பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது.......
(சூரியகாந்தி படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகள்)
எத்தனை அர்த்தம் நிறைந்த வரிகள் இவை.
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே!
நல்லவர்களோ, கெட்டவர்களோ... அல்லது புத்தியுள்ளவர்களோ, புத்தியற்றவர்களோ... எவராயினும் சரி. அவர்களுக்கென்று சரியானதொரு இடம் கிடைத்து விட்டால் போதும். வாழ்க்கையில் வென்று விடுவார்கள்.
பணமுள்ள புத்தியற்றவன் முன் பணமற்ற புத்தியுள்ளவன் தாழ்ந்து போவதும்ä அதிகார பலமுள்ள கெட்டவனிடம் அதிகார பலமற்ற நல்லவன் தாழ்ந்து போவதும் நடப்பில் உள்ள விடயங்கள்தான். இவை இன்று நேற்று மட்டுமல்ல. என்றும் நடக்கும் சங்கதிகள்.
வீதியிலே ஊரும் பாம்பு மனிதர்களின் பார்வையில் பட்டாலே போதும். அடித்தே கொன்று விடுவார்கள். கருடனின் பார்வையில் பட்டால்..... அது பாம்புக்கு இன்னுமொரு இம்சை. இதே பாம்பு பரமசிவன் கழுத்தில் இருக்கும் போது அதன் கதையே வேறு. வீதியிலே கண்டதும் அடித்துக் கொல்லும் மனிதரே இரு கை தூக்கி பயபக்தியுடன் தொழுது விழுந்தெழுவார்கள். பரமசிவனின் கழுத்துக்குப் போனதால் அப்படியொரு மவுசு பாம்புக்கு. சந்தர்ப்ப வசத்தால் கிடைத்த அந்த உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு தன்னை யாராலும் நெருங்க முடியாதென்ற நம்பிக்கையுடன் கருடனைச் சுகம் விசாரிப்பது பாம்புக்குச் சுகமான விடயம்.
அதனால்தான்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
என்று கருடன் எரிச்சலுடன் சொல்கிறது.
மனிதருக்கிடையில் இருக்கும் இந்த உயர்ந்த நிலையில் இருப்பவருக்கும் தாழ்ந்த நிலையில் இருப்பவருக்குமான அந்தஸ்தின் அளவை பரமசிவனின் கழுத்திலிருக்கும் பாம்பையும் அதை வெல்லக் கூடிய கருடனையும் வைத்துச் சொன்னது மிகவும் பொருத்தமானதாகவும் ரசிக்கக் கூடியதாகவும் அதே நேரம் அதன் தாத்பர்யத்தை நன்கு உணர்த்துவதாகவும் உள்ளது.
இப்படத்தில் கூட கணவன் மனைவியாக பாத்திரமேற்றிருக்கும் முத்துராமனுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் உயர்வு தாழ்வுப் போராட்டம். அனேகமான எந்த ஆண்களாலும் மனைவி தன்னை விட பணத்தாலோ அல்லது பதவியாலோ உயர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இங்கு ஜெயலலிதா சற்று உயர்ந்து விட்டதில் முத்துராமனின் மனதுக்குள் தாழ்வு மனப்பான்மையுடனான போராட்டம். அதனால் குடும்பத்தில் ஒற்றுமையின்மையும் குழப்பமும் விஸ்வரூபமெடுத்து தாண்டவமாடிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் இந்தத் தம்பதிகள் ஒற்றுமையான தம்பதிகள் யார்...? என்ற ஒரு போட்டியில் கலந்து கொள்ள வைக்கப் படுகிறார்கள். அப்போட்டியின் போதுதான் இப்பாடல் காட்சியாக்கப் படுகிறது. வீட்டினுள்ளே உயர்வு தாழ்வுப் போட்டியில் மனதால் பிரிந்திருக்கும் இத்தம்பதிகள் ஒற்றுமையான தம்பதிகளுக்கான இப்போட்டியிலே முதலிடத்தைப் பெறுகிறார்கள்.
இப்பாடல் வெளிவந்த காலத்தில் இதை முணுமுணுக்காதோரே இல்லையென்று சொல்லலாம். அவ்வளவு பிரபல்யமாக இருந்தது. ஏனெனில் பாடல் வரிகள் அத்தனை அர்த்தம் நிறைந்தனவாக இருந்தன.
வண்டி ஓடச் சக்கரங்கள்
இரண்டு மட்டும் வேண்டும். - அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்.
இவ்வரிகள் கூறுவதென்ன...?
வாழ்க்கை என்ற வண்டில் நிதானமாகவும், நேர்சீராகவும் ஓட கணவன் மனைவி என்ற இரு சக்கரங்களுமே பெரிது சிறிது என்ற பாகுபாடின்றி ஒரே அளவாக இருக்க வேண்டும். ஆனால் அனேகமான எல்லா வீடுகளிலும் ஆண் உயர்ந்தவன் என்றும் பெண் அவனை விடச் சற்றேனும் தாழ்ந்தவள் என்றும்தான் கருதப்பட்டு வாழ்க்கை வண்டில் ஓடுகிறது. இல்லையென்றால் பெண்ணின் கை ஓங்கி, அதைச் சகிக்கும் பக்குவம் இன்றி ஆணின் மனம் சுருங்கி மனஉளைச்சலுடன் வாழ்வு கழிகிறது. இந்த இரண்டு வகையான வாழ்க்கையுமே வேதனையானவைதான்.
சரியான முறையில் நாம் சிந்தித்துப் பார்ப்போமேயானால் ஆணில்லாத ஒரு பெண்ணின் தனியான வாழ்க்கையோ, அல்லது ஆண்களே இல்லாத பெண்கள் மட்டுமான ஒரு உலகமோ - அதே போல் பெண்ணில்லாத ஒரு ஆணின் தனியான வாழ்க்கையோ, அல்லது பெண்களே இல்லாத ஆண்கள் மட்டுமான ஒரு உலகமோ ஒரு போதும் சந்தோசமானதாகவோ, சுவையானதாகவோ அமையாது.
வாழ்க்கையென்றால் இரு பகுதியுமே நான் நீ என்ற போட்டி இன்றி நாம் என்று வாழ வேண்டும். உயர்வு தாழ்வு என்ற எண்ணம் மனதில் சிறிது கூட இன்றி நீயில்லாமல் நானில்லை என்ற உணர்வை மனதில் கொண்டு அன்பு கலந்த நட்போடு வாழ வேண்டும். அதுதான் தாம்பத்தியத்தின் தத்துவம்.
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
பாடலின் ஒவ்வொரு வரியிலும் எம்மால் நல்ல தத்துவார்த்தமான கருத்துக்களைக் கண்டு கொள்ள முடிகிறது.
பாடலின் இறுதி வரிகளான
நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே
நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன்
நீ வளர்ந்ததாலே
என்பது மனைவி ஜெயலலிதாவின் உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாது தாழ்வு மனப்பான்மையின் நிமித்தம் தான் தாழ்ந்து போய் விட்டதாய் எண்ணும் முத்துராமனின் மனக்குமுறலைக் காட்டுவதாய் அமைகிறது.
இப்படத்தின் பெயர் கூட பெண்கள் சூரியகாந்திப்பூப் போல இருக்க வேண்டும் என்பதற்காகவே சூரியகாந்தி என வைக்கப் பட்டது.
அதில்தான் எனக்குக் கருத்து வேறுபாடு. பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் பெண்கள் பக்கம் தம்மைத் திருப்பத் தயாராக இருக்க வேண்டும்.
ஆண் துணையில்லாத பெண்ணோ, பெண் துணையில்லாத ஆணோ முழுமையான வாழ்க்கையை, முழுமையான மகிழ்வைப் பெறாமல்தான் வாழ்வார்கள்.
அப்படியிருக்க பெண் மட்டுமேன் சூரியகாந்திப்பூ போல் ஆக வேண்டும்...?
தாம்பத்தியத்தில் ஆணும் சூரியகாந்திப்பூ ஆகட்டுமே..!
சந்திரவதனா
யேர்மனி
30.3.2004
Friday, December 10, 2004
Wednesday, December 08, 2004
நதி எங்கே வளையும் ...?
நதி எங்கே வளையும்
கரை இரண்டும் அறியும்
மதி எங்கே அலையும்
ஆகாயம் அறியும்....
விதி எங்கே விளையும்.............???
அது யாருக்குத் தெரியும்...!
(உயிரோடு உயிராக படத்தில் இடம் பெற்ற பாடல்)
நதி எங்கே வளையுமென்பது கரைக்கும்
மதி எங்கே அலையும் என்பது ஆகாயத்துக்கும் தெரியும்
ஆனால் விதி............? அது எங்கே, எப்போது, எந்த ரூபத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது.
விரும்பி யாரும் பிறப்பதுமில்லை.
விரும்பிப் பாத்திரம் கிடைப்பதுமில்லை
முடிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை.
எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி மிகவும் அமைதியான முறையில் பாடப்படும் இப்பாடலைக் கேட்கும் போதே மனதில் ஒரு கேள்வி எழும்.
வாழ்க்கை அதை நாம் வாழ்கிறோமா...?
உண்மையில் வாழ்க்கை அதை நாம் வாழ்கிறோமா...?
இதென்ன கேள்வி...! வாழாமல் வேறென்ன செய்கிறோம் என்ற இளக்காரமான கேள்வி தொக்கிய பதில் உங்கள் மனதிலும் எழலாம்.
எம்மில் எத்தனை பேர் மனதில் எதையிட்ட சலனமும் இன்றி வாழ்க்கை என்னும் மேடையில் எமக்குக் கிடைத்த பாத்திரத்தை சந்தோசத்துடன் ஏற்று வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தெளிவுடன் வாழ்கிறோம்.
"இப்பிடிச் செய்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்பமே! என்னோடுதானே அவன் படிச்சவன். அவனைப் போல என்னாலை முடியாமற் போச்சே.........! சா... பேய்த்தனம் பண்ணீட்டனே..! " என்று வருத்தப் பட்டு எமது நிலையில் நாமே திருப்தி கொள்ளாது எத்தனை தரம் சலனித்திருப்போம். அத்தனை தரமும் எமது சந்தோசங்களை நாங்கள் தொலைத்து விடுகிறோம் என்பதை மட்டும் மறந்து போகிறோம். எமக்குக் கீழே உள்ளவர் கோடி... என்று எப்போதாவது எண்ணிப் பார்க்கிறோமா? உயர்ந்தவர்களைப் பார்த்து தாழ்மை கொள்வதுதான் எமது பணியென்று கிடப்போம். மிஞ்சினால் பொறாமை கொள்வோம்.
நல்லவர்கள், மற்றவர் மேல் அனுதாபம் கொண்டவர்கள், எவர் மேலாவது பிரியம் கொண்டவர்கள், எமக்கென உறவுகளைச் சேர்த்துக் கொண்டவர்கள்.......... என்ற வரிசையில் நாம் இருந்தோமானால், "அது சரியா, இது சரியா, அவனுக்கேதாவது நடந்து விடுமா, இவன் மனதைப் புண் படுத்தி விட்டேனா........" என்பது போன்றதான உணர்வுச் சிந்தனைகளால் எம்மைக் குழப்பிக் கொள்வோம்.
ஒரு தாயாக இருந்தால் மகவை பாடசாலைக்கு அனுப்பி விட்டு அவனோ அவளோ வீட்டுக்குத் திரும்பி வரும் வரை சதா அதே நினைவாய் "சரியாகப் பாடசாலை போய்ச் சேர்ந்திருப்பானோ... அங்கு யாருடனும் சண்டை பிடிக்காமல் இருப்பானோ....... பரீட்சையை சரியாக எழுதியிருப்பானோ.. காலையில் சரியாகச் சாப்பிட்டிருப்பானோ... நல்ல படி வீடு வந்து சேருவானோ..." என்பது போன்றதான கேள்விகளால் மனசைக் குழப்பிக் கொண்டிருப்பதுவும் அந்த மகவு வீடு வந்து சேர்ந்ததும் அப்பாடா என்று நிம்மதியடைந்த கையோடு அடுத்து இன்னொன்றுக்காய் குழம்ப ஆரம்பிப்பதுவும் வழமையான விடயங்கள். தந்தையாயின் அவருக்கு இன்னுமொரு விதமான குழப்பம்.
இப்படியே......... சங்கிலித் தொடராய் உறவுகளைப் பிணைத்துக் கொண்டு.... சந்தோசங்களை மட்டும் தொலைத்துக் கொண்டு எதுக்காய் அலைகிறோம். வாழ்வின் அர்த்தத்தைப் புரிகிறோமா........?
இவ்வளவு மட்டுந்தான் என்றால் பரவாயில்லை. எங்கள் எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்துள்ள மிகப்பெரிய பயம் சாவைப் பற்றியது. நாம் இறந்து விடுவோம் என்ற பயத்தை விட எமக்குப் பிரியமானவர்களை இழந்து விடுவோம் என்ற பயம்தான் எமது மனதின் ஆழத்தில் அமுங்கிக் கிடந்து சதா மனதைப் பதைக்க வைக்கிறது.. பிறப்பவர் இறந்துதான் ஆக வேண்டும் என்பது நியதியென்றாலும் அதை எதிர் கொள்ள மட்டும் எமது மனம் தயாராக இருப்பதில்லை. ஏதாவது ஏடாகூடமாக நடந்திடுமோ..? என்றே எப்போதும் பயந்து கொண்டிருப்போம். எட்டு நாள் வாழும் பட்டாம் பூச்சி அநுபவிக்கும் அந்தச் சந்தோசத்தைக் கூட, இப்படியான பயம் நிறைந்த துன்பச் சலனங்களால் அறுபது வருடங்கள் வாழும் மனிதராகிய நாம் அநுபவிக்கத் தவறி விடுகிறோம்.
அதைக் கவிஞர்
எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயதில் ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்வதுமில்லை
என்று மிகவும் சாதாரணமான வார்த்தைகளைக் கோர்த்துச் சொல்லி விடுகிறார்.
உண்மையில் நாளைக்கு என்ன நடக்கும் என்று யோசித்து யோசித்தே இன்றைய பொழுதை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை.
எந்த நிலையிலும் துவண்டு விடாது, நாளையை எண்ணிப் பயந்து கொண்டிராது இன்றைய வாழ்வை நாம் வாழ வேண்டும். அதற்காக எல்லாம் விதி என்று சொல்லி விட்டு, நாம் முயற்சி செய்யாதும் இருந்து விடக்கூடாது.
அதைக் கவிஞர் சொல்லும் விதம் மிகவும் அழகு.
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து...
இவ் வரிகளைக் கேட்கும் போதே துன்பம் என்னும் ஆடையை களைந்து ஒரு புறம் வைத்து விட்டு இன்பத்தை அணிந்து வாழ வேண்டும் என்றதொரு துணிவும், எதிலும் மகிழ்வைத் தேட வேண்டுமென்ற மகிழ்வான எண்ணமும் நெஞ்சில் தோன்றுகிறது.
வாழ்வில் மரணம் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த இழப்புக்கும் நாம் அஞ்சத் தேவையில்லை. எதை இழந்தாலும் மனம் தளர்ந்து போகாது மீண்டும் முயற்சித்தோமானால் அதைத் திரும்பப் பெற முடியாவிட்டாலும் வேறொன்றில் வெற்றியைப் பெற முடியும். இப் பாடலைக் கேட்கும் போது மனதில் அந்த அந்த நம்பிக்கையும் தைரியமும் எழுகிறது.
கனவு காண்பது கண்களின் உரிமை
கனவு கலைவது காலத்தின் உரிமை
சிதைந்த கனவைச் சேர்த்துச் சேர்த்து
அரண்மனை கட்டுவது அவரவர் திறமை
ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை
பாடலின் வரிகள் அர்த்தங்களில் மட்டும் அழகு கொண்டிராமல், அதைக் கவிதையாக்கிச் சொல்லிய விதத்திலும் மிகுந்த அழகைக் கொண்டுள்ளது.
சந்திரவதனா
யேர்மனி
கரை இரண்டும் அறியும்
மதி எங்கே அலையும்
ஆகாயம் அறியும்....
விதி எங்கே விளையும்.............???
அது யாருக்குத் தெரியும்...!
(உயிரோடு உயிராக படத்தில் இடம் பெற்ற பாடல்)
நதி எங்கே வளையுமென்பது கரைக்கும்
மதி எங்கே அலையும் என்பது ஆகாயத்துக்கும் தெரியும்
ஆனால் விதி............? அது எங்கே, எப்போது, எந்த ரூபத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது.
விரும்பி யாரும் பிறப்பதுமில்லை.
விரும்பிப் பாத்திரம் கிடைப்பதுமில்லை
முடிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை.
எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி மிகவும் அமைதியான முறையில் பாடப்படும் இப்பாடலைக் கேட்கும் போதே மனதில் ஒரு கேள்வி எழும்.
வாழ்க்கை அதை நாம் வாழ்கிறோமா...?
உண்மையில் வாழ்க்கை அதை நாம் வாழ்கிறோமா...?
இதென்ன கேள்வி...! வாழாமல் வேறென்ன செய்கிறோம் என்ற இளக்காரமான கேள்வி தொக்கிய பதில் உங்கள் மனதிலும் எழலாம்.
எம்மில் எத்தனை பேர் மனதில் எதையிட்ட சலனமும் இன்றி வாழ்க்கை என்னும் மேடையில் எமக்குக் கிடைத்த பாத்திரத்தை சந்தோசத்துடன் ஏற்று வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தெளிவுடன் வாழ்கிறோம்.
"இப்பிடிச் செய்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்பமே! என்னோடுதானே அவன் படிச்சவன். அவனைப் போல என்னாலை முடியாமற் போச்சே.........! சா... பேய்த்தனம் பண்ணீட்டனே..! " என்று வருத்தப் பட்டு எமது நிலையில் நாமே திருப்தி கொள்ளாது எத்தனை தரம் சலனித்திருப்போம். அத்தனை தரமும் எமது சந்தோசங்களை நாங்கள் தொலைத்து விடுகிறோம் என்பதை மட்டும் மறந்து போகிறோம். எமக்குக் கீழே உள்ளவர் கோடி... என்று எப்போதாவது எண்ணிப் பார்க்கிறோமா? உயர்ந்தவர்களைப் பார்த்து தாழ்மை கொள்வதுதான் எமது பணியென்று கிடப்போம். மிஞ்சினால் பொறாமை கொள்வோம்.
நல்லவர்கள், மற்றவர் மேல் அனுதாபம் கொண்டவர்கள், எவர் மேலாவது பிரியம் கொண்டவர்கள், எமக்கென உறவுகளைச் சேர்த்துக் கொண்டவர்கள்.......... என்ற வரிசையில் நாம் இருந்தோமானால், "அது சரியா, இது சரியா, அவனுக்கேதாவது நடந்து விடுமா, இவன் மனதைப் புண் படுத்தி விட்டேனா........" என்பது போன்றதான உணர்வுச் சிந்தனைகளால் எம்மைக் குழப்பிக் கொள்வோம்.
ஒரு தாயாக இருந்தால் மகவை பாடசாலைக்கு அனுப்பி விட்டு அவனோ அவளோ வீட்டுக்குத் திரும்பி வரும் வரை சதா அதே நினைவாய் "சரியாகப் பாடசாலை போய்ச் சேர்ந்திருப்பானோ... அங்கு யாருடனும் சண்டை பிடிக்காமல் இருப்பானோ....... பரீட்சையை சரியாக எழுதியிருப்பானோ.. காலையில் சரியாகச் சாப்பிட்டிருப்பானோ... நல்ல படி வீடு வந்து சேருவானோ..." என்பது போன்றதான கேள்விகளால் மனசைக் குழப்பிக் கொண்டிருப்பதுவும் அந்த மகவு வீடு வந்து சேர்ந்ததும் அப்பாடா என்று நிம்மதியடைந்த கையோடு அடுத்து இன்னொன்றுக்காய் குழம்ப ஆரம்பிப்பதுவும் வழமையான விடயங்கள். தந்தையாயின் அவருக்கு இன்னுமொரு விதமான குழப்பம்.
இப்படியே......... சங்கிலித் தொடராய் உறவுகளைப் பிணைத்துக் கொண்டு.... சந்தோசங்களை மட்டும் தொலைத்துக் கொண்டு எதுக்காய் அலைகிறோம். வாழ்வின் அர்த்தத்தைப் புரிகிறோமா........?
இவ்வளவு மட்டுந்தான் என்றால் பரவாயில்லை. எங்கள் எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்துள்ள மிகப்பெரிய பயம் சாவைப் பற்றியது. நாம் இறந்து விடுவோம் என்ற பயத்தை விட எமக்குப் பிரியமானவர்களை இழந்து விடுவோம் என்ற பயம்தான் எமது மனதின் ஆழத்தில் அமுங்கிக் கிடந்து சதா மனதைப் பதைக்க வைக்கிறது.. பிறப்பவர் இறந்துதான் ஆக வேண்டும் என்பது நியதியென்றாலும் அதை எதிர் கொள்ள மட்டும் எமது மனம் தயாராக இருப்பதில்லை. ஏதாவது ஏடாகூடமாக நடந்திடுமோ..? என்றே எப்போதும் பயந்து கொண்டிருப்போம். எட்டு நாள் வாழும் பட்டாம் பூச்சி அநுபவிக்கும் அந்தச் சந்தோசத்தைக் கூட, இப்படியான பயம் நிறைந்த துன்பச் சலனங்களால் அறுபது வருடங்கள் வாழும் மனிதராகிய நாம் அநுபவிக்கத் தவறி விடுகிறோம்.
அதைக் கவிஞர்
எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயதில் ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்வதுமில்லை
என்று மிகவும் சாதாரணமான வார்த்தைகளைக் கோர்த்துச் சொல்லி விடுகிறார்.
உண்மையில் நாளைக்கு என்ன நடக்கும் என்று யோசித்து யோசித்தே இன்றைய பொழுதை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை.
எந்த நிலையிலும் துவண்டு விடாது, நாளையை எண்ணிப் பயந்து கொண்டிராது இன்றைய வாழ்வை நாம் வாழ வேண்டும். அதற்காக எல்லாம் விதி என்று சொல்லி விட்டு, நாம் முயற்சி செய்யாதும் இருந்து விடக்கூடாது.
அதைக் கவிஞர் சொல்லும் விதம் மிகவும் அழகு.
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து...
இவ் வரிகளைக் கேட்கும் போதே துன்பம் என்னும் ஆடையை களைந்து ஒரு புறம் வைத்து விட்டு இன்பத்தை அணிந்து வாழ வேண்டும் என்றதொரு துணிவும், எதிலும் மகிழ்வைத் தேட வேண்டுமென்ற மகிழ்வான எண்ணமும் நெஞ்சில் தோன்றுகிறது.
வாழ்வில் மரணம் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த இழப்புக்கும் நாம் அஞ்சத் தேவையில்லை. எதை இழந்தாலும் மனம் தளர்ந்து போகாது மீண்டும் முயற்சித்தோமானால் அதைத் திரும்பப் பெற முடியாவிட்டாலும் வேறொன்றில் வெற்றியைப் பெற முடியும். இப் பாடலைக் கேட்கும் போது மனதில் அந்த அந்த நம்பிக்கையும் தைரியமும் எழுகிறது.
கனவு காண்பது கண்களின் உரிமை
கனவு கலைவது காலத்தின் உரிமை
சிதைந்த கனவைச் சேர்த்துச் சேர்த்து
அரண்மனை கட்டுவது அவரவர் திறமை
ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை
பாடலின் வரிகள் அர்த்தங்களில் மட்டும் அழகு கொண்டிராமல், அதைக் கவிதையாக்கிச் சொல்லிய விதத்திலும் மிகுந்த அழகைக் கொண்டுள்ளது.
சந்திரவதனா
யேர்மனி
Monday, December 06, 2004
சினிமாப்பாடல்கள் எனது பார்வையில் - 14
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
படம் - தில்லானா மோனாம்பாள்
பாடியவர் - பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்
இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ளே இனம் புரியாதவொரு சந்தோசமும் கூடவே மெல்லிய சோகமும் இழைந்தோடும்.காரணம் என்னுடைய அப்பா.
என்னுடைய அப்பாவுக்கு இந்த நாதஸ்வரம், தவில் எல்லாம் நிறையவே பிடிக்கும். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலும் ஊரில் ஏதாவதொரு கோயிலிலே மேளக்கச்சேரியோ, நாதஸ்வரமோ நடைபெறப் போகிறதென்று தெரிந்தால் உடனேயே விடுப்பெடுத்துக் கொண்டு வந்து விடுவார்.
வந்து எங்களையும் அழைத்துக் கொண்டு யோய், நாதஸ்வரம், தவில்... என்பவற்றை ஆழ்ந்து ரசிப்பார்.
அந்த வகையில் 1968இல் A.P.நாகராஜனின் இயக்கத்தில் உருவான தில்லானாமோகனாம்பாள் திரைப்படமும் அப்பாவை வெகுவாகக் கவர்ந்திருந்தது. முதல்நாள் குடும்பமாய் போய்ப் பார்த்து வந்தோம். நாதஸ்வரத்தில் அப்பாவுக்கு இருந்த மோகத்தால் இரண்டாவது நாளும் என்னையும் அழைத்துக் கொண்டு போய் படத்தை ரசித்தார். நான் அந்த நேரத்தில் பரதக்கலையைக் கற்றுக் கொண்டிருந்ததாலோ என்னவோ, எனக்கு இந்தப் பாடல் காட்சி மிகவும் பிடித்தது.
இப்பாடல் காட்சியில் காயம்பட்ட கையிலே கட்டுப் போட்ட படி சிவாஜி கணேசன் நாதஸ்வரம் வாசிக்க, பத்மினியின் நடனம் நடைபெற்றது. ஓருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட நிலையில், அவர்கள் சந்திக்கத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில்தான் மேடையில் அவர்களது கலைச் சந்திப்பு.
பத்மினியின் நடனமும், சிவாஜியின் நாதஸ்வரமும், சுசிலாவின் குரலும் சேர்ந்து மிகவும் அருமையாக இருந்தது காட்சி. கூடவே ஏ.வி.எம் ராஜன், ஏ.கருணாநிதி, கே.ஏ.தங்கவேல் ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தன.
எப்போதுமே, சிவாஜியின் நடிப்பு அதீதம் என்பது போன்றதான கருத்துக்கள் பலரிடையே இருந்தன. ஆனால் அந்த வயதில், அந்த நேரத்தில் எனக்கு அப்படியெதுவுமே தோன்றவில்லை. பாடற்காட்சி மிகமிக அருமையாக இருந்தது. அதைவிட பாடல் தொடங்க முன் ஒலிக்கும் நாதஸ்வரமும், தவிலும் மிகுந்த சந்தோசமான உணர்வைத் தரக் கூடியனவாக இருந்தன. அப்போது மட்டுமல்ல இப்போது கேட்டாலும் அந்த சந்தோச உணர்வு மனதை நிறைத்துக் கொள்ளும்.
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா...?
என்று பாடும் போதே பாடல் வரிகள் உள்ளார்ந்த அன்புடன் நலம் விசாரிக்கும் உணர்வைத் தருகின்றன. ஓப்புக்கு வெறுமனே நலந்தானா என்று கேட்காமல் உடலும் உள்ளமும் நலந்தானா என்று கேட்பது மனதுள் உள்ள ஆழ்ந்த பிரியத்தைக் காட்டுவது போலான பிரமையை ஏற்படுத்தி எம்முள் இன்னொரு விதமான சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்...
என்ற வரிகளில் அணி என்னும் அழகு சேர்க்கப் பட்டதுடன், சிவாஜி புண் பட்டதால் அவர் மேல் காதல் கொண்ட பத்மினியின் மனம் படும் பாடு, மிகச் சிக்கனமான வார்த்தைகளால் அழகாகச் சொல்லப் பட்டுள்ளது.
மொத்தத்தில் பாடலும் காட்சியும் மிகவும் அருமை. சுசீலாவின் இப்பாடலை இத்தனை வருடங்கள் கழித்தும், எந்த நேரத்தில் கேட்டாலும், எனக்குள் ஒரு வித சந்தோசம் எட்டிப் பார்க்கும். கூடவே மெல்லிய சோகமும். இப்படத்தை என்னுடன் சேர்ந்து ரசித்துப் பார்த்த அப்பா தற்சமயம் என்னோடு இல்லை. ஆனாலும் அப்பாவுடனான நினைவுகள் இப்பாடலின் போதும் மீட்டப் பட்டு இனிமை சோகம் இரண்டையும் தரத் தவறுவதில்லை.
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
நலம் பெறவேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறைகாய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் - இந்தப்
பெண் பட்ட பாட்டை யாரறிவார்
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
............................
............................
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
சந்திரவதனா
யேர்மனி
உடலும் உள்ளமும் நலந்தானா
படம் - தில்லானா மோனாம்பாள்
பாடியவர் - பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்
இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ளே இனம் புரியாதவொரு சந்தோசமும் கூடவே மெல்லிய சோகமும் இழைந்தோடும்.காரணம் என்னுடைய அப்பா.
என்னுடைய அப்பாவுக்கு இந்த நாதஸ்வரம், தவில் எல்லாம் நிறையவே பிடிக்கும். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலும் ஊரில் ஏதாவதொரு கோயிலிலே மேளக்கச்சேரியோ, நாதஸ்வரமோ நடைபெறப் போகிறதென்று தெரிந்தால் உடனேயே விடுப்பெடுத்துக் கொண்டு வந்து விடுவார்.
வந்து எங்களையும் அழைத்துக் கொண்டு யோய், நாதஸ்வரம், தவில்... என்பவற்றை ஆழ்ந்து ரசிப்பார்.
அந்த வகையில் 1968இல் A.P.நாகராஜனின் இயக்கத்தில் உருவான தில்லானாமோகனாம்பாள் திரைப்படமும் அப்பாவை வெகுவாகக் கவர்ந்திருந்தது. முதல்நாள் குடும்பமாய் போய்ப் பார்த்து வந்தோம். நாதஸ்வரத்தில் அப்பாவுக்கு இருந்த மோகத்தால் இரண்டாவது நாளும் என்னையும் அழைத்துக் கொண்டு போய் படத்தை ரசித்தார். நான் அந்த நேரத்தில் பரதக்கலையைக் கற்றுக் கொண்டிருந்ததாலோ என்னவோ, எனக்கு இந்தப் பாடல் காட்சி மிகவும் பிடித்தது.
இப்பாடல் காட்சியில் காயம்பட்ட கையிலே கட்டுப் போட்ட படி சிவாஜி கணேசன் நாதஸ்வரம் வாசிக்க, பத்மினியின் நடனம் நடைபெற்றது. ஓருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட நிலையில், அவர்கள் சந்திக்கத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில்தான் மேடையில் அவர்களது கலைச் சந்திப்பு.
பத்மினியின் நடனமும், சிவாஜியின் நாதஸ்வரமும், சுசிலாவின் குரலும் சேர்ந்து மிகவும் அருமையாக இருந்தது காட்சி. கூடவே ஏ.வி.எம் ராஜன், ஏ.கருணாநிதி, கே.ஏ.தங்கவேல் ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தன.
எப்போதுமே, சிவாஜியின் நடிப்பு அதீதம் என்பது போன்றதான கருத்துக்கள் பலரிடையே இருந்தன. ஆனால் அந்த வயதில், அந்த நேரத்தில் எனக்கு அப்படியெதுவுமே தோன்றவில்லை. பாடற்காட்சி மிகமிக அருமையாக இருந்தது. அதைவிட பாடல் தொடங்க முன் ஒலிக்கும் நாதஸ்வரமும், தவிலும் மிகுந்த சந்தோசமான உணர்வைத் தரக் கூடியனவாக இருந்தன. அப்போது மட்டுமல்ல இப்போது கேட்டாலும் அந்த சந்தோச உணர்வு மனதை நிறைத்துக் கொள்ளும்.
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா...?
என்று பாடும் போதே பாடல் வரிகள் உள்ளார்ந்த அன்புடன் நலம் விசாரிக்கும் உணர்வைத் தருகின்றன. ஓப்புக்கு வெறுமனே நலந்தானா என்று கேட்காமல் உடலும் உள்ளமும் நலந்தானா என்று கேட்பது மனதுள் உள்ள ஆழ்ந்த பிரியத்தைக் காட்டுவது போலான பிரமையை ஏற்படுத்தி எம்முள் இன்னொரு விதமான சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்...
என்ற வரிகளில் அணி என்னும் அழகு சேர்க்கப் பட்டதுடன், சிவாஜி புண் பட்டதால் அவர் மேல் காதல் கொண்ட பத்மினியின் மனம் படும் பாடு, மிகச் சிக்கனமான வார்த்தைகளால் அழகாகச் சொல்லப் பட்டுள்ளது.
மொத்தத்தில் பாடலும் காட்சியும் மிகவும் அருமை. சுசீலாவின் இப்பாடலை இத்தனை வருடங்கள் கழித்தும், எந்த நேரத்தில் கேட்டாலும், எனக்குள் ஒரு வித சந்தோசம் எட்டிப் பார்க்கும். கூடவே மெல்லிய சோகமும். இப்படத்தை என்னுடன் சேர்ந்து ரசித்துப் பார்த்த அப்பா தற்சமயம் என்னோடு இல்லை. ஆனாலும் அப்பாவுடனான நினைவுகள் இப்பாடலின் போதும் மீட்டப் பட்டு இனிமை சோகம் இரண்டையும் தரத் தவறுவதில்லை.
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
நலம் பெறவேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறைகாய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் - இந்தப்
பெண் பட்ட பாட்டை யாரறிவார்
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
............................
............................
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
சந்திரவதனா
யேர்மனி
Friday, December 03, 2004
சினிமாப்பாடல்கள் 13
படம் - இருவர்
பாடியவர் - சந்தியா
வரிகள் - வைரமுத்து
பூக்கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
சின்ன வயதில் என் அப்பாவுடன் நிறைய சிவாஜி கணேசனின் படங்களைப் பார்த்திருக்கிறேன். அதற்கேற்ப திருமணத்தின் பின் என் கணவருடன் நிறைய எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்தேன்.
எம்.ஜி.ஆர் இன் நடிப்பில் எனக்கு அந்தளவாக ஈடுபாடு ஏற்படவில்லையானாலும், எம்.ஜி.ஆர் இன் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப் பட்ட இருவர் படம் எனக்குப் பிடித்திருந்தது. படத்தில் மோகன்லாலை மோகன்லாலாகப் பார்க்க முடியாமல் அவரது நடிப்பு எம்.ஜி.ரையே பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அத்தோடு படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு காலகட்டத்துக்கேற்ப அமைக்கப் பட்டிருந்தது மட்டுமல்லாமல், வைரமுத்துவின் கவிதை வரிகளும், ரகுமானின் இசையும் சேர்ந்து இடம்பெற்ற எல்லாப் பாடல்களுமே குறிப்பிடத் தக்கவகையில் நன்றாகவும் அமைந்திருந்தன. அவைகளில் 'நறுமுகையே.. நறுமுகையே...' என்ற உன்னிகிருஸ்ணன்-பம்பாய்ஜெயசிறீ இணைந்து பாடிய பாடலும், 'பூக்கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை...' என்ற சந்தியா பாடிய இந்தப் பாடலும் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன.
1962 இல் ஏற்கெனவே எம்.ஜி.ருடன் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜானகி, வீட்டில் உள்ள அழுத்தம் தாங்க முடியாத நிலையில், எம்.ஜி.ருடன் விரும்பி வாழ முற்பட்ட நிலை இப்பாடல் மூலம் காட்டப் பட்டுள்ளது.
பழைய காலப் படங்களில் வரும் காட்சி போலவே அமைக்கப்பட்ட பாடற்காட்சியில், சந்தோசமான முன்பாதியும், சோகம் நிறைந்த பின்பாதியுமான பாடலுக்கு கெளதமியின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது.
படம் பார்த்து முடிந்த பின்னும், நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடிய பின்னும்.. நிழல்கள் ரவியின் அதட்டலும், தனது சொந்த ஆதாயத்துக்காக கெளதமியை நடாத்திய விதமும், அந்தக் கொடுமைக்குள் அவதியுறும் கெளதமியும்... ஏதோ நிஜமான பாத்திரங்கள் போலவே, நினைக்கும் போதெல்லாம் மனதை நெருடிக் கொண்டிருந்தனர். அத்தனை தத்ரூபமாக கெளதமியும், நிழல்கள் ரவியும் நடித்திருந்தனர்.
நடிப்பு அற்புதமாக அமைந்த அதே நேரத்தில், பாடல் வரிகளும் அருமையாக அமைந்திருந்தன. நிழல்கள் ரவியின் கொடுமைக்குள் துன்புறும் கெளதமி, மோகன்லால் மேல் காதல் கொண்டு மோகன்லாலைத் தன்னை விட்டுப் போக வேண்டாமென்றும், மீண்டும் வேதனைக்குள் தள்ள வேண்டாமென்றும் கேட்டுப் பாடும்....
நீலம் மட்டும் இழந்து விட்டால்
வானில் ஒரு கூரை இல்லை
சூரியனை இழந்து விட்டால்
கிழக்குக்கொரு திலகம் இல்லை
நீ ஒரு முறை திரும்பிக் கொண்டால்
என் உயிருக்கு உறுதி இல்லை.
என்ற வரிகள் மிகவும் அழகானவையும், மனதைத் தொடுபவையும்.
பாடல்கள் இத்தனை நன்றாக அமைந்ததற்கு, நடிப்பு, பாடல் வரிகளின் அழகு மட்டுமல்லாது ரகுமானின் இசையும் காரணமாக இருந்தது. Westernmusic இன் பாணியிலேயே ரகுமானால் இசையமைக்க முடியும் என்று ஒரு சாரார் மத்தியில் இருந்த அதிருப்தியான எண்ணத்தை மாற்றும் படியாக, ரகுமானின் இப்பாடலுக்கான இசையமைப்பு அமைதியாக, அருமையாக அமைந்திருந்தது.
பூக்கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
அந்தப் பெளர்ணமி என்பது
ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன
என் வாழ்க்கையின் புன்னகை
உனது நிழல் தரை விழுந்தால்
என் மடியில் ஏந்திக் கொள்வேன்.
வான் மழையில் நீ நனைந்தால்
தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் என்னைச் சோதித்துப் பார்
ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
நீலம் மட்டும் இழந்து விட்டால்
வானில் ஒரு கூரை இல்லை
சூரியனை இழந்து விட்டால்
கிழக்குக்கொரு திலகம் இல்லை
நீ ஒரு முறை திரும்பிக் கொண்டால்
என் உயிருக்கு உறுதி இல்லை.
சந்திரவதனா
யேர்மனி
பாடியவர் - சந்தியா
வரிகள் - வைரமுத்து
பூக்கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
சின்ன வயதில் என் அப்பாவுடன் நிறைய சிவாஜி கணேசனின் படங்களைப் பார்த்திருக்கிறேன். அதற்கேற்ப திருமணத்தின் பின் என் கணவருடன் நிறைய எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்தேன்.
எம்.ஜி.ஆர் இன் நடிப்பில் எனக்கு அந்தளவாக ஈடுபாடு ஏற்படவில்லையானாலும், எம்.ஜி.ஆர் இன் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப் பட்ட இருவர் படம் எனக்குப் பிடித்திருந்தது. படத்தில் மோகன்லாலை மோகன்லாலாகப் பார்க்க முடியாமல் அவரது நடிப்பு எம்.ஜி.ரையே பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அத்தோடு படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு காலகட்டத்துக்கேற்ப அமைக்கப் பட்டிருந்தது மட்டுமல்லாமல், வைரமுத்துவின் கவிதை வரிகளும், ரகுமானின் இசையும் சேர்ந்து இடம்பெற்ற எல்லாப் பாடல்களுமே குறிப்பிடத் தக்கவகையில் நன்றாகவும் அமைந்திருந்தன. அவைகளில் 'நறுமுகையே.. நறுமுகையே...' என்ற உன்னிகிருஸ்ணன்-பம்பாய்ஜெயசிறீ இணைந்து பாடிய பாடலும், 'பூக்கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை...' என்ற சந்தியா பாடிய இந்தப் பாடலும் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன.
1962 இல் ஏற்கெனவே எம்.ஜி.ருடன் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜானகி, வீட்டில் உள்ள அழுத்தம் தாங்க முடியாத நிலையில், எம்.ஜி.ருடன் விரும்பி வாழ முற்பட்ட நிலை இப்பாடல் மூலம் காட்டப் பட்டுள்ளது.
பழைய காலப் படங்களில் வரும் காட்சி போலவே அமைக்கப்பட்ட பாடற்காட்சியில், சந்தோசமான முன்பாதியும், சோகம் நிறைந்த பின்பாதியுமான பாடலுக்கு கெளதமியின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது.
படம் பார்த்து முடிந்த பின்னும், நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடிய பின்னும்.. நிழல்கள் ரவியின் அதட்டலும், தனது சொந்த ஆதாயத்துக்காக கெளதமியை நடாத்திய விதமும், அந்தக் கொடுமைக்குள் அவதியுறும் கெளதமியும்... ஏதோ நிஜமான பாத்திரங்கள் போலவே, நினைக்கும் போதெல்லாம் மனதை நெருடிக் கொண்டிருந்தனர். அத்தனை தத்ரூபமாக கெளதமியும், நிழல்கள் ரவியும் நடித்திருந்தனர்.
நடிப்பு அற்புதமாக அமைந்த அதே நேரத்தில், பாடல் வரிகளும் அருமையாக அமைந்திருந்தன. நிழல்கள் ரவியின் கொடுமைக்குள் துன்புறும் கெளதமி, மோகன்லால் மேல் காதல் கொண்டு மோகன்லாலைத் தன்னை விட்டுப் போக வேண்டாமென்றும், மீண்டும் வேதனைக்குள் தள்ள வேண்டாமென்றும் கேட்டுப் பாடும்....
நீலம் மட்டும் இழந்து விட்டால்
வானில் ஒரு கூரை இல்லை
சூரியனை இழந்து விட்டால்
கிழக்குக்கொரு திலகம் இல்லை
நீ ஒரு முறை திரும்பிக் கொண்டால்
என் உயிருக்கு உறுதி இல்லை.
என்ற வரிகள் மிகவும் அழகானவையும், மனதைத் தொடுபவையும்.
பாடல்கள் இத்தனை நன்றாக அமைந்ததற்கு, நடிப்பு, பாடல் வரிகளின் அழகு மட்டுமல்லாது ரகுமானின் இசையும் காரணமாக இருந்தது. Westernmusic இன் பாணியிலேயே ரகுமானால் இசையமைக்க முடியும் என்று ஒரு சாரார் மத்தியில் இருந்த அதிருப்தியான எண்ணத்தை மாற்றும் படியாக, ரகுமானின் இப்பாடலுக்கான இசையமைப்பு அமைதியாக, அருமையாக அமைந்திருந்தது.
பூக்கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
அந்தப் பெளர்ணமி என்பது
ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன
என் வாழ்க்கையின் புன்னகை
உனது நிழல் தரை விழுந்தால்
என் மடியில் ஏந்திக் கொள்வேன்.
வான் மழையில் நீ நனைந்தால்
தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் என்னைச் சோதித்துப் பார்
ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
நீலம் மட்டும் இழந்து விட்டால்
வானில் ஒரு கூரை இல்லை
சூரியனை இழந்து விட்டால்
கிழக்குக்கொரு திலகம் இல்லை
நீ ஒரு முறை திரும்பிக் கொண்டால்
என் உயிருக்கு உறுதி இல்லை.
சந்திரவதனா
யேர்மனி
Thursday, November 18, 2004
அவள்
நடுரோட்டில் நின்றவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கையைப் பிடித்தாள். தனது கணவனை ஜெயிலில் இருந்து விடுவித்துத் தரும்படி மன்றாடினாள். அவள் யாரென்பதையே அவளைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன். அடையாளமே தெரியாமல் உரு மாறிப் போயிருந்தாள். உதடுகள் வெடித்துக் காய்ந்து கருமை பேர்ந்திருந்தன. கண்கள் சோபை இழந்து சோகத்துக்குச் சொந்தமாகியிருந்தன. கன்னங்கள் ஒட்டி உலர்ந்திருந்தன. பன்னிரண்டு வருடங்களின் முன் நான் சந்தித்த மதுதான் இவளென்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது.
அழகிய ஓவியம் போல, அன்று என்னைத் தனது நான்கு வயது மகளுடன் சந்தித்தவள் இன்று ஏன் இப்படிக் காய்ந்த சருகு போலானாள் என்ற கேள்வி என்னுள் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. திடீரென சனநாடமாட்டம் மிக்க தெருவென்றும் பாராது உரத்து அழத் தொடங்கி விட்டாள். கன்னங்களில் பொலபொலவென்று வழிந்த கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது.
"அழாதைங்கோ. என்னெண்டு சொல்லுங்கோ. நான் ஹெல்ப் பண்ணுறன்."
"எனக்கு அவரைப் பார்க்கோணும். எல்லாருமா என்னை ஏமாத்தி கையெழுத்து வேண்டிப் போட்டு அவரை ஜெயிலிலை போட்டிட்டினம். எல்லாரும் பொய். எனக்கு அவரைப் பார்க்கோணும். அவர் அப்பிடிச் செய்திருக்க மாட்டார். குமுறினாள். குழறினாள்."
எனக்கு சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போன்றதான உணர்வு. என்ன நடந்திருக்கும்..? ஏன் இப்படிப் பேசுகிறாள். எப்படி சாருகன் ஜெயிலுக்குப் போயிருப்பான்? நாட்டிலிருந்து ஆட்களை வெளிநாட்டுக்கு அழைத்து வரும் ஏஜென்சி வேலை பார்த்திருப்பானோ?
எதுவானாலும் பேசுவதற்கு இதுவல்ல இடம். போவோரும் வருவோரும் என்னையும் அவளையும் ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். என்னைத் தெரிந்த சிலர், முகங்களில் கேள்விக்குறி தொக்க பார்வைகளை ஏளனம் கலந்து வீசிச் சென்றார்கள். இன்னும் சிலரோ இரக்கமாகப் பார்த்துச் சென்றார்கள்.
"வாங்கோ நாங்கள் அந்தக் தேநீர்க்கடைக்குள் போயிருந்து கதைப்பம்."
"எனக்குக் தேநீரும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம்."
"இஞ்சை பாருங்கோ. எல்லாரும் ஒரு மாதிரி எங்களைப் பார்க்கினம். கொஞ்சம் குளிராயும் இருக்கு. உள்ளை போயிருந்து ஆறுதலாக் கதைப்பம்." அவளது கையைப் பிடித்து இழுக்காத குறையாக அந்தத் தேநீர்க்கடைக்குள் அழைத்துச் சென்றேன். கூடவே அவளது நான்கு வயது மகனும் அவளது சுவெற்றரைப் பிடித்தபடி உள் நுழைந்தான். அவனது வாயைச் சுற்றி அவன் காலையில் சாப்பிட்ட சாப்பாடு வெண்மையாகப் படிந்து காய்ந்து போயிருந்தது. பார்ப்பதற்கு துப்பரவின்றி இருந்த அவனது தோற்றத்தை யேர்மனியர்கள் முகத்தைச் சுளித்த படி பார்த்தார்கள்.
கபேற்றறியாவின் உள்ளே ஒரு மூலையில் இடம் பிடித்துக் கொண்டேன். மது இப்படிப் பட்டவள் அல்ல. பன்னிரண்டு வருடங்களின் முன் சந்தித்த போது மகளை மிகவும் நேர்த்தியாக வைத்திருந்தாள். இப்போ என்ன நடந்தது? என் வீட்டுக்குக் கூட ஓரிரு தடவைகள் மகளோடு வந்திருக்கிறாள். பட்டுப் போல இருந்த அந்தக் குழந்தைக்கு இப்போ பதினாறு வயதாகியிருக்கும். அவள் எங்கே? கணப்பொழுதுக்குள் மனசுக்குள் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் எழுந்தன.
மது எங்கோ வெறித்துப் பார்ப்பதுவும், மீண்டும் மீண்டுமாய் அழத் தொடங்குவதுமாய் இம்சைப் படுத்தினாள். பார்க்கப் பாவமாய், பரிதாபமாய்த் தெரிந்தாள். அவளை ஆசுவாசப் படுத்தி சரியான முறையில் கதைக்கத் தொடங்குவதற்கிடையில் எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.
"என்ன நடந்தது? ஏன் சாருகன் ஜெயிலுக்குப் போனவர்?"
"அவர் சரியான குடி. குடிச்சால் அவருக்குக் கண்மண் தெரியிறேல்லை.
குடிச்சுப் போட்டு எனக்கு அடிக்கிறதாலை...
"அடிக்கிறது பிழைதான். அதுக்கு இங்கை தண்டனையும் கிடைக்கும். ஆனால் இவ்வளவு காலத்துக்கு ஜெயில்லை போட மாட்டங்களே..? அடிக்கிறதெண்டு நீங்களோ பொலிசுக்கு அறிவிச்சனிங்கள்?"
"இல்லை... அவர் ஒருக்கால் அடிச்ச பொழுது எனக்கு காது வெடிச்சு நான் சாகக் கிடந்தனான். ஆஸ்பத்திரியிலை இரண்டு மாதத்துக்கு மேலை இருக்க வேண்டி வந்திட்டுது. அதுதான்...... மற்றது எங்கடை பக்கம் அக்கம் வீட்டு டொச் சனங்களும் பொலிசுக்கு அறிவிச்சிட்டுதுகள்."
"அதுக்கு ஒரு நாளும் ஆறு வருசம் தண்டனை குடுக்க மாட்டாங்கள்.
வேறையென்ன நடந்தது என்று சரியாச் சொன்னால்தான் நான் ஏதும் உதவி செய்யலாம்."
"அந்த டொச் சனத்துக்கு விசர். இவர் எங்கடை மகளோடை பிழையாப் பழகிறதெண்டும் சொல்லிப் போட்டுதுகள்."
"பிழையா எண்டு....."
"பள்ளிக்கூட ரூர் ஒண்டுக்கும் விடுறதில்லை. பள்ளிக்கூட நீச்சல் வகுப்புக்கு விடுறதில்லை. பள்ளிக்கூடம் தவிர்ந்த வேறையெந்த இடத்துக்கும் விடுறேல்லை. சினேகிதப் பிள்ளையளோடை பழக விடுறதில்லை......"
"அது பிழைதான். அதுக்காண்டி..."
"அதோடை அவர் பிள்ளையோடை பாலியல் தொடர்பு வைச்சிருக்கிறாரெண்டும் பொய் சொல்லிப் போட்டுதுகள். அதை அறிக்கையா எழுதி என்ரை மகளட்டையும் சைன் வாங்கி யூகன்ட்அம்ற்றிலை (Youth wellfare office) குடுத்திட்டுதுகள்."
"அவர் சொந்தத் தகப்பன்தானே..."
"ஓம்."
"அப்படியெண்டால் ஏன் அந்தச் சனங்கள் அப்பிடி எழுதினதுகள். சில நேரத்திலை அவர் பிள்ளையை வெளியிலை விடாமல் இருக்கிறதாலை அதுகளுக்கு அப்பிடியொரு சந்தேகம் வந்திட்டுதோ தெரியாது. உப்பிடி சில நேரத்திலை நடக்கிறதுதான். ஒண்டும் நடக்காமலே நடந்தது மாதிரியான சந்தேகங்களில் வழக்குகள் வாறதுதான். இதாலை பிள்ளையளைப் பெற்றோரிட்டையிருந்து பிரிச்செடுக்கிற அவலங்களும் நடந்திருக்கு. எங்கையாவது ஒரு சொந்தத் தகப்பன் தன்ரை மகளோடை பிழையா நடப்பானோ? நீங்கள் யோசிக்காதைங்கோ. எப்பிடியாவது லோயரோடை கதைச்சு அப்பீல் எடுத்தால் இதிலை வெல்லலாம். இது ஒரு பிழையான வழக்கு."
இப்போது அவள் முகத்தில் ஒரு சிறிய மாற்றம். எனது பேச்சில் இருந்து.. கணவர் அப்படியொரு அநியாயமான தப்பைச் செய்திருக்க மாட்டாரென்ற பேருவகை. அவர் விடுவிக்கப் பட ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை.
எல்லாம் சில கணங்களுக்குத்தான். சடாரென்று அவள் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. "அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. விடமாட்டினமாம். கடைசியா நடந்த வழக்குக்குக் கூட என்னை உள்ளை விடேல்லை. லோயர்தான் போனவர்." சத்தமெடுத்து அழுதாள். தேநீர்க்கடையில் இருந்த அனைவரது தலைகளும் ஒரு தரம் எம்பக்கம் திரும்பி மீண்டன.
"எங்கை உங்கடை அந்த மகள்? அவ குழந்தைப்பிள்ளையில்லையே! அவவுக்கு 16 வயது. அவ தன்ரை அப்பா தன்னோடை அப்பிடிப் பிழையா நடக்கேல்லை எண்டு கோர்ட்டிலை சொன்னால் பிரச்சனை முடிஞ்சுதுதானே...?"
"அவவிட்டை அந்த விசர்ச் சனங்கள் கையெழுத்து வேண்டிக் குடுத்துட்டுதுகள். இதாலை அவவுக்கும் கெட்ட பெயர். தமிழ்ச்சனங்களுக்கு முன்னாலை தலை காட்டேலாதாம். அதுதான் அந்த நகரத்தையே விட்டிட்டு இங்கை வந்திட்டம். இப்ப அவ பள்ளிக் கூடத்துக்குப் போட்டா."
அப்படி ஏன் அந்த யேர்மனியச் சனங்கள் செய்யப் போகுதுகள்? என்ற கேள்வி எனது மூளையின் ஒரு புறத்தைப் பிறாண்டிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் மதுவைச் சமாளித்து என்னாலான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதியளித்து அனுப்புவதற்கிடையில் நான் களைத்து விட்டேன்.
வீட்டுக்கு வந்த பின்னும் மனசுக்குள் நினைவுகள் புரண்டு கொண்டே இருந்தன. யேர்மனியக் குடும்பங்களில் இப்படியான வழக்குகள் சில தடவைகள் வந்திருக்கின்றனதான். ஆனால் எமது தமிழ் சமூகத்தில் இது புதிய வழக்கு. ஒரு தந்தையால் தனது விந்திலிருந்து உருவான தனது குழந்தையை இப்படிப் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உட்படுத்த முடியுமா..?
இந்தக் கேள்விக்கு விடை தேடுமுகமாக எனக்குத் தெரிந்த பல அப்பாக்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். தம்பியின் மனைவியை, அண்ணனின் மகளை, மனைவியின் தங்கையை... என்று சபலப்படும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள்தான். ஆனால் சொந்த மகளையே....! முடியாது ஒரு நாளும் ஒரு தந்தையால் இது முடியாது. இது பிழையான வழக்கு. அநியாயமாக சாருகன் குற்றஞ் சாட்டப் பட்டிருக்கிறான். அவனை எப்படியும் ஜெயிலிலிருந்து விடுவிக்க வேண்டும்.
தெரிந்த ஒரு யேர்மனிய வழக்கறிஞரோடு இது பற்றிப் பேசினேன். இப்படியானதொரு வழக்கு அவருக்குப் புதிதாக இருக்கவில்லை. ஆனாலும் நான் தமிழ்த் தந்தையின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அவரை யோசிக்க வைத்தது. அப்படியொரு தவறை அந்தத் தந்தை செய்யாத பட்சத்தில், சரியான முறையில் முயற்சி செய்தால் மீட்கலாம் என்றார்.
ஒருவித நம்பிக்கையோடு மதுவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு சம்பந்தமான கடிதங்கள், கோர்ட் தீர்ப்புகள் எல்லாவற்றையும் கொண்டு எனது வீட்டுக்கு வரச் சொன்னேன். வந்தாள்.. அதே வாட்டம். அதே ஏக்கம். எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டதான சோகம். மகன் மட்டும் கொஞ்சம் துப்பரவாக வெளிக்கிடுத்தப் பட்டிருந்தான்.
இருக்க வைத்து தேநீர் தயாரித்துக் கொடுத்து கதைப்பதற்குள் பலமுறை ஒப்பாரி வைத்து விட்டாள். அவள் கொண்டு வந்த பேப்பர் கட்டுக்குள்ளிருந்து யூகன்ட்அம்ற்றிலிருந்து (Youth wellfare office) வந்த 12 பேப்பர்கள் ஒன்றாகப் பின் பண்ணப் பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பார்த்தேன். அது பதினொரு மாதங்களின் முன் சாருகனின் வழக்கின் தீர்வையொட்டி எழுதப் பட்ட ஒரு கடிதம். படிக்கத் தொடங்கினேன்.
"இலங்கையைச் சேர்ந்த சாருகன், மதுமிதா தம்பதிகள் இங்கு யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். இவர்களது அரசியற் தஞ்சக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டதின் காரணமாக இவர்களுக்கு யேர்மனியில் வதிவிட அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
தற்போது 15வயதுடைய இவர்களின் மகள் சகானா, கருச்சிதைவு செய்து கொள்வதற்காக, இரண்டு தடவைகள் அவளது தந்தை சாருகனால் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளாள். மருத்துவருக்கும் அங்கு உள்ள மற்றைய உதவியாளர்களுக்கும் இது சம்பந்தமாகப் பலத்த சந்தேகம் ஏற்படவே கருவிற்கு யார் தந்தை என்ற டி.என்.ஏ(DNA) பரிசோதனையை மேற் கொண்டுள்ளார்கள். (இந்தச் சோதனைக்கான ஒரு தரத்துச் செலவு 750யூரோக்கள்.) இச் சோதனையின் போது சகானாவின் வயிற்றில் உள்ள கருவுக்குத் தந்தை அவளின் தந்தையாகிய சாருகன் என்பது நிரூபணமாகியுள்ளது. அதனாலேயே சாருகன் தற்போது சிறையில் வைக்கப் பட்டுள்ளார்."
சரியான ஆதாரம் இருந்தும் கூட திருமதி சாருகன் இதை ஏற்றுக் கொள்கிறாரில்லை. ஒரு சட்டபூர்வமான உண்மையை ஓப்புக் கொள்ள மறுக்கும் சுபாவம் கொண்டவராக திருமதி சாருகன் இருப்பது பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. இதனால் சகானாவின் பாதுகாப்புக்குப் பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.
சகானா தனது தந்தையாலேயே பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளாள். அதனால் மனஉளைச்சல் பட்டுக் கொண்டிருக்கும் அவளை அரவணைக்க வேண்டிய அவளது தாய் மதுமிதா, மகளுக்குத் தாயாக மகளின் பக்கம் நிற்காது, கணவனுக்கு மனைவியாக நின்று கணவனை நியாயமுள்ளவனாகக் காட்ட முனைவது பெரும் விசனத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இத்தனைக்கும் சாருகன் தனது மனைவியான மதுமிதாவை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமளவுக்கு மூர்க்கத்தனமாகப் பல தடவைகள் தாக்கியிருக்கிறார். எந்தக் கட்டத்திலும் மதுமிதாவை யேர்மனிய மொழி கற்றுக் கொள்ள சாருகன் அனுமதிக்கவில்லை. இத்தனை வருடங்கள் யேர்மனியிலிருந்தும் யேர்மனிய மொழியை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முடியாதவராகவே மதுமிதா இருக்கிறார்......."
எனக்கு மேற்கொண்டு வாசிக்க முடியாமல் இருந்தது. அந்த அறிக்கையில் எழுதப் பட்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் என்னை அதிர வைத்தன. நிமிர்ந்து மதுவைப் பார்த்தேன். அவள் "அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார்." என்பதை ஒரு மந்திரம் போல உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தாள்.
புத்தி பேதலித்தவள் போலப் புலம்பிக் கொள்ளும் இவளிடம் போய் "டீ.என்.ஏ(DNA) பரிசோதனை மூலம் உனது மகளின் கருவுக்கான காரணி உனது கணவன்தான் என்பது நிரூபணமாகியிருக்கும் போது இனி இவ்வழக்கில் வெல்வதற்கு எதுவும் இல்லை" என்பதையும் "உனது கணவனுக்குச் சரியான இடம் அதுதான். அவன் அங்கேயே இருக்கட்டும்." என்பதையும் எப்படிச் சொல்வது..?
யோசனை மேலிட, அந்தக் கடிதத்தை நான் அப்படியே மேசையில் வைத்து விட்டேன். அவள் மீண்டும் பொல பொலவென்று கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட "அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார். அவரட்டை நேரே பார்த்து "அப்பிடிச் செய்தனிங்களோ...?" எண்டு கேட்கப் போறன்......" புலம்பிக் கொண்டிருந்தாள்.
சந்திரவதனா
யேர்மனி
15.11.2004
அழகிய ஓவியம் போல, அன்று என்னைத் தனது நான்கு வயது மகளுடன் சந்தித்தவள் இன்று ஏன் இப்படிக் காய்ந்த சருகு போலானாள் என்ற கேள்வி என்னுள் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. திடீரென சனநாடமாட்டம் மிக்க தெருவென்றும் பாராது உரத்து அழத் தொடங்கி விட்டாள். கன்னங்களில் பொலபொலவென்று வழிந்த கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது.
"அழாதைங்கோ. என்னெண்டு சொல்லுங்கோ. நான் ஹெல்ப் பண்ணுறன்."
"எனக்கு அவரைப் பார்க்கோணும். எல்லாருமா என்னை ஏமாத்தி கையெழுத்து வேண்டிப் போட்டு அவரை ஜெயிலிலை போட்டிட்டினம். எல்லாரும் பொய். எனக்கு அவரைப் பார்க்கோணும். அவர் அப்பிடிச் செய்திருக்க மாட்டார். குமுறினாள். குழறினாள்."
எனக்கு சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போன்றதான உணர்வு. என்ன நடந்திருக்கும்..? ஏன் இப்படிப் பேசுகிறாள். எப்படி சாருகன் ஜெயிலுக்குப் போயிருப்பான்? நாட்டிலிருந்து ஆட்களை வெளிநாட்டுக்கு அழைத்து வரும் ஏஜென்சி வேலை பார்த்திருப்பானோ?
எதுவானாலும் பேசுவதற்கு இதுவல்ல இடம். போவோரும் வருவோரும் என்னையும் அவளையும் ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். என்னைத் தெரிந்த சிலர், முகங்களில் கேள்விக்குறி தொக்க பார்வைகளை ஏளனம் கலந்து வீசிச் சென்றார்கள். இன்னும் சிலரோ இரக்கமாகப் பார்த்துச் சென்றார்கள்.
"வாங்கோ நாங்கள் அந்தக் தேநீர்க்கடைக்குள் போயிருந்து கதைப்பம்."
"எனக்குக் தேநீரும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம்."
"இஞ்சை பாருங்கோ. எல்லாரும் ஒரு மாதிரி எங்களைப் பார்க்கினம். கொஞ்சம் குளிராயும் இருக்கு. உள்ளை போயிருந்து ஆறுதலாக் கதைப்பம்." அவளது கையைப் பிடித்து இழுக்காத குறையாக அந்தத் தேநீர்க்கடைக்குள் அழைத்துச் சென்றேன். கூடவே அவளது நான்கு வயது மகனும் அவளது சுவெற்றரைப் பிடித்தபடி உள் நுழைந்தான். அவனது வாயைச் சுற்றி அவன் காலையில் சாப்பிட்ட சாப்பாடு வெண்மையாகப் படிந்து காய்ந்து போயிருந்தது. பார்ப்பதற்கு துப்பரவின்றி இருந்த அவனது தோற்றத்தை யேர்மனியர்கள் முகத்தைச் சுளித்த படி பார்த்தார்கள்.
கபேற்றறியாவின் உள்ளே ஒரு மூலையில் இடம் பிடித்துக் கொண்டேன். மது இப்படிப் பட்டவள் அல்ல. பன்னிரண்டு வருடங்களின் முன் சந்தித்த போது மகளை மிகவும் நேர்த்தியாக வைத்திருந்தாள். இப்போ என்ன நடந்தது? என் வீட்டுக்குக் கூட ஓரிரு தடவைகள் மகளோடு வந்திருக்கிறாள். பட்டுப் போல இருந்த அந்தக் குழந்தைக்கு இப்போ பதினாறு வயதாகியிருக்கும். அவள் எங்கே? கணப்பொழுதுக்குள் மனசுக்குள் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் எழுந்தன.
மது எங்கோ வெறித்துப் பார்ப்பதுவும், மீண்டும் மீண்டுமாய் அழத் தொடங்குவதுமாய் இம்சைப் படுத்தினாள். பார்க்கப் பாவமாய், பரிதாபமாய்த் தெரிந்தாள். அவளை ஆசுவாசப் படுத்தி சரியான முறையில் கதைக்கத் தொடங்குவதற்கிடையில் எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.
"என்ன நடந்தது? ஏன் சாருகன் ஜெயிலுக்குப் போனவர்?"
"அவர் சரியான குடி. குடிச்சால் அவருக்குக் கண்மண் தெரியிறேல்லை.
குடிச்சுப் போட்டு எனக்கு அடிக்கிறதாலை...
"அடிக்கிறது பிழைதான். அதுக்கு இங்கை தண்டனையும் கிடைக்கும். ஆனால் இவ்வளவு காலத்துக்கு ஜெயில்லை போட மாட்டங்களே..? அடிக்கிறதெண்டு நீங்களோ பொலிசுக்கு அறிவிச்சனிங்கள்?"
"இல்லை... அவர் ஒருக்கால் அடிச்ச பொழுது எனக்கு காது வெடிச்சு நான் சாகக் கிடந்தனான். ஆஸ்பத்திரியிலை இரண்டு மாதத்துக்கு மேலை இருக்க வேண்டி வந்திட்டுது. அதுதான்...... மற்றது எங்கடை பக்கம் அக்கம் வீட்டு டொச் சனங்களும் பொலிசுக்கு அறிவிச்சிட்டுதுகள்."
"அதுக்கு ஒரு நாளும் ஆறு வருசம் தண்டனை குடுக்க மாட்டாங்கள்.
வேறையென்ன நடந்தது என்று சரியாச் சொன்னால்தான் நான் ஏதும் உதவி செய்யலாம்."
"அந்த டொச் சனத்துக்கு விசர். இவர் எங்கடை மகளோடை பிழையாப் பழகிறதெண்டும் சொல்லிப் போட்டுதுகள்."
"பிழையா எண்டு....."
"பள்ளிக்கூட ரூர் ஒண்டுக்கும் விடுறதில்லை. பள்ளிக்கூட நீச்சல் வகுப்புக்கு விடுறதில்லை. பள்ளிக்கூடம் தவிர்ந்த வேறையெந்த இடத்துக்கும் விடுறேல்லை. சினேகிதப் பிள்ளையளோடை பழக விடுறதில்லை......"
"அது பிழைதான். அதுக்காண்டி..."
"அதோடை அவர் பிள்ளையோடை பாலியல் தொடர்பு வைச்சிருக்கிறாரெண்டும் பொய் சொல்லிப் போட்டுதுகள். அதை அறிக்கையா எழுதி என்ரை மகளட்டையும் சைன் வாங்கி யூகன்ட்அம்ற்றிலை (Youth wellfare office) குடுத்திட்டுதுகள்."
"அவர் சொந்தத் தகப்பன்தானே..."
"ஓம்."
"அப்படியெண்டால் ஏன் அந்தச் சனங்கள் அப்பிடி எழுதினதுகள். சில நேரத்திலை அவர் பிள்ளையை வெளியிலை விடாமல் இருக்கிறதாலை அதுகளுக்கு அப்பிடியொரு சந்தேகம் வந்திட்டுதோ தெரியாது. உப்பிடி சில நேரத்திலை நடக்கிறதுதான். ஒண்டும் நடக்காமலே நடந்தது மாதிரியான சந்தேகங்களில் வழக்குகள் வாறதுதான். இதாலை பிள்ளையளைப் பெற்றோரிட்டையிருந்து பிரிச்செடுக்கிற அவலங்களும் நடந்திருக்கு. எங்கையாவது ஒரு சொந்தத் தகப்பன் தன்ரை மகளோடை பிழையா நடப்பானோ? நீங்கள் யோசிக்காதைங்கோ. எப்பிடியாவது லோயரோடை கதைச்சு அப்பீல் எடுத்தால் இதிலை வெல்லலாம். இது ஒரு பிழையான வழக்கு."
இப்போது அவள் முகத்தில் ஒரு சிறிய மாற்றம். எனது பேச்சில் இருந்து.. கணவர் அப்படியொரு அநியாயமான தப்பைச் செய்திருக்க மாட்டாரென்ற பேருவகை. அவர் விடுவிக்கப் பட ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை.
எல்லாம் சில கணங்களுக்குத்தான். சடாரென்று அவள் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. "அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. விடமாட்டினமாம். கடைசியா நடந்த வழக்குக்குக் கூட என்னை உள்ளை விடேல்லை. லோயர்தான் போனவர்." சத்தமெடுத்து அழுதாள். தேநீர்க்கடையில் இருந்த அனைவரது தலைகளும் ஒரு தரம் எம்பக்கம் திரும்பி மீண்டன.
"எங்கை உங்கடை அந்த மகள்? அவ குழந்தைப்பிள்ளையில்லையே! அவவுக்கு 16 வயது. அவ தன்ரை அப்பா தன்னோடை அப்பிடிப் பிழையா நடக்கேல்லை எண்டு கோர்ட்டிலை சொன்னால் பிரச்சனை முடிஞ்சுதுதானே...?"
"அவவிட்டை அந்த விசர்ச் சனங்கள் கையெழுத்து வேண்டிக் குடுத்துட்டுதுகள். இதாலை அவவுக்கும் கெட்ட பெயர். தமிழ்ச்சனங்களுக்கு முன்னாலை தலை காட்டேலாதாம். அதுதான் அந்த நகரத்தையே விட்டிட்டு இங்கை வந்திட்டம். இப்ப அவ பள்ளிக் கூடத்துக்குப் போட்டா."
அப்படி ஏன் அந்த யேர்மனியச் சனங்கள் செய்யப் போகுதுகள்? என்ற கேள்வி எனது மூளையின் ஒரு புறத்தைப் பிறாண்டிக் கொண்டே இருந்தது. இருந்தாலும் மதுவைச் சமாளித்து என்னாலான உதவிகளைச் செய்வதாக வாக்குறுதியளித்து அனுப்புவதற்கிடையில் நான் களைத்து விட்டேன்.
வீட்டுக்கு வந்த பின்னும் மனசுக்குள் நினைவுகள் புரண்டு கொண்டே இருந்தன. யேர்மனியக் குடும்பங்களில் இப்படியான வழக்குகள் சில தடவைகள் வந்திருக்கின்றனதான். ஆனால் எமது தமிழ் சமூகத்தில் இது புதிய வழக்கு. ஒரு தந்தையால் தனது விந்திலிருந்து உருவான தனது குழந்தையை இப்படிப் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உட்படுத்த முடியுமா..?
இந்தக் கேள்விக்கு விடை தேடுமுகமாக எனக்குத் தெரிந்த பல அப்பாக்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். தம்பியின் மனைவியை, அண்ணனின் மகளை, மனைவியின் தங்கையை... என்று சபலப்படும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள்தான். ஆனால் சொந்த மகளையே....! முடியாது ஒரு நாளும் ஒரு தந்தையால் இது முடியாது. இது பிழையான வழக்கு. அநியாயமாக சாருகன் குற்றஞ் சாட்டப் பட்டிருக்கிறான். அவனை எப்படியும் ஜெயிலிலிருந்து விடுவிக்க வேண்டும்.
தெரிந்த ஒரு யேர்மனிய வழக்கறிஞரோடு இது பற்றிப் பேசினேன். இப்படியானதொரு வழக்கு அவருக்குப் புதிதாக இருக்கவில்லை. ஆனாலும் நான் தமிழ்த் தந்தையின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அவரை யோசிக்க வைத்தது. அப்படியொரு தவறை அந்தத் தந்தை செய்யாத பட்சத்தில், சரியான முறையில் முயற்சி செய்தால் மீட்கலாம் என்றார்.
ஒருவித நம்பிக்கையோடு மதுவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு சம்பந்தமான கடிதங்கள், கோர்ட் தீர்ப்புகள் எல்லாவற்றையும் கொண்டு எனது வீட்டுக்கு வரச் சொன்னேன். வந்தாள்.. அதே வாட்டம். அதே ஏக்கம். எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டதான சோகம். மகன் மட்டும் கொஞ்சம் துப்பரவாக வெளிக்கிடுத்தப் பட்டிருந்தான்.
இருக்க வைத்து தேநீர் தயாரித்துக் கொடுத்து கதைப்பதற்குள் பலமுறை ஒப்பாரி வைத்து விட்டாள். அவள் கொண்டு வந்த பேப்பர் கட்டுக்குள்ளிருந்து யூகன்ட்அம்ற்றிலிருந்து (Youth wellfare office) வந்த 12 பேப்பர்கள் ஒன்றாகப் பின் பண்ணப் பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பார்த்தேன். அது பதினொரு மாதங்களின் முன் சாருகனின் வழக்கின் தீர்வையொட்டி எழுதப் பட்ட ஒரு கடிதம். படிக்கத் தொடங்கினேன்.
"இலங்கையைச் சேர்ந்த சாருகன், மதுமிதா தம்பதிகள் இங்கு யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். இவர்களது அரசியற் தஞ்சக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டதின் காரணமாக இவர்களுக்கு யேர்மனியில் வதிவிட அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
தற்போது 15வயதுடைய இவர்களின் மகள் சகானா, கருச்சிதைவு செய்து கொள்வதற்காக, இரண்டு தடவைகள் அவளது தந்தை சாருகனால் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளாள். மருத்துவருக்கும் அங்கு உள்ள மற்றைய உதவியாளர்களுக்கும் இது சம்பந்தமாகப் பலத்த சந்தேகம் ஏற்படவே கருவிற்கு யார் தந்தை என்ற டி.என்.ஏ(DNA) பரிசோதனையை மேற் கொண்டுள்ளார்கள். (இந்தச் சோதனைக்கான ஒரு தரத்துச் செலவு 750யூரோக்கள்.) இச் சோதனையின் போது சகானாவின் வயிற்றில் உள்ள கருவுக்குத் தந்தை அவளின் தந்தையாகிய சாருகன் என்பது நிரூபணமாகியுள்ளது. அதனாலேயே சாருகன் தற்போது சிறையில் வைக்கப் பட்டுள்ளார்."
சரியான ஆதாரம் இருந்தும் கூட திருமதி சாருகன் இதை ஏற்றுக் கொள்கிறாரில்லை. ஒரு சட்டபூர்வமான உண்மையை ஓப்புக் கொள்ள மறுக்கும் சுபாவம் கொண்டவராக திருமதி சாருகன் இருப்பது பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. இதனால் சகானாவின் பாதுகாப்புக்குப் பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.
சகானா தனது தந்தையாலேயே பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளாள். அதனால் மனஉளைச்சல் பட்டுக் கொண்டிருக்கும் அவளை அரவணைக்க வேண்டிய அவளது தாய் மதுமிதா, மகளுக்குத் தாயாக மகளின் பக்கம் நிற்காது, கணவனுக்கு மனைவியாக நின்று கணவனை நியாயமுள்ளவனாகக் காட்ட முனைவது பெரும் விசனத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இத்தனைக்கும் சாருகன் தனது மனைவியான மதுமிதாவை வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமளவுக்கு மூர்க்கத்தனமாகப் பல தடவைகள் தாக்கியிருக்கிறார். எந்தக் கட்டத்திலும் மதுமிதாவை யேர்மனிய மொழி கற்றுக் கொள்ள சாருகன் அனுமதிக்கவில்லை. இத்தனை வருடங்கள் யேர்மனியிலிருந்தும் யேர்மனிய மொழியை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முடியாதவராகவே மதுமிதா இருக்கிறார்......."
எனக்கு மேற்கொண்டு வாசிக்க முடியாமல் இருந்தது. அந்த அறிக்கையில் எழுதப் பட்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் என்னை அதிர வைத்தன. நிமிர்ந்து மதுவைப் பார்த்தேன். அவள் "அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார்." என்பதை ஒரு மந்திரம் போல உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தாள்.
புத்தி பேதலித்தவள் போலப் புலம்பிக் கொள்ளும் இவளிடம் போய் "டீ.என்.ஏ(DNA) பரிசோதனை மூலம் உனது மகளின் கருவுக்கான காரணி உனது கணவன்தான் என்பது நிரூபணமாகியிருக்கும் போது இனி இவ்வழக்கில் வெல்வதற்கு எதுவும் இல்லை" என்பதையும் "உனது கணவனுக்குச் சரியான இடம் அதுதான். அவன் அங்கேயே இருக்கட்டும்." என்பதையும் எப்படிச் சொல்வது..?
யோசனை மேலிட, அந்தக் கடிதத்தை நான் அப்படியே மேசையில் வைத்து விட்டேன். அவள் மீண்டும் பொல பொலவென்று கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட "அவரை நான் பார்க்கோணும். ஒரு வருசத்துக்கு மேலையா அவரைப் பார்க்கேல்லை. அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார். அவரட்டை நேரே பார்த்து "அப்பிடிச் செய்தனிங்களோ...?" எண்டு கேட்கப் போறன்......" புலம்பிக் கொண்டிருந்தாள்.
சந்திரவதனா
யேர்மனி
15.11.2004
Wednesday, November 10, 2004
கப்டன்-மயூரன்(சபா)
அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு.
எனது இளைய மகன் சபா (கப்டன்-மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான்.
எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான்.
வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான்.
அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது..... தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும் கலகலப்பும்தான் வீட்டில்.
என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே! என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள் விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன்.
அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். மருமகனா..! மருமகளா..! என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான்.
இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை.
என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது.
அன்று 17.6.1993 - காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள்.
என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள்.
ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம்.
அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் - அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும்.
பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது "நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?" என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது.
நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனை கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள்.
இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை.
அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான் - அவன் போனதும் - அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன்.
என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது.
"என்னப்பு..! என்ன விசயம்?" என்று கேட்டேன்.
"வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்." என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது.
அதற்குள் அவனது சின்னக்காவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள்.
"உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா." என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான்.
அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே "பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க.." என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான்.
வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன்.
எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது.
பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். "மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்." என்று.
வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை.
பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான்.
11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது.
விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன்.
அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான்.
அம்மா
சிவா தியாகராஜா
மன்கைம்
யேர்மனி
எனது இளைய மகன் சபா (கப்டன்-மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான்.
எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான்.
வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான்.
அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது..... தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும் கலகலப்பும்தான் வீட்டில்.
என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே! என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள் விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன்.
அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். மருமகனா..! மருமகளா..! என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான்.
இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை.
என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது.
அன்று 17.6.1993 - காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள்.
என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள்.
ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம்.
அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் - அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும்.
பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது "நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?" என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது.
நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனை கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள்.
இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை.
அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான் - அவன் போனதும் - அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன்.
என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது.
"என்னப்பு..! என்ன விசயம்?" என்று கேட்டேன்.
"வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்." என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது.
அதற்குள் அவனது சின்னக்காவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள்.
"உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா." என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான்.
அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே "பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க.." என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான்.
வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன்.
எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது.
பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். "மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்." என்று.
வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை.
பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான்.
11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது.
விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன்.
அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான்.
அம்மா
சிவா தியாகராஜா
மன்கைம்
யேர்மனி
Saturday, November 06, 2004
புலம் பெயர் வாழ்வில் வேலைக்குப்
புலம்பெயர் வாழ்வில் வேலைக்குப் போகும் பெண்களையும், வேலைக்குப் போகாதிருக்கும் பெண்களையும் பார்ப்போமேயானால் இரு பகுதியினரது வாழ்வும் ஏதோ ஒரு வகையில் கடினமானதாகவே இருக்கிறது.
எழுச்சிகளும், புரட்சிகளும் காலங்காலமாக இருந்து வந்தாலும், இன்றைய பெண்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. குடும்பம் என்ற புனிதமான கோவிலில் குழப்பங்கள் ஏற்பட்டு விடாமல், கணவன், மனைவி என்ற உறவில் எந்த விரிசல்களும் ஏற்பட்டு விடாமல், விடுதலைப் பாதையை நோக்கி வெற்றி நடை போட வேண்டிய ஒரு கட்டாயம் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டாயத்தை பெரும்பாலான பெண்கள் தாமாகவேதான் விரும்பி தமக்காக எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
இங்கே முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால், ண்களைப் பொறுத்த மட்டில் பெண்களின் இந்த விழிப்புணர்ச்சி, அல்லது மாற்றம் அவர்களிடம் சற்று அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. அச்சப் பட்டவர்களை அப்படியே விட்டுவிட்டு, தம்பாட்டில் போய் விடாது, தம்மோடு அவர்களையும் இழுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமும் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பெண்களுக்குள்ளும் ண்களைப் போலவே சை, பாசம், கோபம், நேசம்.. போன்ற எல்ல உணர்வுகளும் இருக்கின்றதென்பதை ண்களுக்குப் புரிய வைத்து, பெண்கள் அடிமைத் தனத்தையோ, அடக்கு முறையையோ விரும்பவில்லை, தாம் தாமாகவே வாழ விரும்புகிறார்கள் என்பதை உணர வைத்து, குடும்பத்தைக் குலைய விடாது காக்க வேண்டிய பாரிய பொறுப்பும் விடுதலைப் பாதையை நோக்கி நடக்கின்ற இன்றைய பெண்களுக்கு உள்ளது. பெண்விடுதலையின் சரியான பரிமாணத்தை உணர்ந்த பெண்கள், இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஒரு முன்னேற்பாடுடனேயே விடுதலையை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளார்கள்.
இந்த விடுதலைப் பாதையின் முதற் படியில் இருப்பது பெண்கள் தாம் தமது காலில் நிற்பதற்கு ஏதுவான சுய சம்பாத்தியம். அதாவது பெண்கள் தாம் தமக்கெனச் சம்பாதிக்க வேண்டும். இன்றைய பெண்களில் அனேகமானோர் இந்த சூட்சுமத்தைப் புரிந்து வேலைக்குப் போகத் தொடங்கி வட்டார்கள். னாலும் அத்தோடு அவர்களது கஷ்டங்களும் பிரச்சனைகளும் தீர்ந்து விடவில்லை.
வேலைக்குப் போகும் பெண்கள் நிறையவே கஸ்டப் படுகிறார்கள். காரணம் ண்கள் சமூகம் இன்னும் பெண்களின் விடுதலைப் பாதையை நோக்கிய இந்த பயணத்தைச் சரியான முறையில் ஏற்றுக் கொள்ளவில்லை.
பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்கியதால் ண்களின் வாழ்க்கை சற்றுச் சுலபமாகியுள்ளது. அவர்கள் தனியாகச் சுமந்த குடும்பத்தின் பணத்தேவையை, இப்போது வேலைக்குப் போகும் பெண்களும் பங்கு போட்டுச் சுமக்கிறார்கள். அதே நேரம் வீட்டிலுள்ள மற்றைய வேலைகளையும் பெண்களே தனியாகச் சுமக்கிறார்கள். பெரும்பான்மையான ண்கள் அதைப் பங்கு போடத் தவறி விடுகிறார்கள்.
ணும் பெண்ணும் வேலைக்குப் போய் வருகையில், ண் வந்து கதிரைக்குள் இருந்து தொலைக்காட்சி பார்ப்பதுவும், பெண் வந்து கால் வலிக்க, கை வலிக்க வீட்டு வேலைகளைத் தொடர்வதுவும் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது.
திகாலத்தில் வேட்டைக்குப் போன ண்கள் வீட்டுக்கு வந்ததும் நெருப்பைக் கொழுத்தி விட்டு அதன் முன் இருந்து குளிர் காய்வார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யாருடனும் பொ¢யளவாகப் பேச மாட்டார்கள். மெளனமாக இருந்து தம்மை சுவாசப் படுத்திக் கொள்வார்கள். அதன் தாக்கம்தான் இன்றும் தொடர்வதாக ராய்சியாளர்கள் சொல்கிறார்கள்.
சில ண்கள் வீட்டு வேலைகளில் ஏதாவதொன்றைச் செய்வார்கள். அதாவது ஒரு ணால் சமைக்க முடியும். இன்னொருவரால் அயர்ண் பண்ண முடியும். இன்னோருரால் வீட்டைத் துப்பரவாக்க முடியும். னால் பெரும்பாலான ண்களால் ஒரு பெண்ணைப் போல வீட்டின் முழுவேலைகளையும் பொறுப்பேற்றுச் செய்யத் தெரிவதில்லை. அல்லது முடிவதில்லை. இதனால் வேலைக்குப் போகும் பெண் நிறையவே கஸ்டப் படுகிறாள். சில சமயங்களில் நேரமின்மை காரணமாக பிள்ளைகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் கூடத் திண்டாடுகிறாள். கவலைப் படுகிறாள்.
இந்த நிலையில் கூட பிள்ளை ஒரு தவறு செய்யும் போது, "நீ பிள்ளையைச் சரியாக் கவனிக்கிறேல்லை." என்று கணவனிடம் திட்டும் வாங்குகிறாள். ஒரு கணவனும் தந்தையாக நின்று, பிள்ளையைக் கவனிக்கலாம்தானே. அப்படி நடப்பது மிகமிகக் குறைவு. ஏனெனில் இதெல்லாம் பெண்களின் வேலையாகவே கருதப் படுகின்றன. அது இன்று பெண் வெளியில் வேலைக்குப் போகும் போதும் மாறி விடவில்லை.
னாலும், இத்தனை சிரமங்களின் மத்தியிலும், பெண் என்பவள் தான் சம்பாதிப்பதில் ஒரு நிறைவடைகிறாள். "நான், எனது பணம்..!" என்று கர்வம் கொள்ளும் கணவனிடமிருந்து விடுதலை பெற்ற உணர்வைப் பெறுகிறாள்.
வேலைக்குப் போகும் பெண்களின் நிலை இரட்டைச் சுமையைத் தலையில் தூக்கி வைத்ததற்குச் சமனாயிருக்கும் போது, வேலைக்குப் போகாத பெண்களின் நிலை, வேறு விதமான பரிதாபத்தை உணர்த்துகிறது. அவர்களின் வீட்டு வேலைகள் ஒரு வேலையாகக் கணிக்கப் படுவதே இல்லை.
அனேகமான சமயங்களில் "உன்ரை மனைவி என்ன செய்கிறாள்..?" என்று கணவனை யாராவது கேட்டால்.. "அவ சும்மாதான் இருக்கிறா." என்பதே வேலைக்குப் போகாத பெண்களின் கணவன்மார்களின் பதிலாக இருக்கிறது.
இந்த அளவில்தான் பெண்களின் வீட்டு வேலைகள் கணிக்கப் படுகின்றன. அவர்கள் சிறிதளவு பணத்தேவைக்கும் கணவனை எதிர் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். அனேகமான சந்தர்ப்பங்களில் "உனக்கென்ன தெரியும். நீ சும்மா வீட்டிலை இருக்கிறாய். நான் எவ்வளவு கஸ்டப் பட்டு முறிஞ்சு வேலை செய்திட்டு வாறன்." என்று சொல்லிக் கணவன்மாரால் உதாசீனப் படுத்தப் படுகிறார்கள். வீட்டிலுள்ள சகல வேலைகளையும் செய்வது மட்டுமல்லாது "எதுவுமே செய்வதில்லை." என்ற குற்றச் சாட்டையும் கணவனிடமிருந்து அடிக்கடி பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் வேலைக்குச் செல்லாத பெரும்பான்மையான புலம்பெயர் பெண்கள் பாரிய உளவியல் தாக்கத்துக்கும் உள்ளாகிறார்கள்.
அவர்களது வாழ்க்கை சமையல், வீட்டுவேலை கணவனுக்குப் பணிவிடை.. என்றே போய் விடுகிறது. அனேகமான குடும்பங்களில் கணவன்மார்கள் "நான் உழைக்கிறேன். எனது பணம்." என்ற ஒரு திமிருடன்தான் இருக்கிறார்கள். தமது மனைவியரைச் சற்றுத் தாழ்ந்தவர்களாகவே கருதி, மனைவியரின் மனங்களிலும் "நீ தாழ்ந்தவள். எனது பணத்தில்தானே நீ வாழ்கிறாய். நான் எவ்வளவு வேலை செய்து விட்டு வருகிறேன். நீ சும்மா வீட்டில் இருந்து எனது பணத்தில்தானே சாப்பிடுகிறாய்." என்பது போன்றதான கருத்துக்களை விதைக்கிறார்கள். மிகச் சிறுபான்மையான ண்கள் மட்டுமே மனைவியரை மனைவியராக, உணர்வுள்ள ஜென்மமங்களாக மதித்து, வீட்டு வேலைகளை வேலையாகக் கணித்து உதவுகிறார்கள்.
மொத்தத்தில் வேலைக்குப் போகும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி ஏதோ ஒரு வகையில் கஸ்டங்களையே சுமக்கிறார்கள். னாலும் வெளிவேலை, வீட்டுவேலை இரண்டினாலுமான அதீத சுமைகளின் மத்தியிலும் வேலைக்குப் போகும் பெண்கள் வெளி உலகத்துடனான தொடர்பு, நானும் உழைக்கிறேன் என்ற மனநிறைவு.. போன்றதான விடயங்களால் ஒரு வித தன்னம்பிக்கையுடனேயே வாழ்கிறார்கள். வேலைக்குப் போகாத பெண்களோ தாழ்வு மனப்பான்மை நிறைந்த உளவியல் தாக்கத்தினால் தன்னம்பிக்கை இழந்து ஒரு தனிமைச் சிறையில் வாழ்கிறார்கள்.
சந்திரவதனா
யேர்மனி
6.11.2004
எழுச்சிகளும், புரட்சிகளும் காலங்காலமாக இருந்து வந்தாலும், இன்றைய பெண்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. குடும்பம் என்ற புனிதமான கோவிலில் குழப்பங்கள் ஏற்பட்டு விடாமல், கணவன், மனைவி என்ற உறவில் எந்த விரிசல்களும் ஏற்பட்டு விடாமல், விடுதலைப் பாதையை நோக்கி வெற்றி நடை போட வேண்டிய ஒரு கட்டாயம் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டாயத்தை பெரும்பாலான பெண்கள் தாமாகவேதான் விரும்பி தமக்காக எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
இங்கே முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியது என்னவென்றால், ண்களைப் பொறுத்த மட்டில் பெண்களின் இந்த விழிப்புணர்ச்சி, அல்லது மாற்றம் அவர்களிடம் சற்று அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. அச்சப் பட்டவர்களை அப்படியே விட்டுவிட்டு, தம்பாட்டில் போய் விடாது, தம்மோடு அவர்களையும் இழுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமும் இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பெண்களுக்குள்ளும் ண்களைப் போலவே சை, பாசம், கோபம், நேசம்.. போன்ற எல்ல உணர்வுகளும் இருக்கின்றதென்பதை ண்களுக்குப் புரிய வைத்து, பெண்கள் அடிமைத் தனத்தையோ, அடக்கு முறையையோ விரும்பவில்லை, தாம் தாமாகவே வாழ விரும்புகிறார்கள் என்பதை உணர வைத்து, குடும்பத்தைக் குலைய விடாது காக்க வேண்டிய பாரிய பொறுப்பும் விடுதலைப் பாதையை நோக்கி நடக்கின்ற இன்றைய பெண்களுக்கு உள்ளது. பெண்விடுதலையின் சரியான பரிமாணத்தை உணர்ந்த பெண்கள், இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, ஒரு முன்னேற்பாடுடனேயே விடுதலையை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளார்கள்.
இந்த விடுதலைப் பாதையின் முதற் படியில் இருப்பது பெண்கள் தாம் தமது காலில் நிற்பதற்கு ஏதுவான சுய சம்பாத்தியம். அதாவது பெண்கள் தாம் தமக்கெனச் சம்பாதிக்க வேண்டும். இன்றைய பெண்களில் அனேகமானோர் இந்த சூட்சுமத்தைப் புரிந்து வேலைக்குப் போகத் தொடங்கி வட்டார்கள். னாலும் அத்தோடு அவர்களது கஷ்டங்களும் பிரச்சனைகளும் தீர்ந்து விடவில்லை.
வேலைக்குப் போகும் பெண்கள் நிறையவே கஸ்டப் படுகிறார்கள். காரணம் ண்கள் சமூகம் இன்னும் பெண்களின் விடுதலைப் பாதையை நோக்கிய இந்த பயணத்தைச் சரியான முறையில் ஏற்றுக் கொள்ளவில்லை.
பெண்கள் வேலைக்குப் போகத் தொடங்கியதால் ண்களின் வாழ்க்கை சற்றுச் சுலபமாகியுள்ளது. அவர்கள் தனியாகச் சுமந்த குடும்பத்தின் பணத்தேவையை, இப்போது வேலைக்குப் போகும் பெண்களும் பங்கு போட்டுச் சுமக்கிறார்கள். அதே நேரம் வீட்டிலுள்ள மற்றைய வேலைகளையும் பெண்களே தனியாகச் சுமக்கிறார்கள். பெரும்பான்மையான ண்கள் அதைப் பங்கு போடத் தவறி விடுகிறார்கள்.
ணும் பெண்ணும் வேலைக்குப் போய் வருகையில், ண் வந்து கதிரைக்குள் இருந்து தொலைக்காட்சி பார்ப்பதுவும், பெண் வந்து கால் வலிக்க, கை வலிக்க வீட்டு வேலைகளைத் தொடர்வதுவும் ஒவ்வொரு வீட்டிலும் இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது.
திகாலத்தில் வேட்டைக்குப் போன ண்கள் வீட்டுக்கு வந்ததும் நெருப்பைக் கொழுத்தி விட்டு அதன் முன் இருந்து குளிர் காய்வார்கள். அந்த நேரத்தில் அவர்கள் யாருடனும் பொ¢யளவாகப் பேச மாட்டார்கள். மெளனமாக இருந்து தம்மை சுவாசப் படுத்திக் கொள்வார்கள். அதன் தாக்கம்தான் இன்றும் தொடர்வதாக ராய்சியாளர்கள் சொல்கிறார்கள்.
சில ண்கள் வீட்டு வேலைகளில் ஏதாவதொன்றைச் செய்வார்கள். அதாவது ஒரு ணால் சமைக்க முடியும். இன்னொருவரால் அயர்ண் பண்ண முடியும். இன்னோருரால் வீட்டைத் துப்பரவாக்க முடியும். னால் பெரும்பாலான ண்களால் ஒரு பெண்ணைப் போல வீட்டின் முழுவேலைகளையும் பொறுப்பேற்றுச் செய்யத் தெரிவதில்லை. அல்லது முடிவதில்லை. இதனால் வேலைக்குப் போகும் பெண் நிறையவே கஸ்டப் படுகிறாள். சில சமயங்களில் நேரமின்மை காரணமாக பிள்ளைகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் கூடத் திண்டாடுகிறாள். கவலைப் படுகிறாள்.
இந்த நிலையில் கூட பிள்ளை ஒரு தவறு செய்யும் போது, "நீ பிள்ளையைச் சரியாக் கவனிக்கிறேல்லை." என்று கணவனிடம் திட்டும் வாங்குகிறாள். ஒரு கணவனும் தந்தையாக நின்று, பிள்ளையைக் கவனிக்கலாம்தானே. அப்படி நடப்பது மிகமிகக் குறைவு. ஏனெனில் இதெல்லாம் பெண்களின் வேலையாகவே கருதப் படுகின்றன. அது இன்று பெண் வெளியில் வேலைக்குப் போகும் போதும் மாறி விடவில்லை.
னாலும், இத்தனை சிரமங்களின் மத்தியிலும், பெண் என்பவள் தான் சம்பாதிப்பதில் ஒரு நிறைவடைகிறாள். "நான், எனது பணம்..!" என்று கர்வம் கொள்ளும் கணவனிடமிருந்து விடுதலை பெற்ற உணர்வைப் பெறுகிறாள்.
வேலைக்குப் போகும் பெண்களின் நிலை இரட்டைச் சுமையைத் தலையில் தூக்கி வைத்ததற்குச் சமனாயிருக்கும் போது, வேலைக்குப் போகாத பெண்களின் நிலை, வேறு விதமான பரிதாபத்தை உணர்த்துகிறது. அவர்களின் வீட்டு வேலைகள் ஒரு வேலையாகக் கணிக்கப் படுவதே இல்லை.
அனேகமான சமயங்களில் "உன்ரை மனைவி என்ன செய்கிறாள்..?" என்று கணவனை யாராவது கேட்டால்.. "அவ சும்மாதான் இருக்கிறா." என்பதே வேலைக்குப் போகாத பெண்களின் கணவன்மார்களின் பதிலாக இருக்கிறது.
இந்த அளவில்தான் பெண்களின் வீட்டு வேலைகள் கணிக்கப் படுகின்றன. அவர்கள் சிறிதளவு பணத்தேவைக்கும் கணவனை எதிர் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். அனேகமான சந்தர்ப்பங்களில் "உனக்கென்ன தெரியும். நீ சும்மா வீட்டிலை இருக்கிறாய். நான் எவ்வளவு கஸ்டப் பட்டு முறிஞ்சு வேலை செய்திட்டு வாறன்." என்று சொல்லிக் கணவன்மாரால் உதாசீனப் படுத்தப் படுகிறார்கள். வீட்டிலுள்ள சகல வேலைகளையும் செய்வது மட்டுமல்லாது "எதுவுமே செய்வதில்லை." என்ற குற்றச் சாட்டையும் கணவனிடமிருந்து அடிக்கடி பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் வேலைக்குச் செல்லாத பெரும்பான்மையான புலம்பெயர் பெண்கள் பாரிய உளவியல் தாக்கத்துக்கும் உள்ளாகிறார்கள்.
அவர்களது வாழ்க்கை சமையல், வீட்டுவேலை கணவனுக்குப் பணிவிடை.. என்றே போய் விடுகிறது. அனேகமான குடும்பங்களில் கணவன்மார்கள் "நான் உழைக்கிறேன். எனது பணம்." என்ற ஒரு திமிருடன்தான் இருக்கிறார்கள். தமது மனைவியரைச் சற்றுத் தாழ்ந்தவர்களாகவே கருதி, மனைவியரின் மனங்களிலும் "நீ தாழ்ந்தவள். எனது பணத்தில்தானே நீ வாழ்கிறாய். நான் எவ்வளவு வேலை செய்து விட்டு வருகிறேன். நீ சும்மா வீட்டில் இருந்து எனது பணத்தில்தானே சாப்பிடுகிறாய்." என்பது போன்றதான கருத்துக்களை விதைக்கிறார்கள். மிகச் சிறுபான்மையான ண்கள் மட்டுமே மனைவியரை மனைவியராக, உணர்வுள்ள ஜென்மமங்களாக மதித்து, வீட்டு வேலைகளை வேலையாகக் கணித்து உதவுகிறார்கள்.
மொத்தத்தில் வேலைக்குப் போகும் பெண்களும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களும் சரி ஏதோ ஒரு வகையில் கஸ்டங்களையே சுமக்கிறார்கள். னாலும் வெளிவேலை, வீட்டுவேலை இரண்டினாலுமான அதீத சுமைகளின் மத்தியிலும் வேலைக்குப் போகும் பெண்கள் வெளி உலகத்துடனான தொடர்பு, நானும் உழைக்கிறேன் என்ற மனநிறைவு.. போன்றதான விடயங்களால் ஒரு வித தன்னம்பிக்கையுடனேயே வாழ்கிறார்கள். வேலைக்குப் போகாத பெண்களோ தாழ்வு மனப்பான்மை நிறைந்த உளவியல் தாக்கத்தினால் தன்னம்பிக்கை இழந்து ஒரு தனிமைச் சிறையில் வாழ்கிறார்கள்.
சந்திரவதனா
யேர்மனி
6.11.2004
Friday, November 05, 2004
உபதேசம்
நேற்று மாலதி நாட்டிலிருந்து திரும்பியிருப்பாள். அவளிடம் நாட்டுப் புதினங்களைக் கேட்க வேண்டுமென்று மனசு அவாப்பட்டது. நேற்றே தொலைபேசியில் அழைத்திருக்கலாம். பயண அலுப்புகளின் மத்தியில் என் தொல்லை வேறு அவளுக்கு வேண்டாமென்று நினைத்துப் பொறுமை காத்தேன்.
என்னை விடப் பத்து வருடங்கள் இளையவளானாலும் நட்போடு பழகக் கூடியவள். நான் எனது சிறு குழந்தைகளுடன் யேர்மனிய வாழ்க்கையை ஆரம்பித்த சில காலப்பொழுதுக்குள், ஒருநாள் ஸ்ருட்கார்ட் புகையிரத நிலையத்தில் அவளை முதல் முதலாகச் சந்தித்தேன். அப்போதுதான் திருமணமாகி அவளும் அவள் கணவனும் கல்யாணக்களை கலையாத புத்தம் புதுத் தம்பதிகளாய் தெரிந்தார்கள்.
அவளது பேச்சும், அவளிடமிருந்த நாட்டுப் பற்றும், முதற் சந்திப்பிலேயே என்னுள் அவள்பால் ஓர் பிடிமானத்தை ஏற்படுத்தி விட்டது. தொடர்ந்த ஓரிரு முறைகளிலான சந்திப்பில் வயது வித்தியாசம் பாராது நாங்கள் நட்பாகி விட்டோம்.
தமிழ்ப்பெண்களைக் காணுவதே அரிதான அந்தக் காலகட்டத்தில் அவள் எனக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே தெரிந்தாள். அதனால் தூரம் என்றும் பார்க்காமல் மாதம் ஒரு முறையாவது பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு, ரெயின் ஏறி அவளைச் சந்தித்து வருவேன்.
எனது பிள்ளைகளுடன் அவள் பேசும் விதமே எனக்கு மகிழ்வூட்டுவதாக இருக்கும். உறவுகள் என்று சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லாத அந்நிய தேசத்தில், அவள் ஒரு மாமியாய், சித்தியாய்.. என்று நின்று என் பிள்ளைகளுக்குப் புத்திமதிகள் சொல்லும் போது ஒரு நெருக்கமான உறவு கிடைத்து விட்டதான உணர்வில் மனம் நிறைவேன்.
எனது மகனுக்கு அவளை நன்கு பிடிக்கும். "மாலதி அக்கா...! மாலதி...!" அக்கா என்று அன்போடு பழகுவான். அவளும் அவனோடு அன்பாகப் பழகுவாள். எப்போதும் நாட்டைப் பற்றியே பேசுவாள். நாங்கள் எல்லோரும் எப்படியாவது நாட்டுக்குப் போய் விட வேண்டுமென்று சொல்லுவாள். ஏதாவது அந்தரம், அவசரம் என்று வந்தால் கூட நம்பி அவளிடம்தான் எனது பிள்ளைகளை விட்டுச் செல்வேன்.
என்னோடு பேசும் போதெல்லாம் "அக்கா..! எனக்குப் பிள்ளையள் பிறந்தால், ஒரு பத்துப், பன்னிரண்டு வயசுக்கு மேலை அதுகளை இந்த நாட்டிலை வைச்சிருக்க மாட்டன். எப்பிடியாவது எங்கடை நாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போடுவன். இங்கை இருந்தால் பிள்ளையள் கெட்டுப் போடுங்கள். நீங்களும் உங்கடை பிள்ளையளை பிறந்தநாள் விழா அது இதெண்டு சொல்லி, யேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கோ அல்லது வேறை யேர்மன் களியாட்டங்களுக்கோ விட்டிடாதைங்கோ." என்பாள்.
எனது பிள்ளைகள் வளர்ந்து கொண்டு வரும் போது அவள் சொன்னது போல வளர்ப்பதென்பது கடினமான காரியமாகவே இருந்தது. வகுப்புப் பிள்ளைகளின் பிறந்த நாட்களுக்கோ, அல்லது எமது நகரில் நடைபெறும் களியாட்டங்களுக்கோ என் பிள்ளைகள் செல்வதை என்னால் தடுக்க முடியவில்லை. பத்துப் பன்னிரண்டு வயது வந்ததும், அவர்களது படிப்பைக் குழப்பிக் கொண்டு, ஒரு சுமூக நிலைக்கு வராத எனது நாட்டுக்கு ஓடவும் முடியவில்லை.
அதன் பின்னான பொழுதுகளில் மாலதி என்னை அடிக்கடி கண்டித்தாள். "நீங்களக்கா பிள்ளையளுக்கு அளவுக்கு மிஞ்சி இடங் குடுக்கிறிங்கள். இப்ப இந்த வயசிலை இப்பிடி யேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கு விட்டிங்கள் எண்டால், நாளைக்கு 14, 15 வயசு வரக்கை டிஸ்கோவுக்கும் விட வேண்டி வரும்" என்பாள்.
ஓரு தரம் எனது மூத்தவன் சினிமாப் பாடல் ஒன்றை மிகவும் ரசித்துக் கேட்ட போது, அவள் அவளது கணவனோடு சேர்ந்து "பாருங்கோ அக்கா... இவன் கேட்கிற பாட்டை...! இவனக்கா மெதுமெதுவா நாட்டை மறக்கிறான். எல்லாம் நீங்கள் குடுக்கிற இடந்தான்.." எனக் கடிந்தாள்.
இன்னொருதரம் அவன் மைக்கல் ஜக்சனின் பாட்டு தொலைக்காட்சியில் போன போது, தொலைக்காட்சியின் சத்தத்தையும் கூட்டி விட்டு, உடம்பை நெளித்து நெளித்து ஒரு ரசனையுடன் ஆடிய போது, அவள் போட்ட கூச்சலில் நானே ஆடிப் போய் விட்டேன்.
அவளது இந்த உபதேசங்கள் எமக்கிடையேயான நட்புக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காத போதும், அவள் சொல்வது போல என்னால் என் பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை என்பதால் அவளிடம் அடிக்கடி செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன்.
இந்த இடையில் அவளுக்கும் ஒவ்வொன்றாக மூன்று குழந்தைகள் பிறந்து விட்டார்கள். அந்த சந்தோசங்களில் கலந்தும், அடிக்கடி தொலைபேசியில் கதைத்தும் எங்களுக்குள்ளான உறவை தொலைத்து விடாது காத்து வந்தேன்.
ஆனாலும் காலப் போக்கில் ஐரோப்பிய அவசரங்களுக்குள் தொலைபேசும் இடைவெளிகள் கூட நீண்டு கொண்டே போயின. அவளது பிள்ளைகளும் வளர்ந்து கொண்டிருக்கும் போது அவளுக்கான அவளுடைய நேரங்களும் குறுகிப் போயின. நேரடிச் சந்திப்புகள் மிகவும் அரிதாக இப்படித்தான் ஏதாவதொரு விடயம் சாட்டாக வரும் போது தொலைபேசிக் கொண்டோம்.
இப்போது அவள் நாட்டுக்குப் போய் வந்தது சாட்டாகி விட்டது. அழைத்தேன். தொலைபேசியின் சில மணி நேரச் சிணுங்கல்களுக்குப் பின்பே இணைப்பில் வந்தாள். கொஞ்சம் களைப்பாக இருந்தாள். பயண அலுப்பு இன்னும் தீரவில்லை என்பது தெரிந்தது. பின்னணியில் "சுற்றிச் சுற்றி வந்தீக..." படையப்பா படப் பாட்டு சத்தமாகக் கேட்டது. "கொஞ்சம் சத்தத்தைக் குறை" என்று திரும்பிக் கத்தி விட்டு இவன் சஞ்சுதனக்கா படையப்பா பாட்டுப் போடாமல் சாப்பிட மாட்டான். ஒரு நாளைக்கு மூன்று தரத்துக் குறையாமல் எங்கடை வீட்டை படையப்பா ஓடுது. சலிப்படைந்த பாவனையுடன் பேசினாலும் அதைச் சொல்லும் போது ஏதோ ஒரு பெருமிதம் அவள் குரலில் ஒலித்தது.
"எப்பிடி நாடு இருக்கு?"நான்தான் ஆவலோடு கேட்டேன்.
"சா.. அதையேன் கேட்கிறிங்கள் அக்கா? ஒரே இலையான். வெய்யில். சீ எண்டு போச்சுது."
தொடர்ந்து நிறையவே கதைத்தோம்.
"இனி எப்ப நாட்டுப் பக்கம் போற ஐடியா?"
"நாட்டுக்கோ....! இதுதான் கடைசியும் முதலும். இந்தப் பிள்ளையளாலை அதைத் தாங்கேலாது. பாவம் பிள்ளையள். அந்த வெய்யிலும்.. இலையானும்.. காய்ஞ்சு போய்க் கிடக்கு எல்லாம். இதுக்குள்ளை நுளம்பு வேறை. இதுகளுக்கு அந்த நாடு ஒத்து வராது. இனி அந்தப் பக்கமே போறேல்லை எண்டு தீர்மானிச்சிட்டன்."
பேசுவது மாலதிதானா..!!! மனசு வினாவியது.
அதற்கு மேல் எனக்குப் பேச்சே வரவில்லை.
சந்திரவதனா
யேர்மனி
4.11.2004
என்னை விடப் பத்து வருடங்கள் இளையவளானாலும் நட்போடு பழகக் கூடியவள். நான் எனது சிறு குழந்தைகளுடன் யேர்மனிய வாழ்க்கையை ஆரம்பித்த சில காலப்பொழுதுக்குள், ஒருநாள் ஸ்ருட்கார்ட் புகையிரத நிலையத்தில் அவளை முதல் முதலாகச் சந்தித்தேன். அப்போதுதான் திருமணமாகி அவளும் அவள் கணவனும் கல்யாணக்களை கலையாத புத்தம் புதுத் தம்பதிகளாய் தெரிந்தார்கள்.
அவளது பேச்சும், அவளிடமிருந்த நாட்டுப் பற்றும், முதற் சந்திப்பிலேயே என்னுள் அவள்பால் ஓர் பிடிமானத்தை ஏற்படுத்தி விட்டது. தொடர்ந்த ஓரிரு முறைகளிலான சந்திப்பில் வயது வித்தியாசம் பாராது நாங்கள் நட்பாகி விட்டோம்.
தமிழ்ப்பெண்களைக் காணுவதே அரிதான அந்தக் காலகட்டத்தில் அவள் எனக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே தெரிந்தாள். அதனால் தூரம் என்றும் பார்க்காமல் மாதம் ஒரு முறையாவது பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு, ரெயின் ஏறி அவளைச் சந்தித்து வருவேன்.
எனது பிள்ளைகளுடன் அவள் பேசும் விதமே எனக்கு மகிழ்வூட்டுவதாக இருக்கும். உறவுகள் என்று சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லாத அந்நிய தேசத்தில், அவள் ஒரு மாமியாய், சித்தியாய்.. என்று நின்று என் பிள்ளைகளுக்குப் புத்திமதிகள் சொல்லும் போது ஒரு நெருக்கமான உறவு கிடைத்து விட்டதான உணர்வில் மனம் நிறைவேன்.
எனது மகனுக்கு அவளை நன்கு பிடிக்கும். "மாலதி அக்கா...! மாலதி...!" அக்கா என்று அன்போடு பழகுவான். அவளும் அவனோடு அன்பாகப் பழகுவாள். எப்போதும் நாட்டைப் பற்றியே பேசுவாள். நாங்கள் எல்லோரும் எப்படியாவது நாட்டுக்குப் போய் விட வேண்டுமென்று சொல்லுவாள். ஏதாவது அந்தரம், அவசரம் என்று வந்தால் கூட நம்பி அவளிடம்தான் எனது பிள்ளைகளை விட்டுச் செல்வேன்.
என்னோடு பேசும் போதெல்லாம் "அக்கா..! எனக்குப் பிள்ளையள் பிறந்தால், ஒரு பத்துப், பன்னிரண்டு வயசுக்கு மேலை அதுகளை இந்த நாட்டிலை வைச்சிருக்க மாட்டன். எப்பிடியாவது எங்கடை நாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போடுவன். இங்கை இருந்தால் பிள்ளையள் கெட்டுப் போடுங்கள். நீங்களும் உங்கடை பிள்ளையளை பிறந்தநாள் விழா அது இதெண்டு சொல்லி, யேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கோ அல்லது வேறை யேர்மன் களியாட்டங்களுக்கோ விட்டிடாதைங்கோ." என்பாள்.
எனது பிள்ளைகள் வளர்ந்து கொண்டு வரும் போது அவள் சொன்னது போல வளர்ப்பதென்பது கடினமான காரியமாகவே இருந்தது. வகுப்புப் பிள்ளைகளின் பிறந்த நாட்களுக்கோ, அல்லது எமது நகரில் நடைபெறும் களியாட்டங்களுக்கோ என் பிள்ளைகள் செல்வதை என்னால் தடுக்க முடியவில்லை. பத்துப் பன்னிரண்டு வயது வந்ததும், அவர்களது படிப்பைக் குழப்பிக் கொண்டு, ஒரு சுமூக நிலைக்கு வராத எனது நாட்டுக்கு ஓடவும் முடியவில்லை.
அதன் பின்னான பொழுதுகளில் மாலதி என்னை அடிக்கடி கண்டித்தாள். "நீங்களக்கா பிள்ளையளுக்கு அளவுக்கு மிஞ்சி இடங் குடுக்கிறிங்கள். இப்ப இந்த வயசிலை இப்பிடி யேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கு விட்டிங்கள் எண்டால், நாளைக்கு 14, 15 வயசு வரக்கை டிஸ்கோவுக்கும் விட வேண்டி வரும்" என்பாள்.
ஓரு தரம் எனது மூத்தவன் சினிமாப் பாடல் ஒன்றை மிகவும் ரசித்துக் கேட்ட போது, அவள் அவளது கணவனோடு சேர்ந்து "பாருங்கோ அக்கா... இவன் கேட்கிற பாட்டை...! இவனக்கா மெதுமெதுவா நாட்டை மறக்கிறான். எல்லாம் நீங்கள் குடுக்கிற இடந்தான்.." எனக் கடிந்தாள்.
இன்னொருதரம் அவன் மைக்கல் ஜக்சனின் பாட்டு தொலைக்காட்சியில் போன போது, தொலைக்காட்சியின் சத்தத்தையும் கூட்டி விட்டு, உடம்பை நெளித்து நெளித்து ஒரு ரசனையுடன் ஆடிய போது, அவள் போட்ட கூச்சலில் நானே ஆடிப் போய் விட்டேன்.
அவளது இந்த உபதேசங்கள் எமக்கிடையேயான நட்புக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காத போதும், அவள் சொல்வது போல என்னால் என் பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை என்பதால் அவளிடம் அடிக்கடி செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன்.
இந்த இடையில் அவளுக்கும் ஒவ்வொன்றாக மூன்று குழந்தைகள் பிறந்து விட்டார்கள். அந்த சந்தோசங்களில் கலந்தும், அடிக்கடி தொலைபேசியில் கதைத்தும் எங்களுக்குள்ளான உறவை தொலைத்து விடாது காத்து வந்தேன்.
ஆனாலும் காலப் போக்கில் ஐரோப்பிய அவசரங்களுக்குள் தொலைபேசும் இடைவெளிகள் கூட நீண்டு கொண்டே போயின. அவளது பிள்ளைகளும் வளர்ந்து கொண்டிருக்கும் போது அவளுக்கான அவளுடைய நேரங்களும் குறுகிப் போயின. நேரடிச் சந்திப்புகள் மிகவும் அரிதாக இப்படித்தான் ஏதாவதொரு விடயம் சாட்டாக வரும் போது தொலைபேசிக் கொண்டோம்.
இப்போது அவள் நாட்டுக்குப் போய் வந்தது சாட்டாகி விட்டது. அழைத்தேன். தொலைபேசியின் சில மணி நேரச் சிணுங்கல்களுக்குப் பின்பே இணைப்பில் வந்தாள். கொஞ்சம் களைப்பாக இருந்தாள். பயண அலுப்பு இன்னும் தீரவில்லை என்பது தெரிந்தது. பின்னணியில் "சுற்றிச் சுற்றி வந்தீக..." படையப்பா படப் பாட்டு சத்தமாகக் கேட்டது. "கொஞ்சம் சத்தத்தைக் குறை" என்று திரும்பிக் கத்தி விட்டு இவன் சஞ்சுதனக்கா படையப்பா பாட்டுப் போடாமல் சாப்பிட மாட்டான். ஒரு நாளைக்கு மூன்று தரத்துக் குறையாமல் எங்கடை வீட்டை படையப்பா ஓடுது. சலிப்படைந்த பாவனையுடன் பேசினாலும் அதைச் சொல்லும் போது ஏதோ ஒரு பெருமிதம் அவள் குரலில் ஒலித்தது.
"எப்பிடி நாடு இருக்கு?"நான்தான் ஆவலோடு கேட்டேன்.
"சா.. அதையேன் கேட்கிறிங்கள் அக்கா? ஒரே இலையான். வெய்யில். சீ எண்டு போச்சுது."
தொடர்ந்து நிறையவே கதைத்தோம்.
"இனி எப்ப நாட்டுப் பக்கம் போற ஐடியா?"
"நாட்டுக்கோ....! இதுதான் கடைசியும் முதலும். இந்தப் பிள்ளையளாலை அதைத் தாங்கேலாது. பாவம் பிள்ளையள். அந்த வெய்யிலும்.. இலையானும்.. காய்ஞ்சு போய்க் கிடக்கு எல்லாம். இதுக்குள்ளை நுளம்பு வேறை. இதுகளுக்கு அந்த நாடு ஒத்து வராது. இனி அந்தப் பக்கமே போறேல்லை எண்டு தீர்மானிச்சிட்டன்."
பேசுவது மாலதிதானா..!!! மனசு வினாவியது.
அதற்கு மேல் எனக்குப் பேச்சே வரவில்லை.
சந்திரவதனா
யேர்மனி
4.11.2004
Wednesday, November 03, 2004
நிலவுக்குப் பயந்து பரதேசம் வந்த மான்குட்டிகள்
கிணற்றுக்குள் வீழ்ந்த மயிர்க்கொட்டிப் புழுப் போல் துளசியின் மனசுக்குள் நினைவுகள் அருவருப்பாய் நெளிந்து கொண்டே இருந்தன. வெளியிலே கொட்டி விடத் துடித்தாலும் முடியாத படி எதுவோ தடுத்தது.
வெளியில் பனியை வெயில் மெதுமெதுவாகக் கரைத்துக் கொண்டிருந்த மதியப் பொழுதில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவள் - காலையில் பெரியம்மா வேலைக்குப் போக முன்னம் சமைத்து வைத்து விட்டுப் போனதை எடுத்து சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினாள்.
தொலைக்காட்சியில் பருந்து ஒன்று வட்ட மிட்டுக் கொண்டு கீழே எதையோ குறிவைத்து வந்து கொண்டிருந்தது. திக்கென்ற மனதுடன் அவள் பார்த்துக் கொண்டிருக்கவே பருந்தின் வருகையை உணர்ந்த மான்குட்டியொன்று எங்கே ஓடுவது என்று தெரியாது காதை உயர்த்தி விரித்துத் தடமடித்து தாயைத் தேடி.. ஓட விளைந்து..... இப்போ அவளுக்கு தானே மான்குட்டியானது போன்றதொரு பிரமை. பச்சாபத்தாபமான உணர்வு... பயம்... நடுக்கம்... ஒடுங்கி ஒடுங்கி நடுங்கினாள்.
இப்போதெல்லாம் இப்படியானதொரு அவஸ்தை அவளை வாட்டிக் கொண்டே இருக்கிறது. எதைப் பார்த்தாலும் எந்த அவலமானாலும் அதை தனதாக்கி தானே அதுவாகிய கற்பனையில் துடிப்பதும் துவளுவதுமாய்..........
மான்குட்டி தன் உயிர் காக்க பாய்ந்து பாய்ந்து தாவித் தாவி ஓடத் தொடங்கியிருந்தது. துளசி இறைவனை மன்றாடினாள். காப்பாற்று.. காப்பாற்று.. மன்றாட்டம் அவன் காதில் விழவில்லையோ...? அல்லது விழுவதற்கு முன் பருந்து முந்தி விட்டதோ...! அவக்கென மான்குட்டியின் மேல் விழுந்து கவ்விக் கொண்டு மேலெழுந்தது.
இப்போது துளசியின் பிரார்த்தனை - பருந்து தவறி வாயைத் திறக்கோணும்..! மான் குட்டி கீழே விழுந்து தப்பி விடோணும்..! என்றிருந்தது. ஆனால் பருந்து இது விடயத்தில் வலு கவனம். வைத்த குறியை தப்ப விட்டோ
எடுத்த இரையை சுவைக்காமல் விட்டோ அதற்குப் பழக்கமில்லை.
அது இன்னும் இன்னும் மான்குட்டியை தனக்குள் இறுக்கிக் கொண்டது.
அவளுக்கு அழுகையாய் வந்து விட்டது. விக்கி விக்கி அழத் தொடங்கினாள்: மான்குட்டிக்காக அழுகிறாளா..? அல்லது தனக்காக அழுகிறாளா..? அவளுக்கே தெரியவில்லை.
இன்று காலை அவளது அப்பா ரெலிபோனில் அவளை அழைத்து "துளசி எப்படியம்மா இருக்கிறாய்..?" என்று நெகிழ்ந்து நாத்தழுதழுக்கப் கேட்ட போது எல்லாவற்றையும் சொல்லி விடலாமா என்றுதான் யோசித்தாள். எப்படிச் சொல்வது என்று தெரியாத தடுமாற்றமும், அப்பா பாவம்... பருத்தித்துறையிலிருந்து தன்னோடு பேச என்று எவ்வளவு கஸ்டப் பட்டு வவுனியா வரை வந்திருப்பார் என்ற அனுதாபம் கலந்த எண்ணமும் அவளைப் பேச விடாது தடுத்து விட்டன.
துளசி யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து கிட்டத் தட்ட ஒரு வருடமாகிறது. அவளாக விரும்பி அவள் புலம் பெயரவில்லை.
நிறைந்த நம்பிக்கையோடும் அவளது எதிர் காலம் பற்றிய கனவுகளோடும்
"பிள்ளை என்னாலை உன்னை இங்கை வைச்சுக் காப்பாத்தேலாது. ஆமியின்ரை கொலை வெறி ஒரு புறம். காமவெறி மறுபுறம். இதுகளுக்கை பொம்பிளைப் பிள்ளை உன்னை யேர்மனிக்கு அனுப்ப வசதி இருந்தும் அனுப்பாமல் வைச்சிருக்கிறது பிழையெண்டுதான் எனக்குப் படுது."
என்று சொல்லி அப்பாதான் அவளை யேர்மனிக்குப் புலம் பெயர வைத்தார்.
அம்மாவுக்கு அவளைத் தன்னந்தனியாக அனுப்ப துளியும் இஸ்டமில்லை.
அப்பாவோ "உம்மடை கண்மூடித் தனமான பாசத்துக்கு அவளை இங்கை வைச்சுப் பலி குடுக்கப் போறீரே...!" என்று கோபமாகக் கத்தி அம்மாவைப் பேசி விட்டார். அப்பாவின் முழு நம்பிக்கையும் பெண்பிள்ளையே இல்லாத யேர்மனியில் வாழும் அவரது அண்ணன் அவளைச் சொந்தப் பிள்ளை போல வைத்துப் பார்ப்பார் என்பதுதான்.
அம்மாவுக்குப் பயம் - கதைகளிலும் படங்களிலும் வருவது போல் பெரியம்மா அவளைக் கொடுமைப் படுத்தி விடுவாவோ என்று. அதற்கு மேலால் அம்மாவுக்கு துளசியைப் பிரிய விருப்பமே இல்லை. பிரிவுத்துயரை தாங்கும் தைரியம் தனக்கில்லை என்றே அம்மா அழுதாள்.
"பிள்ளையள் எப்பவும் உம்மோடைதான் இருக்குங்கள் என்று நினைக்கிறீரே
அதுகள் ஒருநாளைக்கு எம்மை விட்டுப் போய் தமக்கெண்டொரு வாழ்க்கையை தொடங்கத்தானே வேணும்." அப்பா அம்மாவைச் சமாளிக்க இப்படித்தான் சொன்னார்.
"அதுக்கு இவ்வளவு வேளைக்கே பிள்ளைக்கு பன்ரண்டு வயசாயிருக்கக்கையே பிரியோணுமோ...!" என்று அம்மா கதறினாள்.
நாட்டு நிலைமைகளைச் சுட்டிக் காட்டி ஏதேதோ கதைத்து அப்பா துளசியை யேர்மனிக்கு அனுப்பி விட்டார். அம்மாவின் சம்மதம் பற்றி அவர் அவ்வளவாக அக்கறை கொள்ளவில்லை. அவரும் தான் சொன்னால் மனைவி அதை ஆமோதிக்க வேண்டும் என்று நினைக்கும் ரகம்தான்.
அவருக்கு தனது அண்ணன் என்றால் உயிர். உலகத்திலேயே அண்ணன் தம்பி பாசம்தான் உயர்ந்தது என்பது போல கண்கள் பனிக்கப் பேசுவார்.
அந்த அப்பாவின் உயிருக்குயிரான அண்ணனான பெரியப்பாவிடம் துளசி யேர்மனிக்கு வந்த போது பெரியப்பா அவளை அன்பிலே குளிப்பாட்டினார். அம்மா, அப்பாவைப் பிரிந்து வந்த பிரிவின் துயரை அவளும் பெரியப்பாவின் அன்பிலும் அணைப்பிலும் மறக்க முயன்றாள்.
பெரியப்பா எப்போ பார்த்தாலும் தமிழரின் கலாச்சாரம் பண்பாடு.. மரபு போன்றன பற்றியே வீட்டில் பெரியம்மாவுடன் பேசிக் கொண்டிருப்பார். வீட்டில் மட்டுமல்ல வெளியிலும் எல்லோருடனும் எல்லா விடயங்களிலும் கலாச்சாரம் சம்பிரதாயம் மரபு போன்ற விடயங்களைச் சொல்லிச் சொல்லியே பழகுவதும் செயற் படுவதுமாய் இருப்பார். மானம் மரியாதை என்று நிறையவே பேசுவார்.
குடும்பமானத்துக்கு எந்தக் களங்கமும் வந்து விடக் கூடாதெனச் சொல்லி ஆண்கள் எவரும் கண்ட படி வீட்டுக்குள் நுழைவதற்கு அனுமதிக்க மாட்டார். துளசி கலாச்சாரத்திலிருந்து வழுவி விடாதிருக்க வேண்டுமென்று வலியுறுத்தி அதனைச் சாட்டாக வைத்தே அவளை எந்த ஆடவனுடனும் பழக விட மாட்டார்.
ஊரிலிருந்த சுதந்திரம் கூட புலத்தில் மறுக்கப் பட்டதில் துளசி மிகவும் சங்கடப் பட்டாள். பன்னிரண்டு பதின்மூன்று வயதுகளில் உடலில் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் ஒரு புறமும், அந்த நேரக் கனவுகள் ஆசைகள் குழந்தைத் தனம் கலையாத தன்மைகள் போன்றவற்றால் ஏற்படும் உணர்வின் மாற்றங்கள் இன்னோரு புறமுமாய் துவண்டாள். கலாச்சாரம் என்ற பெயரில் பெரியப்பா போட்ட வேலிக்குள் நண்பிகள் கூட இன்றி தனிமைப் பட்டாள்.
அவளுக்குச் சில வேளைகளில் இது அதீதமான கவனம் என்பது போலவே படும். இருந்தாலும் அவள் அப்பாவின் பிரியத்துக்குரிய பெரியப்பாவின் சொல்லுக்கு எதிர்த்துப் பேசுவதோ மறுத்துப் பேசுவதோ கிடையாது. அவர் வகுத்த கோட்டிலேயே வாழ்ந்தாள். பன்னிரண்டு வயதில்தானே யேர்மனிக்கு வந்தவள் என்பதால் யேர்மனியில் பிறந்து வளர்ந்த தாயகத்துப் பிள்ளைகளிடம் உள்ளது போன்ற தன்மைகள் அவளிடம் இல்லை. யாரிடமும் எந்தப் பிரச்சனையையும் சொல்லுமளவுக்கு துணிவும் இல்லை.
இதுவே பெரியப்பாவுக்கு சாதகமாகி விட்டது. சாதகமானது என்று சொல்வதை விட அவர் அதற்கேற்ற படிதான் அவளை இந்த ஒரு வருடமாய்ச் செப்பனிட்டார். அன்பு காட்டுவது போல நடித்து கலாச்சாரம் என்ற பெயரால் அடக்கி அடக்கி உளரீதியாக அவளைப் பயந்தாங்கொள்ளி ஆக்கி வைத்திருந்தார்.
இதிலிருந்து மீள்வதற்கான எந்த வழியும் துளசிக்குத் தெரியவில்லை. பெரியம்மா காலையில் வேலைக்குப் போனால் மாலைதான் வருவா. துளசி வீட்டில் இருப்பதால் அவளின் உதவியும் அவவுக்கு வீட்டு வேலைகளில் கிடைப்பதால் அவ சந்தோசமாகவே இருந்தா. ஐம்பது வயசு தாண்டி விட்ட பெரியப்பா பற்றி அவ அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. அவருக்கு சமைத்துச் சாப்பாடு கொடுத்து உடைகளை மெசினில் கழுவி அயர்ண் பண்ணிக் கொடுத்து, இரவுகளில் அவர் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதுடன் தன் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறா.
மேற்கொண்டு அவர் என்ன செய்கிறார் என்பது அவவுக்குத் தெரியாது. அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி பாவனை. அல்லது கலாச்சார சீலராக வாழ்பவர் போல நாடகமாடும் கணவரில் அத்தனை நம்பிக்கை. இப்படித்தான் துளசிக்கு எண்ணத் தோன்றியது.
துளசிக்கு எண்ணத்தான் தெரியுமே தவிர எண்ணியதை எடுத்தியம்பத் தெரியாது. இல்லாவிட்டால் சில வாரங்களுக்கு முன், மதியமே விடுப்பு எடுத்துக் கொண்டு வந்த பெரியப்பாவின் அன்பு போலியாகிப் போனத, அவளாகவே சென்று பெரியம்மாவிடம் சொல்லியிருப்பாள். அல்லது இன்று காலை அவளது அப்பா ரெலிபோனில் அவளை அழைத்துப் பேசிய போது அப்பாவிடமாவது சொல்லியிருப்பாள்.
துளசி அழுது அழுது ஓய்ந்து கதிரைக்குள் சுருண்டபடி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் மீண்டுமாய் புலி மானைத் துரத்துவதும், ஆட்டுக்குட்டியைத் துரத்துவதும் கடித்துக் குதறுவதுமாய் தொலைக்காட்சியில் காட்சிகள் அவலமாய் ஓடிக் கொண்டிருந்தன.
துளசியின் நினைவுகள் தொலைக்காட்சியில் நிலைப்பதுவும் வெளியில் அலைவதுமாய் அந்தரித்துக் கொண்டிருந்தது. ஏன் உலகம் இப்படி இருக்கிறது. ஒன்றையொன்று விழுங்குவதாய்.. குதறுவதாய்.. "என்ரை வகுப்பிலை படிக்கிற மற்றப் பிள்ளையளுக்கும் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ..? அiயைளின்ரை பெரியப்பாமாரும் இப்பிடித்தான் இருப்பினையோ..? ஆரோடை அவை இதையெல்லாம் கதைப்பினம்... " என்று ஏதேதோ பதில் கிடையாத குழப்பமான கேள்விகள்.. அவளைக் குடைந்து கொண்டிருந்தன.
திடீரென்று வீட்டுக்கதவு திறக்கப் பட பெரியப்பா உள்ளே நுழைந்தார். துளசிக்கு நெஞ்சு திக்கென்றது. உடல் நடுங்கிப் படபடத்தது. வழமையில் மாலையில்தான் வேலை முடித்து வீடு திரும்புவார். இன்று மதியத்தோடே விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து விட்டார். இப்படித்தான் இப்போ அடிக்கடி செய்கிறார். துளசிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்காவது ஓடி விடலாமா என்ற யோசனை எப்போதும் போல் வந்தது. எங்கே ஓடுவது? அதுதான் அவளுக்குத் தெரியாது.
இப்ப கூட எங்காவது ஓடலாமா என நினைக்கிறாளே தவிர எங்கே ஓடுவது? ஓடிப் போய் என்ன செய்வது? யாரிடம் உதவி கோருவது? என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது.
பெரியப்பா நேரே அவளிடம் வந்து அவளை அணைத்து "என்னம்மா துளசி பள்ளிக்கூடத்தாலை வந்திட்டியே.. பெரியம்மா இன்னும் வரேல்லைத்தானே..!" அணைப்பை இன்னும் இறுக்கினார். யேர்மனிக்கு வந்த காலங்களில் இந்த அணைப்பே அவளுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இப்போ.... உடம்பு கூசியது.
தொலைக்காட்சியில் மீண்டும் மான்குட்டியொன்றை ஓநாயொன்று விட்டுக் கலைத்துக் கொண்டிருந்தது. துளசியினுள் மீண்டும் பிரார்த்தனை.
"காப்பாற்று..... காப்பாற்று....." ம்.. கும்.. யார் காதிலும் அவள் பிரார்த்தனை விழவில்லை. அது பெரியப்பாவின் சிகரெட் வாசனை கலந்த அருவருப்பான இறுக்கத்துக்குள் அமிழ்ந்து கரையத் தொடங்கியது.
மான்குட்டி ஓநாயின் வாயில் கிழிபட்டு.... இழுபட்டு..........
மான்குட்டியின் கதை இன்றோடு முடிந்து விட்டது.
ஐம்பது வயது தாண்டிய பெரியப்பாவிடம் மான் குட்டியான துளசியின் கதை எங்கே போய் எப்போது முடியப் போகிறது..?
சந்திரவதனா
யேர்மனி.
மார்ச் - 2003
வெளியில் பனியை வெயில் மெதுமெதுவாகக் கரைத்துக் கொண்டிருந்த மதியப் பொழுதில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவள் - காலையில் பெரியம்மா வேலைக்குப் போக முன்னம் சமைத்து வைத்து விட்டுப் போனதை எடுத்து சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினாள்.
தொலைக்காட்சியில் பருந்து ஒன்று வட்ட மிட்டுக் கொண்டு கீழே எதையோ குறிவைத்து வந்து கொண்டிருந்தது. திக்கென்ற மனதுடன் அவள் பார்த்துக் கொண்டிருக்கவே பருந்தின் வருகையை உணர்ந்த மான்குட்டியொன்று எங்கே ஓடுவது என்று தெரியாது காதை உயர்த்தி விரித்துத் தடமடித்து தாயைத் தேடி.. ஓட விளைந்து..... இப்போ அவளுக்கு தானே மான்குட்டியானது போன்றதொரு பிரமை. பச்சாபத்தாபமான உணர்வு... பயம்... நடுக்கம்... ஒடுங்கி ஒடுங்கி நடுங்கினாள்.
இப்போதெல்லாம் இப்படியானதொரு அவஸ்தை அவளை வாட்டிக் கொண்டே இருக்கிறது. எதைப் பார்த்தாலும் எந்த அவலமானாலும் அதை தனதாக்கி தானே அதுவாகிய கற்பனையில் துடிப்பதும் துவளுவதுமாய்..........
மான்குட்டி தன் உயிர் காக்க பாய்ந்து பாய்ந்து தாவித் தாவி ஓடத் தொடங்கியிருந்தது. துளசி இறைவனை மன்றாடினாள். காப்பாற்று.. காப்பாற்று.. மன்றாட்டம் அவன் காதில் விழவில்லையோ...? அல்லது விழுவதற்கு முன் பருந்து முந்தி விட்டதோ...! அவக்கென மான்குட்டியின் மேல் விழுந்து கவ்விக் கொண்டு மேலெழுந்தது.
இப்போது துளசியின் பிரார்த்தனை - பருந்து தவறி வாயைத் திறக்கோணும்..! மான் குட்டி கீழே விழுந்து தப்பி விடோணும்..! என்றிருந்தது. ஆனால் பருந்து இது விடயத்தில் வலு கவனம். வைத்த குறியை தப்ப விட்டோ
எடுத்த இரையை சுவைக்காமல் விட்டோ அதற்குப் பழக்கமில்லை.
அது இன்னும் இன்னும் மான்குட்டியை தனக்குள் இறுக்கிக் கொண்டது.
அவளுக்கு அழுகையாய் வந்து விட்டது. விக்கி விக்கி அழத் தொடங்கினாள்: மான்குட்டிக்காக அழுகிறாளா..? அல்லது தனக்காக அழுகிறாளா..? அவளுக்கே தெரியவில்லை.
இன்று காலை அவளது அப்பா ரெலிபோனில் அவளை அழைத்து "துளசி எப்படியம்மா இருக்கிறாய்..?" என்று நெகிழ்ந்து நாத்தழுதழுக்கப் கேட்ட போது எல்லாவற்றையும் சொல்லி விடலாமா என்றுதான் யோசித்தாள். எப்படிச் சொல்வது என்று தெரியாத தடுமாற்றமும், அப்பா பாவம்... பருத்தித்துறையிலிருந்து தன்னோடு பேச என்று எவ்வளவு கஸ்டப் பட்டு வவுனியா வரை வந்திருப்பார் என்ற அனுதாபம் கலந்த எண்ணமும் அவளைப் பேச விடாது தடுத்து விட்டன.
துளசி யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து கிட்டத் தட்ட ஒரு வருடமாகிறது. அவளாக விரும்பி அவள் புலம் பெயரவில்லை.
நிறைந்த நம்பிக்கையோடும் அவளது எதிர் காலம் பற்றிய கனவுகளோடும்
"பிள்ளை என்னாலை உன்னை இங்கை வைச்சுக் காப்பாத்தேலாது. ஆமியின்ரை கொலை வெறி ஒரு புறம். காமவெறி மறுபுறம். இதுகளுக்கை பொம்பிளைப் பிள்ளை உன்னை யேர்மனிக்கு அனுப்ப வசதி இருந்தும் அனுப்பாமல் வைச்சிருக்கிறது பிழையெண்டுதான் எனக்குப் படுது."
என்று சொல்லி அப்பாதான் அவளை யேர்மனிக்குப் புலம் பெயர வைத்தார்.
அம்மாவுக்கு அவளைத் தன்னந்தனியாக அனுப்ப துளியும் இஸ்டமில்லை.
அப்பாவோ "உம்மடை கண்மூடித் தனமான பாசத்துக்கு அவளை இங்கை வைச்சுப் பலி குடுக்கப் போறீரே...!" என்று கோபமாகக் கத்தி அம்மாவைப் பேசி விட்டார். அப்பாவின் முழு நம்பிக்கையும் பெண்பிள்ளையே இல்லாத யேர்மனியில் வாழும் அவரது அண்ணன் அவளைச் சொந்தப் பிள்ளை போல வைத்துப் பார்ப்பார் என்பதுதான்.
அம்மாவுக்குப் பயம் - கதைகளிலும் படங்களிலும் வருவது போல் பெரியம்மா அவளைக் கொடுமைப் படுத்தி விடுவாவோ என்று. அதற்கு மேலால் அம்மாவுக்கு துளசியைப் பிரிய விருப்பமே இல்லை. பிரிவுத்துயரை தாங்கும் தைரியம் தனக்கில்லை என்றே அம்மா அழுதாள்.
"பிள்ளையள் எப்பவும் உம்மோடைதான் இருக்குங்கள் என்று நினைக்கிறீரே
அதுகள் ஒருநாளைக்கு எம்மை விட்டுப் போய் தமக்கெண்டொரு வாழ்க்கையை தொடங்கத்தானே வேணும்." அப்பா அம்மாவைச் சமாளிக்க இப்படித்தான் சொன்னார்.
"அதுக்கு இவ்வளவு வேளைக்கே பிள்ளைக்கு பன்ரண்டு வயசாயிருக்கக்கையே பிரியோணுமோ...!" என்று அம்மா கதறினாள்.
நாட்டு நிலைமைகளைச் சுட்டிக் காட்டி ஏதேதோ கதைத்து அப்பா துளசியை யேர்மனிக்கு அனுப்பி விட்டார். அம்மாவின் சம்மதம் பற்றி அவர் அவ்வளவாக அக்கறை கொள்ளவில்லை. அவரும் தான் சொன்னால் மனைவி அதை ஆமோதிக்க வேண்டும் என்று நினைக்கும் ரகம்தான்.
அவருக்கு தனது அண்ணன் என்றால் உயிர். உலகத்திலேயே அண்ணன் தம்பி பாசம்தான் உயர்ந்தது என்பது போல கண்கள் பனிக்கப் பேசுவார்.
அந்த அப்பாவின் உயிருக்குயிரான அண்ணனான பெரியப்பாவிடம் துளசி யேர்மனிக்கு வந்த போது பெரியப்பா அவளை அன்பிலே குளிப்பாட்டினார். அம்மா, அப்பாவைப் பிரிந்து வந்த பிரிவின் துயரை அவளும் பெரியப்பாவின் அன்பிலும் அணைப்பிலும் மறக்க முயன்றாள்.
பெரியப்பா எப்போ பார்த்தாலும் தமிழரின் கலாச்சாரம் பண்பாடு.. மரபு போன்றன பற்றியே வீட்டில் பெரியம்மாவுடன் பேசிக் கொண்டிருப்பார். வீட்டில் மட்டுமல்ல வெளியிலும் எல்லோருடனும் எல்லா விடயங்களிலும் கலாச்சாரம் சம்பிரதாயம் மரபு போன்ற விடயங்களைச் சொல்லிச் சொல்லியே பழகுவதும் செயற் படுவதுமாய் இருப்பார். மானம் மரியாதை என்று நிறையவே பேசுவார்.
குடும்பமானத்துக்கு எந்தக் களங்கமும் வந்து விடக் கூடாதெனச் சொல்லி ஆண்கள் எவரும் கண்ட படி வீட்டுக்குள் நுழைவதற்கு அனுமதிக்க மாட்டார். துளசி கலாச்சாரத்திலிருந்து வழுவி விடாதிருக்க வேண்டுமென்று வலியுறுத்தி அதனைச் சாட்டாக வைத்தே அவளை எந்த ஆடவனுடனும் பழக விட மாட்டார்.
ஊரிலிருந்த சுதந்திரம் கூட புலத்தில் மறுக்கப் பட்டதில் துளசி மிகவும் சங்கடப் பட்டாள். பன்னிரண்டு பதின்மூன்று வயதுகளில் உடலில் ஏற்படும் இயல்பான மாற்றங்கள் ஒரு புறமும், அந்த நேரக் கனவுகள் ஆசைகள் குழந்தைத் தனம் கலையாத தன்மைகள் போன்றவற்றால் ஏற்படும் உணர்வின் மாற்றங்கள் இன்னோரு புறமுமாய் துவண்டாள். கலாச்சாரம் என்ற பெயரில் பெரியப்பா போட்ட வேலிக்குள் நண்பிகள் கூட இன்றி தனிமைப் பட்டாள்.
அவளுக்குச் சில வேளைகளில் இது அதீதமான கவனம் என்பது போலவே படும். இருந்தாலும் அவள் அப்பாவின் பிரியத்துக்குரிய பெரியப்பாவின் சொல்லுக்கு எதிர்த்துப் பேசுவதோ மறுத்துப் பேசுவதோ கிடையாது. அவர் வகுத்த கோட்டிலேயே வாழ்ந்தாள். பன்னிரண்டு வயதில்தானே யேர்மனிக்கு வந்தவள் என்பதால் யேர்மனியில் பிறந்து வளர்ந்த தாயகத்துப் பிள்ளைகளிடம் உள்ளது போன்ற தன்மைகள் அவளிடம் இல்லை. யாரிடமும் எந்தப் பிரச்சனையையும் சொல்லுமளவுக்கு துணிவும் இல்லை.
இதுவே பெரியப்பாவுக்கு சாதகமாகி விட்டது. சாதகமானது என்று சொல்வதை விட அவர் அதற்கேற்ற படிதான் அவளை இந்த ஒரு வருடமாய்ச் செப்பனிட்டார். அன்பு காட்டுவது போல நடித்து கலாச்சாரம் என்ற பெயரால் அடக்கி அடக்கி உளரீதியாக அவளைப் பயந்தாங்கொள்ளி ஆக்கி வைத்திருந்தார்.
இதிலிருந்து மீள்வதற்கான எந்த வழியும் துளசிக்குத் தெரியவில்லை. பெரியம்மா காலையில் வேலைக்குப் போனால் மாலைதான் வருவா. துளசி வீட்டில் இருப்பதால் அவளின் உதவியும் அவவுக்கு வீட்டு வேலைகளில் கிடைப்பதால் அவ சந்தோசமாகவே இருந்தா. ஐம்பது வயசு தாண்டி விட்ட பெரியப்பா பற்றி அவ அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. அவருக்கு சமைத்துச் சாப்பாடு கொடுத்து உடைகளை மெசினில் கழுவி அயர்ண் பண்ணிக் கொடுத்து, இரவுகளில் அவர் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதுடன் தன் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறா.
மேற்கொண்டு அவர் என்ன செய்கிறார் என்பது அவவுக்குத் தெரியாது. அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி பாவனை. அல்லது கலாச்சார சீலராக வாழ்பவர் போல நாடகமாடும் கணவரில் அத்தனை நம்பிக்கை. இப்படித்தான் துளசிக்கு எண்ணத் தோன்றியது.
துளசிக்கு எண்ணத்தான் தெரியுமே தவிர எண்ணியதை எடுத்தியம்பத் தெரியாது. இல்லாவிட்டால் சில வாரங்களுக்கு முன், மதியமே விடுப்பு எடுத்துக் கொண்டு வந்த பெரியப்பாவின் அன்பு போலியாகிப் போனத, அவளாகவே சென்று பெரியம்மாவிடம் சொல்லியிருப்பாள். அல்லது இன்று காலை அவளது அப்பா ரெலிபோனில் அவளை அழைத்துப் பேசிய போது அப்பாவிடமாவது சொல்லியிருப்பாள்.
துளசி அழுது அழுது ஓய்ந்து கதிரைக்குள் சுருண்டபடி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் மீண்டுமாய் புலி மானைத் துரத்துவதும், ஆட்டுக்குட்டியைத் துரத்துவதும் கடித்துக் குதறுவதுமாய் தொலைக்காட்சியில் காட்சிகள் அவலமாய் ஓடிக் கொண்டிருந்தன.
துளசியின் நினைவுகள் தொலைக்காட்சியில் நிலைப்பதுவும் வெளியில் அலைவதுமாய் அந்தரித்துக் கொண்டிருந்தது. ஏன் உலகம் இப்படி இருக்கிறது. ஒன்றையொன்று விழுங்குவதாய்.. குதறுவதாய்.. "என்ரை வகுப்பிலை படிக்கிற மற்றப் பிள்ளையளுக்கும் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ..? அiயைளின்ரை பெரியப்பாமாரும் இப்பிடித்தான் இருப்பினையோ..? ஆரோடை அவை இதையெல்லாம் கதைப்பினம்... " என்று ஏதேதோ பதில் கிடையாத குழப்பமான கேள்விகள்.. அவளைக் குடைந்து கொண்டிருந்தன.
திடீரென்று வீட்டுக்கதவு திறக்கப் பட பெரியப்பா உள்ளே நுழைந்தார். துளசிக்கு நெஞ்சு திக்கென்றது. உடல் நடுங்கிப் படபடத்தது. வழமையில் மாலையில்தான் வேலை முடித்து வீடு திரும்புவார். இன்று மதியத்தோடே விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து விட்டார். இப்படித்தான் இப்போ அடிக்கடி செய்கிறார். துளசிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்காவது ஓடி விடலாமா என்ற யோசனை எப்போதும் போல் வந்தது. எங்கே ஓடுவது? அதுதான் அவளுக்குத் தெரியாது.
இப்ப கூட எங்காவது ஓடலாமா என நினைக்கிறாளே தவிர எங்கே ஓடுவது? ஓடிப் போய் என்ன செய்வது? யாரிடம் உதவி கோருவது? என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது.
பெரியப்பா நேரே அவளிடம் வந்து அவளை அணைத்து "என்னம்மா துளசி பள்ளிக்கூடத்தாலை வந்திட்டியே.. பெரியம்மா இன்னும் வரேல்லைத்தானே..!" அணைப்பை இன்னும் இறுக்கினார். யேர்மனிக்கு வந்த காலங்களில் இந்த அணைப்பே அவளுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இப்போ.... உடம்பு கூசியது.
தொலைக்காட்சியில் மீண்டும் மான்குட்டியொன்றை ஓநாயொன்று விட்டுக் கலைத்துக் கொண்டிருந்தது. துளசியினுள் மீண்டும் பிரார்த்தனை.
"காப்பாற்று..... காப்பாற்று....." ம்.. கும்.. யார் காதிலும் அவள் பிரார்த்தனை விழவில்லை. அது பெரியப்பாவின் சிகரெட் வாசனை கலந்த அருவருப்பான இறுக்கத்துக்குள் அமிழ்ந்து கரையத் தொடங்கியது.
மான்குட்டி ஓநாயின் வாயில் கிழிபட்டு.... இழுபட்டு..........
மான்குட்டியின் கதை இன்றோடு முடிந்து விட்டது.
ஐம்பது வயது தாண்டிய பெரியப்பாவிடம் மான் குட்டியான துளசியின் கதை எங்கே போய் எப்போது முடியப் போகிறது..?
சந்திரவதனா
யேர்மனி.
மார்ச் - 2003
Tuesday, October 19, 2004
எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா?
நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கள் நாட்டில் இருப்பது போலவேதான் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். எல்லோரும் சொல்வது போல எங்கள் ஊர்க்காதல் மட்டுந்தான் ஆழமானதும், மேலைநாட்டுக் காதல் ஆழமற்றதும் என்றில்லை. ஊர்கள் வேறு படலாம். ஆனால் மனிதர்களும், மனங்களும் ஊர்களை வைத்து வேறு படுவதில்லை. அதே போலத்தான் காதலும்.
எமது நாட்டில் காதலிப்பதே உலகமகா குற்றமாகக் கருதப்பட்டு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இளையவர்களுக்கு விதிக்கப் படுகின்றன. கட்டுப்பாடுகள் அதிகமாகும் போதுதான் கட்டுமீறும் எண்ணமும், தடைகள் அதிகமாகும் போதுதான் அதைத் தாண்ட வேண்டுமென்ற தீவிரமும் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் பின் விளைவுகள் பற்றிய சிந்தனைகளெதுவுமின்றி காதலே வாழ்க்கை என்றாகிறது. எதிர்ப்புக்களை உடைத்தெறிய மனம் துணிந்து, அவசரக் கல்யாணமும் நடந்து விடுகிறது.
மேலைநாட்டுக் காதல் அப்படியில்லை. காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. ஆதலால் கள்ளமாக காதலிக்க வேண்டிய அவசியமோ, ஓடிப் போக வேண்டிய அவசியமோ இல்லை. காதல்தான் வாழ்க்கை என்றில்லாமல், அதற்காகப் போராட வேண்டிய அவசியமுமில்லாமல், காதல் ஒரு புறமும், அதை விட முக்கியமான கல்வி மறுபுறமுமாக வாழ்க்கை ஓடுகிறது. அவசரக் கல்யாணங்கள் அவசியமற்றதாகிறது.
இவைகளை வைத்துக் கொண்டு எங்கள் ஊர்க்காதல்தான் ஆழமானதென்று சொல்லி விட முடியாது. எங்கள் ஊரிலும் காதலிப்பதாக நடித்து ஏமாற்றியவர்களும் இருக்கிறார்கள். மேலை நாடுகளிலும் காதலைப் புனிதமாக நினைப்பவர்களும், ஆழமாகக் காதலிப்பவர்களும் இருக்கிறார்கள்.
அதே போலத்தான் திருமணமானவர்களும். வாழ்க்கை என்று வரும் போது, சேர்ந்து வாழ்கையில் கணவன் மனைவியருக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் அவரவர் விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத்தன்மை என்பவற்றிற்கேற்ப மனவிரிசல்களும் ஏற்படலாம். இந்த விரிசல்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுந்தான் ஏற்படும். எம்நாட்டவர்க்கு ஏற்படாதென்று சொல்லி விட முடியாது. வெளிநாட்டவர்கள் மத்தியில், மனவிரிசல்கள் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் பிரிந்து போய் விடுவதற்கு ஏதுவாக சட்டங்களும், வாழ்க்கை வசதிகளும் கை கொடுத்து விடுகின்றன. எமது நாட்டில் மனவிரிசல்கள் ஏற்பட்டாலும் பிரிந்து போய் விட முடியாத படி சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சாமாச்சாரங்கள் தடுத்து விடுகின்றன. இதனால் எங்கள் ஊர்க்காதல் ஆழமானது என்று சொல்லி விட முடியாது.
அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள். அதற்காக அந்த ஐரோப்பியப் பெண்கள் காதல் தோல்வி என்று சொல்லி எமது ஊர்ப் பெண்களைப் போல தற்கொலை வரை செல்வதில்லை. தமக்கென இன்னொரு துணையைத் தேடத்தான் முயற்சிக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் காதல் ஆழமற்றது என்று சொல்லி விட முடியாது. அவர்கள் மனதிலிருக்கும் அந்தக் காதல் வேதனை வடுவாக மாற அவர்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சும்மா மேலோட்டமாகப் பார்த்து எங்கள் ஊர்க்காதல் ஆழமானதென்று சொல்லி விட முடியாது.
முதலாவதாகக் கட்டுப்பாடுகளும், தடைகளுமே எங்கள் ஊர்க்காதலை தீவிரமாக்குகின்றன. இரண்டாவதாக சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சமாச்சாரங்கள் எங்கள் காதல் ஆழமானதென்று பொய் சொல்ல வைக்கின்றன. அதற்காக எமது காதலெல்லாம் பொய் என்று சொல்ல வரவில்லை. ஆழமான காதலுடன் வாழும் எம்மவர்கள் போலவே ஆழமான காதலுடன் வாழும் வெளிநாட்டவரும் இருக்கிறார்கள். காதல் எல்லோருக்கும் பொதுவானது. நாட்டை வைத்து அது மாறாது.
எமது நாட்டில் காதலிப்பதே உலகமகா குற்றமாகக் கருதப்பட்டு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இளையவர்களுக்கு விதிக்கப் படுகின்றன. கட்டுப்பாடுகள் அதிகமாகும் போதுதான் கட்டுமீறும் எண்ணமும், தடைகள் அதிகமாகும் போதுதான் அதைத் தாண்ட வேண்டுமென்ற தீவிரமும் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் பின் விளைவுகள் பற்றிய சிந்தனைகளெதுவுமின்றி காதலே வாழ்க்கை என்றாகிறது. எதிர்ப்புக்களை உடைத்தெறிய மனம் துணிந்து, அவசரக் கல்யாணமும் நடந்து விடுகிறது.
மேலைநாட்டுக் காதல் அப்படியில்லை. காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. ஆதலால் கள்ளமாக காதலிக்க வேண்டிய அவசியமோ, ஓடிப் போக வேண்டிய அவசியமோ இல்லை. காதல்தான் வாழ்க்கை என்றில்லாமல், அதற்காகப் போராட வேண்டிய அவசியமுமில்லாமல், காதல் ஒரு புறமும், அதை விட முக்கியமான கல்வி மறுபுறமுமாக வாழ்க்கை ஓடுகிறது. அவசரக் கல்யாணங்கள் அவசியமற்றதாகிறது.
இவைகளை வைத்துக் கொண்டு எங்கள் ஊர்க்காதல்தான் ஆழமானதென்று சொல்லி விட முடியாது. எங்கள் ஊரிலும் காதலிப்பதாக நடித்து ஏமாற்றியவர்களும் இருக்கிறார்கள். மேலை நாடுகளிலும் காதலைப் புனிதமாக நினைப்பவர்களும், ஆழமாகக் காதலிப்பவர்களும் இருக்கிறார்கள்.
அதே போலத்தான் திருமணமானவர்களும். வாழ்க்கை என்று வரும் போது, சேர்ந்து வாழ்கையில் கணவன் மனைவியருக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் அவரவர் விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத்தன்மை என்பவற்றிற்கேற்ப மனவிரிசல்களும் ஏற்படலாம். இந்த விரிசல்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுந்தான் ஏற்படும். எம்நாட்டவர்க்கு ஏற்படாதென்று சொல்லி விட முடியாது. வெளிநாட்டவர்கள் மத்தியில், மனவிரிசல்கள் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் பிரிந்து போய் விடுவதற்கு ஏதுவாக சட்டங்களும், வாழ்க்கை வசதிகளும் கை கொடுத்து விடுகின்றன. எமது நாட்டில் மனவிரிசல்கள் ஏற்பட்டாலும் பிரிந்து போய் விட முடியாத படி சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சாமாச்சாரங்கள் தடுத்து விடுகின்றன. இதனால் எங்கள் ஊர்க்காதல் ஆழமானது என்று சொல்லி விட முடியாது.
அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள். அதற்காக அந்த ஐரோப்பியப் பெண்கள் காதல் தோல்வி என்று சொல்லி எமது ஊர்ப் பெண்களைப் போல தற்கொலை வரை செல்வதில்லை. தமக்கென இன்னொரு துணையைத் தேடத்தான் முயற்சிக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் காதல் ஆழமற்றது என்று சொல்லி விட முடியாது. அவர்கள் மனதிலிருக்கும் அந்தக் காதல் வேதனை வடுவாக மாற அவர்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சும்மா மேலோட்டமாகப் பார்த்து எங்கள் ஊர்க்காதல் ஆழமானதென்று சொல்லி விட முடியாது.
முதலாவதாகக் கட்டுப்பாடுகளும், தடைகளுமே எங்கள் ஊர்க்காதலை தீவிரமாக்குகின்றன. இரண்டாவதாக சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சமாச்சாரங்கள் எங்கள் காதல் ஆழமானதென்று பொய் சொல்ல வைக்கின்றன. அதற்காக எமது காதலெல்லாம் பொய் என்று சொல்ல வரவில்லை. ஆழமான காதலுடன் வாழும் எம்மவர்கள் போலவே ஆழமான காதலுடன் வாழும் வெளிநாட்டவரும் இருக்கிறார்கள். காதல் எல்லோருக்கும் பொதுவானது. நாட்டை வைத்து அது மாறாது.
விருந்தாளிகள்
புலம்(பல்)
தொலைபேசி கிணுகிணுக்கிறது.
ஆரது இந்த நேரம்...? ஞாயிறும் அதுவுமா...?
நல்ல வெயில் எறிக்குது. உடுப்புகளை விரிச்சு முடிச்சுப் போடுவம் எண்டு பார்த்தன். முணுமுணுத்தபடி தயங்கிய மனதுடன்தான் பல்கணியிலிருந்து ஓடி வந்து செண்பகக்கா தொலைபேசியை எடுத்தா.
"வணக்கம் அக்கா! அண்ணை நிற்கிறாரோ?"
இல்லை. அவர் வெளியிலை போட்டார். நீங்கள்...?"
"நான் அக்கா ரவி. அவரோடை முந்தி லாகரிலை இருந்தனான். அவருக்கு என்னைத் தெரியும்."
"எந்த லாகரிலை...?"
"அது வந்து... வங்கன் லாகர்.... தெரியுமோ அக்கா?"
ம்.. இந்த மனுசன் சொன்னதுதான். நான் வரமுந்தி ஏதோ ஒரு.. லாகரிலை இருந்ததெண்டு. அது எந்தக் காலம்..! இப்ப அதையேன் இவன் புதுப்பிக்கிறான்..! இதைச் சாட்டிக் கொண்டு இப்ப ஏதும் கலியாணவீடு, சாமத்தியவீடு எண்டு சொல்லி, செலவு வைக்கப் பண்ணப் போறானோ.. என்னவோ...?
"எப்ப 1985 இலை ஒண்டா இருந்தனிங்களோ..? "
"ஓமக்கா. பியர்கேஸ் ரவி எண்டு சொல்லியிருப்பார்."
"அட நீங்கள்தான் சோசல் காசிலை பியர் வாங்கி வைச்சிட்டு 1 மார்க்குக்கு வித்த ஆளோ..? இப்ப விளங்குது."
"ஹி..ஹி...ஹி.. எல்லாம் அப்பச் சொல்லியிருக்கிறார். "
"அது சரி இப்ப என்ன விசயமா அடிச்சனிங்கள்..? என்னேம் விசேசமோ..?"
"நான் சுவிசுக்குப் போட்டு வாற வழியிலை அண்ணையையும் ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான்."
என்னடா.. இது? 19வருசம் கழிச்சு அண்ணையின்ரை நினைவு இவனுக்கு வந்திருக்கு. இவனைக் காணேல்லையெண்டுதான் அண்ணை அழுது கொண்டிருக்கிறாராக்கும்.
" என்னக்கா சத்தத்தைக் காணேல்லை. கண்டு கனகாலமாப் போச்சு. அதுதான் வந்தனாங்கள்."
அதென்ன.. வந்த.. னாங்கள். கன ஆக்களோ..!
செண்பகக்காவுக்கு சமையல் சாப்பாடு என்று நினைவில் வந்து பயமுறுத்தியது. எப்படியாவது வெட்டி விட்டிடோணும் என்று நினைத்துக் கொண்டா.
"அவர் தம்பி வீட்டிலை இல்லை. வெளியிலை போட்டார். நீங்கள் பிறகொரு நாளைக்கு வாங்கோவன்."
"பிறகெப்ப அக்கா வாறது. இவ்வளவு தூரம் வந்திட்டம்?"
விடமாட்டான் போலையிருக்கு.
"எவ்வளவு தூரம் வந்திருக்கிறியள்..? ஆரார் வந்திருக்கிறியள்?"
"என்னோடை இன்னும் நாலுபேர். இங்கை உங்கடை இடத்திலைதான் ஒரு பெற்றொல் ஸ்டேசனிலை நிற்கிறம்."
அடப்பாவிகளா..?வெட்டவே ஏலாதோ..?
"சரியப்ப வாங்கோவன்"
"அங்காலை வர வழி தெரியேல்லையக்கா. அதுதான்..!"
தெரிஞ்சிருந்தால் வீட்டு வாசலிலையே வந்து பெல் அடிச்சிருப்பாங்கள் போலை இருக்கு.
"உப்பிடியே நேரே வந்து இரண்டாவது திருப்பத்திலை இடது பக்கம் திரும்பினிங்கள் எண்டால் எங்கடை றோட்டுத்தான். 3ம் நம்பர் வீடு."
செண்பகக்கா அவசரமாக ரசேந்திரண்ணையின்ரை தொலைபேசிக்கு அழைப்பு விடுக்க..
"ஆரது..? நானில்லாத நேரம் வீட்டை வரச்சொன்னனீரோ..?" எண்டு ஒரு தரம் சினந்து..
"ஓமப்பா அவன் என்னோடை லாகரிலை இருந்தவன்தான் வாறன்.. நான் உடனை வாறன்" என்று அவர் அமைதியாக..
அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து பெல் அடிக்க சரியாக இருந்தது.
செண்பகக்காவுக்குப் பயங்கர எரிச்சல். அழையா விருந்தாளிகளை அப்போது அவ துளியும் எதிர்பார்க்கவில்லை. உடுப்புகளை விரித்துப் போட்டு வந்து ஆறுதலாக இருக்க வேண்டுமென்றுதான் மனசுக்குள் உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தவ. எதையும் வெளியில் காட்டாமல் சிரித்துக் கொண்டு "வாங்கோ. வாங்கோ" என்று வரவேற்றா.
"இருங்கோ. அவர் வெள்ளெனவே வெளியிலை போட்டார். இப்ப வந்திடுவார். என்ன குடிக்கிறிங்கள்? தேத்தண்ணி போடட்டே..?"
"வேண்டாம் வேண்டாம். குளிரா ஏதாவது குடிக்கத் தாங்கோ. "
செண்பகக்கா குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து தோடம்பழ யூஸைக் கொண்டு வந்து வைத்து கிளாசுகளையும் கொண்டு வந்து விட..
"கோலா இல்லையோக்கா..? " பியர்கேஸ் கேட்க,
செண்பகக்கா கீழே கெலருக்குள் சென்று, கோலா எடுத்துக் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தா.
இப்ப என்ன தேவைக்கு வந்திருக்கினம் என்ற எரிச்சல் மனதுக்குள் இருந்தாலும், சும்மா ஒப்புக்கு சுகநலம் விசாரித்துக் கொண்டிருக்க, ராசேந்திரத்தாரும் வந்து விட்டார். வாயெல்லாம் பல்லாய் வந்தவர்களோடு அளக்கவும் தொடங்கி விட்டார். பியர் குடிக்க ஒரு கொம்பனி கிடைத்து விட்டதிலான புளுகம் அவர் வார்த்தைகளில் துள்ளி விளையாடியது.
"என்னப்பா பெடியளுக்கு ஏதும் சாப்பிடக் குடுமன். நாலைஞ்சு றோல்ஸ் செய்தீர் எண்டால் நல்லாயிருக்கும். " செண்பகக்கா வந்தவர்களுக்குத் தெரியாமல் அவரை ஒருதரம் முறைத்து விட்டுக் குசினிக்குள் நுழைந்தா.
"என்னடாப்பா சாப்பிட்டனிங்கள்? "
"இன்னும் ஒண்டுமில்லையண்ணை. காலைமை வெளிக்கிட்டனாங்கள். "
"சொல்லிப் போட்டு வந்திருந்தியள் எண்டால் செண்பகக்கா சமைச்செல்லோ வைச்சிருப்பா. "
"ஒரு surprice ஆ இருக்கட்டுமெண்டுதான்..."
ம்... ம்... surprice இல்லையெண்டுதான் இங்கை அழுதனாங்களாக்கும்.
றோல்ஸ் முடிய.. இடியப்பம்.. கறி.. சொதி.. பிரட்டல்.. எல்லாம் முடித்து, அவர்கள் சாப்பிட்டுப் போன பின்னும், வேலை முடியாது.. கழுவி, துடைத்து, அடுக்கி, குசினிக்கு வெளியில் வந்த போது ஞாயிறைக் காணவில்லை. பல்கணியில் அரைகுறையில் விடப்பட்ட விரிபடாத உடைகள் வெயிலில் முறுகி குளிரில் நனைந்து போயிருந்தன. விரித்த துணிகள் மீண்டும் குளிரத் தொடங்கியிருந்தன.
இவங்கள் எங்கையாவது ஒரு ரெஸ்ரோறண்டிலை சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்தானே.
செண்பகக்காவின் புலம்பல் யாருக்கும் கேட்கவில்லை. அது ராசேந்திரத்தாரின் குறட்டை சத்தத்துள் அமிழ்ந்து போனது.
சந்திரவதனா
யேர்மனி10.9.2004
பிரசுரம் - திண்ணை - 29.10.2004
தொலைபேசி கிணுகிணுக்கிறது.
ஆரது இந்த நேரம்...? ஞாயிறும் அதுவுமா...?
நல்ல வெயில் எறிக்குது. உடுப்புகளை விரிச்சு முடிச்சுப் போடுவம் எண்டு பார்த்தன். முணுமுணுத்தபடி தயங்கிய மனதுடன்தான் பல்கணியிலிருந்து ஓடி வந்து செண்பகக்கா தொலைபேசியை எடுத்தா.
"வணக்கம் அக்கா! அண்ணை நிற்கிறாரோ?"
இல்லை. அவர் வெளியிலை போட்டார். நீங்கள்...?"
"நான் அக்கா ரவி. அவரோடை முந்தி லாகரிலை இருந்தனான். அவருக்கு என்னைத் தெரியும்."
"எந்த லாகரிலை...?"
"அது வந்து... வங்கன் லாகர்.... தெரியுமோ அக்கா?"
ம்.. இந்த மனுசன் சொன்னதுதான். நான் வரமுந்தி ஏதோ ஒரு.. லாகரிலை இருந்ததெண்டு. அது எந்தக் காலம்..! இப்ப அதையேன் இவன் புதுப்பிக்கிறான்..! இதைச் சாட்டிக் கொண்டு இப்ப ஏதும் கலியாணவீடு, சாமத்தியவீடு எண்டு சொல்லி, செலவு வைக்கப் பண்ணப் போறானோ.. என்னவோ...?
"எப்ப 1985 இலை ஒண்டா இருந்தனிங்களோ..? "
"ஓமக்கா. பியர்கேஸ் ரவி எண்டு சொல்லியிருப்பார்."
"அட நீங்கள்தான் சோசல் காசிலை பியர் வாங்கி வைச்சிட்டு 1 மார்க்குக்கு வித்த ஆளோ..? இப்ப விளங்குது."
"ஹி..ஹி...ஹி.. எல்லாம் அப்பச் சொல்லியிருக்கிறார். "
"அது சரி இப்ப என்ன விசயமா அடிச்சனிங்கள்..? என்னேம் விசேசமோ..?"
"நான் சுவிசுக்குப் போட்டு வாற வழியிலை அண்ணையையும் ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான்."
என்னடா.. இது? 19வருசம் கழிச்சு அண்ணையின்ரை நினைவு இவனுக்கு வந்திருக்கு. இவனைக் காணேல்லையெண்டுதான் அண்ணை அழுது கொண்டிருக்கிறாராக்கும்.
" என்னக்கா சத்தத்தைக் காணேல்லை. கண்டு கனகாலமாப் போச்சு. அதுதான் வந்தனாங்கள்."
அதென்ன.. வந்த.. னாங்கள். கன ஆக்களோ..!
செண்பகக்காவுக்கு சமையல் சாப்பாடு என்று நினைவில் வந்து பயமுறுத்தியது. எப்படியாவது வெட்டி விட்டிடோணும் என்று நினைத்துக் கொண்டா.
"அவர் தம்பி வீட்டிலை இல்லை. வெளியிலை போட்டார். நீங்கள் பிறகொரு நாளைக்கு வாங்கோவன்."
"பிறகெப்ப அக்கா வாறது. இவ்வளவு தூரம் வந்திட்டம்?"
விடமாட்டான் போலையிருக்கு.
"எவ்வளவு தூரம் வந்திருக்கிறியள்..? ஆரார் வந்திருக்கிறியள்?"
"என்னோடை இன்னும் நாலுபேர். இங்கை உங்கடை இடத்திலைதான் ஒரு பெற்றொல் ஸ்டேசனிலை நிற்கிறம்."
அடப்பாவிகளா..?வெட்டவே ஏலாதோ..?
"சரியப்ப வாங்கோவன்"
"அங்காலை வர வழி தெரியேல்லையக்கா. அதுதான்..!"
தெரிஞ்சிருந்தால் வீட்டு வாசலிலையே வந்து பெல் அடிச்சிருப்பாங்கள் போலை இருக்கு.
"உப்பிடியே நேரே வந்து இரண்டாவது திருப்பத்திலை இடது பக்கம் திரும்பினிங்கள் எண்டால் எங்கடை றோட்டுத்தான். 3ம் நம்பர் வீடு."
செண்பகக்கா அவசரமாக ரசேந்திரண்ணையின்ரை தொலைபேசிக்கு அழைப்பு விடுக்க..
"ஆரது..? நானில்லாத நேரம் வீட்டை வரச்சொன்னனீரோ..?" எண்டு ஒரு தரம் சினந்து..
"ஓமப்பா அவன் என்னோடை லாகரிலை இருந்தவன்தான் வாறன்.. நான் உடனை வாறன்" என்று அவர் அமைதியாக..
அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து பெல் அடிக்க சரியாக இருந்தது.
செண்பகக்காவுக்குப் பயங்கர எரிச்சல். அழையா விருந்தாளிகளை அப்போது அவ துளியும் எதிர்பார்க்கவில்லை. உடுப்புகளை விரித்துப் போட்டு வந்து ஆறுதலாக இருக்க வேண்டுமென்றுதான் மனசுக்குள் உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தவ. எதையும் வெளியில் காட்டாமல் சிரித்துக் கொண்டு "வாங்கோ. வாங்கோ" என்று வரவேற்றா.
"இருங்கோ. அவர் வெள்ளெனவே வெளியிலை போட்டார். இப்ப வந்திடுவார். என்ன குடிக்கிறிங்கள்? தேத்தண்ணி போடட்டே..?"
"வேண்டாம் வேண்டாம். குளிரா ஏதாவது குடிக்கத் தாங்கோ. "
செண்பகக்கா குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து தோடம்பழ யூஸைக் கொண்டு வந்து வைத்து கிளாசுகளையும் கொண்டு வந்து விட..
"கோலா இல்லையோக்கா..? " பியர்கேஸ் கேட்க,
செண்பகக்கா கீழே கெலருக்குள் சென்று, கோலா எடுத்துக் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தா.
இப்ப என்ன தேவைக்கு வந்திருக்கினம் என்ற எரிச்சல் மனதுக்குள் இருந்தாலும், சும்மா ஒப்புக்கு சுகநலம் விசாரித்துக் கொண்டிருக்க, ராசேந்திரத்தாரும் வந்து விட்டார். வாயெல்லாம் பல்லாய் வந்தவர்களோடு அளக்கவும் தொடங்கி விட்டார். பியர் குடிக்க ஒரு கொம்பனி கிடைத்து விட்டதிலான புளுகம் அவர் வார்த்தைகளில் துள்ளி விளையாடியது.
"என்னப்பா பெடியளுக்கு ஏதும் சாப்பிடக் குடுமன். நாலைஞ்சு றோல்ஸ் செய்தீர் எண்டால் நல்லாயிருக்கும். " செண்பகக்கா வந்தவர்களுக்குத் தெரியாமல் அவரை ஒருதரம் முறைத்து விட்டுக் குசினிக்குள் நுழைந்தா.
"என்னடாப்பா சாப்பிட்டனிங்கள்? "
"இன்னும் ஒண்டுமில்லையண்ணை. காலைமை வெளிக்கிட்டனாங்கள். "
"சொல்லிப் போட்டு வந்திருந்தியள் எண்டால் செண்பகக்கா சமைச்செல்லோ வைச்சிருப்பா. "
"ஒரு surprice ஆ இருக்கட்டுமெண்டுதான்..."
ம்... ம்... surprice இல்லையெண்டுதான் இங்கை அழுதனாங்களாக்கும்.
றோல்ஸ் முடிய.. இடியப்பம்.. கறி.. சொதி.. பிரட்டல்.. எல்லாம் முடித்து, அவர்கள் சாப்பிட்டுப் போன பின்னும், வேலை முடியாது.. கழுவி, துடைத்து, அடுக்கி, குசினிக்கு வெளியில் வந்த போது ஞாயிறைக் காணவில்லை. பல்கணியில் அரைகுறையில் விடப்பட்ட விரிபடாத உடைகள் வெயிலில் முறுகி குளிரில் நனைந்து போயிருந்தன. விரித்த துணிகள் மீண்டும் குளிரத் தொடங்கியிருந்தன.
இவங்கள் எங்கையாவது ஒரு ரெஸ்ரோறண்டிலை சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்தானே.
செண்பகக்காவின் புலம்பல் யாருக்கும் கேட்கவில்லை. அது ராசேந்திரத்தாரின் குறட்டை சத்தத்துள் அமிழ்ந்து போனது.
சந்திரவதனா
யேர்மனி10.9.2004
பிரசுரம் - திண்ணை - 29.10.2004
Tuesday, October 12, 2004
ஞாயிற்றுக்கிழமை
"இஞ்சை ..........உங்கடை உந்தத் தலைக்கு Joghurtம் (யோக்கற்ம்) முட்டையும் கலந்து பூசி ஊற விட்டிட்டு, பிறகு தோய்ஞ்சிங்களெண்டால் சொடுகு போயிடுமாம்."
"ஆரப்பா உனக்குச் சொன்னது? பிறகும் ஏதும் புத்தகத்திலை வாசிச்சிட்டியே?"
"ம்.........வேறை எங்கையிருந்து எனக்குத் தெரியிறது! புத்தகத்தையும், பேப்பரையும், ரேடியோவையும் விட்டால் எனக்கு வேறை என்ன இருக்கு இங்கை!!!"
"ம்........எனக்கு மட்டும் இங்கை கனக்க இருக்காக்கும். "
"ஏன் உங்களுக்கென்ன ஏதும் அது இது எண்டு சாட்டிக்கொண்டு ஊர் சுத்தப் போடுவிங்களே!"
"உன்னை ஆரும் போவேண்டாமெண்டு சொன்னதே?"
"போவேண்டாம் எண்டு நேரடியாச் சொல்லாமல் நான் போகாத விதமா நீங்கள் நடக்கிறது எனக்கு விளங்காதெண்டு நினைக்கிறீங்களாக்கும். வேலை முடிஞ்சு வரக்கை தற்செயலா பஸ்ஸை விட்டிட்டனெண்டால் போதும். எங்கை துலைஞ்சு போனனி எண்டு எரிச்சலாக் கேப்பிங்களே! Shopping(சொப்பிங்) போயிட்டு வர, கொஞ்சம் லேற்றாப் போனால் போதும். முகத்திலை எள்ளும் கொள்ளும் வெடிக்க நிப்பிங்கள். இதெல்லாம் எனக்கு விளங்கிறேல்லை எண்டு நினைச்சிங்களோ? நீங்கள் ஊர் சுத்திப்போட்டு வர நான் வீட்டிலை இருந்து வீட்டு வேலையளைப் பாத்துக் கொண்டு நீங்கள் சொல்லிப் போட்டுப் போற வேலையளையும் செய்து கொண்டு இருக்கோணும். வந்து அதுக்கும் நொட்டையும் சொட்டையும் வேறை. எத்தினை காலத்துக்கெண்டு மனுசர் இப்பிடி வாழேலும்.நான் வேலைக்குப் போகாமலே எனக்குச் சம்பளம் வருமெண்டால் நீங்கள் எவ்வளவு சந்தோஷப் படுவியள் எண்டு எனக்குத் தெரியாதாக்கும்."
"சரியப்பா...கொஞ்சம் விட்டனெண்டால் நீ உன்ரை பல்லவியைத் தொடங்கீடுவாய்."
"இருந்து பாருங்கோவன். நானும் ஒரு நாளைக்கு............"
" இஞ்சை பார் நான் ஒண்டும் பார்க்கேல்லை..........நீ உந்தத் தேவையில்லாத கதையளை விட்டிட்டு போய்ச் சமையலைப் பார்."
"ஏன் இப்பக் கதையை மாத்திறியள்?"
"இஞ்சை பார்........ மனுசருக்குப் பசிக்குது. கதையை விட்டிட்டுப் போய் சமை."
"ஏன்.........நான் சமைக்கோணும். சாப்பிடுறது எல்லாரும்தானே...... சமைக்கிறது மட்டும் எனக்கெண்டு எங்கை எழுதி வைச்சிருக்கு?"
"ஐயோ.....ஏனப்பா கதைச்சே மனுசரைக் கொல்லுறாய்.?"
"பின்னை என்ன? நீங்கள் இருந்து TV(ரீவீ) பார்த்துக் கொண்டிருக்க நான் போய்ச் சமைக்கோணுமோ?"
"ஞாயிற்றுக் கிழமையிலையாவது மனுசரைச் சும்மா இருக்க விடன்."
"ஏன் எனக்கு மட்டும் ஞாயிற்றுக் கிழமை இல்லையோ?"
"நான் ஆம்பிளையடி!"
"ஆம்பிளையெண்டால்...............!"
சந்திரவதனா
யேர்மனி
"ஆரப்பா உனக்குச் சொன்னது? பிறகும் ஏதும் புத்தகத்திலை வாசிச்சிட்டியே?"
"ம்.........வேறை எங்கையிருந்து எனக்குத் தெரியிறது! புத்தகத்தையும், பேப்பரையும், ரேடியோவையும் விட்டால் எனக்கு வேறை என்ன இருக்கு இங்கை!!!"
"ம்........எனக்கு மட்டும் இங்கை கனக்க இருக்காக்கும். "
"ஏன் உங்களுக்கென்ன ஏதும் அது இது எண்டு சாட்டிக்கொண்டு ஊர் சுத்தப் போடுவிங்களே!"
"உன்னை ஆரும் போவேண்டாமெண்டு சொன்னதே?"
"போவேண்டாம் எண்டு நேரடியாச் சொல்லாமல் நான் போகாத விதமா நீங்கள் நடக்கிறது எனக்கு விளங்காதெண்டு நினைக்கிறீங்களாக்கும். வேலை முடிஞ்சு வரக்கை தற்செயலா பஸ்ஸை விட்டிட்டனெண்டால் போதும். எங்கை துலைஞ்சு போனனி எண்டு எரிச்சலாக் கேப்பிங்களே! Shopping(சொப்பிங்) போயிட்டு வர, கொஞ்சம் லேற்றாப் போனால் போதும். முகத்திலை எள்ளும் கொள்ளும் வெடிக்க நிப்பிங்கள். இதெல்லாம் எனக்கு விளங்கிறேல்லை எண்டு நினைச்சிங்களோ? நீங்கள் ஊர் சுத்திப்போட்டு வர நான் வீட்டிலை இருந்து வீட்டு வேலையளைப் பாத்துக் கொண்டு நீங்கள் சொல்லிப் போட்டுப் போற வேலையளையும் செய்து கொண்டு இருக்கோணும். வந்து அதுக்கும் நொட்டையும் சொட்டையும் வேறை. எத்தினை காலத்துக்கெண்டு மனுசர் இப்பிடி வாழேலும்.நான் வேலைக்குப் போகாமலே எனக்குச் சம்பளம் வருமெண்டால் நீங்கள் எவ்வளவு சந்தோஷப் படுவியள் எண்டு எனக்குத் தெரியாதாக்கும்."
"சரியப்பா...கொஞ்சம் விட்டனெண்டால் நீ உன்ரை பல்லவியைத் தொடங்கீடுவாய்."
"இருந்து பாருங்கோவன். நானும் ஒரு நாளைக்கு............"
" இஞ்சை பார் நான் ஒண்டும் பார்க்கேல்லை..........நீ உந்தத் தேவையில்லாத கதையளை விட்டிட்டு போய்ச் சமையலைப் பார்."
"ஏன் இப்பக் கதையை மாத்திறியள்?"
"இஞ்சை பார்........ மனுசருக்குப் பசிக்குது. கதையை விட்டிட்டுப் போய் சமை."
"ஏன்.........நான் சமைக்கோணும். சாப்பிடுறது எல்லாரும்தானே...... சமைக்கிறது மட்டும் எனக்கெண்டு எங்கை எழுதி வைச்சிருக்கு?"
"ஐயோ.....ஏனப்பா கதைச்சே மனுசரைக் கொல்லுறாய்.?"
"பின்னை என்ன? நீங்கள் இருந்து TV(ரீவீ) பார்த்துக் கொண்டிருக்க நான் போய்ச் சமைக்கோணுமோ?"
"ஞாயிற்றுக் கிழமையிலையாவது மனுசரைச் சும்மா இருக்க விடன்."
"ஏன் எனக்கு மட்டும் ஞாயிற்றுக் கிழமை இல்லையோ?"
"நான் ஆம்பிளையடி!"
"ஆம்பிளையெண்டால்...............!"
சந்திரவதனா
யேர்மனி
மொய்
சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாகப் பார்த்து தொலைபேசி அலறுகிறது.
"இந்தச் சனங்களுக்கு வேறை வேலையில்லை. சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாப் பார்த்துத்தான் ரெலிபோன் பண்ணுங்கள். நேற்றும் வெங்காயம் எரிஞ்சு போட்டுது." புறுபுறுத்த படி சமையலறையிலிருந்து வெளியில் வந்த செண்பகக்காவின் மனசு ஏதும் தொல்லைபேசியாக இருக்குமோ என்று தயக்கம் காட்டினாலும், கால்கள் விரைய கைகள் தொலைபேசியைத் தூக்க...
"வணக்கம் அக்கா. நான் சாந்தன் கதைக்கிறன்."
"எந்தச் சாந்தன்..? கறுத்தச் சாந்தனோ..?"
"இல்லையக்கா"
"அப்ப... எரிமலை சாந்தனோ..?
"இல்லை...யக்கா. நான் அண்டைக்கு.. மைக்டொனால்ட்ஸ் சிறீயின்ரை கலியாணவீட்டிலை உங்களோடை கதைச்சன்.."
"அட நீங்களே..? சொல்லுங்கோ தம்பி என்ன விசயம்..?"
"உங்கடை வீட்டுக்கு எப்பிடியக்கா வாறது? ஒருக்கால் வழியைச் சொல்லுவிங்களோ..?"
இவன் ஏன் இப்ப இங்கை...! சொந்தமும் இல்லை. நட்பும் இல்லை. எப்பவோ ஏதோ ஒரு கலியாண வீட்டிலை சந்திச்சது. அவ்வளவுதான். என்ரை கணவரை முந்தியே இடைக்கிடை றோட்டு வழியே கண்டு கதைச்சிருக்கிறானாம். அண்டைக்கும் கலியாண வீட்டிலை மொய் எழுதிற வரிசையிலை நிண்டு மைக்கை விழுங்கினவன் மாதிரி பெரிய சத்தமாகக் கதைச்சுக் கொண்டு நிண்டவன். எங்கடை இடத்திலையிருந்து 100கி.மீற் தள்ளியிருக்கிறான்.
"தம்பி..! என்ன விசயம்? இவ்வளவு தூரம் எங்களைத் தேடி வர..?"
"அது வந்து... மகள் சாமத்தியப் பட்டிட்டா. வாற சனிக்குத் தண்ணி வார்க்கிறம். அதுதான் கார்ட்டைக் கொண்டு வந்து நேரேயே தந்திட்டுப் போவமெண்டு....."
உந்தக் கார்ட் தாறதுக்கு பெற்றோல் செலவழிச்சு 150கி.மீற் கார் ஓடி வரப் போறிங்களே..? ஏன் தம்பி உங்களுக்கு வீண் அலைச்சல்? தபாலிலை அனுப்பி விடுங்கோ.
செண்பகக்கா ஏதோ அவன் அலைஞ்சு கஸ்டப்படுறதைப் பார்க்க தனக்கு விருப்பமில்லை என்பது போலக் கதைத்தாலும், உள்ளுக்குள் 150கி.மீற் தூரத்திலையிருந்து வாறவனைச் சும்மா அனுப்பேலுமே! சமைச்சுமெல்லோ கொடுக்கோணும்.. என்ற பயம்தான் இருந்தது.
"பிறகு நீங்கள் குறை பிடிக்க மாட்டிங்களே..?"
"இதிலை குறை பிடிக்க என்ன தம்பி இருக்குது? நான் ஒண்டும் குறை நினைக்க மாட்டன். நீங்கள் தபாலிலை அனுப்புங்கோ.
ம்.........திரும்ப இண்டைக்கும்.. அடுப்பிலை வெங்காயம் எரிஞ்சு போட்டுது. நேற்றும் இந்த மனிசன் முகத்தைக் கோணி வைச்சுக் கொண்டு சாப்பிட்டது.
சனத்துக்கு வேறை வேலையில்லை. மகள் சாமத்தியப் பட்டிட்டுதாம். மகளையே நான் ஒரு நாளும் கண்ணாலை காணேல்லை. இப்ப உதுக்குப் போய் மொய் எழுதோணுமே! சா... யேர்மனியை விட்டிட்டு பேசாமல் செட்டி நாட்டிலை போய் இருக்கலாம் போலை இருக்கு. அங்கை கலியாணத்துக்கே மொய் 25பைசாதானாம்.
சந்திரவதனா
3.8.2004
பிரசுரம் - எரிமலை (Aug-2004)
"இந்தச் சனங்களுக்கு வேறை வேலையில்லை. சமைச்சுக் கொண்டிருக்கிற நேரமாப் பார்த்துத்தான் ரெலிபோன் பண்ணுங்கள். நேற்றும் வெங்காயம் எரிஞ்சு போட்டுது." புறுபுறுத்த படி சமையலறையிலிருந்து வெளியில் வந்த செண்பகக்காவின் மனசு ஏதும் தொல்லைபேசியாக இருக்குமோ என்று தயக்கம் காட்டினாலும், கால்கள் விரைய கைகள் தொலைபேசியைத் தூக்க...
"வணக்கம் அக்கா. நான் சாந்தன் கதைக்கிறன்."
"எந்தச் சாந்தன்..? கறுத்தச் சாந்தனோ..?"
"இல்லையக்கா"
"அப்ப... எரிமலை சாந்தனோ..?
"இல்லை...யக்கா. நான் அண்டைக்கு.. மைக்டொனால்ட்ஸ் சிறீயின்ரை கலியாணவீட்டிலை உங்களோடை கதைச்சன்.."
"அட நீங்களே..? சொல்லுங்கோ தம்பி என்ன விசயம்..?"
"உங்கடை வீட்டுக்கு எப்பிடியக்கா வாறது? ஒருக்கால் வழியைச் சொல்லுவிங்களோ..?"
இவன் ஏன் இப்ப இங்கை...! சொந்தமும் இல்லை. நட்பும் இல்லை. எப்பவோ ஏதோ ஒரு கலியாண வீட்டிலை சந்திச்சது. அவ்வளவுதான். என்ரை கணவரை முந்தியே இடைக்கிடை றோட்டு வழியே கண்டு கதைச்சிருக்கிறானாம். அண்டைக்கும் கலியாண வீட்டிலை மொய் எழுதிற வரிசையிலை நிண்டு மைக்கை விழுங்கினவன் மாதிரி பெரிய சத்தமாகக் கதைச்சுக் கொண்டு நிண்டவன். எங்கடை இடத்திலையிருந்து 100கி.மீற் தள்ளியிருக்கிறான்.
"தம்பி..! என்ன விசயம்? இவ்வளவு தூரம் எங்களைத் தேடி வர..?"
"அது வந்து... மகள் சாமத்தியப் பட்டிட்டா. வாற சனிக்குத் தண்ணி வார்க்கிறம். அதுதான் கார்ட்டைக் கொண்டு வந்து நேரேயே தந்திட்டுப் போவமெண்டு....."
உந்தக் கார்ட் தாறதுக்கு பெற்றோல் செலவழிச்சு 150கி.மீற் கார் ஓடி வரப் போறிங்களே..? ஏன் தம்பி உங்களுக்கு வீண் அலைச்சல்? தபாலிலை அனுப்பி விடுங்கோ.
செண்பகக்கா ஏதோ அவன் அலைஞ்சு கஸ்டப்படுறதைப் பார்க்க தனக்கு விருப்பமில்லை என்பது போலக் கதைத்தாலும், உள்ளுக்குள் 150கி.மீற் தூரத்திலையிருந்து வாறவனைச் சும்மா அனுப்பேலுமே! சமைச்சுமெல்லோ கொடுக்கோணும்.. என்ற பயம்தான் இருந்தது.
"பிறகு நீங்கள் குறை பிடிக்க மாட்டிங்களே..?"
"இதிலை குறை பிடிக்க என்ன தம்பி இருக்குது? நான் ஒண்டும் குறை நினைக்க மாட்டன். நீங்கள் தபாலிலை அனுப்புங்கோ.
ம்.........திரும்ப இண்டைக்கும்.. அடுப்பிலை வெங்காயம் எரிஞ்சு போட்டுது. நேற்றும் இந்த மனிசன் முகத்தைக் கோணி வைச்சுக் கொண்டு சாப்பிட்டது.
சனத்துக்கு வேறை வேலையில்லை. மகள் சாமத்தியப் பட்டிட்டுதாம். மகளையே நான் ஒரு நாளும் கண்ணாலை காணேல்லை. இப்ப உதுக்குப் போய் மொய் எழுதோணுமே! சா... யேர்மனியை விட்டிட்டு பேசாமல் செட்டி நாட்டிலை போய் இருக்கலாம் போலை இருக்கு. அங்கை கலியாணத்துக்கே மொய் 25பைசாதானாம்.
சந்திரவதனா
3.8.2004
பிரசுரம் - எரிமலை (Aug-2004)
Saturday, October 02, 2004
ஒரு நினைவுப் பறவையின் சிறகு விரிப்பு..! - 3
ரோச்சைப் பிடித்து நேரத்தைப் பார்த்தேன். 3.30 மணி. இங்கு வந்த பின் இப்படித்தான் வேளைக்கே விழிப்பு வந்து விடுகிறது. இன்று இன்னும் வேளைக்கு. இயற்கையின் சலசலப்புகள்தான் என்னை அருட்டினவோ!
மெதுவாக எழுந்து மெத்தை இல்லாத மரக்கட்டிலில் முட்டுக்காலில் இருந்த படியே மரச்சட்டங்களினூடே வெளியில் பார்த்தேன். விடியலுக்கான அறிகுறியாய் இருள் விலகியும் விலகாமலும் மங்கிய பொழுது. வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனம் அமைதியாக உறங்கிக் கிடந்தது.
எனது அறைக்கு முன்னால் கேற்வாசல் மூலையோடு நிற்கும் பருத்த பெரிய ஒற்றை ஆண்பனை ஆடாமல் அசையாமல் அழகாய் கம்பீரமாய் எழுந்து நின்றது.
போரின் அனர்த்தங்களால் பொலிவிழந்து ஆங்காங்கு குழி விழுந்து வாடிப் போயிருக்கும் ஏ9 வீதியில் கடாமுடா என ஏறி இறங்கிச் செல்லும் வாகனங்கள் வீசிச் செல்லும் ஒளி வெள்ளத்தில், கேற்றுக்கு வெளியே மதிலோடு ஏ9 பாதையின் ஓரமாக நிமிர்ந்து நின்ற அறிவிப்புப் பலகையில் உள்ள வெண்புறாச் சின்னமும், வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனம், கிளிநொச்சிபிராந்தியச் செயலகம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்த வாசகங்களும் மின்னி மின்னி மறைந்தன.
நேற்று வரை மூடிய படியே கிடந்த பாழடைந்த எதிர் வீட்டில் இன்று ஒரு வகை உயிர்ப்புத் தெரிந்தது. மோட்டார் சைக்கிள் ஒன்று வாசலில் நின்றது. திறந்த கதவினூடே ஒரு பெண்ணின் அசைவுகள் தெரிந்தன. இடம் பெயர்ந்து போன வீட்டுச் சொந்தக்காரர் மீண்டுள்ளனர் என்பது புரிந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் இங்கு ஒரு கடை முளைத்திருக்கும். நான் வந்த சில நாட்களுக்குள் இந்த வீதிகளில் முளைக்கும் புதிய புதிய கடைகள் என்னை அப்படித்தான் எண்ண வைத்தன.
பக்கத்துக் கோயிலில் வேர் பரப்பி விழுது விட்டு குடை விரித்திருக்கும் அழகிய அரச மரத்தின் கிளைகள் எனது அறையின் தகரக் கூரையில் உரசும் சத்தத்தை விட, அதிகாலையிலேயே குதித்துக் கொண்டும், இறகைச் சிலுப்பிக் கொண்டும் மற்றவர்களைத் தொந்தரவு பண்ணுகிறோமே..! என்ற எந்தப் பிரக்ஞையுமின்றி தமக்கு மட்டுந்தான் இந்தப் பிரபஞ்சம் சொந்தம் என்பது போல கரைந்து கொண்டிருந்த காகங்களின் சத்தம் அதிகமாகவே இருந்தது.
இதையெல்லாவற்றையும் மீறி எங்கிருந்தோ விட்டு விட்டு ஒலித்த அந்தச் சத்தம் என்னைத் தன்பால் ஈர்த்தது. "அது வானொலியா.....!" "இந்த நேரத்தில் எந்த வானொலி......!" எனக்குள் எழுந்த கேள்விக்கு விடை தேடும் முனைப்பில்------- கேட்கும் திறனையெல்லாம் ஒன்று கூட்டி, ஒரு நிலைப் படுத்தி கூர்ந்து கவனித்தேன். அது வானொலியல்ல. ஒலி பெருக்கி.
எங்கோ தொலைவிலிருந்து காற்று அள்ளி வந்த அந்தத் துண்டுத் துண்டு வாக்கியங்களைக் கோர்த்துப் பார்த்ததில் - சிறார்களைப் பள்ளிக்கு அழைப்பது தெரிந்தது. அழியாத செல்வமாம் கல்வியைப் பற்றி குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் விளக்கும் அவசரம் தெரிந்தது. கல்வியின் மகத்துவம் விளக்கப் பட்டது. எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வராமல் இருந்து விடக் கூடாது என்ற கரிசனம் தெரிந்தது. தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் ருNஐஊநுகு நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிராமிய கல்வி பொருளாதார நிறுவனம் நடைமுறைப் படுத்தும் அந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாது பயன் படுத்தி விட வேண்டுமென்ற அக்கறை தெரிந்தது.
இந்த அக்கறை, மனிதம் மீதான இந்தக் கரிசனம் வன்னிக்குள் எங்கும் ஒட்டியிருந்தது. சிதைக்கப் பட்ட ஒரு பூமியில் நம்பிக்கை விதை நல்ணெண்ணத்தோடு விதைக்கப் பட்டு செழிப்போடு வளர்ந்திருந்தது. அந்த நிர்வாகத்திறன் என்னை வியக்க வைத்தது.
கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி வன்னிமண் செப்பனிடப்பட்டிருந்தது. நான் நினைக்கிறேன் இலங்கையிலேயே கூடுதலான அங்கவீனர்கள் வன்னியில்தான் இருக்கிறார்கள் என்று. ஆனால் வன்னி அவர்களை வீதியில் வீசி எறியாமல் தன்னோடு அணைத்து வைத்திருந்தது. ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்தது.
இந்த மனிதத்தனம், இந்த மனிதநேயம், மக்களோடான இந்த நட்பு, மக்களின் எதிர் காலத்தின் மீதான இந்த அக்கறை இவைதான் என்னுள் சந்தோசப் பிரவாகத்தையும் அளவிலாப் பிரமிப்பையும் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தன. போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பது தெரிந்தது.
தாயக விடுதலைக்காய் தோள் கொடுத்த, கால் கொடுத்த, கை கொடுத்த.... போராளிப் பிள்ளைகளைச் சந்திக்கும் போதெல்லாம் வன்னியின் இப்படியான நடப்புக்கள் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் ஆச்சரியம் பற்றிப் பேசினேன். அதனால் ஏற்பட்டிருக்கும் இன்பத் திணறல் பற்றிப் பேசினேன். இவையெல்லாவற்றையும் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன் மிக்க அண்ணனைப் பற்றிப் பேசினேன்.
"அண்ணன்" அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.
வாய்க்கு வாய் "அண்ணை" என்றும் "அண்ணன்" என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம் - ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து தளிர்த்து சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. "நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்." எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.
நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், அது எனது ஆசை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளாதபடி, பொதுவாகக் கேட்பது போல் "அண்ணனை யாருக்காவது சந்திக்கும் வாய்ப்பிருக்கா..?" என்று கேட்டுப் பார்த்தேன்.
எல்லோரிடமிருந்தும் "அண்ணன் இப்ப பிஸியாக இருக்கிறார். முடியாது." என்ற பதில்கள்தான் வந்தன. "எத்தனையோ பேர் வந்து காத்திருந்து விட்டுப் போய் விட்டார்கள்." என்றும் சொன்னார்கள். அந்தப் பதில்களில் நான் சற்று ஏமாற்றத்தையடைந்தாலும் எனக்குள் விசுவரூபம் எடுத்த அந்த ஆசையை என்னால் வீசி எறிய முடியவில்லை.
என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காக தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு பேச வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.
"என்ன...! வெளியிலை ஆரும் நிக்கினமே...? விடிஞ்சிட்டே..? "
அருகில் ஆழ்ந்து தூங்கியிருந்த எனது கணவரின் விழிப்போடு வந்த கேள்வியில் நான் நினைவுச் சிறகுகள் அறுபட்டு தொப்பென்று மீண்டும் மரக்கட்டிலில் வீழ்ந்தேன்.
"இல்லை. ஒருத்தரும் இல்லை. எனக்கு மூண்டு மணிக்கே நித்திரை போட்டு."
சொல்லி விட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு நித்திரை வரவில்லை. மனசு இறக்கை கட்டிக் கொண்டு சிலிர்ப்பு, தவிப்பு, துடிப்பு..... என்று பல்வேறு உணர்வுகளுடன் எங்கெல்லாமோ அலைந்தது. இடையிடையே "அண்ணையை எப்படிச் சந்திக்கலாம்! அவர் என்னைச் சந்திக்கச் சம்மதிப்பாரா..?" என்ற கேள்விகளுடன் வெண்புறாவுக்குள் வந்து மரக்கட்டிலில் விழுந்தது.
சந்திரவதனா
யேர்மனி.
(நினைவுப்பறவை மீண்டும் தன் சிறகை விரிக்கும்)
மெதுவாக எழுந்து மெத்தை இல்லாத மரக்கட்டிலில் முட்டுக்காலில் இருந்த படியே மரச்சட்டங்களினூடே வெளியில் பார்த்தேன். விடியலுக்கான அறிகுறியாய் இருள் விலகியும் விலகாமலும் மங்கிய பொழுது. வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனம் அமைதியாக உறங்கிக் கிடந்தது.
எனது அறைக்கு முன்னால் கேற்வாசல் மூலையோடு நிற்கும் பருத்த பெரிய ஒற்றை ஆண்பனை ஆடாமல் அசையாமல் அழகாய் கம்பீரமாய் எழுந்து நின்றது.
போரின் அனர்த்தங்களால் பொலிவிழந்து ஆங்காங்கு குழி விழுந்து வாடிப் போயிருக்கும் ஏ9 வீதியில் கடாமுடா என ஏறி இறங்கிச் செல்லும் வாகனங்கள் வீசிச் செல்லும் ஒளி வெள்ளத்தில், கேற்றுக்கு வெளியே மதிலோடு ஏ9 பாதையின் ஓரமாக நிமிர்ந்து நின்ற அறிவிப்புப் பலகையில் உள்ள வெண்புறாச் சின்னமும், வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனம், கிளிநொச்சிபிராந்தியச் செயலகம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்த வாசகங்களும் மின்னி மின்னி மறைந்தன.
நேற்று வரை மூடிய படியே கிடந்த பாழடைந்த எதிர் வீட்டில் இன்று ஒரு வகை உயிர்ப்புத் தெரிந்தது. மோட்டார் சைக்கிள் ஒன்று வாசலில் நின்றது. திறந்த கதவினூடே ஒரு பெண்ணின் அசைவுகள் தெரிந்தன. இடம் பெயர்ந்து போன வீட்டுச் சொந்தக்காரர் மீண்டுள்ளனர் என்பது புரிந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் இங்கு ஒரு கடை முளைத்திருக்கும். நான் வந்த சில நாட்களுக்குள் இந்த வீதிகளில் முளைக்கும் புதிய புதிய கடைகள் என்னை அப்படித்தான் எண்ண வைத்தன.
பக்கத்துக் கோயிலில் வேர் பரப்பி விழுது விட்டு குடை விரித்திருக்கும் அழகிய அரச மரத்தின் கிளைகள் எனது அறையின் தகரக் கூரையில் உரசும் சத்தத்தை விட, அதிகாலையிலேயே குதித்துக் கொண்டும், இறகைச் சிலுப்பிக் கொண்டும் மற்றவர்களைத் தொந்தரவு பண்ணுகிறோமே..! என்ற எந்தப் பிரக்ஞையுமின்றி தமக்கு மட்டுந்தான் இந்தப் பிரபஞ்சம் சொந்தம் என்பது போல கரைந்து கொண்டிருந்த காகங்களின் சத்தம் அதிகமாகவே இருந்தது.
இதையெல்லாவற்றையும் மீறி எங்கிருந்தோ விட்டு விட்டு ஒலித்த அந்தச் சத்தம் என்னைத் தன்பால் ஈர்த்தது. "அது வானொலியா.....!" "இந்த நேரத்தில் எந்த வானொலி......!" எனக்குள் எழுந்த கேள்விக்கு விடை தேடும் முனைப்பில்------- கேட்கும் திறனையெல்லாம் ஒன்று கூட்டி, ஒரு நிலைப் படுத்தி கூர்ந்து கவனித்தேன். அது வானொலியல்ல. ஒலி பெருக்கி.
எங்கோ தொலைவிலிருந்து காற்று அள்ளி வந்த அந்தத் துண்டுத் துண்டு வாக்கியங்களைக் கோர்த்துப் பார்த்ததில் - சிறார்களைப் பள்ளிக்கு அழைப்பது தெரிந்தது. அழியாத செல்வமாம் கல்வியைப் பற்றி குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் விளக்கும் அவசரம் தெரிந்தது. கல்வியின் மகத்துவம் விளக்கப் பட்டது. எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வராமல் இருந்து விடக் கூடாது என்ற கரிசனம் தெரிந்தது. தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் ருNஐஊநுகு நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிராமிய கல்வி பொருளாதார நிறுவனம் நடைமுறைப் படுத்தும் அந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாது பயன் படுத்தி விட வேண்டுமென்ற அக்கறை தெரிந்தது.
இந்த அக்கறை, மனிதம் மீதான இந்தக் கரிசனம் வன்னிக்குள் எங்கும் ஒட்டியிருந்தது. சிதைக்கப் பட்ட ஒரு பூமியில் நம்பிக்கை விதை நல்ணெண்ணத்தோடு விதைக்கப் பட்டு செழிப்போடு வளர்ந்திருந்தது. அந்த நிர்வாகத்திறன் என்னை வியக்க வைத்தது.
கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி வன்னிமண் செப்பனிடப்பட்டிருந்தது. நான் நினைக்கிறேன் இலங்கையிலேயே கூடுதலான அங்கவீனர்கள் வன்னியில்தான் இருக்கிறார்கள் என்று. ஆனால் வன்னி அவர்களை வீதியில் வீசி எறியாமல் தன்னோடு அணைத்து வைத்திருந்தது. ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்தது.
இந்த மனிதத்தனம், இந்த மனிதநேயம், மக்களோடான இந்த நட்பு, மக்களின் எதிர் காலத்தின் மீதான இந்த அக்கறை இவைதான் என்னுள் சந்தோசப் பிரவாகத்தையும் அளவிலாப் பிரமிப்பையும் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தன. போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பது தெரிந்தது.
தாயக விடுதலைக்காய் தோள் கொடுத்த, கால் கொடுத்த, கை கொடுத்த.... போராளிப் பிள்ளைகளைச் சந்திக்கும் போதெல்லாம் வன்னியின் இப்படியான நடப்புக்கள் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் ஆச்சரியம் பற்றிப் பேசினேன். அதனால் ஏற்பட்டிருக்கும் இன்பத் திணறல் பற்றிப் பேசினேன். இவையெல்லாவற்றையும் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன் மிக்க அண்ணனைப் பற்றிப் பேசினேன்.
"அண்ணன்" அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.
வாய்க்கு வாய் "அண்ணை" என்றும் "அண்ணன்" என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம் - ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து தளிர்த்து சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. "நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்." எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.
நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், அது எனது ஆசை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளாதபடி, பொதுவாகக் கேட்பது போல் "அண்ணனை யாருக்காவது சந்திக்கும் வாய்ப்பிருக்கா..?" என்று கேட்டுப் பார்த்தேன்.
எல்லோரிடமிருந்தும் "அண்ணன் இப்ப பிஸியாக இருக்கிறார். முடியாது." என்ற பதில்கள்தான் வந்தன. "எத்தனையோ பேர் வந்து காத்திருந்து விட்டுப் போய் விட்டார்கள்." என்றும் சொன்னார்கள். அந்தப் பதில்களில் நான் சற்று ஏமாற்றத்தையடைந்தாலும் எனக்குள் விசுவரூபம் எடுத்த அந்த ஆசையை என்னால் வீசி எறிய முடியவில்லை.
என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காக தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு பேச வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.
"என்ன...! வெளியிலை ஆரும் நிக்கினமே...? விடிஞ்சிட்டே..? "
அருகில் ஆழ்ந்து தூங்கியிருந்த எனது கணவரின் விழிப்போடு வந்த கேள்வியில் நான் நினைவுச் சிறகுகள் அறுபட்டு தொப்பென்று மீண்டும் மரக்கட்டிலில் வீழ்ந்தேன்.
"இல்லை. ஒருத்தரும் இல்லை. எனக்கு மூண்டு மணிக்கே நித்திரை போட்டு."
சொல்லி விட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு நித்திரை வரவில்லை. மனசு இறக்கை கட்டிக் கொண்டு சிலிர்ப்பு, தவிப்பு, துடிப்பு..... என்று பல்வேறு உணர்வுகளுடன் எங்கெல்லாமோ அலைந்தது. இடையிடையே "அண்ணையை எப்படிச் சந்திக்கலாம்! அவர் என்னைச் சந்திக்கச் சம்மதிப்பாரா..?" என்ற கேள்விகளுடன் வெண்புறாவுக்குள் வந்து மரக்கட்டிலில் விழுந்தது.
சந்திரவதனா
யேர்மனி.
(நினைவுப்பறவை மீண்டும் தன் சிறகை விரிக்கும்)
Friday, October 01, 2004
ஒரு நினைவுப் பறவையின் சிறகு விரிப்பு..! - 2
ஒரு சின்னக் குளியல் செய்து விட்டு, முடிந்தால் சுடச் சுட ஒரு தேநீர் அருந்தி விட்டு பயணத்தைத் தொடரலாம் என்ற நினைப்போடுதான் வவுனியாவில் இருந்த வன்னிலொட்ஜ் இனுள் புகுந்து கொண்டோம்.
என்னவொரு ஏமாற்றம்..! வாழ்க்கையில் நான் சந்தித்த மிக மிக அருவருப்பான இடங்களில் ஒன்று அது. அறைக்குள் நுழைந்த பொழுதே அப்படியொரு நாற்றம். குளியலறைக்குள் நுழைந்தேன். வருடக்கணக்காகத் துப்பரவு செய்யப் படாதிருந்தது. போன வேகத்தில் வெளியில் வந்து விட்டேன். ஐந்து நிமிடங்கள் கூட அங்கு நிற்க முடியவில்லை. ஹொல்கெர் ஓடியோடி அந்த அசிங்கத்தைத் தனது கமராக்குள் திணித்துக் கொண்டிருந்தான். எனக்குச் சங்கடமாக இருந்தது. என்றாவது ஒருநாள் யேர்மனியத் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்புச் செய்யப் படலாம்.
எனது பயணத்தின் மணிப்பொழுதுகளில் இது ஒரு மாசு படிந்த பொழுது. ஒரு நாளைக்கான கட்டணப் பணத்தைக் கட்டி விட்டு வெளியேறினோம்.
வெளிப் பார்வைக்குப் பிரமாண்டமாகத் தெரிந்த அந்த லொட்ஜ் தன்னோடு வைத்திருந்த அருவருப்பு இப்போது என்னோடு ஒட்டிக் கொண்டு வந்துவிட்டது போலிருந்தது.
கையோடு கொண்டு வந்த ஃபைபர்கிளாஸ் (Fiberglass) இல் கால்செய்வதற்கான மருந்துப் பொருட்களையும், உபகரணங்களையும் விளக்குவைச்சகுளத்தினூடே கொண்டு செல்வதில் சிக்கல் இருக்கலாம் என்ற எண்ணம் எமக்கு இருந்ததால், அவைகளை வவுனியாவில் ஒரு கடையில் வைத்து விட்டுப் போய் றெட்குறோஸ் (Red Gross) மூலம் எடுத்துக் கொள்ளலாம் என நேற்றுக் கடைசி நேரத்தில் தீர்மானித்ததை இன்று செயற்படுத்து முகமாகக் குறிப்பிட்ட ஒரு கடையைத் தேடினோம்.
அதிகாலை நான்கு மணி என்பதால் அனேகமான எல்லாக் கடைகளும் பூட்டியே இருந்தன. ஒரு சில கடைகளுக்குள்ளிருந்து பாடல்கள் மட்டும் கேட்டன.
தூங்கி வழிந்த மாடுகளுக்கும் தூங்கியே கிடந்த மாடுகளுக்கும் மத்தியில் காத்திருந்தோம். பொறுமை கெட்டு வாகனத்திலிருந்து இறங்கி வீதியில் நடக்கையில் வீதியோரங்களிலும் கட்டிடத் திண்ணைகளிலும் மனிதர்களும் உறங்கியும் உறங்காமலும் இருப்பதைக் கண்டோம். ஓட்டோக்களும் நின்றன.
ஐந்து மணியாகிக் கொண்டிருக்கையில் மோட்டார்சைக்கிள்களினதும் துவிச்சக்கரவண்டிகளினதும் வரவைத் தொடர்ந்து ஒரு சில கடைகள் திறக்கப் பட்டு சாம்பிராணிப்புகை வாசம் கமகமக்கத் தொடங்கியது. சுப்ரபாதம் மனசையும் காதையும் நிறைத்து புத்துணர்ச்சியைத் தந்தது. காத்திருப்புகளைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி குறிப்பிட்ட கடையைக் கண்டு பிடித்துப் பொருட்களை ஒப்படைத்து விட்டு வவுனியாவிலிருந்து புறப்பட்டோம்.
வாகனம் விளக்குவைச்சகுளத்தை நோக்கி விரையத் தொடங்கியது. யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. எல்லோரிடமும் ஒரு அவசரம். - நேரத்துக்குப் போய் வரிசையில் நிற்க வேண்டும். - இடையிடையே "கெதியாப் போனால்தான் லைனில் நின்று பாதை கடக்கலாம்." என்று சிவா மாஸ்டரும் கணவரும் முணுமுணுப்பது கேட்டது. ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பின் லைனைக் கட்பண்ணி ஆட்களைத் திருப்பி விடுவார்களாம்.
எமக்குள் பதட்டம். பதினாறு வருடங்களின் பின் சரியான முறையில் சிங்கள இராணுவத்தை இனித்தான் சந்திக்கப் போகிறோம். பாதை திறக்கப்பட்ட பின் விளக்குவைச்சகுளத்தில் செக்கிங் எப்படி இருக்கும் என்பது பற்றியதான சரியான தகவல்களை யாருமே எமக்குத் தரவில்லை. சிவா மாஸ்டரும் பன்னிரண்டு வருடங்களின் பின் இப்போதான் கொழும்பிலிருந்து தமிழீழத்தை நோக்கிப் பயணிக்கிறாராம்.
எப்படியான வரவேற்பு எமக்காகக் காத்திருக்கிறது என்று தெரியாமலே விளக்கு வைச்சகுளத்தின் செக்கிங்பொயின்ற் இலிருந்து ஒரு மைல் நீளமளவில் நீண்டிருக்கும் மனிதர்களும் வாகனங்களும் நிரைப் படுத்தப் பட்ட வரிசையை வந்தடைந்தோம். எட்டுமணிக்கு முன்னமே இப்படியொரு நீள்வரிசை. செக்கிங் இன்னும் தொடங்கவில்லையாம். எட்டிப் பார்த்தோம். இறங்கி நடந்து பார்த்தோம்.
ஒவ்வொரு பத்து யார் தூரத்துக்கும் மூட்டைகளை அடுக்கி முள்ளுக்கம்பிச் சுருள்களை வைத்துத் தடைமுகாம்களை அமைத்திருந்தனர் சிங்கள இராணுவத்தினர். அடிக்கடி அதன் பின்னிருந்த சிறுகுடில்களுக்குள்ளிருந்து எட்டியும் பார்த்தனர். நட்பாகச் சிரித்தனர். போர் என்று வரும் போது இவர்கள்தானா பேய்களாக மாறுகிறார்கள்..? நம்ப முடியாதிருந்தது.
குளித்து விட்டு ஈரத்துவாலையைத் தோளில் போட்டுக் கொண்டு வந்த குட்டையாகத் தலையை வெட்டியிருந்த அவர்களில் சிலர் சிரித்த படி கைகாட்டினார்கள். இவர்களும் மனிதர்கள்தான். ஆனாலும் பணத்தைக் காட்டிப் பகடைக் காய்களாக்கப் படுகிறார்கள். யதார்த்தம் புரிந்தது.
காத்திருப்புகளில் எம்மவர்கள் களைத்துப் போயிருந்தார்கள். சுள்ளி வைத்து எரிக்கும் மணத்தைக் காற்று அள்ளி வந்தது. ஆங்காங்கு களையிழந்த வீடுகளின் முன்றலில் சிலர் அடுப்பின் மேல் பானை வைத்து தண்ணீர் சுட வைத்து தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். கொண்டு வந்த உணவுகளையும், அந்தத் தேநீரையும் சுவைத்துப் பலர் தமது பசியையும் களையையும் ஆற்றிக் கொண்டிருந்தார்கள். எமது வாகனத்தின் சிங்கள சாரதி ஓடியோடி ஒவ்வொரு தடைமுகாம்களுக்குள்ளும் புகுந்து சிரித்தபடி வெளியில் வந்தான்.
வரிசை நத்தையாக நகரத் தொடங்கியதும் நாங்களும் நகர்ந்தோம். எமது முறை வந்ததும் சிறீலங்கா அடையாள அட்டையைக் காட்டினோம். ஹொல்கரின் எம்ஓடீ(MOD) யைப் பார்த்து விட்டு, அதில் இரு பிரதி தமக்கு வேணுமென்றார்கள். "எமக்கு அதுபற்றித் தெரியாது. அதனால் நாம் ஒரு பிரதியும் எடுக்கவில்லை." என்றோம். ஒரு சிலர் எம்மைப் பாவமாகப் பார்த்தாலும் ஒரு சிங்களவன் எம்ஓடீ யின் கொப்பி இல்லாமல் நாம் மேற்கொண்டு நகர முடியாது என்று கடுமையாகச் சொல்லி விட்டான். அவன் முகத்தில் இனக்குரோதம், அதிகாரத்திமிர்... எல்லாமே அளவுக்கதிகமாகவே இருந்தன.
இனி நாங்கள் மீண்டும் வவுனியா வரை போய் கொப்பி(பிரதி) எடுத்து வந்து வரிசையில் நின்று... பயணம் தொடர்ந்த மாதிரித்தான். மனசுக்குள் சலிப்பும் கோபமும் வந்தன. சாரதி சிங்களத்தில் மீண்டும் அந்த அதிகாரியிடம் கேட்டுப் பார்த்தான். ம்கும்.. அதிகாரி சற்றும் இளகவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினோம். ஆனாலும் தடைமுகாம்களுக்குள் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களிடம் சாரதி ஆலோசனை கேட்ட போது அவர்களில் ஒருவன் எம்மை அவர்களது அலுவலகமொன்றுக்கு அழைத்துச் சென்று பிரதி எடுத்துத் தந்து, எமது வாகனத்தில் ஏறி எம்மை மீண்டும் வரிசையில் முன்னுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனான். அவனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. கண்களால் சொன்னோம். சிரிப்பை உதிர்த்துச் சென்றான்.
ஓருவாறு பாஸ், எம்ஓடீ, ஐசி செக்கிங்குகள் முடிந்தால் இனி நாம் கொண்டு வந்த பொருட்களின் மீதான செக்கிங். அதற்கு வாகனத்தை அங்கிருந்த பரந்த காணிக்குள் இறக்க வேண்டி இருந்தது. மரநிழல்கள், வெயில்கள், இருக்கைகள் என்று பலதரப்பட்ட நிலைமைகள் அதற்குள். பொருட்களின் மீதான செக்கிங்கில் கடுமை இருக்கவில்லை. எமது உடமைகளில் சிலவற்றை அவர்கள் திறந்து கூடப் பார்க்கவில்லை. ஹொல்கெரின் கமராவைத்தான் கழற்றியும் பார்த்தார்கள். அத்தோடு முடியவில்லை. வாகனத்தையும் பதியவேண்டுமாம். அதனால் சாரதி அதற்குரிய இடத்துக்குச் சென்று விட நாம் காத்திருந்தோம்.
களைப்புக்கு நடுவிலும் அது ஒரு இனிமையான பொழுது. அங்கு காத்திருந்தவர்களில் பல உறவுகள் என்னை இனம் கண்டு வந்து பேசிச் சென்றார்கள். அவர்கள் உள்நாட்டிலேயே வாழ்ந்திருந்தாலும் 12, 15, 16.. வருடங்களின் பின் இப்போதான் வடக்கை நோக்கிச் செல்கிறார்களாம். அவர்களுடனான சந்திப்பு எதிர்பாராத சந்தோசம்.
வாகனமும் பதிந்து முடிய விளக்குவைச்சகுளத்தை விட்டுப் புறப்பட்டோம். "அப்பாடா" என்றதொரு உணர்வு மனத்துக்குள்.
நிம்மதியோடு தொடர்கையில் தமிழீழம் எங்களை வரவேற்றது. மனசு குதூகலித்தது. பெண்பொலிஸ்களும் எம் பெடியளும் என்று கண்டதில் மனசு துள்ளியது.
தமிழீழத்தில் ஆங்காங்கு ஓரிரு செக்கிங் பொயின்ற்ஸ் இருந்தாலும் மரையடிச்ச குளத்தில் எமக்கான செக்கிங். அங்கு பதிந்து வெளிநாட்டிலிருந்து வந்த காரணத்தால் 500 ருபா கட்டணம் செலுத்தி வன்னிக்குள் புகுவதற்கான பாஸைப் பெற்றுக்கொண்டோம். ஹொல்கெர் வெளிநாட்டவர் என்பதால் அவரிடம் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப் படவில்லை. சிங்கள சாரதியை உள்விடுவதில்தான் சில தயக்கங்கள். எம்மை அழைத்துப் போக வெண்புறாவிலிருந்து இரு உறவுகள் வந்திருந்தார்கள். ஆனாலும் எமது பொருட்களை அவர்களது வாகனத்தில் வைக்க முடியவில்லை. அதனால்
இன்றே திரும்பி விட வேண்டுமென்ற உத்தரவுடன் சிங்களசாரதியை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.
எமது பயணம் எமது மண்ணில் தொடர்ந்து....... கிளிநொச்சியின் வெண்புறாசெயற்கை உறுப்பு பிராந்தியச் செயலகத்தை வந்தடைந்தது.
வைத்தியமே கேள்விக்குறியாகிப் போன நேரத்தில் செயற்கை அங்கங்களைப் பொருத்துவது - அதுவும் பணம் கொடுத்து - செயற்கை உறுப்புகளைப் பொருத்துவது என்பது சாதாரண மக்களுக்கு முடியாத காரியம்.
இந்த நிலையில் முற்று முழுதாக இலவசமாக தனது சேவையை தமிழ் மக்களுக்குத் தர 15.06.1994இல் யாழ்ப்பாணம் குளப்பிட்டி வீதியில் தோற்றம் பெற்றதுதான் இந்த வெண்புறா நிறுவனம்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையால் யாழ்ப்பாணம் குளப்பிட்டி வீதியிலிருந்து கிளிநொச்சி-கோணாவில், புதுக்குடியிருப்பு எனப் பறந்து வந்த வெண்புறா, தனது தலைமைச் செயலகம் இன்னும் புதுக்குடியிருப்பிலேயே இருந்தாலும் 15.6.02 இலிருந்து கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் வந்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறது.
தொழில் நுட்பவியலாளர், திட்ட இணைப்பாளர், நிர்வாக அலுவலகர், வரவேற்பாளர், தட்டச்சாளர், கணக்காளர், காசாளர், களஞ்சியக்காப்பாளர், காவலாளர், சமையலாளர், பராமரிப்பாளர், கள அலுவலகர், விழிப்புணர்வுப் பணியாளர்கள், மருத்துவர், கண்ணிவெடி அகற்றும் பிரிவினர்... என்று 32 பேர்கள் பணியாற்றும் வெண்புறாவின் உள்ளே வீசும் காற்றுக் கூட என்னை நேசக்கரம் நீட்டி வாவென வரவேற்றது.
எம்மை ஏற்றி வந்த வாகனச் சாரதிக்கு மிகுதிப் பணத்தையும் கொடுத்து அனுப்பி விட்டு, வெண்புறாவின் உறவுகளுடன் நான் கைகோர்த்துக் கொண்டேன். அது இறுக்கமான நேசமான அன்பான கைகோர்ப்பு.
கோர்த்த கைகளை இழுத்துப் பிரித்துக் கொண்டு மீண்டும் யேர்மனி திரும்பும் ஒரு நாள் வரும் என்பது பற்றிய பிரக்ஞைகள் எதுவுமின்றி நான் வெண்புறாவுக்குள் உலா வந்தேன்.
சந்திரவதனா - யேர்மனி
(நினைவுப் பறவை மீண்டும் தன் சிறகை விரிக்கும்)
என்னவொரு ஏமாற்றம்..! வாழ்க்கையில் நான் சந்தித்த மிக மிக அருவருப்பான இடங்களில் ஒன்று அது. அறைக்குள் நுழைந்த பொழுதே அப்படியொரு நாற்றம். குளியலறைக்குள் நுழைந்தேன். வருடக்கணக்காகத் துப்பரவு செய்யப் படாதிருந்தது. போன வேகத்தில் வெளியில் வந்து விட்டேன். ஐந்து நிமிடங்கள் கூட அங்கு நிற்க முடியவில்லை. ஹொல்கெர் ஓடியோடி அந்த அசிங்கத்தைத் தனது கமராக்குள் திணித்துக் கொண்டிருந்தான். எனக்குச் சங்கடமாக இருந்தது. என்றாவது ஒருநாள் யேர்மனியத் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்புச் செய்யப் படலாம்.
எனது பயணத்தின் மணிப்பொழுதுகளில் இது ஒரு மாசு படிந்த பொழுது. ஒரு நாளைக்கான கட்டணப் பணத்தைக் கட்டி விட்டு வெளியேறினோம்.
வெளிப் பார்வைக்குப் பிரமாண்டமாகத் தெரிந்த அந்த லொட்ஜ் தன்னோடு வைத்திருந்த அருவருப்பு இப்போது என்னோடு ஒட்டிக் கொண்டு வந்துவிட்டது போலிருந்தது.
கையோடு கொண்டு வந்த ஃபைபர்கிளாஸ் (Fiberglass) இல் கால்செய்வதற்கான மருந்துப் பொருட்களையும், உபகரணங்களையும் விளக்குவைச்சகுளத்தினூடே கொண்டு செல்வதில் சிக்கல் இருக்கலாம் என்ற எண்ணம் எமக்கு இருந்ததால், அவைகளை வவுனியாவில் ஒரு கடையில் வைத்து விட்டுப் போய் றெட்குறோஸ் (Red Gross) மூலம் எடுத்துக் கொள்ளலாம் என நேற்றுக் கடைசி நேரத்தில் தீர்மானித்ததை இன்று செயற்படுத்து முகமாகக் குறிப்பிட்ட ஒரு கடையைத் தேடினோம்.
அதிகாலை நான்கு மணி என்பதால் அனேகமான எல்லாக் கடைகளும் பூட்டியே இருந்தன. ஒரு சில கடைகளுக்குள்ளிருந்து பாடல்கள் மட்டும் கேட்டன.
தூங்கி வழிந்த மாடுகளுக்கும் தூங்கியே கிடந்த மாடுகளுக்கும் மத்தியில் காத்திருந்தோம். பொறுமை கெட்டு வாகனத்திலிருந்து இறங்கி வீதியில் நடக்கையில் வீதியோரங்களிலும் கட்டிடத் திண்ணைகளிலும் மனிதர்களும் உறங்கியும் உறங்காமலும் இருப்பதைக் கண்டோம். ஓட்டோக்களும் நின்றன.
ஐந்து மணியாகிக் கொண்டிருக்கையில் மோட்டார்சைக்கிள்களினதும் துவிச்சக்கரவண்டிகளினதும் வரவைத் தொடர்ந்து ஒரு சில கடைகள் திறக்கப் பட்டு சாம்பிராணிப்புகை வாசம் கமகமக்கத் தொடங்கியது. சுப்ரபாதம் மனசையும் காதையும் நிறைத்து புத்துணர்ச்சியைத் தந்தது. காத்திருப்புகளைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி குறிப்பிட்ட கடையைக் கண்டு பிடித்துப் பொருட்களை ஒப்படைத்து விட்டு வவுனியாவிலிருந்து புறப்பட்டோம்.
வாகனம் விளக்குவைச்சகுளத்தை நோக்கி விரையத் தொடங்கியது. யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. எல்லோரிடமும் ஒரு அவசரம். - நேரத்துக்குப் போய் வரிசையில் நிற்க வேண்டும். - இடையிடையே "கெதியாப் போனால்தான் லைனில் நின்று பாதை கடக்கலாம்." என்று சிவா மாஸ்டரும் கணவரும் முணுமுணுப்பது கேட்டது. ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பின் லைனைக் கட்பண்ணி ஆட்களைத் திருப்பி விடுவார்களாம்.
எமக்குள் பதட்டம். பதினாறு வருடங்களின் பின் சரியான முறையில் சிங்கள இராணுவத்தை இனித்தான் சந்திக்கப் போகிறோம். பாதை திறக்கப்பட்ட பின் விளக்குவைச்சகுளத்தில் செக்கிங் எப்படி இருக்கும் என்பது பற்றியதான சரியான தகவல்களை யாருமே எமக்குத் தரவில்லை. சிவா மாஸ்டரும் பன்னிரண்டு வருடங்களின் பின் இப்போதான் கொழும்பிலிருந்து தமிழீழத்தை நோக்கிப் பயணிக்கிறாராம்.
எப்படியான வரவேற்பு எமக்காகக் காத்திருக்கிறது என்று தெரியாமலே விளக்கு வைச்சகுளத்தின் செக்கிங்பொயின்ற் இலிருந்து ஒரு மைல் நீளமளவில் நீண்டிருக்கும் மனிதர்களும் வாகனங்களும் நிரைப் படுத்தப் பட்ட வரிசையை வந்தடைந்தோம். எட்டுமணிக்கு முன்னமே இப்படியொரு நீள்வரிசை. செக்கிங் இன்னும் தொடங்கவில்லையாம். எட்டிப் பார்த்தோம். இறங்கி நடந்து பார்த்தோம்.
ஒவ்வொரு பத்து யார் தூரத்துக்கும் மூட்டைகளை அடுக்கி முள்ளுக்கம்பிச் சுருள்களை வைத்துத் தடைமுகாம்களை அமைத்திருந்தனர் சிங்கள இராணுவத்தினர். அடிக்கடி அதன் பின்னிருந்த சிறுகுடில்களுக்குள்ளிருந்து எட்டியும் பார்த்தனர். நட்பாகச் சிரித்தனர். போர் என்று வரும் போது இவர்கள்தானா பேய்களாக மாறுகிறார்கள்..? நம்ப முடியாதிருந்தது.
குளித்து விட்டு ஈரத்துவாலையைத் தோளில் போட்டுக் கொண்டு வந்த குட்டையாகத் தலையை வெட்டியிருந்த அவர்களில் சிலர் சிரித்த படி கைகாட்டினார்கள். இவர்களும் மனிதர்கள்தான். ஆனாலும் பணத்தைக் காட்டிப் பகடைக் காய்களாக்கப் படுகிறார்கள். யதார்த்தம் புரிந்தது.
காத்திருப்புகளில் எம்மவர்கள் களைத்துப் போயிருந்தார்கள். சுள்ளி வைத்து எரிக்கும் மணத்தைக் காற்று அள்ளி வந்தது. ஆங்காங்கு களையிழந்த வீடுகளின் முன்றலில் சிலர் அடுப்பின் மேல் பானை வைத்து தண்ணீர் சுட வைத்து தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். கொண்டு வந்த உணவுகளையும், அந்தத் தேநீரையும் சுவைத்துப் பலர் தமது பசியையும் களையையும் ஆற்றிக் கொண்டிருந்தார்கள். எமது வாகனத்தின் சிங்கள சாரதி ஓடியோடி ஒவ்வொரு தடைமுகாம்களுக்குள்ளும் புகுந்து சிரித்தபடி வெளியில் வந்தான்.
வரிசை நத்தையாக நகரத் தொடங்கியதும் நாங்களும் நகர்ந்தோம். எமது முறை வந்ததும் சிறீலங்கா அடையாள அட்டையைக் காட்டினோம். ஹொல்கரின் எம்ஓடீ(MOD) யைப் பார்த்து விட்டு, அதில் இரு பிரதி தமக்கு வேணுமென்றார்கள். "எமக்கு அதுபற்றித் தெரியாது. அதனால் நாம் ஒரு பிரதியும் எடுக்கவில்லை." என்றோம். ஒரு சிலர் எம்மைப் பாவமாகப் பார்த்தாலும் ஒரு சிங்களவன் எம்ஓடீ யின் கொப்பி இல்லாமல் நாம் மேற்கொண்டு நகர முடியாது என்று கடுமையாகச் சொல்லி விட்டான். அவன் முகத்தில் இனக்குரோதம், அதிகாரத்திமிர்... எல்லாமே அளவுக்கதிகமாகவே இருந்தன.
இனி நாங்கள் மீண்டும் வவுனியா வரை போய் கொப்பி(பிரதி) எடுத்து வந்து வரிசையில் நின்று... பயணம் தொடர்ந்த மாதிரித்தான். மனசுக்குள் சலிப்பும் கோபமும் வந்தன. சாரதி சிங்களத்தில் மீண்டும் அந்த அதிகாரியிடம் கேட்டுப் பார்த்தான். ம்கும்.. அதிகாரி சற்றும் இளகவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினோம். ஆனாலும் தடைமுகாம்களுக்குள் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களிடம் சாரதி ஆலோசனை கேட்ட போது அவர்களில் ஒருவன் எம்மை அவர்களது அலுவலகமொன்றுக்கு அழைத்துச் சென்று பிரதி எடுத்துத் தந்து, எமது வாகனத்தில் ஏறி எம்மை மீண்டும் வரிசையில் முன்னுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனான். அவனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. கண்களால் சொன்னோம். சிரிப்பை உதிர்த்துச் சென்றான்.
களைப்புக்கு நடுவிலும் அது ஒரு இனிமையான பொழுது. அங்கு காத்திருந்தவர்களில் பல உறவுகள் என்னை இனம் கண்டு வந்து பேசிச் சென்றார்கள். அவர்கள் உள்நாட்டிலேயே வாழ்ந்திருந்தாலும் 12, 15, 16.. வருடங்களின் பின் இப்போதான் வடக்கை நோக்கிச் செல்கிறார்களாம். அவர்களுடனான சந்திப்பு எதிர்பாராத சந்தோசம்.
வாகனமும் பதிந்து முடிய விளக்குவைச்சகுளத்தை விட்டுப் புறப்பட்டோம். "அப்பாடா" என்றதொரு உணர்வு மனத்துக்குள்.
நிம்மதியோடு தொடர்கையில் தமிழீழம் எங்களை வரவேற்றது. மனசு குதூகலித்தது. பெண்பொலிஸ்களும் எம் பெடியளும் என்று கண்டதில் மனசு துள்ளியது.
தமிழீழத்தில் ஆங்காங்கு ஓரிரு செக்கிங் பொயின்ற்ஸ் இருந்தாலும் மரையடிச்ச குளத்தில் எமக்கான செக்கிங். அங்கு பதிந்து வெளிநாட்டிலிருந்து வந்த காரணத்தால் 500 ருபா கட்டணம் செலுத்தி வன்னிக்குள் புகுவதற்கான பாஸைப் பெற்றுக்கொண்டோம். ஹொல்கெர் வெளிநாட்டவர் என்பதால் அவரிடம் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப் படவில்லை. சிங்கள சாரதியை உள்விடுவதில்தான் சில தயக்கங்கள். எம்மை அழைத்துப் போக வெண்புறாவிலிருந்து இரு உறவுகள் வந்திருந்தார்கள். ஆனாலும் எமது பொருட்களை அவர்களது வாகனத்தில் வைக்க முடியவில்லை. அதனால்
இன்றே திரும்பி விட வேண்டுமென்ற உத்தரவுடன் சிங்களசாரதியை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.
எமது பயணம் எமது மண்ணில் தொடர்ந்து....... கிளிநொச்சியின் வெண்புறாசெயற்கை உறுப்பு பிராந்தியச் செயலகத்தை வந்தடைந்தது.
வைத்தியமே கேள்விக்குறியாகிப் போன நேரத்தில் செயற்கை அங்கங்களைப் பொருத்துவது - அதுவும் பணம் கொடுத்து - செயற்கை உறுப்புகளைப் பொருத்துவது என்பது சாதாரண மக்களுக்கு முடியாத காரியம்.
இந்த நிலையில் முற்று முழுதாக இலவசமாக தனது சேவையை தமிழ் மக்களுக்குத் தர 15.06.1994இல் யாழ்ப்பாணம் குளப்பிட்டி வீதியில் தோற்றம் பெற்றதுதான் இந்த வெண்புறா நிறுவனம்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையால் யாழ்ப்பாணம் குளப்பிட்டி வீதியிலிருந்து கிளிநொச்சி-கோணாவில், புதுக்குடியிருப்பு எனப் பறந்து வந்த வெண்புறா, தனது தலைமைச் செயலகம் இன்னும் புதுக்குடியிருப்பிலேயே இருந்தாலும் 15.6.02 இலிருந்து கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் வந்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறது.
தொழில் நுட்பவியலாளர், திட்ட இணைப்பாளர், நிர்வாக அலுவலகர், வரவேற்பாளர், தட்டச்சாளர், கணக்காளர், காசாளர், களஞ்சியக்காப்பாளர், காவலாளர், சமையலாளர், பராமரிப்பாளர், கள அலுவலகர், விழிப்புணர்வுப் பணியாளர்கள், மருத்துவர், கண்ணிவெடி அகற்றும் பிரிவினர்... என்று 32 பேர்கள் பணியாற்றும் வெண்புறாவின் உள்ளே வீசும் காற்றுக் கூட என்னை நேசக்கரம் நீட்டி வாவென வரவேற்றது.
எம்மை ஏற்றி வந்த வாகனச் சாரதிக்கு மிகுதிப் பணத்தையும் கொடுத்து அனுப்பி விட்டு, வெண்புறாவின் உறவுகளுடன் நான் கைகோர்த்துக் கொண்டேன். அது இறுக்கமான நேசமான அன்பான கைகோர்ப்பு.
கோர்த்த கைகளை இழுத்துப் பிரித்துக் கொண்டு மீண்டும் யேர்மனி திரும்பும் ஒரு நாள் வரும் என்பது பற்றிய பிரக்ஞைகள் எதுவுமின்றி நான் வெண்புறாவுக்குள் உலா வந்தேன்.
சந்திரவதனா - யேர்மனி
(நினைவுப் பறவை மீண்டும் தன் சிறகை விரிக்கும்)
Wednesday, September 29, 2004
விவாகரத்து
யன்னலினூடு தெரிந்த கஸ்தானியன் மரங்களோ அதை அசைத்துக் கொண்ட வந்த தென்றலோ இன்று யாரையும் இதமாகத் தழுவவில்லை. றோசியின் புறுபுறுப்பும், கரகரப்பும் இடையிடையே தெறித்து விழுந்து கொண்டிருந்த அநாகரீகமான வார்த்தைகளும் அறையிலிருந்த எல்லோரையும் ஓரளவுக்கு மௌனிகளாக்கி விட்டிருந்தன.
அவளது தொணதொணப்பு அவளருகிலிருந்த எனக்குத் தாங்கவில்லை. வந்ததிலிருந்து கீறுபட்ட கிராமபோன் போல ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தாள். எள்ளும் கொள்ளும் அவள் முகத்தில் வெடித்துக் கொண்டே இருந்தன. எனக்கு இதற்கு மேல் கேட்க முடியவில்லை என்பதை அவளுக்கு உணர்த்துவதற்காக இரண்டாவது தடவையாகவும் எழுந்து சென்று தேநீர் போட்டு, குசினிக்குள்ளேயே நின்று குடித்து விட்டு வந்தேன்.
வந்து இருந்ததும் மீண்டும் தொடங்கி விட்டாள்.
"இந்த முறை நான் தீர்க்கமான முடிவெடுத்திட்டன். அந்தப் பன்றியை எப்படியாவது விவாகரத்துச் செய்யப் போகிறேன். என்ன நினைக்கிறான் அவன். சரியான இடியட்..."
அவள் பன்றி என்றது அவளது கணவனைத்தான். என்னிடம் ஸ்வைனுக்கான தமிழ் சொல்லை தனது கணவனைத் திட்டுவதற்காகவே கேட்டுப் பாடமாக்கி வைத்திருக்கிறாள்.
வழமை போலவே நேற்று மதியமும் இவள் சமைத்த பன்றிப் பொரியலும், உருளைக்கிழங்கு சலாட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லையாம். பிடிக்காததற்குக் காரணம் சுவை சம்பந்தமானதல்ல. முதல்நாளிரவு அவன் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு வந்ததால், இவள் நாய்க்கத்தல் கத்தி விட்டு அவனை வரவேற்பறையில் படுக்க விட்டிருக்கிறாள். அதற்கான பழி தீர்ப்புத்தான் அது.
பன்றிப்பொரியல் பிடிக்கவில்லையென்று அவன் சாப்பிடாமல் போயிருந்தால் இவளுக்கு இத்தனை தூரம் கோபமேற்பட்டிருக்காது. நானும் இந்தத் தொணதொணப்பில் இருந்து தப்பியிருப்பேன். அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே இவளது முக அலங்காரத்தைப் பற்றி நையாண்டியாகச் சொல்லியிருக்கிறான். "உன்னை விடக் குரங்கு வடிவு" என்று நெளித்துக் காட்டியிருக்கிறான். அதுதான் இவளை உச்சக் கட்டக் கோபத்துக்குத் தள்ளியிருக்கிறது.
"நாளையிலையிருந்து எனக்கு விடுதலை. அப்ப பாரன் இவன் எவ்வளவு பாடுபடப் போறான் என்று.." மீண்டும் தொடங்கினாள்.
"இப்ப நீ இதை எத்தனையாவது தரம் சொல்லிப் போட்டாய்..? நூறாவது தடவையா..? இருநாறாவது தடவையா? அல்லது ஆயிரமாவது தடவையா..?" இரண்டாவது மேசையில் இருந்த ரெகீனா எரிச்சலும், கோபமும் பீறிட கேலித்தொனியில் கேட்டாள்.
"நீ சும்மாயிரு. உனக்கென்ன தெரியும் அந்த ஸ்வைனைப் பற்றி.. இதுக்கு மேலையும் என்னாலை அவனோடை வாழேலாது. நான் தீர்க்கமான முடிவுக்கு வந்திட்டன். கண்டிப்பா அவனை விவாகரத்துச் செய்யப் போறன்."
"எனக்கு உன்ரை கணவனைத் தெரியுமோ இல்லையோ. உன்னை நல்லாத் தெரியும். உன்னோடை வேலை செய்யிற இந்தப் 13 வருசத்திலை.. நான் நினைக்கிறன் ஆயிரம் தடவைக்கு மேலை உன்ரை கணவனை விவாகரத்துச் செய்யிறதாய்ச் சொல்லிப் போட்டாய். ஆனால் இன்னும் செய்யேல்லை. நான் உனக்குச் சொல்லக் கூடியது என்னெண்டால் உடனடியா விவாகரத்தைச் செய். அப்பதான் நாங்கள் தொடர்ந்து இந்த வேலையிலை இருக்கலாம். இல்லையெண்டால் உன்ரை தொணதொணப்பைக் கேட்டே எங்களுக்கு தலை வெடிச்சிடும்."
"ஏ...ய். கத்தாதை. என்ரை புருசன் எனக்குக் கடுப்பேத்தினது காணும். நீயும் பிறகு என்ரை எரிச்சலைக் கிளறாதை. இந்த முறை கண்டிப்பா விவாகரத்துத்தான். நான் வீடு கூடப் பார்த்திட்டன். தளபாடங்கள்தான் பிரச்சனை. அதுகளை நான் வங்கியிலை கடனெடுத்தாவது வேண்டிப் போடுவன்."
இம்முறை அவள் சொல்வதைப் பார்த்தால் நியமாகவே விவாகரத்துச் செய்து விடுவாள் போல இருந்தது. நாளைக்கே வீடு மாறக் கூடிய விதமாக ஒரு நண்பி அவளது வீட்டின் மேல் மாடியை ஒதுக்கிக் கொடுத்து விட்டாளாம்.
என்ன இருந்தாலும் 13 வருடங்களாக என்னோடு வேலை பார்க்கிறாள். அவளைச் சமாதானப் படுத்தி விவாகரத்து எண்ணத்திலிருந்து மீட்க வேண்டும். மனம் எண்ணிக் கொண்டது.
"இஞ்சை பார். விவாகரத்துச் செய்து போட்டுத் தனிய வாழுறது மட்டும் பெரிய நல்ல விசயம் எண்டு நினைக்கிறேயே. மொக்கு வேலை பார்க்காமல் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு. விவாகரத்து எண்டிறது விளையாட்டு இல்லை."
"நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். இவனோடை என்னாலை வாழேலாது."
"விவாகரத்துச் செய்து போட்டு எத்தினை காலத்துக்குத் தனிய வாழப் போறாய். அடுத்ததாகக் கிடைக்கப் போகிறவன் இவனை விட நல்லவனாக இருப்பான் எண்டிறதுக்கு என்ன உத்தரவாதம்...?"
"சும்மா பேய்க்கதை கதைக்காதை. இவனை விடக் கூடாதவன் இந்த உலகத்திலையே இருக்க மாட்டான்."
அந்த நேரம் அவளோடு தொடர்ந்து கதைப்பதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்ன நடக்குமோ என்று மனது சற்று அச்சப் பட்டது. அவள் தொடர்ந்தும் தொணதொணத்துக் கொண்டே இருந்தாள். கலகலப்பாகக் கழிய வேண்டிய எங்கள் வேலை நேரம் இவளது தொணதொணப்பில் விரயமாகக் கரைந்து போனது. வேலைகள் கூட சரியான முறையில் முடியவில்லை.
நேற்றைய சண்டை காரணமாக காரைத் தொடக் கூடாது என அவன் சொல்லி விட்டானாம். அவசரமாய் யக்கற்றை போட்டுக் கொண்டு கைப்பையையும் கொழுவிக் கொண்டு சூஸ்(bye bye) சொல்லியபடி எங்களுக்காகக் காத்திராமல் லிப்றுக்குள் புகுந்து கொண்டாள். பேரூந்தைப் பிடிக்க வேண்டுமென்ற அவசரம் அவளுக்கு.
அவளை விட அவசரமாய் லிப்ற் இறங்கியது. நானும் மற்றவர்களும் நிதானமாக எமது யக்கற்றுகளைப் போட்டுக் கொண்டோம். அவளுக்காக ஒரு சிலர் பரிந்துரைத்து அவள் கணவனை மனங் கொண்ட மட்டும் திட்ட.. ரெகினா மட்டும் உதட்டை நெளித்துச் சிரித்தாள். "இப்போதுதான் காதுக் குடைச்சல் தீர்ந்தது. பிறகு நீங்களும் தொணதொணக்காதைங்கோ." என்றாள்.
ஒருவரும் யன்னலைப் பூட்டுவதாகத் தெரியவில்லை. வளவளா என்று கதையளப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கஸ்தானியன் மரங்களின் அசைவில் யன்னல் சேலைகள் ஆடிக் கொண்டே இருந்தன. ஓடிச் சென்று யன்னலைப் பூட்ட முனைந்த நான் ஏதோ ஒரு ஈர்ப்பில் வெளியில் எட்டிப் பார்த்தேன்.
ம்... யாரது..?
யன்னலுக்கு நேரெ கீழே.. பெரிய பூங்கொத்து ஒன்று கைகளில் மலர்ந்திருக்க.. றோசியும் அவளது கணவனும் உதட்டோடு உதடு பதித்து... இறுக அணைத்து..
நான் கண்களைக் கசக்கிப் பார்த்தேன்.
அவர்களேதான். என்னை மன்னிச்சுக்கொள் என்ற வாக்கியம் பூங்கொத்தில் சொருகப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
என் காதுகளுக்குள் இன்னும் அவளது தொணதொணப்பு ஒட்டிக் கொண்டே இருந்தது. அவர்களோ ஒருவரின் இடுப்பை ஒருவர் கைகளால் வளைத்த படி நடக்கத் தொடங்கினார்கள். இடை இடையே கண்களால் நோக்கி உதடுகளைக் கவ்வி.... உலகின் அதி அற்புதமான காதல் ஜோடிகளில் ஒரு ஜோடி போல...
திரும்பினேன். இவர்கள் அதுதான் எனது சக வேலைத் தோழிகள் றோசியின் விவாகரத்துப் பற்றி அநுதாபத்தோடும், அது சரியா பிழையா என்பது பற்றி அக்கறையோடும் விவாதித்துக் கொண்டு லிப்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.
சந்திரவதனா
யேர்மனி
12.9.2004
அவளது தொணதொணப்பு அவளருகிலிருந்த எனக்குத் தாங்கவில்லை. வந்ததிலிருந்து கீறுபட்ட கிராமபோன் போல ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தாள். எள்ளும் கொள்ளும் அவள் முகத்தில் வெடித்துக் கொண்டே இருந்தன. எனக்கு இதற்கு மேல் கேட்க முடியவில்லை என்பதை அவளுக்கு உணர்த்துவதற்காக இரண்டாவது தடவையாகவும் எழுந்து சென்று தேநீர் போட்டு, குசினிக்குள்ளேயே நின்று குடித்து விட்டு வந்தேன்.
வந்து இருந்ததும் மீண்டும் தொடங்கி விட்டாள்.
"இந்த முறை நான் தீர்க்கமான முடிவெடுத்திட்டன். அந்தப் பன்றியை எப்படியாவது விவாகரத்துச் செய்யப் போகிறேன். என்ன நினைக்கிறான் அவன். சரியான இடியட்..."
அவள் பன்றி என்றது அவளது கணவனைத்தான். என்னிடம் ஸ்வைனுக்கான தமிழ் சொல்லை தனது கணவனைத் திட்டுவதற்காகவே கேட்டுப் பாடமாக்கி வைத்திருக்கிறாள்.
வழமை போலவே நேற்று மதியமும் இவள் சமைத்த பன்றிப் பொரியலும், உருளைக்கிழங்கு சலாட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லையாம். பிடிக்காததற்குக் காரணம் சுவை சம்பந்தமானதல்ல. முதல்நாளிரவு அவன் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு வந்ததால், இவள் நாய்க்கத்தல் கத்தி விட்டு அவனை வரவேற்பறையில் படுக்க விட்டிருக்கிறாள். அதற்கான பழி தீர்ப்புத்தான் அது.
பன்றிப்பொரியல் பிடிக்கவில்லையென்று அவன் சாப்பிடாமல் போயிருந்தால் இவளுக்கு இத்தனை தூரம் கோபமேற்பட்டிருக்காது. நானும் இந்தத் தொணதொணப்பில் இருந்து தப்பியிருப்பேன். அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே இவளது முக அலங்காரத்தைப் பற்றி நையாண்டியாகச் சொல்லியிருக்கிறான். "உன்னை விடக் குரங்கு வடிவு" என்று நெளித்துக் காட்டியிருக்கிறான். அதுதான் இவளை உச்சக் கட்டக் கோபத்துக்குத் தள்ளியிருக்கிறது.
"நாளையிலையிருந்து எனக்கு விடுதலை. அப்ப பாரன் இவன் எவ்வளவு பாடுபடப் போறான் என்று.." மீண்டும் தொடங்கினாள்.
"இப்ப நீ இதை எத்தனையாவது தரம் சொல்லிப் போட்டாய்..? நூறாவது தடவையா..? இருநாறாவது தடவையா? அல்லது ஆயிரமாவது தடவையா..?" இரண்டாவது மேசையில் இருந்த ரெகீனா எரிச்சலும், கோபமும் பீறிட கேலித்தொனியில் கேட்டாள்.
"நீ சும்மாயிரு. உனக்கென்ன தெரியும் அந்த ஸ்வைனைப் பற்றி.. இதுக்கு மேலையும் என்னாலை அவனோடை வாழேலாது. நான் தீர்க்கமான முடிவுக்கு வந்திட்டன். கண்டிப்பா அவனை விவாகரத்துச் செய்யப் போறன்."
"எனக்கு உன்ரை கணவனைத் தெரியுமோ இல்லையோ. உன்னை நல்லாத் தெரியும். உன்னோடை வேலை செய்யிற இந்தப் 13 வருசத்திலை.. நான் நினைக்கிறன் ஆயிரம் தடவைக்கு மேலை உன்ரை கணவனை விவாகரத்துச் செய்யிறதாய்ச் சொல்லிப் போட்டாய். ஆனால் இன்னும் செய்யேல்லை. நான் உனக்குச் சொல்லக் கூடியது என்னெண்டால் உடனடியா விவாகரத்தைச் செய். அப்பதான் நாங்கள் தொடர்ந்து இந்த வேலையிலை இருக்கலாம். இல்லையெண்டால் உன்ரை தொணதொணப்பைக் கேட்டே எங்களுக்கு தலை வெடிச்சிடும்."
"ஏ...ய். கத்தாதை. என்ரை புருசன் எனக்குக் கடுப்பேத்தினது காணும். நீயும் பிறகு என்ரை எரிச்சலைக் கிளறாதை. இந்த முறை கண்டிப்பா விவாகரத்துத்தான். நான் வீடு கூடப் பார்த்திட்டன். தளபாடங்கள்தான் பிரச்சனை. அதுகளை நான் வங்கியிலை கடனெடுத்தாவது வேண்டிப் போடுவன்."
இம்முறை அவள் சொல்வதைப் பார்த்தால் நியமாகவே விவாகரத்துச் செய்து விடுவாள் போல இருந்தது. நாளைக்கே வீடு மாறக் கூடிய விதமாக ஒரு நண்பி அவளது வீட்டின் மேல் மாடியை ஒதுக்கிக் கொடுத்து விட்டாளாம்.
என்ன இருந்தாலும் 13 வருடங்களாக என்னோடு வேலை பார்க்கிறாள். அவளைச் சமாதானப் படுத்தி விவாகரத்து எண்ணத்திலிருந்து மீட்க வேண்டும். மனம் எண்ணிக் கொண்டது.
"இஞ்சை பார். விவாகரத்துச் செய்து போட்டுத் தனிய வாழுறது மட்டும் பெரிய நல்ல விசயம் எண்டு நினைக்கிறேயே. மொக்கு வேலை பார்க்காமல் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு. விவாகரத்து எண்டிறது விளையாட்டு இல்லை."
"நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். இவனோடை என்னாலை வாழேலாது."
"விவாகரத்துச் செய்து போட்டு எத்தினை காலத்துக்குத் தனிய வாழப் போறாய். அடுத்ததாகக் கிடைக்கப் போகிறவன் இவனை விட நல்லவனாக இருப்பான் எண்டிறதுக்கு என்ன உத்தரவாதம்...?"
"சும்மா பேய்க்கதை கதைக்காதை. இவனை விடக் கூடாதவன் இந்த உலகத்திலையே இருக்க மாட்டான்."
அந்த நேரம் அவளோடு தொடர்ந்து கதைப்பதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்ன நடக்குமோ என்று மனது சற்று அச்சப் பட்டது. அவள் தொடர்ந்தும் தொணதொணத்துக் கொண்டே இருந்தாள். கலகலப்பாகக் கழிய வேண்டிய எங்கள் வேலை நேரம் இவளது தொணதொணப்பில் விரயமாகக் கரைந்து போனது. வேலைகள் கூட சரியான முறையில் முடியவில்லை.
நேற்றைய சண்டை காரணமாக காரைத் தொடக் கூடாது என அவன் சொல்லி விட்டானாம். அவசரமாய் யக்கற்றை போட்டுக் கொண்டு கைப்பையையும் கொழுவிக் கொண்டு சூஸ்(bye bye) சொல்லியபடி எங்களுக்காகக் காத்திராமல் லிப்றுக்குள் புகுந்து கொண்டாள். பேரூந்தைப் பிடிக்க வேண்டுமென்ற அவசரம் அவளுக்கு.
அவளை விட அவசரமாய் லிப்ற் இறங்கியது. நானும் மற்றவர்களும் நிதானமாக எமது யக்கற்றுகளைப் போட்டுக் கொண்டோம். அவளுக்காக ஒரு சிலர் பரிந்துரைத்து அவள் கணவனை மனங் கொண்ட மட்டும் திட்ட.. ரெகினா மட்டும் உதட்டை நெளித்துச் சிரித்தாள். "இப்போதுதான் காதுக் குடைச்சல் தீர்ந்தது. பிறகு நீங்களும் தொணதொணக்காதைங்கோ." என்றாள்.
ஒருவரும் யன்னலைப் பூட்டுவதாகத் தெரியவில்லை. வளவளா என்று கதையளப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கஸ்தானியன் மரங்களின் அசைவில் யன்னல் சேலைகள் ஆடிக் கொண்டே இருந்தன. ஓடிச் சென்று யன்னலைப் பூட்ட முனைந்த நான் ஏதோ ஒரு ஈர்ப்பில் வெளியில் எட்டிப் பார்த்தேன்.
ம்... யாரது..?
யன்னலுக்கு நேரெ கீழே.. பெரிய பூங்கொத்து ஒன்று கைகளில் மலர்ந்திருக்க.. றோசியும் அவளது கணவனும் உதட்டோடு உதடு பதித்து... இறுக அணைத்து..
நான் கண்களைக் கசக்கிப் பார்த்தேன்.
அவர்களேதான். என்னை மன்னிச்சுக்கொள் என்ற வாக்கியம் பூங்கொத்தில் சொருகப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
என் காதுகளுக்குள் இன்னும் அவளது தொணதொணப்பு ஒட்டிக் கொண்டே இருந்தது. அவர்களோ ஒருவரின் இடுப்பை ஒருவர் கைகளால் வளைத்த படி நடக்கத் தொடங்கினார்கள். இடை இடையே கண்களால் நோக்கி உதடுகளைக் கவ்வி.... உலகின் அதி அற்புதமான காதல் ஜோடிகளில் ஒரு ஜோடி போல...
திரும்பினேன். இவர்கள் அதுதான் எனது சக வேலைத் தோழிகள் றோசியின் விவாகரத்துப் பற்றி அநுதாபத்தோடும், அது சரியா பிழையா என்பது பற்றி அக்கறையோடும் விவாதித்துக் கொண்டு லிப்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.
சந்திரவதனா
யேர்மனி
12.9.2004
Sunday, September 19, 2004
தலைவருடன் சில மணிப்பொழுதுகள்
30.5.2002
நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு..! து}க்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன்.
கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும் - போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின் -
இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன் மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.
அண்ணன் - அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.
வாய்க்கு வாய் அண்ணை என்றும் அண்ணன் என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம் - ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து தளிர்த்து சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. "நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்." எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.
என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காக தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு அளவளாவ வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.
என் ஆசைக்கு அணை போட முடியாத கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.
நேற்று முன் தினம் - மாலை நான்கு மணியளவில் வெயிலில் மூழ்கியிருந்த கிளிநொச்சி வெண்புறா நிறுவனத்தில் நிழலும் தண்மையும் தேடி வரவேற்பறையின் ஓர் மூலையில் நான் அமர்ந்திருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆளனுப்பியிருந்தார். "எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் ஏழு மணிக்கு வாகனம் அனுப்புவதாகவும்" சொல்லி விட்டிருந்தார்.
ஏழு மணிக்குச் சில நிமிடங்கள் முன்னரே வாகனம் வந்தது. போனோம்.
நட்பு நிறைந்த பார்வைகள் எம்மை வரவேற்க அரசியல் துறை அலுவலகம் தனக்கே உரிய பாணியில் உள்ளேயும் வெளியேயும் அழகாகக் காட்சி அளித்தது.
அதே சிரிப்பு........! எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்த அதே சிரிப்புடன் தமிழ்ச்செல்வன் அவர்கள் எம்மை வரவேற்றார்.
அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார்.
களத்தில் காவியமான எனது தம்பிமாரைப் பற்றிக் கதைத்தார். முன்னர் பருத்தித்துறையில் புத்தக வெளியீடு செய்த தங்கை பற்றி விசாரித்தார். கதைகள் பல திசைகளிலும் விரிந்திருந்தன.
அவருடனான இரவு உணவு நளபாகம்தான். இறால், இறைச்சி, மரக்கறி... என்று சுவையாக இருந்தது. அங்கிருந்த உறவுகள் அதை நட்போடு பரிமாறிய விதம் மிகவும் இதமாக இருந்தது. அந்த இனிய உபசரிப்பில் மனசும் வயிறும் நிறைந்திருக்க நாம் விடை பெற எழுந்து கொண்டோம்.
அப்போதுதான் தமிழ்ச்செல்வன் அவர்கள் என்னைத் தனியாகக் கூப்பிட்டு அந்த இனிய செய்தியைச் சொன்னார். "வியாழக்கிழமை (அண்ணன்) உங்களைச் சந்திக்க விரும்புறார்." என்றார். எனக்கு ஒரு தரம் மனம் சிலிர்த்தது.
அண்ணையைச் சந்திப்பது பற்றி தமிழ்ச்செல்வன் அவர்கள் சொன்ன அந்தக் கணத்திலிருந்து நான் பதட்டமாகி விட்டேன்.
வெளியில் வந்து அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த போதோ சமையல் செய்தவர்களிடமும் உணவு பரிமாறியவர்களிடமும் நன்றி கூறி விடைபெற்ற போதோ நான் ஒன்றிலும் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் பதட்டமாகவே இருந்தேன்.
உண்மைதானா..? மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நான் சந்திக்கப் போகிறேனா..? சந்தோசம்..! சந்தேகம்..! பதட்டம்..! பரபரப்பு..!..... எல்லாம் என்னுள். இன்று காலை தமிழச்செல்வன் அவர்கள் வெண்புறா வரை வந்து "மாலை நாலுமணிக்கு வாகனம் வரும்." என்று சொன்ன போதும், எனது படபடப்புகள் குறைய வில்லை.
நான்கு மணிக்கு வருவதாகச் சொன்ன வாகனம் சற்றுத் தாமதமாகத்தான் வந்தது. போர்pன் அனர்த்தங்களால் குழி விழுந்து போயிருந்த வீதியில் வாகனம் ஏறி இறங்கிச் சென்ற போது நாங்கள் குலுங்கினோம்.
கூட வந்தவரின் சற்றலைற் தொலைபேசி சிணுங்கினாலே "எங்கே.. இன்று எம்மால் அண்ணையைச் சந்திக்க முடியாது." என்று தகவல் சொல்லி விடுவார்களோ என்று! மனசு பயப்பட்டது.
அண்ணனைச் சந்திக்கும் வரை எதையும் நம்ப மனசு மறுத்தது. வாகனம் எம்மை ஒரு இடத்தில் இறக்கிய போது அங்குதான் அண்ணன் நிற்பார் என நினைத்தேன். பின் அரை மணி நேரமாகக் காத்திருந்த போது அண்ணன் அங்கு வருவார் என்ற நினைப்பில் காத்திருந்தேன்.
ஆனால் வந்தது இன்னுமொரு வாகனம். போராளிகளின் மருத்துவனான, ரேகா ஓட்டி வந்தான். முதற் சந்திப்பிலேயே காலாகாலத்துக்கும் பரிச்சயமான ஒரு உறவு போல "அக்கா...! அக்கா..!" என்று உரிமையோடு இனிமையாகப் பேசினான்.
சில நிமிடங்களில் வாகனம், மரங்கள் குடை விரித்திருந்த ஒரு இடத்துக்குள் நுழைந்தது. முற்றத்தில் கதிரை போட்டுத் தமிழ்ச்செல்வன் அவர்கள் அமர்ந்திருந்தார். அதே சிரிப்புடன் எம்மை வரவேற்றார். உள்ளே வீடா..! அலுவலகமா..! தெரிய வில்லை. மின் விளக்கில் பல முகங்கள் தெரிந்தன.
சில நிமிட உரையாடல்களின் பின் இன்னொரு வாகனம் வந்தது. கேற்றடியில் சற்று இருள் சூழ்ந்திருந்தது.
ஆனாலும் இறங்கியவர்களில் தலைவர் பிரபாகரன் அவர்களும் இருக்கிறார் என்பதை அவர் நடையிலேயே கண்டு கொண்டேன். இப்போதுதான் மனசு முழுதாக நம்பிக்கை கொண்டது.
சந்திப்புக்கான பிரத்தியேகமான தனியாக இருந்த ஒரு கட்டிடத்துள் அவர்கள் நுழைய நாங்களும் அழைக்கப் பட்டோம்.
மதிப்புக்குரிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரே கண்டதும் எப்போதும் என் வாயில் சரளமாக வரும் வணக்கம் கூட வரமறுத்தது. `நா´ பேச மறந்து பின்னிக் கொண்டு பின் நின்றது. நம்ப முடியாதிருந்தது. சிரிப்பை மட்டும் உதிர்த்தேன்.
எல்லோரும் உள்ளே நுழைந்ததும் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.
அங்கும் தமிழ்ச்செல்வன் அவர்களுடனான சந்திப்பின் போது போலவே அழகாகவும் பண்பாகவும் உபசரித்தார்கள்.
சில நிமிடங்களில் தயக்கமும் தவிப்பும் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்தேன். அண்ணன் பிரபாகரன் மிகவும் இயல்பாகப் பேசினார். உரிமையோடு எம்மோடு அருகிருந்து பேசினார். நான் சிரிக்கும் போது "மயூரனின் சிரிப்புப் போலவே இருக்கிறது." என்றார். "இதே சுருள் தலைமயிர்தான் மயூரனுக்கும்" என்றார்.
பூநகிரித் தவளைப் பாய்ச்சலில் உடலம் கூடக் கிடைக்காமற் சிதறிப் போன மயூரனின் குறும்புகள் பற்றி நிறையச் சொன்னார். `தகடை´ மாற்றிக் கட்டிக் கொண்டு திரியும் விளையாட்டுத் தனங்களைப் பற்றிச் சொன்னார்.
மொறிஸ் பற்றிச் சொன்னார். ஆனால் "மொறிஸை சந்திக்க முடியாமற் போய் விட்டது." என்றார். மொறிஸ் ஒரு கிழமையில் அவரிடம் வருவதாக இருந்தானாம். அதற்கிடையில் பருத்தித்துறையில் விதையாகி விட்டான்.
"மயூரன்ரை அந்த எழுதுற அக்கான்ரை கடிதங்களை எனக்கு நல்லாப் பிடிக்கும். எல்லாரும் விட்டிட்டு வா எண்டுதான் கடிதங்கள் போடுவினம். ஆனால் அவ மட்டும் அப்பிடி எழுத மாட்டா. நம்பிக்கையும் உறுதியும் கூறி.... எழுதுவா." என்றார். அவர் குறிப்பிட்டது சந்திரா ரவீந்திரனை. புலம் பெயர்ந்து விட்ட எனது தங்கையைக் கூட அவர் இத்தனை ஞாபகம் வைத்திருப்பது எனக்குள் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது.
மறைந்த கவிஞர் தீட்சண்யன், பொட்டம்மானின் மகன் பார்த்திபனுக்கு ஆங்கில வகுப்புகள் எடுத்தது பற்றிச் சொன்னார்.
பலதரப்பட்ட உரையாடல்களின் மத்தியில் "சாப்பிடுவோம் வாங்கோ!" என அவர் அழைத்த போது ஆச்சரியப் பட்டுத்தான் போனேன். அரைமணி நேரம்தான் எமக்காக ஒதுக்குவார் என நினைத்தேன். ஏற்கெனவே கூடிய நேரம் கதைத்து விட்டோம். விருந்து வேறையா..? மனசு புளகாங்கிதமடைந்தது.
சாப்பாடு அந்த மாதிரி இருந்தது. டுபாய் பிட்டு மிகவும் மென்மையாகச் சுவையாக இருந்தது. சாப்பிடும் போது நிறையக் கதைத்தோம். மனம் விட்டுச் சிரித்தோம். பெண்களின் பிரச்சனைகளிலிருந்து அரசியல் வரை அலசினோம்.
பெண்களின் பிரச்சனைகள் பற்றிப் பேசும் போதுதான் அண்ணன் பிரபாகரன் வன்னியில் வாழ்ந்தாலும் எத்தகையதொரு முற்போக்குச் சிந்தனையுடன் இருக்கிறார் என்பதும் செயற் படுகிறார் என்பதும் தெரிந்தது. அவர் பெண்களுக்கான எல்லா உரிமைகளையும் கொடுக்கிறார். பெண்கள் தாழ்ந்து போவதில் எந்தவிதமான இஷ்டமும் அவருக்கு இல்லை. அங்கெல்லாம் அனேகமாக ஆண்கள்தான் சமைக்கிறார்கள். பெண்கள் சமையலில் முடங்கிப் போய்விடக் கூடாதென்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். பெண்களால் சமையல் தவிர்ந்த வேறு ஆக்க பூர்வமான பல வேலைகளைச் செய்ய முடியும் என்பதில் அவர் நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
சில பெண்கள் சொல்லச் சொல்லக் கேளாமல் சாப்பாட்டைக் குறைத்து விட்டு களத்தில் விரைவில் களைத்துப் போய் விடுகிறார்கள் என்று அக்கறையோடு கவலைப்பட்டார். நீச்சல் தெரிந்த பெண்நீச்சல்ஆசிரியர் இல்லாத ஆரம்ப கால கட்டத்தில் பெண்களுக்கு நீச்சல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்த முயன்ற போது எழுந்த கஷ்டங்களை விளக்கினார்.
சில போராளிகள் "ஆங்கிலத்தைப் படியுங்கோ படியுங்கோ." என்று சொன்னாலும் அக்கறைப் படுகிறார்கள் இல்லை. - என்று வருந்தினார்.
அவரோடு பேசும் போது ஆரோக்கியமான எதிர்காலத் தமிழ்சமூகத்தின் மீதான அவரது அக்கறை புரிந்தது.
பேச்சுத் திசைமாறித் திசைமாறி எனது கணவரின் நகைச்சுவைப் பேச்சுக்களினால் எழுந்த சிரிப்பலைகளோடு மீண்டும் சாப்பாட்டில் வந்து நின்றது. டுபாய் பிட்டும் கோழிக்கறியும் உண்மையில் சுவையாக இருந்தது. அண்ணனிடம் சொன்னேன். "டுபாய்புட்டு நல்லாயிருக்கு. எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு. " என்று. அதை எப்படிச் சமைப்பதெனவும் கேட்டேன். "சமைக்கிறவையளைக் கூப்பிட்டுத்தான் சொல்லோணும்." என்றார்.
இப்படியே ஓரு விடயமென்றில்லாமல் குடும்பம் அரசியல் போராட்டம்.... என்று பல் வேறு பட்ட கதைகளுடன் ஏறக்குறைய நான்கு மணித்தியாலங்கள் களிப்போடு கழிந்தன. சேர்ந்து புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்.
விடைபெறும் போது என்னால் நம்பவே முடியவில்லை. நான் அண்ணையைத்தான் சந்தித்திருக்கிறேன் என்பதை. அதற்கு மேல் என்னால் தலைவர் என்று சொல்ல முடியவில்லை. அவருடனான பொழுதுகள் அவ்வளவு நெருக்கமாக இருந்தன.
"எனது வேண்டுக்கோளுக்கமைய என்னை இவ்வளவு விரைவாகச் சந்தித்து மகிழ்ச்சிப் படுத்தியதற்கும் உங்கள் இனிய உபசரிப்புக்கும் மிகவும் நன்றி." என்று அண்ணையிடம் சொன்னேன்.
உடனே அண்ணன் "இல்லை, இல்லை, இதற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும். உங்கடை குடும்பத்திலை மூன்று பேரை நாட்டுக்காகக் குடுத்திருக்கிறீங்கள். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும்." என்றார். அவரது அந்த பெருமிதமற்ற பேச்சில் உண்மையிலேயே நான் நெகிழ்ந்து போனேன்.
அந்த நெகிழ்ச்சியோடே, எனது பயணத்துக்கு அர்த்தம் சொன்ன அந்த இனிமையான பொழுதுகளை மனதுக்குள் நிறைத்த படி புறப்பட்டோம். வெண்புறா வந்த பின்னும் இனிய நினைவுகள் என்னுள் நிறைந்திருந்தன.
அடுத்தநாள், எனக்கு அந்த டுபாய்பிட்டை அவித்துக் காட்ட என நிமலனையும், புகழோவியனையும் அண்ணை அனுப்பியிருந்தார்.
எனக்கு நம்பவே இயலாமல் இருந்தது. "எனக்கு அந்த டுபாய்பிட்டுப் பிடித்திருக்கிறது. அதை எப்படிச் சமைப்பது?" என்று ஒரு வார்த்தை கேட்டதற்காக அவர் இத்தனை அன்பாக நடந்து கொள்வார் என்று நான் துளியும் எதிர் பார்க்கவில்லை. அண்ணை என்னோடும் என்னுடைய குடும்பத்தோடும் மட்டும் அப்படிப் பழகவில்லை. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த அத்தனை உறவுகளின் குடும்பங்களுக்கும் அவர் மதிப்புக் கொடுத்து, அவர்களை எந்தளவு தூரம் தனக்குள் பூஜித்து வைத்திருக்கிறார் என்பதை அவரோடு பழகிய அந்த சிலமணி நேரங்களில் புரிந்து கொண்டேன்.
அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அவர் வெறுமனே ஒரு இராணுவத் தளபதியல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். அவரோடு கதைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அவர் ஒவ்வொரு போராளிக்கும் எப்படியெப்படி தனது இதயத்துள் இடம் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். எல்லோரும் நினைப்பார்கள். "ஆயுதந் தூக்கிப் போராடுபவர்கள் தானே!" என்று. அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பது அவரோடு நேரே பேசும் போதுதான் தெரிந்தது. போராளிகளின் மீது அவர் கொண்டிருந்த பாசமும் நெருக்கமும் என்னை வியக்க வைத்தன. மாவீரர்கள் எல்லோரையும் அவர் மனதில் நிறுத்தி வைத்திருப்பதை, எந்த மாவீரன் பற்றிப் பேசினாலும் அந்த மாவீரனைத் தன் நினைவில் கொண்டு வந்து அந்த மாவீரன் பற்றி "அவன் இப்படி! அவன் அப்படி!" என்று அவர் சொன்ன போது அறிந்து நான் வியந்து போனேன். தலைவர் என்பதன் அர்த்தத்தை அங்குதான் புரிந்து கொண்டேன்.
வன்னியின் நேர்த்தி மட்டுமா? எது விடயத்திலும் அவர் காட்டும் ஒழுங்கு. தானே அந்த ஒழுங்கைக் கடைப் பிடிக்கும் கண்ணியமான அழகு. உண்மையான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள். என்னுள் எல்லாமே ஆழ்ந்த அதிசயமான வியப்பைத்தான் ஏற்படுத்தின.
எல்லோரும் நினைப்பது போல போராட்டம் மட்டுந்தான் அவரது குறியல்ல. ஒரு சுதந்திர தமிழீழத்தையும் அங்கு ஒரு சுதந்திர சமுதாயத்தையும் உருவாக்குவதிலேயே அவர் கவனமும் செயற்பாடும் இருக்கிறது.
பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பு. போராட்டக் களங்களுக்குள் எந்த தவறுகளும் ஏற்பட்டு களம் களங்கப் பட்டு விடாதபடி அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகள்...... சொல்லி முடியாத பிரமிப்பு என்னுள்.
அண்ணையுடனான அந்தப் பொழுதுகள் எதையுமே என்னால் மறக்க முடியவில்லை. இப்போது கூட - அண்ணையைச் சந்தித்த அந்தப் பொழுதுகளும் அண்ணை எம்மோடு பழகியவிதமும் மிகவும் இனிமையாக பசுமையாக என்னுள்ளே பதிந்திருக்கின்றன.
நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு..! து}க்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன்.
கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும் - போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின் -
இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன் மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.
அண்ணன் - அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.
வாய்க்கு வாய் அண்ணை என்றும் அண்ணன் என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம் - ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து தளிர்த்து சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. "நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்." எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.
என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காக தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு அளவளாவ வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.
என் ஆசைக்கு அணை போட முடியாத கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.
நேற்று முன் தினம் - மாலை நான்கு மணியளவில் வெயிலில் மூழ்கியிருந்த கிளிநொச்சி வெண்புறா நிறுவனத்தில் நிழலும் தண்மையும் தேடி வரவேற்பறையின் ஓர் மூலையில் நான் அமர்ந்திருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆளனுப்பியிருந்தார். "எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் ஏழு மணிக்கு வாகனம் அனுப்புவதாகவும்" சொல்லி விட்டிருந்தார்.
ஏழு மணிக்குச் சில நிமிடங்கள் முன்னரே வாகனம் வந்தது. போனோம்.
நட்பு நிறைந்த பார்வைகள் எம்மை வரவேற்க அரசியல் துறை அலுவலகம் தனக்கே உரிய பாணியில் உள்ளேயும் வெளியேயும் அழகாகக் காட்சி அளித்தது.
அதே சிரிப்பு........! எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்த அதே சிரிப்புடன் தமிழ்ச்செல்வன் அவர்கள் எம்மை வரவேற்றார்.
அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார்.
களத்தில் காவியமான எனது தம்பிமாரைப் பற்றிக் கதைத்தார். முன்னர் பருத்தித்துறையில் புத்தக வெளியீடு செய்த தங்கை பற்றி விசாரித்தார். கதைகள் பல திசைகளிலும் விரிந்திருந்தன.
அப்போதுதான் தமிழ்ச்செல்வன் அவர்கள் என்னைத் தனியாகக் கூப்பிட்டு அந்த இனிய செய்தியைச் சொன்னார். "வியாழக்கிழமை (அண்ணன்) உங்களைச் சந்திக்க விரும்புறார்." என்றார். எனக்கு ஒரு தரம் மனம் சிலிர்த்தது.
அண்ணையைச் சந்திப்பது பற்றி தமிழ்ச்செல்வன் அவர்கள் சொன்ன அந்தக் கணத்திலிருந்து நான் பதட்டமாகி விட்டேன்.
வெளியில் வந்து அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த போதோ சமையல் செய்தவர்களிடமும் உணவு பரிமாறியவர்களிடமும் நன்றி கூறி விடைபெற்ற போதோ நான் ஒன்றிலும் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் பதட்டமாகவே இருந்தேன்.
உண்மைதானா..? மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நான் சந்திக்கப் போகிறேனா..? சந்தோசம்..! சந்தேகம்..! பதட்டம்..! பரபரப்பு..!..... எல்லாம் என்னுள். இன்று காலை தமிழச்செல்வன் அவர்கள் வெண்புறா வரை வந்து "மாலை நாலுமணிக்கு வாகனம் வரும்." என்று சொன்ன போதும், எனது படபடப்புகள் குறைய வில்லை.
நான்கு மணிக்கு வருவதாகச் சொன்ன வாகனம் சற்றுத் தாமதமாகத்தான் வந்தது. போர்pன் அனர்த்தங்களால் குழி விழுந்து போயிருந்த வீதியில் வாகனம் ஏறி இறங்கிச் சென்ற போது நாங்கள் குலுங்கினோம்.
கூட வந்தவரின் சற்றலைற் தொலைபேசி சிணுங்கினாலே "எங்கே.. இன்று எம்மால் அண்ணையைச் சந்திக்க முடியாது." என்று தகவல் சொல்லி விடுவார்களோ என்று! மனசு பயப்பட்டது.
அண்ணனைச் சந்திக்கும் வரை எதையும் நம்ப மனசு மறுத்தது. வாகனம் எம்மை ஒரு இடத்தில் இறக்கிய போது அங்குதான் அண்ணன் நிற்பார் என நினைத்தேன். பின் அரை மணி நேரமாகக் காத்திருந்த போது அண்ணன் அங்கு வருவார் என்ற நினைப்பில் காத்திருந்தேன்.
ஆனால் வந்தது இன்னுமொரு வாகனம். போராளிகளின் மருத்துவனான, ரேகா ஓட்டி வந்தான். முதற் சந்திப்பிலேயே காலாகாலத்துக்கும் பரிச்சயமான ஒரு உறவு போல "அக்கா...! அக்கா..!" என்று உரிமையோடு இனிமையாகப் பேசினான்.
சில நிமிடங்களில் வாகனம், மரங்கள் குடை விரித்திருந்த ஒரு இடத்துக்குள் நுழைந்தது. முற்றத்தில் கதிரை போட்டுத் தமிழ்ச்செல்வன் அவர்கள் அமர்ந்திருந்தார். அதே சிரிப்புடன் எம்மை வரவேற்றார். உள்ளே வீடா..! அலுவலகமா..! தெரிய வில்லை. மின் விளக்கில் பல முகங்கள் தெரிந்தன.
சில நிமிட உரையாடல்களின் பின் இன்னொரு வாகனம் வந்தது. கேற்றடியில் சற்று இருள் சூழ்ந்திருந்தது.
ஆனாலும் இறங்கியவர்களில் தலைவர் பிரபாகரன் அவர்களும் இருக்கிறார் என்பதை அவர் நடையிலேயே கண்டு கொண்டேன். இப்போதுதான் மனசு முழுதாக நம்பிக்கை கொண்டது.
சந்திப்புக்கான பிரத்தியேகமான தனியாக இருந்த ஒரு கட்டிடத்துள் அவர்கள் நுழைய நாங்களும் அழைக்கப் பட்டோம்.
மதிப்புக்குரிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரே கண்டதும் எப்போதும் என் வாயில் சரளமாக வரும் வணக்கம் கூட வரமறுத்தது. `நா´ பேச மறந்து பின்னிக் கொண்டு பின் நின்றது. நம்ப முடியாதிருந்தது. சிரிப்பை மட்டும் உதிர்த்தேன்.
எல்லோரும் உள்ளே நுழைந்ததும் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.
அங்கும் தமிழ்ச்செல்வன் அவர்களுடனான சந்திப்பின் போது போலவே அழகாகவும் பண்பாகவும் உபசரித்தார்கள்.
சில நிமிடங்களில் தயக்கமும் தவிப்பும் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்தேன். அண்ணன் பிரபாகரன் மிகவும் இயல்பாகப் பேசினார். உரிமையோடு எம்மோடு அருகிருந்து பேசினார். நான் சிரிக்கும் போது "மயூரனின் சிரிப்புப் போலவே இருக்கிறது." என்றார். "இதே சுருள் தலைமயிர்தான் மயூரனுக்கும்" என்றார்.
பூநகிரித் தவளைப் பாய்ச்சலில் உடலம் கூடக் கிடைக்காமற் சிதறிப் போன மயூரனின் குறும்புகள் பற்றி நிறையச் சொன்னார். `தகடை´ மாற்றிக் கட்டிக் கொண்டு திரியும் விளையாட்டுத் தனங்களைப் பற்றிச் சொன்னார்.
மொறிஸ் பற்றிச் சொன்னார். ஆனால் "மொறிஸை சந்திக்க முடியாமற் போய் விட்டது." என்றார். மொறிஸ் ஒரு கிழமையில் அவரிடம் வருவதாக இருந்தானாம். அதற்கிடையில் பருத்தித்துறையில் விதையாகி விட்டான்.
"மயூரன்ரை அந்த எழுதுற அக்கான்ரை கடிதங்களை எனக்கு நல்லாப் பிடிக்கும். எல்லாரும் விட்டிட்டு வா எண்டுதான் கடிதங்கள் போடுவினம். ஆனால் அவ மட்டும் அப்பிடி எழுத மாட்டா. நம்பிக்கையும் உறுதியும் கூறி.... எழுதுவா." என்றார். அவர் குறிப்பிட்டது சந்திரா ரவீந்திரனை. புலம் பெயர்ந்து விட்ட எனது தங்கையைக் கூட அவர் இத்தனை ஞாபகம் வைத்திருப்பது எனக்குள் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது.
மறைந்த கவிஞர் தீட்சண்யன், பொட்டம்மானின் மகன் பார்த்திபனுக்கு ஆங்கில வகுப்புகள் எடுத்தது பற்றிச் சொன்னார்.
பலதரப்பட்ட உரையாடல்களின் மத்தியில் "சாப்பிடுவோம் வாங்கோ!" என அவர் அழைத்த போது ஆச்சரியப் பட்டுத்தான் போனேன். அரைமணி நேரம்தான் எமக்காக ஒதுக்குவார் என நினைத்தேன். ஏற்கெனவே கூடிய நேரம் கதைத்து விட்டோம். விருந்து வேறையா..? மனசு புளகாங்கிதமடைந்தது.
சாப்பாடு அந்த மாதிரி இருந்தது. டுபாய் பிட்டு மிகவும் மென்மையாகச் சுவையாக இருந்தது. சாப்பிடும் போது நிறையக் கதைத்தோம். மனம் விட்டுச் சிரித்தோம். பெண்களின் பிரச்சனைகளிலிருந்து அரசியல் வரை அலசினோம்.
பெண்களின் பிரச்சனைகள் பற்றிப் பேசும் போதுதான் அண்ணன் பிரபாகரன் வன்னியில் வாழ்ந்தாலும் எத்தகையதொரு முற்போக்குச் சிந்தனையுடன் இருக்கிறார் என்பதும் செயற் படுகிறார் என்பதும் தெரிந்தது. அவர் பெண்களுக்கான எல்லா உரிமைகளையும் கொடுக்கிறார். பெண்கள் தாழ்ந்து போவதில் எந்தவிதமான இஷ்டமும் அவருக்கு இல்லை. அங்கெல்லாம் அனேகமாக ஆண்கள்தான் சமைக்கிறார்கள். பெண்கள் சமையலில் முடங்கிப் போய்விடக் கூடாதென்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். பெண்களால் சமையல் தவிர்ந்த வேறு ஆக்க பூர்வமான பல வேலைகளைச் செய்ய முடியும் என்பதில் அவர் நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
சில பெண்கள் சொல்லச் சொல்லக் கேளாமல் சாப்பாட்டைக் குறைத்து விட்டு களத்தில் விரைவில் களைத்துப் போய் விடுகிறார்கள் என்று அக்கறையோடு கவலைப்பட்டார். நீச்சல் தெரிந்த பெண்நீச்சல்ஆசிரியர் இல்லாத ஆரம்ப கால கட்டத்தில் பெண்களுக்கு நீச்சல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்த முயன்ற போது எழுந்த கஷ்டங்களை விளக்கினார்.
சில போராளிகள் "ஆங்கிலத்தைப் படியுங்கோ படியுங்கோ." என்று சொன்னாலும் அக்கறைப் படுகிறார்கள் இல்லை. - என்று வருந்தினார்.
அவரோடு பேசும் போது ஆரோக்கியமான எதிர்காலத் தமிழ்சமூகத்தின் மீதான அவரது அக்கறை புரிந்தது.
பேச்சுத் திசைமாறித் திசைமாறி எனது கணவரின் நகைச்சுவைப் பேச்சுக்களினால் எழுந்த சிரிப்பலைகளோடு மீண்டும் சாப்பாட்டில் வந்து நின்றது. டுபாய் பிட்டும் கோழிக்கறியும் உண்மையில் சுவையாக இருந்தது. அண்ணனிடம் சொன்னேன். "டுபாய்புட்டு நல்லாயிருக்கு. எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு. " என்று. அதை எப்படிச் சமைப்பதெனவும் கேட்டேன். "சமைக்கிறவையளைக் கூப்பிட்டுத்தான் சொல்லோணும்." என்றார்.
இப்படியே ஓரு விடயமென்றில்லாமல் குடும்பம் அரசியல் போராட்டம்.... என்று பல் வேறு பட்ட கதைகளுடன் ஏறக்குறைய நான்கு மணித்தியாலங்கள் களிப்போடு கழிந்தன. சேர்ந்து புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்.
விடைபெறும் போது என்னால் நம்பவே முடியவில்லை. நான் அண்ணையைத்தான் சந்தித்திருக்கிறேன் என்பதை. அதற்கு மேல் என்னால் தலைவர் என்று சொல்ல முடியவில்லை. அவருடனான பொழுதுகள் அவ்வளவு நெருக்கமாக இருந்தன.
"எனது வேண்டுக்கோளுக்கமைய என்னை இவ்வளவு விரைவாகச் சந்தித்து மகிழ்ச்சிப் படுத்தியதற்கும் உங்கள் இனிய உபசரிப்புக்கும் மிகவும் நன்றி." என்று அண்ணையிடம் சொன்னேன்.
உடனே அண்ணன் "இல்லை, இல்லை, இதற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும். உங்கடை குடும்பத்திலை மூன்று பேரை நாட்டுக்காகக் குடுத்திருக்கிறீங்கள். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும்." என்றார். அவரது அந்த பெருமிதமற்ற பேச்சில் உண்மையிலேயே நான் நெகிழ்ந்து போனேன்.
அந்த நெகிழ்ச்சியோடே, எனது பயணத்துக்கு அர்த்தம் சொன்ன அந்த இனிமையான பொழுதுகளை மனதுக்குள் நிறைத்த படி புறப்பட்டோம். வெண்புறா வந்த பின்னும் இனிய நினைவுகள் என்னுள் நிறைந்திருந்தன.
அடுத்தநாள், எனக்கு அந்த டுபாய்பிட்டை அவித்துக் காட்ட என நிமலனையும், புகழோவியனையும் அண்ணை அனுப்பியிருந்தார்.
எனக்கு நம்பவே இயலாமல் இருந்தது. "எனக்கு அந்த டுபாய்பிட்டுப் பிடித்திருக்கிறது. அதை எப்படிச் சமைப்பது?" என்று ஒரு வார்த்தை கேட்டதற்காக அவர் இத்தனை அன்பாக நடந்து கொள்வார் என்று நான் துளியும் எதிர் பார்க்கவில்லை. அண்ணை என்னோடும் என்னுடைய குடும்பத்தோடும் மட்டும் அப்படிப் பழகவில்லை. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த அத்தனை உறவுகளின் குடும்பங்களுக்கும் அவர் மதிப்புக் கொடுத்து, அவர்களை எந்தளவு தூரம் தனக்குள் பூஜித்து வைத்திருக்கிறார் என்பதை அவரோடு பழகிய அந்த சிலமணி நேரங்களில் புரிந்து கொண்டேன்.
வன்னியின் நேர்த்தி மட்டுமா? எது விடயத்திலும் அவர் காட்டும் ஒழுங்கு. தானே அந்த ஒழுங்கைக் கடைப் பிடிக்கும் கண்ணியமான அழகு. உண்மையான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள். என்னுள் எல்லாமே ஆழ்ந்த அதிசயமான வியப்பைத்தான் ஏற்படுத்தின.
எல்லோரும் நினைப்பது போல போராட்டம் மட்டுந்தான் அவரது குறியல்ல. ஒரு சுதந்திர தமிழீழத்தையும் அங்கு ஒரு சுதந்திர சமுதாயத்தையும் உருவாக்குவதிலேயே அவர் கவனமும் செயற்பாடும் இருக்கிறது.
பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பு. போராட்டக் களங்களுக்குள் எந்த தவறுகளும் ஏற்பட்டு களம் களங்கப் பட்டு விடாதபடி அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகள்...... சொல்லி முடியாத பிரமிப்பு என்னுள்.
அண்ணையுடனான அந்தப் பொழுதுகள் எதையுமே என்னால் மறக்க முடியவில்லை. இப்போது கூட - அண்ணையைச் சந்தித்த அந்தப் பொழுதுகளும் அண்ணை எம்மோடு பழகியவிதமும் மிகவும் இனிமையாக பசுமையாக என்னுள்ளே பதிந்திருக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)