ட போது கூட அவன் இரக்கப் பட வில்லை. மற்றவன் அப்பாச்சிக்கு உலக்கையால் அடித்தான். அப்பாச்சியின் அலறல் நெஞ்சைப் பிளந்தது. நல்ல வேளையாக அம்மா நிற்கவில்லை. அப்பாவிடம் யாழ் சென்றிருந்தா.
மற்றவன் மைத்துனர் கணேசைப் பிடித்து முகத்தில் துவக்கால் அடித்து, இரத்தம் பீறிட்டுப் பாய இழுத்துக் கொண்டு போனான். ஐந்தாவது ஆமி வழமை போல் உங்கடை அலுமாரியைக் குடைஞ்சு எதையெல்லாமோ இழுத்துக் கொண்டு போனான். அந்த நேரம் வெளியிலிருந்து வந்த ஒரு தமிழ் ஆமியால்தான் எங்கள் கற்பும் உயிரும் காப்பாற்றப் பட்டன. எல்லோரும் போய் நாங்கள் ஒரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்தான் பார்த்தேன். உங்கடை குண்டுமணிமாலை அறுந்து கணேஸ் சிந்திய இரத்தத்தில் சிதறிப் போயிருந்ததை...!"
ரெயின் விசுக்கென்று நாகொல்லகம ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டிச் சென்றது. அங்கே ரெயின் நிற்கவில்லை. ஆனாலும் நான் அவசரமாகப் பார்த்ததில் அந்த நீலவீடு இப்போ மஞ்சளாகியிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது.
வெள்ளை சேர்ட், வெள்ளை ரவுசர், வெள்ளைத் தொப்பி போட்ட ஸ்ரேசன் மாஸ்டர் வுயடிடநவ உடன் ஸ்ரேசனில் நிற்பதும் தெரிந்தது. ஆனால் அது என்ரை அப்பா இல்லை.
அப்பா......! உயிரோடு போராடும் அந்தக் கனமான வேளையிலும் என் முகம் பார்க்க ஏங்கி வழி மேல் விழி வைத்து என் வரவுக்காய் வவுனியாவில் காத்திருக்கிறார்.
ரெயின் இப்போ மாகோவை நோக்கித் தன்பாட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது.
எனக்கு ஏனோ நெஞ்சு கொள்ளாமல் கண்களால் வழிந்தது. மாமா பார்த்து விடக் கூடாதே என்று துடைக்கத் துடைக்க வழிந்தது.
நிகழ்வு - 20.11.1997
-முற்றும்-
சந்திரவதனா
யேர்மனி
1999
பிரசுரம் -
முதற்பாகம் - ஈழமுரசு (15-21 யூலை 1999)
இரண்டாம் பாகம் - ஈழமுரசு (22-28 யூலை 1999)
ரெயினின் அந்த சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்த சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது.
நான் இப்படித்தான். யேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும்போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன்.
எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும் ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு பாடசாலை லீவுக்கும் குடும்பமாக, குதூகலமாக ரெயினில் பயணித்ததை என்னால் மறக்க முடிவதில்லை. நினைக்கும் போதெல்லாம் குப்பென்று என்னில் சந்தோச வாசனை வீசும்.
ரெயினுக்குள் என்னைத் தவிர எல்லோருமே தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் ஆழ்ந்து தூங்குவதாகத் தெரியவில்லை. பயம்...! பயம்...! கொழும்பு(கோட்டை) ரெயில்வே ஸ்ரேசனில் பார்த்த போதே உணர்ந்து கொண்டேன். யாருமே இயல்பாக இல்லை என்பதை. என்னைப் போல அதீத பயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் யார் கண்ணிலும் துறுதுறுப்பு இருக்க வில்லை.
பொட்டு வைக்கவே துணிவில்லாத பாழடைந்த நெற்றிகள். குலுங்கிச் சிரிப்பதை மறந்தே போய் விட்ட குமருகள். உறவுகளைத் தொலைத்து விட்டு சோகங்களை மட்டும் துணையாக்கிக் கொண்ட சொந்தங்கள் என்று அங்கு நின்ற தமிழர்கள் எல்லோருமே முகமிழந்து நின்றார்கள். அவர்கள் எல்லோருமே வவுனியாவை நோக்கித்தான்.
ரெயின் வந்ததும் எல்லோரும் ஏதோ அவசரத்துடன் விரைந்து ஓடி ஏறினார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டும் சிலிப்பரேட்ஸ் கதவுகள் திறக்கும் வரை காத்திருந்து திறந்ததும் ஏறி தாம் ஏற்கெனவே பணம் கொடுத்துப் பதிவு செய்து வைத்த நம்பர் இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள்.
சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவுகளை வெளியில் இருந்து யாராலும் திறக்க முடியாது என்பதால் கொழும்பிலிருந்து வவுனியா போவதற்கிடையில் காடையர்களால் தமக்கு எந்த வித ஆபத்தும் நேராதென அவர்கள் நம்பினார்கள்.
அந்தக் கொம்பார்ட்மெண்டில் ஏறியவர்களில் அனேகமானோர் வவுனியாவில் ரீச்சராகவோ, அல்லது வேறு நல்ல பதவியிலோ இருப்பவர்கள் என்பதை அதற்குள் ஏறிய பின்தான் அறிந்து கொண்டேன். அவர்கள் எல்லோருமே அனேகமான வெள்ளிகளில் கொழும்பு வந்து, ஞாயிறு இரவு ரெயினில் வவுனியா திரும்புவது வழக்கமாம்.
எனக்குப் பகல் ரெயினில் வவுனியாவுக்குப் பயணஞ் செய்யத்தான் விருப்பமாக இருந்தது. ஆனால் நான் எனது தாய்நாட்டில் நடமாட எனக்குப் பொலிஸ் ரிப்போர்ட் வேண்டுமாம். விமான நிலையத்தில் வைத்தே மாமா சொன்னார்.
"ஏன் அப்பிடி? என்னட்டை யேர்மனியப் பாஸ்போர்ட் இருக்குது. ஐசி இருக்குது. இது போதாதோ என்னை அடையாளம் காட்ட..!" சற்று எரிச்சலுடன் கேட்டேன்.
"இதுக்கே எரிச்சல் பட்டால்....! இன்னும் எத்தனை அலங்கோலங்களையெல்லாம் நாங்கள் இங்கை காணுறம். தமிழராய்ப் பிறந்திட்டம். தாங்க வேணுமெண்ட விதி." சலிப்பும் கோபமும் இழைந்தோட மாமா சொன்னார்.
என் எரிச்சல் யாரை என்ன செய்தது? பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கத்தான் வேணும். வேறு வழியிருக்கவில்லை. இரண்டு தரமாகப் பொலிஸ் ஸ்டேசன் வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கையில் ஒரு நாளைத் தொலைத்திருந்தேன். இன்னுமொரு நாளைத் தொலைக்க விரும்பாத நான் இரவு ரெயினிலேயே மாமாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.
ஓடிக் கொண்டிருக்கும் ரெயினின் யன்னலினூடாக இருளில் ஒளிந்திருக்கும் என் தாயகத்தின் அழகைத் தேடித் தேடிப் பார்த்தேன்.
அடிக்கடி விழித்துக் கொண்ட மாமா கேட்டார் "என்ன சந்தியா நீ நித்திரையே கொள்ளேல்லையோ..? நேற்றிரவும் செக்கிங் அது இதெண்டு நித்திரையே இல்லை. இனி வவுனியா போய்ச் சேர்ந்தால் பன்னிரண்டு வருஷக் கதையளை அம்மா அப்பாவோடை கதைக்கோணுமெல்லோ..!" நான் மாமாவைப் பார்த்து முறுவலித்தேன்.
பன்னிரண்டு வருஷத்தில் மாமாவில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. தளர்ந்து போயிருந்தார். கொழும்பு வாழ்க்கை என்றாலும் கொடுமைகளில் மனம் குமுறிப் போயிருந்தார்.
மாமா மீண்டும் து}ங்கிப் போய் விட்டார். சிங்களக் குடில்களும் வீடுகளும் இருளில் ஓடிக் கொண்டிருந்தன. எனக்குக் குருநாகல் ரெயில்வே ஸ்டேசனையும் பார்த்த பின் கொஞ்ச நஞ்சம் இருந்த பஞ்சியும் பஞ்சாய்ப் பறந்து விட்டது.
குருநாகல் ரோட்டில் நாங்கள் அப்பாவுடன் கைகோர்த்து நடந்ததை விட, அடுத்து வரப்போகும் நாகொல்லகம வில், ரெயில்வே குவார்ட்டர்ஸில், நாங்களெல்லோரும் லீவில் வந்து நிற்கும் போது குருநாகல் வரை அப்பா போய் தேங்காய்ப் பூரான் எங்களுக்கு வாங்கி வந்த நாட்கள் தான் அதிகம்.
நாகொல்லம ரெயில்வே ஸ்ரேசன் ஒரு சின்ன அடக்கமான ரெயில்வே ஸ்டேசன். சின்னனென்று புகையிரதப் பெட்டியிலேயே அமைக்கப் பட்ட ரெயில்வே ஸ்டேசன் அல்ல. அழகாகக் கட்டப் பட்ட பெரிய கட்டடம். அழகான பெரிய Flatform. Flatform இற்கு நேர் எதிரே தண்டவாளங்களுக்கு மற்றைய பக்கத்தில் ஒரு புல்வெளி.
அங்குதான் அப்பா தன் சக வேலையாட்களுடன் வொலிபோல் (Volleyball) விளையாடுவார். அந்த இடத்திலிருந்து இருநூறு மீற்றர் நடந்து போனால், பெரிய தாமரைக்குளம். தாமரையும் அல்லியுமாகப் படர்ந்திருக்க அழகிய சிங்களப் பெண்கள் நீண்ட கூந்தலுடன் முங்கி முங்கி எழுந்து மீன் போல நீந்தும் காட்சியால் குளம் அழகின் உச்சத்தில் நிற்கும்.
அந்தக் குளத்தில்தான் அப்பா எனக்கு நீச்சல் கற்றுத் தந்தார். "நான் மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு..!" தயங்கிய என்னைத் தன் கைகளில் ஏந்தி இரண்டு நாட்களில் பயம் தெளிய வைத்து.....
ரெயினின் ஓட்டத்துக்கு எதிர்ப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் மரங்கள் வீடுகள் லைற்கம்பங்கள் எல்லாவற்றையும் விட வேகமாக என் நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன.
நாகொல்லகமவுக்கு அப்பா மாற்றலாகிய இரண்டு கிழமைகளில் எங்களுக்குப் பாடசாலை லீவு. அப்பா பருத்தித்துறைக்கு வந்து எங்களையும் கூட்டிக் கொண்டு எல்லோருமாக நாகொல்லகமவுக்கு வந்து சேர்ந்தோம்.
ரெயினால் இறங்கும் போதே போர்ட்டர் மார்ட்டீன் வந்து "மாத்தயா..! மாத்தயா..!"
என்று குழைந்து கொண்டு நின்றான். எங்கள் சூட்கேஸ்களில் இரண்டைத் தூக்கிக் கொண்டு எங்களுடன் நடந்தான்.
சண்டிங்ரூமிலிருந்து வெளியே வந்த சில்வாவிடம் பணம் கொடுத்து "நல்ல ரோஸ் பாணும் கோழிக்கூடு(கப்பல்) வாழைப்பழமும் வாங்கி வா." என்று அப்பா சிங்களத்தில் சொன்னார். அண்ணன் எங்கள் வீட்டுக் கோழிக்கூட்டை நினைத்துக் கொண்டு சிரிசிரியென்று சிரித்தான். நானும் அவனோடு சேர்ந்து சிரித்தேன்.
சிலிப்பர் கட்டைகளால் எல்லை போடப் பட்ட அந்த வீட்டின் சிலிப்பர் கட்டை கேற்றைத் திறக்கும் போதே பொன்னாங்கண்ணிச் செடிகள் இரண்டு பக்கமும் பரந்திருக்க பாதை மிகவும் சுத்தமாக வீட்டு முகப்பு வரை நீண்டிருப்பது தெரிந்தது. வீட்டின் இடதுபக்க முற்றம் வழைகளால் நிறைந்து வாழைப் பொத்திகளும் வாழைக்குலைகளுமாய் எம்மை வரவேற்றது. வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மாவுக்கு அந்த வீடு நன்றாகப் பிடித்து விட்டது என்பது அம்மாவின் பிரகாசித்த முகத்தில் தெரிந்தது.
முன்னுக்குத் தனியாக இருக்கும் அறையில் அப்பாவின் - அஸிஸ்டென்ட் டிக்சன்- இருக்கிறார் என அப்பா சொன்னார். டிக்சன் அங்கிளின் அறைக்கு முன்னால் கதவுக்கு மேலே குருவிக்கூடு இருந்தது. குருவிகள் வந்து கீச்சிட்டு, சண்டை பிடித்துச் சென்றன. தம்பி ஆர்வமாய் அவைகளைப் பார்த்தான்.
அப்பா சூட்கேஸ் தூக்கிய மார்ட்டீனின் கையில் சில்லறையைத் திணிக்க, அம்மா தேநீர் தயாரிக்க, நானும் அண்ணனும் குசினியின் பின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தோம்.
பின் முற்றத்தில் பெரிய பெரிய பப்பாளிப் பழங்களுடன் பப்பாளி மரங்களும், மரவெள்ளி மரங்களும் நிறைந்து நின்றன. அங்காலை ஒரு கிணறு. ஆழம் பார்க்கும் ஆர்வம் எங்களுக்கு. ஓடிப்போய் எட்டிப் பார்த்தோம். அண்ணன் ஒரு சின்னக் கல்லை எடுத்துப் போட்டு விட்டு, கல் விழுந்ததால் அழகாகக் கலங்கிய கிணற்று நீரைப் பார்த்து ரசித்தான்.
"அது சரியான ஆழம். இங்காலை வாங்கோ." அறைக்குள் உடை மாற்றுகையில் யன்னலால் எம்மைக் கண்டு விட்ட அப்பா சத்தம் போட்டார்.
அப்போதுதான் கண்டேன் அந்த மரத்தை. அது பெரிய மரமில்லை. செடி போன்ற சிறிய மரம். அதன் கீழே குண்டுமணிகள். ஒரு பக்கம் சிவப்பும் மறுபக்கம் கறுப்புமான குண்டுமணிகள்.
"வாவ்..! குண்டுமணி மரம்." வாழ்க்கையில் முதன் முதலாகக் குண்டுமணி மரத்தைக் கண்டதில் என் எட்டு வயது மனம் துள்ளிக் குதிக்க நான் துள்ளினேன்.
பயித்தங்காய் போல. ஆனால் பயித்தங்காய் போல நீளம் நீளமாய் இல்லாமல் சின்னச் சின்னக் காய்கள் அந்த மரத்தில். ஒரு காயைப் பிய்த்துப் பார்த்தேன். உள்ளே குண்டுமணிகள். ஆனால் காயாமல். அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸின் சந்தோசம் எனக்கு.
அன்று மாலையே நிறையக் குண்டுமணிகள் பிடுங்கிச் சேர்த்து மாலை கோர்க்க ஆரம்பித்தேன். தம்பி பாலு குண்டுமணிகள் சேர்க்க எனக்கு உதவி செய்தான்.
குண்டுமணி காயாமல் ஈரத்தன்மையுடன் பச்சையாக இருந்ததால் ஊசி சுலபமாக ஏறியது.
மாலை கோர்த்த பின் தும்புத் தடியில் கொழுவி ஓட்டில் காய வைத்தேன். எனக்குப் பெருமையோ பெருமை. ஊரில் பருத்தித்துறையில் நான் ஒருநாளும் குண்டுமணி மரம் பார்க்கவில்லை. லீவு முடிந்து போகும் போது குண்டுமணி மாலையுடன் போய் எனது சினேகிதிகளைப் பொறாமைப் பட வைக்கலாம்.
அன்றிரவு குண்டுமணி மாலைக் கனவுகளுடனேயே தூங்கிப் போனேன். அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாய் ஓடிப் போய் காயவைத்த குண்டுமணி மாலையைப் பார்த்தேன். காணவில்லை. சோகமாகிப் போனேன்.
"குருவி து}க்கிக் கொண்டு போயிருக்கும்." அப்பா சொன்னார்.
குருவிக் கூட்டில் கீச்சிட்ட குருவிகளைக் கலைத்தேன்.
"நங்கி......! நங்கி.....!"
குரல் வந்த திசையைப் பார்த்தேன். டிக்சன் அங்கிள் சற்றுக் கோபமாக..
"துரத்தாதை குருவிகளை..! வீட்டிலை உள்ள செல்வமெல்லாம் போயிடும்."
சிங்களத்தில் தடுத்தார்.
இப்போது அவரது நீண்ட மூக்கு எனக்கு விகாரமாகத் தெரிந்தது.
"கிளி மூக்கு" மனதுக்குள் திட்டிக் கொண்டேன். வெளியில் அசடு வழிந்த படி "சொறி அங்கிள்" என்றேன்.
எனக்குக் கவலை. எப்படி ஒரு குண்டுமணி மாலை கோர்த்துக் காய வைத்து ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று. வீட்டுக்குள்ளே காயவைத்தால் குண்டுமணி சுருங்கிப் போகிறது. வெளியிலே காயவைத்துப் பலதடவைகள், கோர்த்த குண்டுமணி மாலையைக் குருவிக்குக் கொடுத்து விட்டேன். எப்படித்தான் ஒளித்துக் காயவைத்தாலும் கண்டு பிடித்து விடுகின்றனவே இந்தக் குருவிகள். லீவும் முடிகிறது. மரத்திலும் முற்றிய குண்டுமணிகள் முடிந்து பிஞ்சுகள்தான் எஞ்சியிருக்கின்றன. தம்பி பாலுவும் என் கவலையில் கொஞ்சம் பங்கு எடுத்துக் கொண்டு தேடித் தேடி கொஞ்சம் குண்டுமணிகள் பொறுக்கித் தந்தான்.
இரண்டு நாளில் ஊர் திரும்பப் போகிறோம். முற்றத்தில் ஒரு பேப்பர் போட்டு, நான் கோர்த்த மாலையை அதன் மேல் வைத்து வெயிலில் காய விட்டேன். நானும் பக்கத்தில் இருந்து காய்ந்தேன்.
தங்கையை இடுப்பில் தூக்கிய படியே "உச்சி மண்டையிலை வெய்யில் சுடுது. உள்ளை வா..!" அம்மா சத்தம் போட்டா. எள்ளேன் காயுது எண்ணெய்க்காக. எலிப்புழுக்கை ஏன் காயுது கூடக் கிடந்த குற்றத்துக்காக." என்றும் ஏதேதோ புறுபுறுத்தா. ஆனாலும் குண்டுமணிகளை மாலையாக்க நான் படும் பாடு தெரிந்ததாலோ என்னவோ என்னை வலுக் கட்டாயமாக உள்ளே அழைக்க வில்லை.
ஊர் திரும்புகையில் ஒரு குண்டுமணி மாலை என்னிடம் பத்திரமாக இருந்தது. எனக்குப் பெருமையோ பெருமை.
"நானே கோர்த்தேன்." என்று பெருமையாகச் சொல்ல, ஊரில் என் நண்பிகள் நம்பாது வியந்து வியந்து பார்த்தார்கள்.
ரெயின் ஒரு தரம் குலுங்கி ஓடியது.
"ஏன் எல்லாவற்றையும் விட்டிட்டு ஓடிப்போனேன். பதினெட்டு வருடங்களாகப் பொத்தி வைத்திருந்த குண்டுமணி மாலையை மட்டுமா..?! எல்லாவற்றையும் விட்டிட்டு ஏன் யேர்மனிக்கு ஓடிப் போனேன்!"
"ஏன்.....? ஏன்.....?"
பருத்தித்துறைக் கடலிலிருந்து காலம் நேரம் பாராது எம்மை நோக்கி வந்த ஷெல்களாலா? ஹெலியிலிருந்து நீண்ட துப்பாக்கிகளிலிருந்து எங்கள் வீட்டிலும் சன்னங்கள் சிதறியதாலா? வீடு வீடாகச் சென்ற சிங்கள இராணுவம் ஆண்களைச் சுட்டு வீழ்த்தி, பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக எண்ணி தம் இச்சை தீர்த்துக் கொண்டதாலா? குறுக்கே கட்டியபடி, குளித்த குறையில், துலாக் கயிற்றை இழுத்துத் தண்ணிவாளியைப் பிடித்துக் கொண்டு, நேரம் போவதே தெரியாமல் தங்கையுடன் கதையளந்த காலம், எங்கே ஷெல் வந்து எம் தலையில் விழுந்து விடுமோ! எந்தப் பக்கத்தால் ஆமி எங்கள் வீட்டுக்குள் குதிப்பானோ! என்ற அச்சத்தில் காக்காக் குளிப்புக் குளிக்கும் காலமாக மாறியதாலா? என் பிள்ளைகளும் இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற சுயநலம் கலந்த பயத்தாலா?
"ஏன் ஓடிப் போனேன்?"
"போய்.... என்ன கண்டேன் யேர்மனியில்..!"
வெறுமை, தனிமை, குளிரின் கொடுமை, பாஷை தெரியாத பரிதவிப்பு, "தொங்கிக் குதிக்கக் கூட தடையா இங்கே..?" என்ற வினா முகங்களில் தொக்கி நிற்க மனம் வாடி நின்ற என் பிள்ளைகள். எதையோ பறிகொடுத்து விட்ட வேதனையை முகத்தில் தெரிய விடாமல் மறைக்கப் பிரயத்தனப் படும் எனது கணவன். இவை தவிர வேறு என்ன கண்டேன். தமிழ் முகங்களையே காணமுடியாத ஒரு நகரம்.
பல்லைத் தீட்டித் துலாவிலை தண்ணியை இழுத்து வாய் கொப்பளித்து முகம் கழுவி வர, சுடச்சுட ஆட்டுப்பால்தேநீர் தரும் அம்மா இல்லை. களைத்துப் போய் வந்தால், "அக்கா நல்லாக் களைச்சுப் போட்டியள் போலை இருக்கு. முதல்ல இதைக் குடியுங்கோ." அன்போடு கோப்பையை நீட்டும் தங்கைமார் இல்லை.
"அக்கா நல்ல கிளிச்சொண்டு மாங்காய் கொண்டு வந்திருக்கிறன். நைஸா அம்மாக்குத் தெரியாமல் உப்பும் து}ளும் கொண்டு வாங்கோ." என்கிற தம்பிமார் இல்லை. என் பிள்ளைகளை இடுப்பில் து}க்கி வைத்துக் கொண்டு தோட்டத்து மாதுளம் பழத்தைப் பிரித்து மணிமணியாக எடுத்து பிள்ளைகளின் வாய்க்குள் நசித்து சாறைச் சுவைக்க விட்ட படியே காகமும் வடையும், குரங்கும் அப்பமும்...... கதைகள் சொல்லும் அப்பா இல்லை.
இன்னும் எத்தனை இல்லைகள்.!
"இருந்தும் ஏன் போனேன் யேர்மனிக்கு..?"
..........? ................?
போகாமலிருந்திருந்தாலும் எப்படி அல்லல் பட்டிருப்பேன். தம்பியைத் தேடி வந்த இந்தியன் ஆமி எங்கட குடும்பத்தைப் படுத்தின பாட்டைத் தங்கை பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாள். நின்றிருந்தால் நானும் பட்டிருப்பேன். அவள் அந்தக் கொடுமைகளைக் கூட கதை போல நேர்த்தியாக எழுதி அனுப்பிக் கொண்டேயிருப்பாள்.
ஓரு கடிதத்தில் "அக்கா...! அந்தச் சண்டாளர் ஒவ்வொரு முறை வரும் போதும் உங்கடை அலுமாரியைக் குடைஞ்சு குடைஞ்சு கொஞ்சங் கொஞ்சமாக எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போறாங்கள். சாறியள், எவர்சில்வர் சாமான்கள்.... என்று எல்லாத்தையும் கொண்டு போறாங்கள்....." என்று எழுதியிருந்தாள்.
"அதையிட்டு ஒண்டும் கவலைப் பட வேண்டாம். உங்களுக்கு ஒண்டும் நடக்காதது தெய்வசெயலே.....!" நானும் ஆறுதல் கூறிக் கடிதங்களாய் எழுதினேன்.
என்ன கஷ்டத்திலும் "அக்கா...!" என்று அன்பைத் தோய்த்து எழுதும் தங்கையின் கடிதங்கள் நாளுக்கு நாள் சோகத்தால் நிறைந்து கனமாகவே வந்தன.
அப்படி வந்ததில் "தம்பியை இந்தியப் படையினர் 500 பேர் ஒன்றாகச் சுற்றி வளைத்து, அவனுடன் நேர் நின்று போராட முடியாத கட்டத்தில - பசூக்கா ஷெல்லால் அடித்து வீழ்த்தி விட்டார்கள். கடைசி மூச்சு வரை போராடி தம்பி வீரமரணமடைந்து விட்டான்......!" என்ற வாக்கியங்களுடன் சுமைதாளாத சோகத்துக்கு என்னை ஆளாக்கிய அந்தக் கடிதத்துக்கு முதல் கடிதத்தில் வந்த செய்தி...
"அக்கா..! இம்முறை இந்தியன் பிசாசுகள் ஐந்து பேர் வந்தார்கள். ஒருவன் என்னை இழுத்து வீழ்த்தி என் நெஞ்சின் மேல் காலை வைத்துக் கொண்டு "தம்பி மொறிஸ் எங்கே..?" என்று கேட்டு உறுமினான். இன்னொருவன் எங்கள் குட்டித் தங்கையின் அழகிய பின்னல்களைப் பிடித்து இழுத்து, நெஞ்சிலே துவக்கின் பின் பக்கத்தால் இடித்து, "எங்கே மொறிஸ்..? சொல்லு..!" என்று அதட்டினான். அவள் வலி தாங்காமல் வார்த்தை வராமல் புரண்ட போது கூட அவன் இரக்கப் பட வில்லை. மற்றவன் அப்பாச்சிக்கு உலக்கையால் அடித்தான். அப்பாச்சியின் அலறல் நெஞ்சைப் பிளந்தது. நல்ல வேளையாக அம்மா நிற்கவில்லை. அப்பாவிடம் யாழ் சென்றிருந்தா.
மற்றவன் மைத்துனர் கணேசைப் பிடித்து முகத்தில் துவக்கால் அடித்து, இரத்தம் பீறிட்டுப் பாய இழுத்துக் கொண்டு போனான். ஐந்தாவது ஆமி வழமை போல் உங்கடை அலுமாரியைக் குடைஞ்சு எதையெல்லாமோ இழுத்துக் கொண்டு போனான். அந்த நேரம் வெளியிலிருந்து வந்த ஒரு தமிழ் ஆமியால்தான் எங்கள் கற்பும் உயிரும் காப்பாற்றப் பட்டன. எல்லோரும் போய் நாங்கள் ஒரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்தான் பார்த்தேன். உங்கடை குண்டுமணிமாலை அறுந்து கணேஸ் சிந்திய இரத்தத்தில் சிதறிப் போயிருந்ததை...!"
ரெயின் விசுக்கென்று நாகொல்லகம ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டிச் சென்றது. அங்கே ரெயின் நிற்கவில்லை. ஆனாலும் நான் அவசரமாகப் பார்த்ததில் அந்த நீலவீடு இப்போ மஞ்சளாகியிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது.
வெள்ளை சேர்ட், வெள்ளை ரவுசர், வெள்ளைத் தொப்பி போட்ட ஸ்ரேசன் மாஸ்டர் வுயடிடநவ உடன் ஸ்ரேசனில் நிற்பதும் தெரிந்தது. ஆனால் அது என்ரை அப்பா இல்லை.
அப்பா......! உயிரோடு போராடும் அந்தக் கனமான வேளையிலும் என் முகம் பார்க்க ஏங்கி வழி மேல் விழி வைத்து என் வரவுக்காய் வவுனியாவில் காத்திருக்கிறார்.
ரெயின் இப்போ மாகோவை நோக்கித் தன்பாட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது.
எனக்கு ஏனோ நெஞ்சு கொள்ளாமல் கண்களால் வழிந்தது. மாமா பார்த்து விடக் கூடாதே என்று துடைக்கத் துடைக்க வழிந்தது.
நிகழ்வு - 20.11.1997
-முற்றும்-
சந்திரவதனா
யேர்மனி
1999
பிரசுரம் -
முதற்பாகம் - ஈழமுரசு (15-21 யூலை 1999)
இரண்டாம் பாகம் - ஈழமுரசு (22-28 யூலை 1999)
Subscribe to:
Posts (Atom)