எனக்கு ஒண்டுமே பிடிக்கேல்லை. எல்லாரிலையும் கோபம் கோபமா வருது. எதுக்கெடுத்தாலும் "பொம்பிளைப் பிள்ளை நீ" எண்டு கொண்டு......! ஏன்தான் இப்பிடிப் பொம்பிளைப் பிள்ளையாப் பிறந்தனோ......!
ஞாயிற்றுக் கிழமை எண்டால் எல்லாரும் எவ்வளவு சந்தோசப் படுவினம். எனக்கு மட்டும் ஞாயிறுகள் எல்லாம் ஏன்தான் வருதோ எண்டிருக்கு.
பின்னை என்ன......! ஞாயிறு எண்டு சொல்லி என்னைப் படுக்க கூட விடமாட்டினமாம். பொம்பிளைப் பிள்ளை இப்பிடி வெய்யில் படு மட்டும் நித்திரை கொள்ளுறதோ.......! எண்டு அப்பா சத்தம் போட்டு எழுப்பிப் போட்டார். இந்த அப்பா எப்பவும் இப்பிடித்தான். அம்மாவும் அப்பா சொல்லுறதுக்கு மறுத்து ஒண்டும் சொல்லமாட்டா.
அம்மா சொல்லலாம் தானே "அவளை ஏனப்பா எழுப்பிறீங்கள்.
ஞாயிற்றுக்கிழமைதானே கொஞ்சம் படுக்கட்டுமன் விடுங்கோ" எண்டு. அதில்லை, அப்பா ஊதுற சங்கை தான் இன்னும் கொஞ்சம் பெலத்தா ஊதுறதுதான் தனக்கு அழகு எண்டு நினைக்கிறா அம்மா. நான் என்ன செய்யிறது....?
என்ரை வகுப்புப் பிள்ளையளெல்லாம் சொல்லுங்கள், தாங்கள் ஞாயிற்றுக் கிழமையிலை பன்ரண்டு மணிமட்டும் நித்திரை கொண்ட கதையளையும், இரண்டு மணிமட்டும் நித்திரை கொண்ட கதையளையும். அதையெல்லாம் கேக்க எனக்குப் பொறாமையா இருக்கும். எனக்கு அதுகளைப் போல நீண்ட நித்திரைக்கெல்லாம் வழியே இல்லை.
எனக்குப் பார்த்தால் சில வேளை அம்மாக்கே ஞாயிறிலை கன நேரம் நித்திரை கொள்ள ஆசை இருக்கிற போலை தெரியும். ஆனால் அப்பா விடியக் காத்தாலை கண்ணை முழிச்சிடுவார். அவருக்கு தேத்தண்ணி குடிக்கிறதுக்கு அம்மா வேணும். ஒரு தேத்தண்ணி போடுறது பெரிய வேலையே. எழும்பிப் போய் போட்டுக் குடிக்கிறதுதானே. ஒரு தேத்தண்ணிக்காண்டி அம்மான்ரை நித்திரையைக் குழப்பி எழுப்போணுமே. ஆனாலும் எழுப்பிப் போடுவார். அம்மா பெட் (Bed) தேத்தண்ணி குடுத்தாப் போலைதான் அவர் படுக்கையை விட்டு எழும்புவார்.
இந்த பெட்-கோப்பி, பெட்-ரீ எல்லாம் வெளிநாட்டு ஸ்ரைலிலை நடக்கும். அந்த ஸ்ரைலும் அப்பாக்கு மட்டும்தான். எழும்பி பல்லைத் தீட்டி முகத்தைக் கழுவிப் போட்டு தேத்தண்ணியைக் குடிக்கலாம்தானே . கேட்கத்தான் மனம் வரும். ம்..கும் பிறகு நான் கேட்கப் போக அப்பா கத்த பிறகு அம்மா கத்த... ஏன் அந்த களேபரமெல்லாம்! அந்தக் களேபரத்தோடை என்ரை பிரச்சனை தீர்ந்திடுமெண்டாலும் பரவாயில்லை. அப்பா பிடிச்ச முயலுக்கு எப்பவும் மூண்டு கால்தான். அதை ஓமெண்டு சொல்லிச் சொல்லியே அம்மாக்கும் பழகீட்டுது. அதுக்காண்டி நானும் ஓமெண்டேலுமே......!
நித்திரை மட்டும் தான் பிரச்சனை எண்டால் பரவாயில்லை. ஞாயிற்றுக் கிழமை எண்டாலே நாள் முழுக்க நான் இந்த வீட்டுக்குள்ளைதான் அடைஞ்சு போய்க் கிடக்கோணும். அண்ணா தம்பி ரண்டு பேரும் எவ்வளவு நேரம் வேணுமெண்டாலும் மூசி மூசி நித்திரை கொண்டிட்டு எழும்புவாங்கள். பிறகு சாப்பிட்டிட்டு ஊர் சுத்தப் போடுவாங்கள்.
நான் மட்டும் இங்கை தனிய இருந்து எப்பவும் இந்த ரீவீ யைப் பார்த்துக் கொண்டு..., எனக்கு அப்பாவிலை சரியான கோபம் கோபமாய் வருது. அம்மாவாவது சில நேரம் சிலதுக்கு அநுமதிப்பா. ஆனால் அவவும் சமயம் வாற போது அப்பான்ரை பக்கம் சாய்ஞ்சிடுவா.
இண்டைக்கு மிகைலாவின்ரை பிறந்தநாள். ஆறு மணியிலை இருந்து பத்து மணி வரை பார்ட்டி. என்ரை வகுப்புப் பிள்ளையள் எல்லாரும் போவினம்.
"அதென்ன இரவிலை பார்ட்டி! நாங்கள் யேர்மனியிலை வாழ்ந்தாலும் சிறீலங்கன்ஸ்தான். அதை மறந்திடாதை." எண்டு அப்பா கோவமாச் சொல்லித் தடுத்துப் போட்டு குசினிக்குள்ளை போய் அம்மாட்டை "இஞ்சை பாரும், இப்பிடி பார்ட்டி அது இதெண்டு போய்த்தான் பிள்ளையள் கெட்டுப் போறதுகள். அவளுக்குச் சொல்லி வையும், இனி இப்பிடியான விசயங்களுக்குப் போப்போறன் எண்டு என்னைக் கேட்கக் கூடாதெண்டு." எண்டு கத்துறார். எனக்கு அழோணும் போலை இருந்திச்சு.
நான் அழுதாலும் இவையளுக்கொண்டும் பிரச்சனையில்லை. அம்மாவைப் பார்த்தால் சிலவேளை எனக்காண்டிக் கவலைப் படுறா போலை இருக்கும். ஆனால் ஒண்டும் சொல்ல மாட்டா.
ஏதோ வெளிநாட்டுக் காரர் பிள்ளையளை வளர்க்கிறது சரியில்லை எண்ட மாதிரி என்ரை அப்பா, அம்மா, அவையளின்ரை சினேகிதர்கள் எல்லாரும் சேர்ந்து கதைப்பினம். ஆனால் உண்மையிலை வெளிநாட்டுக் காரர்தான் பிள்ளையளின்ரை மனஉணர்வுகளுக்கு மதிப்புக் குடுத்து வளர்க்கினம் எண்டது இவையளுக்குத் தெரியேல்லை. இதுகளை நான் சொல்லப் போனால் இவையள் கேட்பினமே..!
ஒரு பதினாலு வயசுப் பிள்ளைக்கு எத்தினை ஆசையள் இருக்கும். என்ரை வயசுப் பிள்ளையளெல்லாம் எவ்வளவு சந்தோஷமா எங்கையெல்லாம் சுத்திக் கொண்டு திரியுதுகள். நான் மட்டும் இப்பிடி வீட்டுக்குள்ளை அடைஞ்சு போய்க் கிடக்கோணும் எண்டு இவையள் நினைக்கிறது சரியோ....! என்னெண்டு நான் இதையெல்லாம் இவையளுக்கு விளங்கப் படுத்துறதோ தெரியேல்லை.
வெளியிலை போனால் இப்ப என்ன வந்திட்டுது. அண்ணா, தம்பியவையள் மட்டும் நல்ல ஹாயா எங்கையோ எல்லாம் சுத்திப் போட்டு வருவினம். அதுக்கு அம்மாவும் அப்பாவும் ஒண்டுமே சொல்லமாட்டினம். ஏனெண்டால் அவையள் ஆம்பிளைப் பிள்ளையளாம்.
அவையள் சுத்திப் போட்டு வந்து "ஒரு தேத்தண்ணி போடு" எண்டுவினை. "ஏன்... நீ போட்டுக் குடியன்" எண்டு சொல்லத்தான் எனக்கு மனம் வரும். அதுக்கிடையிலை அம்மாவே சொல்லிப் போடுவா "பிள்ளை அவனுக்கு அந்த வடையையும் எடுத்துக் குடு" எண்டு. ஏன் ஆம்பிளைப் பிள்ளையளுக்கு கைகால் ஒண்டும் இல்லையோ...! ஏன் நான் எடுத்துக் குடுக்கோணும்...! இதையெல்லாம் கேட்கேணும் போலை இருக்கும். என்னெண்டு கேட்கிறது..!
அவங்களும் லேசில்லை. சும்மா புதுமை கதைப்பாங்கள். சேர்ட்டை மாத்துற மாதிரி அடிக்கடி கேர்ள்ல் பிரண்டையும் மாத்துவாங்கள். தாங்கள் வெளிநாட்டுப் பெட்டையளோடை உதட்டோடை உதடு உரசி அன்பைப் பரிமாறுறது ஒண்டும் தப்பில்லையாம். ஆனால் தங்கடை சகோதரி மட்டும் பெடியங்களைக் கண்டால் சிரிப்பைக் கூட அளந்துதான் உதிர்க்கோணுமாம்.
அது மட்டுமே, தங்களுக்கு மனைவியா வரப் போறவள் பயங்கர சுத்தமா இருக்கோணுமாம். அவள் கண்டிப்பா தாயகத்திலை இருந்து அடக்கமான பண்பான தமிழச்சியா வரோணுமாம், எப்பிடியிருக்கு இவையளின்ரை நியாயங்கள்.
இதுகளைப் பற்றி நான் மூச்சே விடக்கூடாதாம். ஏனெண்டால் அம்மா அப்பாவும் அண்ணாவையளின்ரை கொள்கையளுக்கு நல்ல சப்போர்ட். அம்மாவோடை சாடை மாடையா இதைப் பற்றி ஒரு நாள் கதைச்சுப் பார்த்தன். அவை ஆம்பிளைப் பிள்ளையளாம். அம்மா சொல்லி அந்த சப்டரையே என்னைத் தொடர விடாமல் குளோஸ் பண்ணீட்டா.
அம்மாவாலை என்னண்டு தான் இப்பிடி எல்லாம் வாழ முடியுதோ. எனக்கெண்டால் தெரியேல்லை. வாற கோபத்துக்கு எல்லாருக்கும் ஏதாவது சொல்லோணும் போலை கிடக்கு. என்னெண்டு சொல்லுறது...! உடனை அப்பா கத்துவார். "உப்பிடி வாய் காட்டிப் பழகாதை. பொம்பிளைப் பிள்ளை மாதிரியே வளர்ந்திருக்கிறாய்...!" எண்டு. அது மட்டுமே...! பிறகு அம்மாவோடையும் கத்துவார். "நல்ல வளர்ப்புத்தான் வளர்த்து வைச்சிருக்கிறீர்" எண்டு.
எனக்கு ஒண்டு விளங்கேல்லை. ஏன் பொம்பிளையள் ஏதும் கதைச்சால் அதை வாய் காட்டுறது எண்டு சொல்லோணும். என்ரை கருத்தை நான் சொல்லுறதுக்கு எனக்கு உரிமை இல்லையே! எனக்கு எல்லாரையும் விட அப்பாவிலைதான் பயங்கரக் கோவம். அப்பாவைக் கூப்பிட்டு இதையெல்லாம் கேக்கோணும் எண்டு இருக்கும்.
ஏதோ சனநாயகம், சர்வாதிகாரம்... எண்டெல்லாம் பெரிய அரசியல் கதைப்பார் அப்பா. இது கூட ஒரு வித சர்வாதிகாரம்தானே.
என்னை யேர்மன் ஸ்ரைலிலை பிறந்தநாள் விழாவுக்குப் போக வேண்டாமெண்டு சொல்லிப் போட்டு, தான் மட்டும் வெளிநாட்டு ஸ்ரைலிலை மேசையிலை போத்தலுகளும் கிளாசுகளுமா வைச்சுக் கொண்டிருந்து தன்ரை சினேகிதர்களோடை குடிச்சுக் கொண்டிருக்கிறார். எனக்கு ஒரே எரிச்சலும் கோபமும்தான் வருது. எவ்வளவு நேரத்துக்கெண்டு இந்த ரீவீயைப் (தொலைக்காட்சி) பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுவும் அப்பாக்கும் அவற்றை சினேகிதருக்கும் பிடிச்ச நிகழ்ச்சியளை மட்டும்.
அம்மா ரேஸ்ருக்கு (aste) ரோல் செய்து அப்பாவைக்குக் குடுத்திட்டு இடியப்பமும் அவிச்சு கறி, பொரியல் சொதியெல்லாம் செய்திட்டா. அப்பாவையள் ரோல்ஸ்சை சாப்பிட்டு முடிச்சிட்டினம். அதாலை ரேஸ்ருக்கு (taste) க்கு இன்னும் ஏதாவது வேணுமாம். அப்பா வந்து அம்மான்ரை காதுக்குள்ளை குசுகுசுத்துப் போட்டுப் போறார். அம்மா களைச்சுப் போட்டா எண்டுறது எனக்குத் தெரியுது. ஆனாலும் அம்மா முடிக்கி விட்ட பொம்மை மாதிரி வாயை மூடிக் கொண்டு கட்லட் செய்ய ஆயுத்தப் படுத்துறா. என்னைக் கூப்பிட்டு வெங்காயம் வெட்டித் தரச் சொல்லுறா.
எனக்கு அம்மாவோடை கதைக்கக் கூடப் பிடிக்கேல்லை. நாளைக்கு பள்ளிக்கூடத்திலை என்ரை பிரண்ட்ஸ் (Friends) எல்லாரும் கேட்பினம் ஏன் நீ Birthdaypartyக்கு வரேல்லை" எண்டு. ஏதாவது பொய் சொல்லோணும். அதுகளுக்கு இப்ப என்ரை நிலைமை ஒரளவு விளங்கீட்டுது. "துருக்கி அப்பாமார் மாதிரி உன்ரை அப்பாவும் பொல்லாதவரே? உன்னை ஒரு இடமும் விடமாட்டாரே?" எண்டு அண்டைக்கு ஸ்ரெபி கேட்டவள். எனக்கு எவ்வளவு வெக்கமா இருந்ததெண்டு இந்த அம்மாக்கோ, அப்பாக்கோ தெரியுமே?
இதுக்குள்ளை பிறகு அம்மா சொல்லுறா "பிள்ளை இந்தக் கோப்பையளைக் கழுவு" எண்டு. "மாட்டன்" எண்டு சொல்லோணும் போலை பயங்கரக்கோவம் எனக்கு வருது. ஆனால் என்னெண்டு சொல்லுறது. பேசாமல் கோப்பையளோடை சேர்த்து என்ரை ஆசையளையும் கழுவிக் கொண்டிருக்கிறன்.
ஒரு மனசு.
2001
Monday, December 12, 2005
Thursday, December 08, 2005
பெண்மனசு - 5 (பிரச்சனை)
இண்டைக்கு எப்பிடியாவது இந்தப் பிரச்சனையைப் பற்றி இவரோடை கதைச்சிடோணும். நேற்றே கதைச்சிருப்பன். ஆனால் நான் வேலையாலை வந்த நேரம் அவர் ஆரோடையோ தொலைபேசியிலை கதைச்சுக் கொண்டிருந்தார்.
கதைச்சு முடிஞ்சு வரட்டும் கதைப்பம் எண்டு நினைச்சுக் கொண்டு நான் என்ரை வேலையளைச் செய்து கொண்டிருந்தன்.
கதைச்சு முடிச்சிடோணும் எண்ட நினைப்பு மனசுக்கை இருந்ததாலையோ என்னவோ என்ரை வேலையள் சரியா ஓட மறுத்துக் கொண்டு நின்றன. தேநீரைப் போட்டுக் குடுத்திட்டு ஏதோ ஒரு ஒட்டாத் தன்மையோடை கணினிக்குள் புகுந்து, குசினுக்குள் அடுக்கி....
ம்...கும். அவர் இன்னும் கதைச்சு முடியேல்லை. நீட்டிலை கதைச்சுக் கொண்டே இருந்தார். சரியாக் காது குடுத்துப் பார்த்தன். ஒவ்வொரு விசயத்தையும் இரண்டு மூண்டு தரமா அளந்து கொண்டிருந்தார். இதெல்லாம் தேவையோ எண்டு நினைக்கிற விசயங்களையும் கதைச்சுக் கொண்டிருந்தார். பெண்களைக் கண்களா மதிக்கிறா மாதிரியும் இடையிடையிலை கதைச்சு, எதிர் முனையிலை இருக்கிறவனிட்டை தன்னைப் பற்றிய இமேஜ்யை உயர்த்த முயற்சித்தார்.
அரைகுறையா அவற்றை கதை என்ரை காதிலை விழுறதையும் என்னாலை தவிர்க்க முடியேல்லை. நேரமும் பத்து மணியாகீட்டுது. பத்துமணி எண்டத்தான் நான் வேலையாலை வந்து இரண்டு மணித்தியாலங்கள் கரைந்து விட்டன எண்டதும் உறைச்சுது.
சா... யன்னலுக்கு வெளியிலை ஒரே கும்மிருட்டு. வேலையிடத்திலை என்ரை தோழியர் "கோப்பி குடிக்கப் போவம் வா" எண்டு கேட்டவை. நான் "எனக்கு இண்டைக்குப் பஞ்சியா இருக்கெண்டு" பொய் சொல்லிப் போட்டு வந்திட்டன். லேற்றாப் போனால் இந்த மனுசன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் எண்டு சொன்னால் அதுகள் "ஏன் உன்ரை மனுசன் உன்னை வீட்டிலை தனிய விட்டிட்டு எத்திரை தரம் எங்கையோ எல்லாம் சுத்திப் போட்டு வந்தவன்" எண்டு சொல்லிப் பேசுங்கள்.
பேசாமல் அதுகளோடை போய் நாலு கதை கதைச்சு மனம் விட்டுச் சிரிச்சிட்டு வந்திருக்கலாம்.
இன்னும் மனுசன் தொலைபேசியிலை அளக்குது. மூன்று மணித்தியாலமா நானும் உம்மாண்டி மாதிரி முட்டு வீட்டுக்குள்ளை தட்டுப் பட்டுக் கொண்டு திரியிறன். இந்தப் பிரச்சனையை இண்டைக்கும் கதைச்சு முடிக்கேலாது போல கிடக்கு.
சரி சரி ஒரு மாதிரி மனுசன் தொலைபேசியை வைச்சிட்டுது. ஆனால் நேரந்தான் பதினொரு மணியாச்சு. இப்பப் போய் இந்தப் பிரச்சனையைக் கதைக்கேலாது. அவ்வளவு அவசரமா கதைச்சு முடிக்கிற விசயமுமில்லை இது. அதோடை இப்ப போய் நான் ஏதாவது கதைக்கு மனுசன் படுக்கிற நேரம் பிரச்சனையான கதையளைக் கதைக்காதை எண்டு சினக்க.. வேண்டாம். நாளைக்குக் கதைப்பம் எண்டு விட்டிட்டன்.
அதுதான் இண்டைக்காவது எப்பிடியாவது கதைச்சிடோணும் எண்ட நினைப்போடே பிள்ளையாரே...! கடவுளே...! இண்டைக்கு ஒருத்தரும் ரெலிபோன் பண்ணியிருக்கக் கூடாது எண்டு நினைச்சுக் கொண்டு கதவைத் திறந்தன். நல்ல காலம் ஒரு கதைச் சத்தமும் கேட்கேல்லை.
அந்தப் பெரிய சந்தோசம் ஒரு சின்ன செக்கனுக்குள்ளை ஓடிட்டுது. தொலைக்காட்சியிலை காற்பந்தாட்டம் நடக்குது. மெதுவா எட்டிப் பார்த்தன். மனுசனுக்கு என்ரை பக்கம் திரும்பக் கூட மனமில்லை. கண்களை தொலைக்காட்சிக்குள்ளை தொலைச்சுப் போட்டு சோபாக்குள்ளை சுருண்டு கிடக்குது.
சரி வழக்கம் போலை தேநீரைப் போட்டுக் குடுத்திட்டு தொலைக்காட்சியைப் பார்த்தன். விளையாட்டுத் தொடங்கி ஆகப் பத்து நிமிசங்கள்தான். சா... விளையாட்டு முறைப்படி முடியிறதெண்டாலே 70நிமிசங்கள் இன்னும் வேணும். இதுக்குள்ளை எத்தினை அளாப்பல். குழப்பம். இதுக்குள்ளை இடைவேளை. இதுகளோடை தேநீரையே கை நீட்டி வாங்க மறந்து தொலைக்காட்சியோடு இருக்கிற மனுசன். இண்டைக்கும் கதைக்கிறதெங்கை!
வெளியிலை பார்த்தன். கும்மிருட்டு. என் அறை லைற்றை அணைத்த போது இன்னும் இருட்டாய் இருந்திச்சு. மனசுக்குள் எரிச்சல் கும்மாளமிட்டது. பிரச்சனை மட்டும் எகத்தாளமாய் என்னைப் பார்த்துச் சிரித்தது.
- பெண்மனசு -
கதைச்சு முடிஞ்சு வரட்டும் கதைப்பம் எண்டு நினைச்சுக் கொண்டு நான் என்ரை வேலையளைச் செய்து கொண்டிருந்தன்.
கதைச்சு முடிச்சிடோணும் எண்ட நினைப்பு மனசுக்கை இருந்ததாலையோ என்னவோ என்ரை வேலையள் சரியா ஓட மறுத்துக் கொண்டு நின்றன. தேநீரைப் போட்டுக் குடுத்திட்டு ஏதோ ஒரு ஒட்டாத் தன்மையோடை கணினிக்குள் புகுந்து, குசினுக்குள் அடுக்கி....
ம்...கும். அவர் இன்னும் கதைச்சு முடியேல்லை. நீட்டிலை கதைச்சுக் கொண்டே இருந்தார். சரியாக் காது குடுத்துப் பார்த்தன். ஒவ்வொரு விசயத்தையும் இரண்டு மூண்டு தரமா அளந்து கொண்டிருந்தார். இதெல்லாம் தேவையோ எண்டு நினைக்கிற விசயங்களையும் கதைச்சுக் கொண்டிருந்தார். பெண்களைக் கண்களா மதிக்கிறா மாதிரியும் இடையிடையிலை கதைச்சு, எதிர் முனையிலை இருக்கிறவனிட்டை தன்னைப் பற்றிய இமேஜ்யை உயர்த்த முயற்சித்தார்.
அரைகுறையா அவற்றை கதை என்ரை காதிலை விழுறதையும் என்னாலை தவிர்க்க முடியேல்லை. நேரமும் பத்து மணியாகீட்டுது. பத்துமணி எண்டத்தான் நான் வேலையாலை வந்து இரண்டு மணித்தியாலங்கள் கரைந்து விட்டன எண்டதும் உறைச்சுது.
சா... யன்னலுக்கு வெளியிலை ஒரே கும்மிருட்டு. வேலையிடத்திலை என்ரை தோழியர் "கோப்பி குடிக்கப் போவம் வா" எண்டு கேட்டவை. நான் "எனக்கு இண்டைக்குப் பஞ்சியா இருக்கெண்டு" பொய் சொல்லிப் போட்டு வந்திட்டன். லேற்றாப் போனால் இந்த மனுசன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் எண்டு சொன்னால் அதுகள் "ஏன் உன்ரை மனுசன் உன்னை வீட்டிலை தனிய விட்டிட்டு எத்திரை தரம் எங்கையோ எல்லாம் சுத்திப் போட்டு வந்தவன்" எண்டு சொல்லிப் பேசுங்கள்.
பேசாமல் அதுகளோடை போய் நாலு கதை கதைச்சு மனம் விட்டுச் சிரிச்சிட்டு வந்திருக்கலாம்.
இன்னும் மனுசன் தொலைபேசியிலை அளக்குது. மூன்று மணித்தியாலமா நானும் உம்மாண்டி மாதிரி முட்டு வீட்டுக்குள்ளை தட்டுப் பட்டுக் கொண்டு திரியிறன். இந்தப் பிரச்சனையை இண்டைக்கும் கதைச்சு முடிக்கேலாது போல கிடக்கு.
சரி சரி ஒரு மாதிரி மனுசன் தொலைபேசியை வைச்சிட்டுது. ஆனால் நேரந்தான் பதினொரு மணியாச்சு. இப்பப் போய் இந்தப் பிரச்சனையைக் கதைக்கேலாது. அவ்வளவு அவசரமா கதைச்சு முடிக்கிற விசயமுமில்லை இது. அதோடை இப்ப போய் நான் ஏதாவது கதைக்கு மனுசன் படுக்கிற நேரம் பிரச்சனையான கதையளைக் கதைக்காதை எண்டு சினக்க.. வேண்டாம். நாளைக்குக் கதைப்பம் எண்டு விட்டிட்டன்.
அதுதான் இண்டைக்காவது எப்பிடியாவது கதைச்சிடோணும் எண்ட நினைப்போடே பிள்ளையாரே...! கடவுளே...! இண்டைக்கு ஒருத்தரும் ரெலிபோன் பண்ணியிருக்கக் கூடாது எண்டு நினைச்சுக் கொண்டு கதவைத் திறந்தன். நல்ல காலம் ஒரு கதைச் சத்தமும் கேட்கேல்லை.
அந்தப் பெரிய சந்தோசம் ஒரு சின்ன செக்கனுக்குள்ளை ஓடிட்டுது. தொலைக்காட்சியிலை காற்பந்தாட்டம் நடக்குது. மெதுவா எட்டிப் பார்த்தன். மனுசனுக்கு என்ரை பக்கம் திரும்பக் கூட மனமில்லை. கண்களை தொலைக்காட்சிக்குள்ளை தொலைச்சுப் போட்டு சோபாக்குள்ளை சுருண்டு கிடக்குது.
சரி வழக்கம் போலை தேநீரைப் போட்டுக் குடுத்திட்டு தொலைக்காட்சியைப் பார்த்தன். விளையாட்டுத் தொடங்கி ஆகப் பத்து நிமிசங்கள்தான். சா... விளையாட்டு முறைப்படி முடியிறதெண்டாலே 70நிமிசங்கள் இன்னும் வேணும். இதுக்குள்ளை எத்தினை அளாப்பல். குழப்பம். இதுக்குள்ளை இடைவேளை. இதுகளோடை தேநீரையே கை நீட்டி வாங்க மறந்து தொலைக்காட்சியோடு இருக்கிற மனுசன். இண்டைக்கும் கதைக்கிறதெங்கை!
வெளியிலை பார்த்தன். கும்மிருட்டு. என் அறை லைற்றை அணைத்த போது இன்னும் இருட்டாய் இருந்திச்சு. மனசுக்குள் எரிச்சல் கும்மாளமிட்டது. பிரச்சனை மட்டும் எகத்தாளமாய் என்னைப் பார்த்துச் சிரித்தது.
- பெண்மனசு -
பெண்கள் சந்திப்புமலர் 2004 ஒரு பார்வை
சுயம், சுதந்திரம்... போன்றவற்றின் பொருள் சரியாக உணரப்படுகிறதா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது. பெண்விடுதலை என்றால் என்ன என்பது பலருக்கும் புரியவில்லை.
"இவ்வளவு கொடுத்து விட்டோமே! போதாதா?" என்றும், "இதற்கு இதற்கு எல்லாம் அனுமதியளிக்கிறோமோ! திருப்தியில்லையா?" என்றும், "இதற்கு மேல் என்ன வேண்டும்?" என்றும் ஆணாதிக்க உலகிலிருந்து வெளிவர முடியாதவர்களும், வெளிவந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருப்பவர்களும் சற்றும் தயங்காமல் கேட்கிறார்கள். அளந்து தருவதற்கும் நிறுத்து வாங்குவதற்கும் சுயமும், சுதந்திரமும் என்ன கடைச்சரக்குகளா?
ஒரு பெண் வேலைக்குப் போனாலோ, அல்லது ஒரு ஆண் சமைத்தாலோ அந்தக் குடும்பத்துப் பெண்கள் விடுதலை பெற்று விட்டார்கள் என்று கூட்டாகப் பாடத் தொடங்கி விடுகிறார்கள். பெண்களுக்குள்ள பிரச்சனைகள், அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள், சில உணர்த்துதல்கள், ஆலோசனைகள்... போன்றவற்றை யாராவது சொன்னாலோ அல்லது எழுதினாலோ போதும், அவளுக்கு பெண்ணியவாதி என்று முத்திரை குத்துவது மட்டுமல்லாமல் ஒரு இளக்காரப் பார்வை, கிண்டல் பேச்சு... என்று எதிர்க்குரல் கொடுக்கத் தொடங்கி விடுகிறது சமூகம்.
இத்தகையதொரு இக்கட்டான, புரிந்துணர்வற்ற சமூகச் சூழ்நிலையில் 39க்கு மேற்பட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புக்களுடன், பெண்கள் சந்திப்புக் குழுவினரால்(றஞ்சி-சுவிஸ், தேவா-ஜேர்மனி, உமா-ஜேர்மனி, விஜி-பிரான்ஸ், நிருபா-ஜேர்மனி) எட்டாவது பெண்கள் சந்திப்புமலர் அழகாகவும் நேர்த்தியாகவும் வெளியிட்டு வைக்கப் பட்டுள்ளது.
"பெண்கள் சஞ்சிகையா?" என்று முகம் சுளித்தவர்களும், "பெண்களுக்கு என்று தனியாக வெளிவரும் சஞ்சிகையில் நான் எழுதவில்லை. எனது எழுத்தின் மதிப்பை அது குறைத்து விடும்..." என்று தயங்கியவர்களும், இப்போது தாமாகவே முன் வந்து படைப்புக்களைத் தருவதற்கும், குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ளேயே நின்றவர்கள் துணிந்து பல்வேறு விடயங்களிலும் கால் வைத்திருப்பதற்கும் இப்படியான வெளியீடுகள் பெரிதும் துணை நிற்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
அச்சு, பதிப்பு, வெளியீடு... போன்ற பெரும்பான்மையான வேலைகள் ஆண்களுடையதாகவே கருதப்பட்டு வந்த காலம் மாறி, இப்போது பெண்களாலேயே செய்யப் படுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது. பெண்கள் சந்திப்பு மலரின் ஆக்கங்கள் மட்டுமல்லாமல் மலரின் வடிவமைப்பும் படிப்படியாக பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
பெண்கள் சந்திப்புமலர் 2004இன் அட்டைப்படம் அர்த்தமுள்ள அழகிய நவீனஓவியத்துடன் கண்களைக் கவருகிறது. முன் அட்டைப் படத்தை வாசுகியும் பின் அட்டைப் படத்தை அருந்ததியும் வரைந்துள்ளார்கள். மலரில் இடம் பெற்ற ஆக்கங்களுக்கு வலுவும் அழகும் சேர்ப்பனவையாக மோனிகா, சுகந்தி சுதர்சன், சௌந்தரி, ஆரதி, அருந்ததி, வாசுகி... போன்றோரின் ஓவியங்கள் மலரினுள்ளே பொருத்தமாக நிறைந்திருப்பது மலரின் இன்னொரு சிறப்பம்சம்.
குறிப்பிட்டுச் சொல்லும் விதமாக, மலரில் 10 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பத்தையும் வெவ்வேறு கோணங்களிலிருந்து பத்துப் பெண்கள் எழுதியுள்ளார்கள். பத்துமே நன்றாக அமைந்த கதைகள்.
பாமாவின் - அந்தி - கதை இவைகளுள் பிரத்தியேகமாக நிற்கிறது. அவருக்கேயுரிய வட்டார வழக்குச் சொற்கள் பலதின் அர்த்தம் புரியாவிட்டாலும் கதையின் ஓட்டமும், கதை சொல்லும் விதமும் ஒரு பிசகலின்றி அமைதியாக, நேர்த்தியாக எம்மை கதையோடு அழைத்துச் செல்கின்றது. குழந்தை, குட்டி என்று பெற்று அவர்களை வளர்த்து, ஆளாக்கி அவர்களுக்கென்று வாழ்வுகளை அமைத்துக் கொடுத்து விட்டு, தான் என்ற வீம்போடு தனியாக வாழும் தவசிப் பாட்டியின் கதை சாதாரண கதைதான். வெள்ளம் வருமளவு பெய்து விட்ட மழை நிறைந்திருக்கும் ஒரு குழியில் ஒரு அந்திப் பொழுதில் தவசிப்பாட்டி அநியாயமாக ஆனாலும் தான் நினைத்தது போலவே யாருக்கும் பாராமாக இல்லாமல்... இறந்து விட்டதை, மனசை விட்டு அகலாத படி பாமா சொன்ன விதம் அருமை. வாசித்துப் பல நாட்களாகியும் அகலாமல் மனசுக்குள்ளேயே உருண்டு கொண்டிருந்த கதை.
நிருபாவின் - மழை ஏன் வந்தது - பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு அல்லது பாலியல் சுரண்டலுக்குள் தன் பால்ய காலத்து இனிமைகளை எல்லாம் தொலைத்து நிற்கும் ஒரு சிறுமியின் பரிதாபக்கதை. மிகவும் தத்ரூபமாக நிரூபா அதை எழுதியுள்ளார். பாலியல் துன்புறுத்தலை மட்டுமல்லாது, அந்த வயதில் துளசியோடு பின்னியிருக்கும் வாழ்வின் அசைவுகளையும், அதனூடே இடையிடையே நாகம் போலப் படம் விரித்தாடும் பாலியல் தொல்லை ஒரு சிறுமியின் வாழ்வை எத்தனை தூரம் இம்சைப் படுத்துகிறது என்பதையும் நிரூபா சொன்ன விதம் யதார்த்தமாக அமைந்துள்ளது. பேச்சுத்தமிழ்தான் என்பதால் ஒரு இயல்புநிலை தெரிகிறது. யாரது...? அப்பாவா..! அண்ணாவா...! மாமாவா...! என்று தெரியாமல் குழம்பும் அந்தச் சிறுமி துளசி தன் வயசுக்குரிய சந்தோசங்களையெல்லாம் அந்த அருவருப்புக்குள் தொலைத்து விட்டு தன்னைக் குற்றவாளியாக நினைத்தோ என்னவோ பெற்றதாயிடம் கூட சொல்லாமல் மறுகுகிறாள்.
நண்பியிடம் கூட மனம் விட்டுப் பேசத் தைரியமின்றிய துளசியின் இயலாமை, எமது சமூகத்தில் பல குழந்தைகளுக்கும் உள்ள அவலந்தான். இந்த நிலை எமது சமூகத்தில் மட்டுந்தானென்றில்லை. ஐரோப்பிய சமூகங்களிலும் கூட குழந்தைகளோடு மனம் விட்டுப் பேசாத பெற்றோரின் குழந்தைகள் இப்படியான கொடுமைகளை வெளியில் சொல்லும் தைரியமின்றி மிகுந்த இம்சைக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது வாழ்வு இந்தப் பருவத்தில் மட்டுமல்லாது தொடரும் காலங்களிலும் இதன் பாதிப்பை பிரதிபலிப்பதாய் அமைந்திருப்பது ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இப்படியான கதைகளை வாசிக்கும் போது தமது பெண்குழந்தைகளுக்கு இப்படியொரு நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் இந்த உலகில் இருக்கிறது என்பதை தாய்மார் கண்டிப்பாக உணர்ந்து கொள்வார்கள்.
"இவ இப்பிடியான கதை மட்டுந்தான் எழுதுவா" என்று ஒரு சாரார் குரல் கொடுப்பது கேட்காமல் இல்லை. இவைகள் வெறுமே கதைகளல்ல. நியத்தின் வடிவங்கள். சமூகப் பிரச்சனைகளை வெளியில் கொண்டு வரும் இப்படியான எழுத்துக்களால் எத்தனையோ குழந்தைகள் இந்தத் தொல்லைகளிலிருந்து காப்பாற்றப் படுகிறார்கள் என்ற உண்மையை நாம் தயங்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். நிரூபாவின் எழுத்துக்களில், அதாவது ஒரு சமூகப் பிரச்சனையை எடுத்துச் சொல்லும் விதத்தில் ஒரு தனித்துவம் இருப்பதை மறுக்க முடியாது.
சுமதியின் - நாகதோஷம் - அருமையான கருப்பொருளைக் கொண்ட கதை. எந்த யுகத்திலும் அழகுக்குத்தான் முதலிடம். நல்ல வெள்ளையா... சிவப்பா... வடிவான... என்ற ரீதியில் பெண் தேடும் படலம் இன்னும் நின்ற பாடில்லை. காலாகாலத்துக்கும் இந்தப் பெண் தேடுதல் வேட்டையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் இல்லை. வைப்பாட்டியாக... ஆசைநாயகியாக... அவசரத்துக்காக... என்று எந்தக் கோணங்கியோடும் இணைந்து இச்சை தீர்த்துக் கொள்பவர்கள் மனைவி மட்டும் சுத்தமாக... அழகாக... வெள்ளையாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இங்கேயும், வரப்போறவன் எப்படி இருந்தாலும் அவன் ஆம்பிளை என்பதை மட்டுந்தான் பெண்ணானவள் கவனிக்க வேண்டும். ஆனால் பெண் மட்டும் அழகாக லட்சணமாக இருக்க வேண்டும். தப்பித்தவறி கறுப்பாய் இவர்கள் வகுத்து வைத்த லட்சணங்களுக்குள் அடங்காதவளாய் இருந்து விட்டால் போதும் அவள் உணர்வுகளும், ஆசைகளும் தனிமைக்குள் தீய்ந்து போய் விடும். இதனோடு சாத்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் தோஷங்கள் வேறு அவளைப் பொசுக்கி விடும்.
இப்படியான அவலத்தில் மனசு பொசுங்கிப் போன ஒரு பெண் இன்றைய வசதிகளைப் பயன் படுத்தி செயற்கையாய் தன்னை அழகு படுத்திய போது அவளது பருவ வயதில் அவளை அழகில்லையென்று விட்டுச் சென்ற அதே ஆடவன் அவளைச் சுகிக்க வருகிறான். அப்போது அவளும் அவனிடம் அவனது ஆண்மையைக் குறைத்துக் கூறுவது பழிதீர்ப்பதாய் வக்கிரமானதாய்த் தெரியலாம். காதலித்தவன் அல்லது காதலிப்பது போல நடித்தவன் அவளுக்கு மார்பு போதவில்லை என்பதற்காகவும், கறுப்பாய் இருக்கிறாள் என்பதற்காகவும் மணமுடிக்காது போன போது எவருக்கும் அது வக்கிரமாயோ பாலியல் சார்ந்ததாகவோ தெரியவில்லைத்தானே!
பெண்களை, பாலியல்தேவையை பூர்த்தி செய்யும் இச்சைப்பொருளாக மட்டுமே நோக்கும் ஆண்களுக்கு சாட்டையடி கொடுப்பது போல அமைந்த கதை நாகதோஷம்.
கமலா வாசுகியின் - கண்டறியாத பிள்ளை - கதை ஒரு பெண்ணுக்கு முதலில் ஏற்படும் சூல் முட்டைகளின் வெளியேற்றத்தை, பெருவிழாவாக்கும் எம்மவரிடையே உள்ள அறியாமையையும், அது அப்பெண் குழந்தையின் மனதை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதைப் பல பெற்றோர்கள் இன்னும் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதையும், சிலர் உணர்ந்தாலும் மற்றவர்கள் போலச் சடங்கு சம்பிரதாயம் செய்யாவிட்டால் தாம் சமூகத்தில் இருந்து ஒரு படி இறங்கி விடுவோம் என நினைத்து செயற்படுவதையும், பெண்குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத உறவுகளின் தன்மையையும் அதனால் ஒரு பெண்குழந்தையின் மனதில் ஏற்படுத்தும் விசனத்தையும் சொல்கிறது.
ஜெயந்தியின் - தையல் - குழந்தை பெற்றுக் கொண்ட பச்சை உடலோடு வலியும், உணர்வுமாய் தவிக்கும் ஒரு பெண்ணின் கதை. குழந்தை பெறுவதை விடத் தையல் போடுவதுதான் அதிகமாய் வலிக்கும் என்பார்கள். கதையின் நாயகி சுதா வலியோடு கணவனுக்காய் காத்திருக்கும் போது புண்ணியாஜனத்துக்கு வந்தவன் அவள் உணர்வுகளை மதிக்காமல் போனது கூட மனதைப் பாதிக்கவில்லை. அன்பாய் ஆதரவாய் பேச வருவான் என்று அவள் காத்திருக்க, நடுஇரவில் தன் உடற்சுகத்துக்காக அவளைத் தேடி வருவது மனதை நெருட வைக்கிறது.
விஜயலட்சுமி சேகரின் - குற்றமில்லை - சிறுகதை நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்த பெண் சுவர் ஏறிக்குதித்து கொலை செய்ய வரும் காமுகன் முன்னே ஆபரணம் ஆவதா ஆயுதம் ஆவதா? என்று கேட்கிறது. ஆயுதம் ஆவதுதான் சரியென்று நாம் சொன்னாலும் சட்டமும் சமூகமும் கொலைகாரியென்றும் நடத்தை கெட்டவள் என்றும் பாதகமாக அவள் மீது பழி சுமத்தியுள்ளன.
சாந்தினி வரதராஜனின் - வீடு - புலம்பெயர்ந்து வாழும் சுகந்தி சொந்த நாட்டை நோக்கிப் பயணிப்பதையும், அங்கு தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீட்டுக்கு சோகங்களையும் சுகங்களையும் நினைவுகளில் சுமந்து கொண்டு செல்வதையும் உணர்வுகளோடு சொல்கிறது. புலம்பெயர்ந்த எல்லோரின் மனதுக்குள்ளும் பிரிவும், துயரும் எந்தளவுக்குப் படிந்து போயிருக்கிறது என்பதை நெகிழ்வோடு சொல்லியுள்ள கதை.
சந்திரா ரவீந்திரனின் - பனிமழை - சுப்பர்மார்க்கெட்டில் வேலை செய்யும் புலம் பெயர்ந்த ஒரு தமிழ்குடும்பப் பெண்ணின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாய் அமைந்துள்ள கதை. பனிமழையின் குளிரையும், அழகையும் அவர் வர்ணித்திருந்ததையும் விட அவர் கடமையாற்றும் சுப்பர்மார்க்கெட்டினுள்ளான வேலைகளையும், அனுபவங்களையும், நடைமுறைகளையும் எங்கள் கண்முன்னும் அழகாகக் கொண்டு வந்திருந்தார்.
வேலையிடத்தில் தனது கடமைகளை அதற்கேயுரிய சிரத்தையுடன் செய்து விட்டு ஒரு மனைவியாக, தாயாக வீடு திரும்பும் போது வீட்டின் கோலங்கள் ஒரு குடும்பப்பெண்ணின் மனதை எந்தளவுக்கு நெகிழச் செய்யும் என்பதை நன்றாகச் சொல்லியிருந்தார். இருந்தாலும் சந்திரா ரவீந்திரனின் கதை என்ற எனது எதிர்பார்ப்புக்கு ஈடாக அக்கதை அமையவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
உமாவின் - மரியானா - கதை மருத்துவமனைக் கட்டிலில் வலியுடன் படுத்திருக்கும் போது வைத்தியத்துக்காக அவள் அறையைப் பங்கு போட வந்த ஒரு ஜேர்மனியப் பெண்ணுடனான உரையாடல். மிகவும் இதமாக, படிக்கும் போது மனதை வருடும் உணர்வைத் தரக் கூடிய விதமாக நன்றாக அமைந்துள்ளது. வயதானாலும் வயதை ஒரு பொருட்டாக்காமல் அறிவோடு பேசும் தொண்ணூற்றைந்து வயதுச் சிறுமியின் பேச்சுக்களும் அதை உமா சொன்ன விதமும் மிகவும் நன்றாக உள்ளன.
ஷாமிலாவின் - சிறகிழந்த பறவையாய் - நாட்டு நிலைமையை உத்தேசித்து வெளிநாட்டில் பெரியப்பாவோடு இருந்து படிக்கச் செல்லும் ஒரு சிறுமியின் வாழ்வு எப்படி சிதைக்கப் படுகிறது என்று சொல்லும் கதை. ஐம்பது வயதைத் தாண்டிய, அப்பா ஸ்தானத்தில் இருக்க வேண்டிய பெரியப்பாவே அவளைப் பாலியல் இச்சைக்கு பலியாக்க முயல்வதும், அவள் இணங்காத பட்சத்தில் வற்புறுத்துவதும் பாலியல் சுரண்டல் என்பது எமது சமூகத்தில் எந்தளவுக்குப் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
சிறகுகளை விரித்துக் கொண்டு தன் வீட்டை விட்டுப் பறக்கத் தொடங்கும் அந்தச் சிறுமியின் கண்களில் கனவுகளும், வானத்தைத் தொடும் நினைவுகளும் மட்டுமே இருந்தன. வீட்டை விட்டு போகும் போது இன்னும் எத்தனை விடயங்களை இழக்கப் போகிறேன் என்பது மட்டும் நினைவுக்குள் சிக்கவில்லை. அவள்தான் சின்னப்பிள்ளை என்றால் அவள் பெற்றோருக்குக் கூட சில விடயங்கள் விளங்கவில்லை. பெற்றோர்கள் தவிர்ந்த வேறு உறவுகளுடன் (அவர்கள் மிக நெருங்கிய உறவுகளாய் இருக்கும் பட்சத்திலும் கூட) வாழ நேரிடும் பெண்குழந்தைகளுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல்களைப் பல பெற்றோர்கள் அறிந்து கொள்வதில்லை. இக்கதையிலும் அதேதான். நம்பிக்கைக்குரியவர்கள் என்று நினைத்து அவர்களிடம் தமது குழந்தைகளை ஒப்படைக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதைகளில் ஒன்று இது.
இது ஒரு உண்மைக் கதை என்பதால் அதிகம் சொல்ல முடியவில்லை. மொழிபெயர்ப்பு சரியாக அமைய வேண்டுமானால் தன்னிச்சையான சுருக்குதல் அல்லது நீட்டுதலைத் தவிர்க்க வேண்டும். அதைத்தான் செய்துள்ளேன். கதை பின்னுக்கு சற்று நீண்டு விட்டது போலவே தோன்றுகிறது. கதையில் பின்னுக்கு வரும் கணவனின் தந்தையின் செயற்பாட்டை இன்னொரு கதையாகச் சொல்லியிருக்கலாம்.
கதைக்காக றஞ்சி தேர்ந்தெடுத்த படம் கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருப்பது குறிப்பிடப்பட வேண்டியதொன்று.
அடுத்து மதனி ஜெக்கோனியாஸ் மொழி பெயர்த்துத் தந்த - கைவிடப்பட்டவளாய்.... - மனதை மிகவும் பாதித்த இன்னொரு உண்மைக்கதை. 13வயதுச் சிறுமியான நூரியாவின் சோகக்கதை. ஒரு தந்தை தனது பெண்குழந்தையை அவளது மூன்றாவது வயதிலேயே பெரியப்பாவிடம்(தனது சகோதரனிடம்) கொடுப்பதுவும் அந்தப் பெரியப்பா அவளை அவளது 12வது வயதிலேயே, அவளது சம்மதமோ அன்றி அவளது விருப்பு வெறுப்பு பற்றிய பிரக்ஞையோ இன்றி ஒரு 62வயதுக் கிழவனுக்கு விற்பதுவும் நம்ப முடியாவிட்டாலும் உண்மையான கதை என்னும் போது மனதை வருத்துகிறது. இன்றைய காலகட்டத்திலும் இப்படியான அடிமைத்தனமான வேலைகளுக்கு பெண்குழந்தைகள் பலியாவது மிகச் சோகமான விடயம். அவள் கொலைக்குற்றம் சாட்டப் பட்டு சிறையில் இருப்பது இன்னும் துன்பமானது.
கட்டுரைகளைப் பார்க்கும் போது ஆறு கட்டுரைகள் இடம் பிடித்துள்ளன. இவைகளில் இன்றைய காலகட்டத்தில் மிகுந்த பிரபலமாகியுள்ள, பலராலும் பாவிக்கப்படுகின்ற, உயர்ந்த இடங்களில் கூட அவதானிக்கப் படுகின்ற, பயனுள்ள... இணைய உலகிலான வலைப்பதிவுகள் பற்றியதான மதி கந்தசாமியின் - இணையத்தில் குடில் போடலாம் வாருங்கள் - தவிர்ந்த மற்றைய ஐந்து கட்டுரைகளும் பெண்களின் பிரச்சனைகள், முன்னேற்றம் குறித்த ஆலோசனைகள், ஆணாதிக்க சிந்தனைகள்.. பற்றிக் கூறுகின்றன.
இவைகளில் இந்தியாவைச் சேர்ந்த வைகைச்செல்வியின் - பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - கட்டுரை சகலவிதத்திலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட அன்றைய காலத்தில் படைக்கப் பட்ட பெண் எழுத்துக்களில் இருந்த வலிமையும், வீரியமும், உயிர்ப்பும், காலத்தை வென்று நிற்கும் தன்மையும் இன்றைய பெண்படைப்பாளிகளின் படைப்புக்களில் இல்லையோ! என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது. அன்றைய பெண்படைப்பாளிகள் பற்றிய பலதகவல்களோடு ஒளவையார், சரோஜினி, வை.மு.கோதைநாயகி... என்று அன்றைய பெண் படைப்பாளிகளிகளையும் அதற்கு உதாரணமாக ஒப்பிட்டுச் சுட்டியுள்ளார் வைகைச்செல்வி. ஆனாலும் வைகைச்செல்வி குறிப்பிட்டது போன்ற ஆளுமை மிக்க பெண்படைப்பாளிகள், இன்றும் இருக்கிறார்கள். அதுவும் அன்றைய படைப்பாளிகளை விடக் கூடிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அன்று ஒரு குறிப்பிட்ட அளவான பெண் படைப்பாளர்களே இருந்தார்கள். அவர்கள் பளிச்சென்று எல்லோர் கண்களுக்கும் தெரிந்தார்கள். இன்று உலகளாவப் பெண் படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதனால் அந்தப் பளிச்சென்ற வெளித்தெரிவு இல்லை. மற்றும் படி பன்முகத்தன்மை கொண்ட எழுத்துக்களை மட்டுமல்லாமல், அதைச் செயற்படுத்தும் திறனோடும் பல ஆளுமை மிக்க பெண்கள் இன்று எம்மிடையே உள்ளார்கள் என்பதுதான் உண்மை.
மும்பையைச் சேர்ந்த புதியமாதவியின் - என்று தணியும் எங்கள் சுதந்திரதாகம் - என்ற கட்டுரை இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருந்தாலும் இன்னும் ஏன் பெண்ணியல் சிந்தனையில் புரட்சிகள் ஏற்படவில்லை என்றும், ஆணாதிக்கம் இல்லாத சுதந்திரக்காற்று இன்னும் ஏன் அவள் சுவாசத்துக்கு எட்டவில்லையென்றும் ஆய்ந்துள்ளது. ஊடகங்களில் பெண்கள் எப்படிச் சிறுமைப் படுத்தப் படுகிறார்கள், விளம்பரங்களில் பெண்கள் எப்படி மலிவு படுத்தப் படுகிறார்கள், அரசியலில் எந்த நிலையில் பெண்கள் நுழைகிறார்கள், இல்லங்களில் பெண்களின் வேலைகள் எப்படிக் கணிக்கப் படுகின்றன என்றெல்லாம் அருமையாக விளக்கி, அதிகம் படித்த பெண்ணென்றால் என்ன? ஐரோப்பியப் பெண் என்றால் என்ன? பெண் என்பதால் அவள் இன்னும் வன்முறைக்கு உட்படுத்தப் படுகிறாள் என்ற உண்மையை புள்ளி விபரங்களுடன் தந்துள்ளது.
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் - இன்னும் இருபது வருடங்களில் - புலம்பெயர்ந்த தமிழ்ப்பெண்களின் நிலை எதிர்காலத்தில் என்னவாயிருக்கும் என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அரசியல், பொருளாதாராம், மேற்படிப்பு போன்ற காரணங்களால் ஏற்பட்ட புலம் பெயர்வு தமிழ்பெண்களை பொருளாதார ரீதியில் சற்று முன்னேற்றி இருக்கிறது என்றாலும், அதற்கப்பால் என்ன முன்னேற்றத்தைத் தமிழ்ப்பெண்கள் கண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி இக்கட்டுரையினூடே எழுகிறது.
சின்னத்திரைத் தொடர்களும், பெரியதிரை தரும் படங்களும் பெண்களை இன்னும் எவ்வளவு தூரத்துக்கு பின்னுக்குத் தள்ளுகின்றன என்பதையும், இவைகளின் பாதிப்புக்கள் எமது தமிழ்ப்பெண் குழந்தைகளின் மனவளர்ச்சியில் எத்தகையதொரு பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிறது என்பதையும், இதனால் எதிர்காலக் குழந்தைகளின் அறிவுவளர்ச்சி எந்தளவுக்குக் குன்றும் என்பதையும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் கட்டுரையினூடே வருத்தத்தோடு தெரிவிக்கிறார். சின்னத்திரைகளோடு மாரடிக்கும் புலம்பெயர் பெண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் எடுக்க வேண்டிய கட்டுரை இது.
அவுஸ்திரேலியாவிலிருந்து சந்திரலேகா வாமதேவாவின் - கற்பு நிலை சொல்ல வந்தார் - என்ற கட்டுரை மூலம் கற்பு என்பதன் பொருள் பற்றியும், அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்ற போதும் அன்றைய காலத்திலிருந்து இன்றைய வரைக்கும் பெண்களின் கோட்பாடாகவே கருதப்படுவது பற்றியும் ஆய்ந்துள்ளார். கூடவே இலக்கியங்களில் உள்ள கற்புக்கரசிகள் பற்றிய கதைகளை உதாரணங்களாகக் காட்டி, அவைகளெல்லாம் ஆண்களாலேயே எழுதப் பட்டிருப்பதைச் சுட்டியும் உள்ளார்.
தயாநிதி மொழிபெயர்த்துத் தந்த கிரிஸ் கிராஸ்சின் - ஆணாதிக்கத்திற்கு முகம் கொடுப்பது பற்றிய சில தனிப்பட்ட பிரதி பலிப்புகள் - மிகவும் அருமையானதொரு கட்டுரை. "ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒரு விவாதத்தில் பெண்களுடன் நேருக்கு நேர் பார்த்து உரையாடுவது போன்றதல்ல. இது ஒரு அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, உளவியல் ரீதியான பலம் வாய்ந்த கட்டமைப்புக்கு எதிரான போராட்டம். அத்துடன் எனது உட்புறமுள்ள மேலாதிக்கம் என்பது பனிமலையின் முனைப்பகுதி போன்றது. இது சுரண்டலாலும் அடக்கு முறையினாலும் கட்டப் பட்டது" என்கிறார் கிரிஸ் கிராஸ்.
ஆணாதிக்க சமூகத்தில் உள்ள ஒருவரே ஆணாதிக்கத்தைப் பற்றிச் சிந்திப்பதென்பதும் அது பற்றி கூறுவதென்பதும் மிகவும் வித்தியாசமானது. என்னதான் விடுதலை அமைப்புக்களில் அங்கத்தவர்கள் ஆனாலும் தந்தைவழிச் சமூக அமைப்புகளினோடு வளர்ந்த ஆண்களின் உள்ளே திமிறும் மேலாதிக்கம் அவர்களை ஆக்கிரமிப்பது அவர்களைப் பொறுத்த வரையில் தவிர்க்க முடியாத ஒன்றே. இந்த நிலையை ஒரு குற்ற உணர்வோடு நோக்கும் ஒரு ஆணே இது பற்றி எழுதியது ஒரு வகையில் சுவாரஸ்யமாகக் கூட உள்ளது. மொழி பெயர்த்துத் தந்த தயாநிதிக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.
கவிதைகளைப் பார்க்கும் போது
அவுஸ்திரேலியாவிலிருந்து
ஆழியாளின் - விடுதலை,
பாமதியின் - யுத்தம்,
சௌந்தரியின் - இளமைக்காலம்,
இலங்கையிலிருந்து
அனாரின் - இருப்பின் பின்னால் வாழ்வின் வெளி,
முகைசிரா முகைடீனின் - நான், நான் பேச நினைப்பதெல்லாம், பாலறஞ்சனியின் - நிஜங்களும் நிகழலாம், தீக்குள் விரலை வைத்தால், விஜயலட்சுமி.சேகரின் - நானும் ஓர் காவியம்தான்,
இந்தியாவிலிருந்து
மாலதி மைத்ரியின் - மனநோயின் முன் பின் நிகழ்வுகள், விதைச்சொல், திலகபாமாவின் - நகல்கிறது நதி, கட்டுடையும் நகரம்,
புதியமாதவியின் - கவிஞனின் மனைவி(தெலுங்கில் மந்தரப்பு ஹேமாவவதி), புதியமாதவி கவிதைகள்,
கனடாவிலிருந்து
எதிக்காவின் - இன்னமும் ஏதோவொன்றிற்காய்...,
துர்க்காவின் - துர்க்கா கவிதைகள்,
சுவிசிலிருந்து
நளாயினி தாமரைச்செல்வனின் - தலைப்பில்லாத கவிதை, நமக்கான நட்பு,
ஜேர்மனியிலிருந்து
பாரதியின் - நலங்கெடப்புழுதியில்
சுகந்தினி சுதர்சனின் - பிரச்சனைகளுக்கு முகவரியிடுவோம்,
கோசல்யா சொர்ணலிங்கத்தின் - தீர்ப்பெழுதும் கரங்கள் பெண்களாகட்டும்,
விக்னா பாக்யநாதனின் - துளிப்பாக்கள்,
என்று 23க்கு மேற்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவைகள் பெண்களின் விடுதலையை, அடக்கப் படுகிறோம் என்று தெரிந்தும் விட்டு வெளியேற முடியாத இயலாமையை, அடைந்து கிடந்தாலும் மனதால் சுதந்திரமாகப் பறக்கத் துணிந்த பெண்களின் தன்மையை, விட்டு விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, இருப்பின் அவசியத்தை..., யுத்தத்தின் கோலங்களை, இயற்கையின் சீற்றங்களை... என்று பல விடயங்களை உணர்வுகள் கலந்து சொல்கின்றன. இக் கவிதைகளைத் தனியாக ஒரு தரம் அலசலாம் போலுள்ளது.
அடுத்து, உரையாடல் வடிவில் - மல்லிகா எம்மிடையே உள்ள சில பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
சமைத்துப் போடும் கணவனின் மனைவியும், அதிகாலை வேலைக்குப் போகும்போது தானே தேநீரைத் தயாரித்துக் குடித்து விட்டுச் செல்லும் கணவனின் மனைவியும் விடுதலை பெற்றவர்கள் என்பதான அறியாமை நிறைந்த பேச்சு கூடுதலாகப் பெண்களிடையேதான் உலாவுகிறது.
கதையில் வந்த மாயாவுக்கு தான் விரும்பியவனை மணம் முடிக்கவோ, முடித்த ஒருவன் சரியில்லை, குடிகாரன், இவளை அடித்துத் தொந்தரவு செய்கிறான் என்ற போது அவனை விட்டு விலகிச் செல்லவோ உரிமையில்லை. தன் வாழ்வைத் தானே நிர்ணயிக்கும் அவளது சுதந்திரம் பற்றி பெண்ணான அவள் அண்ணிக்கே கவலையில்லை. பெண்ணே பெண்ணை விளங்கிக் கொள்ள முடியாத அல்லது விளங்கிக் கொள்ள விரும்பாத இப்படியான நிலைமைகளையும் சமூகம், கலாசாரம் என்பதன் அர்த்தம் புரியாத அர்த்தமற்ற செயற்பாடுகள் கொண்ட எமது பெண்களின் பார்வையில் ஜேர்மனியப் பெண்கள் மீதான கணிப்புகளையும்.... என்று சொல்ல வந்த விடயத்தை கச்சிதமாகச் சொல்லியுள்ளார் மல்லிகா.
ஓவியர் வாசுகியுடனான றஞ்சியின் செவ்வியொன்றும் மலரில் இடம் பெற்றுள்ளது. மலருக்கு மிகவும் பொருத்தமான ஒருவரோடான செவ்வி இது. பெண்களது வெளிப்பாடுகளை ஓவியப்பயிற்சி மூலம் கொண்டு வரும் இந்த வாசுகிதான், முன் அட்டைப்படத்தை வரைந்து, மலருக்கு அழகும் வலுவும் ஊட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தின் சாதாரண ஒரு பெண்ணுக்குக் கிட்டாத பல வெளிகள் ஓவியம் மூலம் தனக்கு சாத்தியமாகின என்று சொல்லும் வாசுகியினுடனான செவ்வி மிகவும் சுவாரஸ்யமானது.
"பெண்கள் சந்திப்போ...! உங்கை என்ன நடக்குது?. உதுக்கு நாங்கள் ஆம்பிளையள் வரக்கூடாதோ?"
"ம்... பெண்டுகள் சந்திச்சு என்ன செய்யப் போறிங்கள்? குடுமிச் சண்டையோ பிடிக்கப் போறிங்கள்?"
"இஞ்சைபார்...! பெண்கள் சந்திப்பு, இலக்கியம் எண்டெல்லாம் சொல்லிக் கொண்டு கூடுறது இலக்கியங்கள் பேச இல்லை."
இவைகளெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா? பெண்கள் சந்திப்புக்கு ஒரு தடவையேனும் செல்லாத சில ஆண்களால் அவர்களைச் சுற்றியுள்ள பெண்களின் மீது எறியப் படும் எள்ளல் கருத்துக்கள் இவை. தமது மனைவியரோ சகோதரிகளோ இதைச் சாட்டிக் கொண்டு வெளியில் போய் விடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பில் அவசரமாய் கொட்டப்படும் வார்த்தைகள் இவை.
கருத்து மோதல்களும் முரண்களும் ஆண்கள் ஒன்று கூடலில் ஒரு போதுமே நிகழ்வதில்லையா? கேட்பதற்குத் திராணியற்றவர்களாக இன்னும் பெண்கள் இருக்கிறார்கள்.
இவைகளுக்கெல்லாம் பதில் கூறும் விதமாக பெண்கள் சந்திப்பதில்..., ஒன்று கூடுவதில்... உள்ள நன்மைகள்.... தமது பிரச்சனைகளை மனந்திறந்து கலந்துரையாடுவதின் மூலம் பெண்களுக்குள் ஏற்படும் தன்னம்பிக்கை... இவை பற்றி தேவா விளக்கமாகச் சொல்கிறார் பெண்கள் சந்திப்பு சிறுகுறிப்பு என்ற கட்டுரை மூலம்.
இத்தனை விடயங்களும் இந்தப் பெண்கள் சந்திப்பு மலருக்குள் அடங்கியிருக்கின்றன என்னும் போது உண்மையிலேயே வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. எத்தனையோ பிரச்சனைகள், அவசரங்கள், அவசியங்கள், தடைகளின் மத்தியில் மீண்டும் பெண்கள் சந்திப்பு மலர் இத்தனை கனமாக வெளிவந்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விடயமே. வெளியிட்டு வைத்த பெண்கள் சந்திப்புக் குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். கூடவே ஆக்கங்களைத் தந்துதவி பெண்கள் சந்திப்பு மலருக்கு வலுவூட்டி, உறுதுணையாக நின்ற சகோதரிகளுக்கும் மனதார்ந்த நன்றி.
சந்திரவதனா
ஜேர்மனி
18.8.2005
"இவ்வளவு கொடுத்து விட்டோமே! போதாதா?" என்றும், "இதற்கு இதற்கு எல்லாம் அனுமதியளிக்கிறோமோ! திருப்தியில்லையா?" என்றும், "இதற்கு மேல் என்ன வேண்டும்?" என்றும் ஆணாதிக்க உலகிலிருந்து வெளிவர முடியாதவர்களும், வெளிவந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருப்பவர்களும் சற்றும் தயங்காமல் கேட்கிறார்கள். அளந்து தருவதற்கும் நிறுத்து வாங்குவதற்கும் சுயமும், சுதந்திரமும் என்ன கடைச்சரக்குகளா?
ஒரு பெண் வேலைக்குப் போனாலோ, அல்லது ஒரு ஆண் சமைத்தாலோ அந்தக் குடும்பத்துப் பெண்கள் விடுதலை பெற்று விட்டார்கள் என்று கூட்டாகப் பாடத் தொடங்கி விடுகிறார்கள். பெண்களுக்குள்ள பிரச்சனைகள், அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள், சில உணர்த்துதல்கள், ஆலோசனைகள்... போன்றவற்றை யாராவது சொன்னாலோ அல்லது எழுதினாலோ போதும், அவளுக்கு பெண்ணியவாதி என்று முத்திரை குத்துவது மட்டுமல்லாமல் ஒரு இளக்காரப் பார்வை, கிண்டல் பேச்சு... என்று எதிர்க்குரல் கொடுக்கத் தொடங்கி விடுகிறது சமூகம்.
இத்தகையதொரு இக்கட்டான, புரிந்துணர்வற்ற சமூகச் சூழ்நிலையில் 39க்கு மேற்பட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புக்களுடன், பெண்கள் சந்திப்புக் குழுவினரால்(றஞ்சி-சுவிஸ், தேவா-ஜேர்மனி, உமா-ஜேர்மனி, விஜி-பிரான்ஸ், நிருபா-ஜேர்மனி) எட்டாவது பெண்கள் சந்திப்புமலர் அழகாகவும் நேர்த்தியாகவும் வெளியிட்டு வைக்கப் பட்டுள்ளது.
"பெண்கள் சஞ்சிகையா?" என்று முகம் சுளித்தவர்களும், "பெண்களுக்கு என்று தனியாக வெளிவரும் சஞ்சிகையில் நான் எழுதவில்லை. எனது எழுத்தின் மதிப்பை அது குறைத்து விடும்..." என்று தயங்கியவர்களும், இப்போது தாமாகவே முன் வந்து படைப்புக்களைத் தருவதற்கும், குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ளேயே நின்றவர்கள் துணிந்து பல்வேறு விடயங்களிலும் கால் வைத்திருப்பதற்கும் இப்படியான வெளியீடுகள் பெரிதும் துணை நிற்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
அச்சு, பதிப்பு, வெளியீடு... போன்ற பெரும்பான்மையான வேலைகள் ஆண்களுடையதாகவே கருதப்பட்டு வந்த காலம் மாறி, இப்போது பெண்களாலேயே செய்யப் படுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது. பெண்கள் சந்திப்பு மலரின் ஆக்கங்கள் மட்டுமல்லாமல் மலரின் வடிவமைப்பும் படிப்படியாக பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
பெண்கள் சந்திப்புமலர் 2004இன் அட்டைப்படம் அர்த்தமுள்ள அழகிய நவீனஓவியத்துடன் கண்களைக் கவருகிறது. முன் அட்டைப் படத்தை வாசுகியும் பின் அட்டைப் படத்தை அருந்ததியும் வரைந்துள்ளார்கள். மலரில் இடம் பெற்ற ஆக்கங்களுக்கு வலுவும் அழகும் சேர்ப்பனவையாக மோனிகா, சுகந்தி சுதர்சன், சௌந்தரி, ஆரதி, அருந்ததி, வாசுகி... போன்றோரின் ஓவியங்கள் மலரினுள்ளே பொருத்தமாக நிறைந்திருப்பது மலரின் இன்னொரு சிறப்பம்சம்.
குறிப்பிட்டுச் சொல்லும் விதமாக, மலரில் 10 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பத்தையும் வெவ்வேறு கோணங்களிலிருந்து பத்துப் பெண்கள் எழுதியுள்ளார்கள். பத்துமே நன்றாக அமைந்த கதைகள்.
பாமாவின் - அந்தி - கதை இவைகளுள் பிரத்தியேகமாக நிற்கிறது. அவருக்கேயுரிய வட்டார வழக்குச் சொற்கள் பலதின் அர்த்தம் புரியாவிட்டாலும் கதையின் ஓட்டமும், கதை சொல்லும் விதமும் ஒரு பிசகலின்றி அமைதியாக, நேர்த்தியாக எம்மை கதையோடு அழைத்துச் செல்கின்றது. குழந்தை, குட்டி என்று பெற்று அவர்களை வளர்த்து, ஆளாக்கி அவர்களுக்கென்று வாழ்வுகளை அமைத்துக் கொடுத்து விட்டு, தான் என்ற வீம்போடு தனியாக வாழும் தவசிப் பாட்டியின் கதை சாதாரண கதைதான். வெள்ளம் வருமளவு பெய்து விட்ட மழை நிறைந்திருக்கும் ஒரு குழியில் ஒரு அந்திப் பொழுதில் தவசிப்பாட்டி அநியாயமாக ஆனாலும் தான் நினைத்தது போலவே யாருக்கும் பாராமாக இல்லாமல்... இறந்து விட்டதை, மனசை விட்டு அகலாத படி பாமா சொன்ன விதம் அருமை. வாசித்துப் பல நாட்களாகியும் அகலாமல் மனசுக்குள்ளேயே உருண்டு கொண்டிருந்த கதை.
நிருபாவின் - மழை ஏன் வந்தது - பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு அல்லது பாலியல் சுரண்டலுக்குள் தன் பால்ய காலத்து இனிமைகளை எல்லாம் தொலைத்து நிற்கும் ஒரு சிறுமியின் பரிதாபக்கதை. மிகவும் தத்ரூபமாக நிரூபா அதை எழுதியுள்ளார். பாலியல் துன்புறுத்தலை மட்டுமல்லாது, அந்த வயதில் துளசியோடு பின்னியிருக்கும் வாழ்வின் அசைவுகளையும், அதனூடே இடையிடையே நாகம் போலப் படம் விரித்தாடும் பாலியல் தொல்லை ஒரு சிறுமியின் வாழ்வை எத்தனை தூரம் இம்சைப் படுத்துகிறது என்பதையும் நிரூபா சொன்ன விதம் யதார்த்தமாக அமைந்துள்ளது. பேச்சுத்தமிழ்தான் என்பதால் ஒரு இயல்புநிலை தெரிகிறது. யாரது...? அப்பாவா..! அண்ணாவா...! மாமாவா...! என்று தெரியாமல் குழம்பும் அந்தச் சிறுமி துளசி தன் வயசுக்குரிய சந்தோசங்களையெல்லாம் அந்த அருவருப்புக்குள் தொலைத்து விட்டு தன்னைக் குற்றவாளியாக நினைத்தோ என்னவோ பெற்றதாயிடம் கூட சொல்லாமல் மறுகுகிறாள்.
நண்பியிடம் கூட மனம் விட்டுப் பேசத் தைரியமின்றிய துளசியின் இயலாமை, எமது சமூகத்தில் பல குழந்தைகளுக்கும் உள்ள அவலந்தான். இந்த நிலை எமது சமூகத்தில் மட்டுந்தானென்றில்லை. ஐரோப்பிய சமூகங்களிலும் கூட குழந்தைகளோடு மனம் விட்டுப் பேசாத பெற்றோரின் குழந்தைகள் இப்படியான கொடுமைகளை வெளியில் சொல்லும் தைரியமின்றி மிகுந்த இம்சைக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது வாழ்வு இந்தப் பருவத்தில் மட்டுமல்லாது தொடரும் காலங்களிலும் இதன் பாதிப்பை பிரதிபலிப்பதாய் அமைந்திருப்பது ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இப்படியான கதைகளை வாசிக்கும் போது தமது பெண்குழந்தைகளுக்கு இப்படியொரு நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் இந்த உலகில் இருக்கிறது என்பதை தாய்மார் கண்டிப்பாக உணர்ந்து கொள்வார்கள்.
"இவ இப்பிடியான கதை மட்டுந்தான் எழுதுவா" என்று ஒரு சாரார் குரல் கொடுப்பது கேட்காமல் இல்லை. இவைகள் வெறுமே கதைகளல்ல. நியத்தின் வடிவங்கள். சமூகப் பிரச்சனைகளை வெளியில் கொண்டு வரும் இப்படியான எழுத்துக்களால் எத்தனையோ குழந்தைகள் இந்தத் தொல்லைகளிலிருந்து காப்பாற்றப் படுகிறார்கள் என்ற உண்மையை நாம் தயங்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். நிரூபாவின் எழுத்துக்களில், அதாவது ஒரு சமூகப் பிரச்சனையை எடுத்துச் சொல்லும் விதத்தில் ஒரு தனித்துவம் இருப்பதை மறுக்க முடியாது.
சுமதியின் - நாகதோஷம் - அருமையான கருப்பொருளைக் கொண்ட கதை. எந்த யுகத்திலும் அழகுக்குத்தான் முதலிடம். நல்ல வெள்ளையா... சிவப்பா... வடிவான... என்ற ரீதியில் பெண் தேடும் படலம் இன்னும் நின்ற பாடில்லை. காலாகாலத்துக்கும் இந்தப் பெண் தேடுதல் வேட்டையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் இல்லை. வைப்பாட்டியாக... ஆசைநாயகியாக... அவசரத்துக்காக... என்று எந்தக் கோணங்கியோடும் இணைந்து இச்சை தீர்த்துக் கொள்பவர்கள் மனைவி மட்டும் சுத்தமாக... அழகாக... வெள்ளையாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இங்கேயும், வரப்போறவன் எப்படி இருந்தாலும் அவன் ஆம்பிளை என்பதை மட்டுந்தான் பெண்ணானவள் கவனிக்க வேண்டும். ஆனால் பெண் மட்டும் அழகாக லட்சணமாக இருக்க வேண்டும். தப்பித்தவறி கறுப்பாய் இவர்கள் வகுத்து வைத்த லட்சணங்களுக்குள் அடங்காதவளாய் இருந்து விட்டால் போதும் அவள் உணர்வுகளும், ஆசைகளும் தனிமைக்குள் தீய்ந்து போய் விடும். இதனோடு சாத்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் தோஷங்கள் வேறு அவளைப் பொசுக்கி விடும்.
இப்படியான அவலத்தில் மனசு பொசுங்கிப் போன ஒரு பெண் இன்றைய வசதிகளைப் பயன் படுத்தி செயற்கையாய் தன்னை அழகு படுத்திய போது அவளது பருவ வயதில் அவளை அழகில்லையென்று விட்டுச் சென்ற அதே ஆடவன் அவளைச் சுகிக்க வருகிறான். அப்போது அவளும் அவனிடம் அவனது ஆண்மையைக் குறைத்துக் கூறுவது பழிதீர்ப்பதாய் வக்கிரமானதாய்த் தெரியலாம். காதலித்தவன் அல்லது காதலிப்பது போல நடித்தவன் அவளுக்கு மார்பு போதவில்லை என்பதற்காகவும், கறுப்பாய் இருக்கிறாள் என்பதற்காகவும் மணமுடிக்காது போன போது எவருக்கும் அது வக்கிரமாயோ பாலியல் சார்ந்ததாகவோ தெரியவில்லைத்தானே!
பெண்களை, பாலியல்தேவையை பூர்த்தி செய்யும் இச்சைப்பொருளாக மட்டுமே நோக்கும் ஆண்களுக்கு சாட்டையடி கொடுப்பது போல அமைந்த கதை நாகதோஷம்.
கமலா வாசுகியின் - கண்டறியாத பிள்ளை - கதை ஒரு பெண்ணுக்கு முதலில் ஏற்படும் சூல் முட்டைகளின் வெளியேற்றத்தை, பெருவிழாவாக்கும் எம்மவரிடையே உள்ள அறியாமையையும், அது அப்பெண் குழந்தையின் மனதை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதைப் பல பெற்றோர்கள் இன்னும் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதையும், சிலர் உணர்ந்தாலும் மற்றவர்கள் போலச் சடங்கு சம்பிரதாயம் செய்யாவிட்டால் தாம் சமூகத்தில் இருந்து ஒரு படி இறங்கி விடுவோம் என நினைத்து செயற்படுவதையும், பெண்குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத உறவுகளின் தன்மையையும் அதனால் ஒரு பெண்குழந்தையின் மனதில் ஏற்படுத்தும் விசனத்தையும் சொல்கிறது.
ஜெயந்தியின் - தையல் - குழந்தை பெற்றுக் கொண்ட பச்சை உடலோடு வலியும், உணர்வுமாய் தவிக்கும் ஒரு பெண்ணின் கதை. குழந்தை பெறுவதை விடத் தையல் போடுவதுதான் அதிகமாய் வலிக்கும் என்பார்கள். கதையின் நாயகி சுதா வலியோடு கணவனுக்காய் காத்திருக்கும் போது புண்ணியாஜனத்துக்கு வந்தவன் அவள் உணர்வுகளை மதிக்காமல் போனது கூட மனதைப் பாதிக்கவில்லை. அன்பாய் ஆதரவாய் பேச வருவான் என்று அவள் காத்திருக்க, நடுஇரவில் தன் உடற்சுகத்துக்காக அவளைத் தேடி வருவது மனதை நெருட வைக்கிறது.
விஜயலட்சுமி சேகரின் - குற்றமில்லை - சிறுகதை நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்த பெண் சுவர் ஏறிக்குதித்து கொலை செய்ய வரும் காமுகன் முன்னே ஆபரணம் ஆவதா ஆயுதம் ஆவதா? என்று கேட்கிறது. ஆயுதம் ஆவதுதான் சரியென்று நாம் சொன்னாலும் சட்டமும் சமூகமும் கொலைகாரியென்றும் நடத்தை கெட்டவள் என்றும் பாதகமாக அவள் மீது பழி சுமத்தியுள்ளன.
சாந்தினி வரதராஜனின் - வீடு - புலம்பெயர்ந்து வாழும் சுகந்தி சொந்த நாட்டை நோக்கிப் பயணிப்பதையும், அங்கு தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீட்டுக்கு சோகங்களையும் சுகங்களையும் நினைவுகளில் சுமந்து கொண்டு செல்வதையும் உணர்வுகளோடு சொல்கிறது. புலம்பெயர்ந்த எல்லோரின் மனதுக்குள்ளும் பிரிவும், துயரும் எந்தளவுக்குப் படிந்து போயிருக்கிறது என்பதை நெகிழ்வோடு சொல்லியுள்ள கதை.
சந்திரா ரவீந்திரனின் - பனிமழை - சுப்பர்மார்க்கெட்டில் வேலை செய்யும் புலம் பெயர்ந்த ஒரு தமிழ்குடும்பப் பெண்ணின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாய் அமைந்துள்ள கதை. பனிமழையின் குளிரையும், அழகையும் அவர் வர்ணித்திருந்ததையும் விட அவர் கடமையாற்றும் சுப்பர்மார்க்கெட்டினுள்ளான வேலைகளையும், அனுபவங்களையும், நடைமுறைகளையும் எங்கள் கண்முன்னும் அழகாகக் கொண்டு வந்திருந்தார்.
வேலையிடத்தில் தனது கடமைகளை அதற்கேயுரிய சிரத்தையுடன் செய்து விட்டு ஒரு மனைவியாக, தாயாக வீடு திரும்பும் போது வீட்டின் கோலங்கள் ஒரு குடும்பப்பெண்ணின் மனதை எந்தளவுக்கு நெகிழச் செய்யும் என்பதை நன்றாகச் சொல்லியிருந்தார். இருந்தாலும் சந்திரா ரவீந்திரனின் கதை என்ற எனது எதிர்பார்ப்புக்கு ஈடாக அக்கதை அமையவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
உமாவின் - மரியானா - கதை மருத்துவமனைக் கட்டிலில் வலியுடன் படுத்திருக்கும் போது வைத்தியத்துக்காக அவள் அறையைப் பங்கு போட வந்த ஒரு ஜேர்மனியப் பெண்ணுடனான உரையாடல். மிகவும் இதமாக, படிக்கும் போது மனதை வருடும் உணர்வைத் தரக் கூடிய விதமாக நன்றாக அமைந்துள்ளது. வயதானாலும் வயதை ஒரு பொருட்டாக்காமல் அறிவோடு பேசும் தொண்ணூற்றைந்து வயதுச் சிறுமியின் பேச்சுக்களும் அதை உமா சொன்ன விதமும் மிகவும் நன்றாக உள்ளன.
ஷாமிலாவின் - சிறகிழந்த பறவையாய் - நாட்டு நிலைமையை உத்தேசித்து வெளிநாட்டில் பெரியப்பாவோடு இருந்து படிக்கச் செல்லும் ஒரு சிறுமியின் வாழ்வு எப்படி சிதைக்கப் படுகிறது என்று சொல்லும் கதை. ஐம்பது வயதைத் தாண்டிய, அப்பா ஸ்தானத்தில் இருக்க வேண்டிய பெரியப்பாவே அவளைப் பாலியல் இச்சைக்கு பலியாக்க முயல்வதும், அவள் இணங்காத பட்சத்தில் வற்புறுத்துவதும் பாலியல் சுரண்டல் என்பது எமது சமூகத்தில் எந்தளவுக்குப் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
சிறகுகளை விரித்துக் கொண்டு தன் வீட்டை விட்டுப் பறக்கத் தொடங்கும் அந்தச் சிறுமியின் கண்களில் கனவுகளும், வானத்தைத் தொடும் நினைவுகளும் மட்டுமே இருந்தன. வீட்டை விட்டு போகும் போது இன்னும் எத்தனை விடயங்களை இழக்கப் போகிறேன் என்பது மட்டும் நினைவுக்குள் சிக்கவில்லை. அவள்தான் சின்னப்பிள்ளை என்றால் அவள் பெற்றோருக்குக் கூட சில விடயங்கள் விளங்கவில்லை. பெற்றோர்கள் தவிர்ந்த வேறு உறவுகளுடன் (அவர்கள் மிக நெருங்கிய உறவுகளாய் இருக்கும் பட்சத்திலும் கூட) வாழ நேரிடும் பெண்குழந்தைகளுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல்களைப் பல பெற்றோர்கள் அறிந்து கொள்வதில்லை. இக்கதையிலும் அதேதான். நம்பிக்கைக்குரியவர்கள் என்று நினைத்து அவர்களிடம் தமது குழந்தைகளை ஒப்படைக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதைகளில் ஒன்று இது.
இது ஒரு உண்மைக் கதை என்பதால் அதிகம் சொல்ல முடியவில்லை. மொழிபெயர்ப்பு சரியாக அமைய வேண்டுமானால் தன்னிச்சையான சுருக்குதல் அல்லது நீட்டுதலைத் தவிர்க்க வேண்டும். அதைத்தான் செய்துள்ளேன். கதை பின்னுக்கு சற்று நீண்டு விட்டது போலவே தோன்றுகிறது. கதையில் பின்னுக்கு வரும் கணவனின் தந்தையின் செயற்பாட்டை இன்னொரு கதையாகச் சொல்லியிருக்கலாம்.
கதைக்காக றஞ்சி தேர்ந்தெடுத்த படம் கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருப்பது குறிப்பிடப்பட வேண்டியதொன்று.
அடுத்து மதனி ஜெக்கோனியாஸ் மொழி பெயர்த்துத் தந்த - கைவிடப்பட்டவளாய்.... - மனதை மிகவும் பாதித்த இன்னொரு உண்மைக்கதை. 13வயதுச் சிறுமியான நூரியாவின் சோகக்கதை. ஒரு தந்தை தனது பெண்குழந்தையை அவளது மூன்றாவது வயதிலேயே பெரியப்பாவிடம்(தனது சகோதரனிடம்) கொடுப்பதுவும் அந்தப் பெரியப்பா அவளை அவளது 12வது வயதிலேயே, அவளது சம்மதமோ அன்றி அவளது விருப்பு வெறுப்பு பற்றிய பிரக்ஞையோ இன்றி ஒரு 62வயதுக் கிழவனுக்கு விற்பதுவும் நம்ப முடியாவிட்டாலும் உண்மையான கதை என்னும் போது மனதை வருத்துகிறது. இன்றைய காலகட்டத்திலும் இப்படியான அடிமைத்தனமான வேலைகளுக்கு பெண்குழந்தைகள் பலியாவது மிகச் சோகமான விடயம். அவள் கொலைக்குற்றம் சாட்டப் பட்டு சிறையில் இருப்பது இன்னும் துன்பமானது.
கட்டுரைகளைப் பார்க்கும் போது ஆறு கட்டுரைகள் இடம் பிடித்துள்ளன. இவைகளில் இன்றைய காலகட்டத்தில் மிகுந்த பிரபலமாகியுள்ள, பலராலும் பாவிக்கப்படுகின்ற, உயர்ந்த இடங்களில் கூட அவதானிக்கப் படுகின்ற, பயனுள்ள... இணைய உலகிலான வலைப்பதிவுகள் பற்றியதான மதி கந்தசாமியின் - இணையத்தில் குடில் போடலாம் வாருங்கள் - தவிர்ந்த மற்றைய ஐந்து கட்டுரைகளும் பெண்களின் பிரச்சனைகள், முன்னேற்றம் குறித்த ஆலோசனைகள், ஆணாதிக்க சிந்தனைகள்.. பற்றிக் கூறுகின்றன.
இவைகளில் இந்தியாவைச் சேர்ந்த வைகைச்செல்வியின் - பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - கட்டுரை சகலவிதத்திலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட அன்றைய காலத்தில் படைக்கப் பட்ட பெண் எழுத்துக்களில் இருந்த வலிமையும், வீரியமும், உயிர்ப்பும், காலத்தை வென்று நிற்கும் தன்மையும் இன்றைய பெண்படைப்பாளிகளின் படைப்புக்களில் இல்லையோ! என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது. அன்றைய பெண்படைப்பாளிகள் பற்றிய பலதகவல்களோடு ஒளவையார், சரோஜினி, வை.மு.கோதைநாயகி... என்று அன்றைய பெண் படைப்பாளிகளிகளையும் அதற்கு உதாரணமாக ஒப்பிட்டுச் சுட்டியுள்ளார் வைகைச்செல்வி. ஆனாலும் வைகைச்செல்வி குறிப்பிட்டது போன்ற ஆளுமை மிக்க பெண்படைப்பாளிகள், இன்றும் இருக்கிறார்கள். அதுவும் அன்றைய படைப்பாளிகளை விடக் கூடிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அன்று ஒரு குறிப்பிட்ட அளவான பெண் படைப்பாளர்களே இருந்தார்கள். அவர்கள் பளிச்சென்று எல்லோர் கண்களுக்கும் தெரிந்தார்கள். இன்று உலகளாவப் பெண் படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதனால் அந்தப் பளிச்சென்ற வெளித்தெரிவு இல்லை. மற்றும் படி பன்முகத்தன்மை கொண்ட எழுத்துக்களை மட்டுமல்லாமல், அதைச் செயற்படுத்தும் திறனோடும் பல ஆளுமை மிக்க பெண்கள் இன்று எம்மிடையே உள்ளார்கள் என்பதுதான் உண்மை.
மும்பையைச் சேர்ந்த புதியமாதவியின் - என்று தணியும் எங்கள் சுதந்திரதாகம் - என்ற கட்டுரை இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருந்தாலும் இன்னும் ஏன் பெண்ணியல் சிந்தனையில் புரட்சிகள் ஏற்படவில்லை என்றும், ஆணாதிக்கம் இல்லாத சுதந்திரக்காற்று இன்னும் ஏன் அவள் சுவாசத்துக்கு எட்டவில்லையென்றும் ஆய்ந்துள்ளது. ஊடகங்களில் பெண்கள் எப்படிச் சிறுமைப் படுத்தப் படுகிறார்கள், விளம்பரங்களில் பெண்கள் எப்படி மலிவு படுத்தப் படுகிறார்கள், அரசியலில் எந்த நிலையில் பெண்கள் நுழைகிறார்கள், இல்லங்களில் பெண்களின் வேலைகள் எப்படிக் கணிக்கப் படுகின்றன என்றெல்லாம் அருமையாக விளக்கி, அதிகம் படித்த பெண்ணென்றால் என்ன? ஐரோப்பியப் பெண் என்றால் என்ன? பெண் என்பதால் அவள் இன்னும் வன்முறைக்கு உட்படுத்தப் படுகிறாள் என்ற உண்மையை புள்ளி விபரங்களுடன் தந்துள்ளது.
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் - இன்னும் இருபது வருடங்களில் - புலம்பெயர்ந்த தமிழ்ப்பெண்களின் நிலை எதிர்காலத்தில் என்னவாயிருக்கும் என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அரசியல், பொருளாதாராம், மேற்படிப்பு போன்ற காரணங்களால் ஏற்பட்ட புலம் பெயர்வு தமிழ்பெண்களை பொருளாதார ரீதியில் சற்று முன்னேற்றி இருக்கிறது என்றாலும், அதற்கப்பால் என்ன முன்னேற்றத்தைத் தமிழ்ப்பெண்கள் கண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி இக்கட்டுரையினூடே எழுகிறது.
சின்னத்திரைத் தொடர்களும், பெரியதிரை தரும் படங்களும் பெண்களை இன்னும் எவ்வளவு தூரத்துக்கு பின்னுக்குத் தள்ளுகின்றன என்பதையும், இவைகளின் பாதிப்புக்கள் எமது தமிழ்ப்பெண் குழந்தைகளின் மனவளர்ச்சியில் எத்தகையதொரு பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிறது என்பதையும், இதனால் எதிர்காலக் குழந்தைகளின் அறிவுவளர்ச்சி எந்தளவுக்குக் குன்றும் என்பதையும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் கட்டுரையினூடே வருத்தத்தோடு தெரிவிக்கிறார். சின்னத்திரைகளோடு மாரடிக்கும் புலம்பெயர் பெண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் எடுக்க வேண்டிய கட்டுரை இது.
அவுஸ்திரேலியாவிலிருந்து சந்திரலேகா வாமதேவாவின் - கற்பு நிலை சொல்ல வந்தார் - என்ற கட்டுரை மூலம் கற்பு என்பதன் பொருள் பற்றியும், அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்ற போதும் அன்றைய காலத்திலிருந்து இன்றைய வரைக்கும் பெண்களின் கோட்பாடாகவே கருதப்படுவது பற்றியும் ஆய்ந்துள்ளார். கூடவே இலக்கியங்களில் உள்ள கற்புக்கரசிகள் பற்றிய கதைகளை உதாரணங்களாகக் காட்டி, அவைகளெல்லாம் ஆண்களாலேயே எழுதப் பட்டிருப்பதைச் சுட்டியும் உள்ளார்.
தயாநிதி மொழிபெயர்த்துத் தந்த கிரிஸ் கிராஸ்சின் - ஆணாதிக்கத்திற்கு முகம் கொடுப்பது பற்றிய சில தனிப்பட்ட பிரதி பலிப்புகள் - மிகவும் அருமையானதொரு கட்டுரை. "ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒரு விவாதத்தில் பெண்களுடன் நேருக்கு நேர் பார்த்து உரையாடுவது போன்றதல்ல. இது ஒரு அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, உளவியல் ரீதியான பலம் வாய்ந்த கட்டமைப்புக்கு எதிரான போராட்டம். அத்துடன் எனது உட்புறமுள்ள மேலாதிக்கம் என்பது பனிமலையின் முனைப்பகுதி போன்றது. இது சுரண்டலாலும் அடக்கு முறையினாலும் கட்டப் பட்டது" என்கிறார் கிரிஸ் கிராஸ்.
ஆணாதிக்க சமூகத்தில் உள்ள ஒருவரே ஆணாதிக்கத்தைப் பற்றிச் சிந்திப்பதென்பதும் அது பற்றி கூறுவதென்பதும் மிகவும் வித்தியாசமானது. என்னதான் விடுதலை அமைப்புக்களில் அங்கத்தவர்கள் ஆனாலும் தந்தைவழிச் சமூக அமைப்புகளினோடு வளர்ந்த ஆண்களின் உள்ளே திமிறும் மேலாதிக்கம் அவர்களை ஆக்கிரமிப்பது அவர்களைப் பொறுத்த வரையில் தவிர்க்க முடியாத ஒன்றே. இந்த நிலையை ஒரு குற்ற உணர்வோடு நோக்கும் ஒரு ஆணே இது பற்றி எழுதியது ஒரு வகையில் சுவாரஸ்யமாகக் கூட உள்ளது. மொழி பெயர்த்துத் தந்த தயாநிதிக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.
கவிதைகளைப் பார்க்கும் போது
அவுஸ்திரேலியாவிலிருந்து
ஆழியாளின் - விடுதலை,
பாமதியின் - யுத்தம்,
சௌந்தரியின் - இளமைக்காலம்,
இலங்கையிலிருந்து
அனாரின் - இருப்பின் பின்னால் வாழ்வின் வெளி,
முகைசிரா முகைடீனின் - நான், நான் பேச நினைப்பதெல்லாம், பாலறஞ்சனியின் - நிஜங்களும் நிகழலாம், தீக்குள் விரலை வைத்தால், விஜயலட்சுமி.சேகரின் - நானும் ஓர் காவியம்தான்,
இந்தியாவிலிருந்து
மாலதி மைத்ரியின் - மனநோயின் முன் பின் நிகழ்வுகள், விதைச்சொல், திலகபாமாவின் - நகல்கிறது நதி, கட்டுடையும் நகரம்,
புதியமாதவியின் - கவிஞனின் மனைவி(தெலுங்கில் மந்தரப்பு ஹேமாவவதி), புதியமாதவி கவிதைகள்,
கனடாவிலிருந்து
எதிக்காவின் - இன்னமும் ஏதோவொன்றிற்காய்...,
துர்க்காவின் - துர்க்கா கவிதைகள்,
சுவிசிலிருந்து
நளாயினி தாமரைச்செல்வனின் - தலைப்பில்லாத கவிதை, நமக்கான நட்பு,
ஜேர்மனியிலிருந்து
பாரதியின் - நலங்கெடப்புழுதியில்
சுகந்தினி சுதர்சனின் - பிரச்சனைகளுக்கு முகவரியிடுவோம்,
கோசல்யா சொர்ணலிங்கத்தின் - தீர்ப்பெழுதும் கரங்கள் பெண்களாகட்டும்,
விக்னா பாக்யநாதனின் - துளிப்பாக்கள்,
என்று 23க்கு மேற்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவைகள் பெண்களின் விடுதலையை, அடக்கப் படுகிறோம் என்று தெரிந்தும் விட்டு வெளியேற முடியாத இயலாமையை, அடைந்து கிடந்தாலும் மனதால் சுதந்திரமாகப் பறக்கத் துணிந்த பெண்களின் தன்மையை, விட்டு விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, இருப்பின் அவசியத்தை..., யுத்தத்தின் கோலங்களை, இயற்கையின் சீற்றங்களை... என்று பல விடயங்களை உணர்வுகள் கலந்து சொல்கின்றன. இக் கவிதைகளைத் தனியாக ஒரு தரம் அலசலாம் போலுள்ளது.
அடுத்து, உரையாடல் வடிவில் - மல்லிகா எம்மிடையே உள்ள சில பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
சமைத்துப் போடும் கணவனின் மனைவியும், அதிகாலை வேலைக்குப் போகும்போது தானே தேநீரைத் தயாரித்துக் குடித்து விட்டுச் செல்லும் கணவனின் மனைவியும் விடுதலை பெற்றவர்கள் என்பதான அறியாமை நிறைந்த பேச்சு கூடுதலாகப் பெண்களிடையேதான் உலாவுகிறது.
கதையில் வந்த மாயாவுக்கு தான் விரும்பியவனை மணம் முடிக்கவோ, முடித்த ஒருவன் சரியில்லை, குடிகாரன், இவளை அடித்துத் தொந்தரவு செய்கிறான் என்ற போது அவனை விட்டு விலகிச் செல்லவோ உரிமையில்லை. தன் வாழ்வைத் தானே நிர்ணயிக்கும் அவளது சுதந்திரம் பற்றி பெண்ணான அவள் அண்ணிக்கே கவலையில்லை. பெண்ணே பெண்ணை விளங்கிக் கொள்ள முடியாத அல்லது விளங்கிக் கொள்ள விரும்பாத இப்படியான நிலைமைகளையும் சமூகம், கலாசாரம் என்பதன் அர்த்தம் புரியாத அர்த்தமற்ற செயற்பாடுகள் கொண்ட எமது பெண்களின் பார்வையில் ஜேர்மனியப் பெண்கள் மீதான கணிப்புகளையும்.... என்று சொல்ல வந்த விடயத்தை கச்சிதமாகச் சொல்லியுள்ளார் மல்லிகா.
ஓவியர் வாசுகியுடனான றஞ்சியின் செவ்வியொன்றும் மலரில் இடம் பெற்றுள்ளது. மலருக்கு மிகவும் பொருத்தமான ஒருவரோடான செவ்வி இது. பெண்களது வெளிப்பாடுகளை ஓவியப்பயிற்சி மூலம் கொண்டு வரும் இந்த வாசுகிதான், முன் அட்டைப்படத்தை வரைந்து, மலருக்கு அழகும் வலுவும் ஊட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தின் சாதாரண ஒரு பெண்ணுக்குக் கிட்டாத பல வெளிகள் ஓவியம் மூலம் தனக்கு சாத்தியமாகின என்று சொல்லும் வாசுகியினுடனான செவ்வி மிகவும் சுவாரஸ்யமானது.
"பெண்கள் சந்திப்போ...! உங்கை என்ன நடக்குது?. உதுக்கு நாங்கள் ஆம்பிளையள் வரக்கூடாதோ?"
"ம்... பெண்டுகள் சந்திச்சு என்ன செய்யப் போறிங்கள்? குடுமிச் சண்டையோ பிடிக்கப் போறிங்கள்?"
"இஞ்சைபார்...! பெண்கள் சந்திப்பு, இலக்கியம் எண்டெல்லாம் சொல்லிக் கொண்டு கூடுறது இலக்கியங்கள் பேச இல்லை."
இவைகளெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா? பெண்கள் சந்திப்புக்கு ஒரு தடவையேனும் செல்லாத சில ஆண்களால் அவர்களைச் சுற்றியுள்ள பெண்களின் மீது எறியப் படும் எள்ளல் கருத்துக்கள் இவை. தமது மனைவியரோ சகோதரிகளோ இதைச் சாட்டிக் கொண்டு வெளியில் போய் விடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பில் அவசரமாய் கொட்டப்படும் வார்த்தைகள் இவை.
கருத்து மோதல்களும் முரண்களும் ஆண்கள் ஒன்று கூடலில் ஒரு போதுமே நிகழ்வதில்லையா? கேட்பதற்குத் திராணியற்றவர்களாக இன்னும் பெண்கள் இருக்கிறார்கள்.
இவைகளுக்கெல்லாம் பதில் கூறும் விதமாக பெண்கள் சந்திப்பதில்..., ஒன்று கூடுவதில்... உள்ள நன்மைகள்.... தமது பிரச்சனைகளை மனந்திறந்து கலந்துரையாடுவதின் மூலம் பெண்களுக்குள் ஏற்படும் தன்னம்பிக்கை... இவை பற்றி தேவா விளக்கமாகச் சொல்கிறார் பெண்கள் சந்திப்பு சிறுகுறிப்பு என்ற கட்டுரை மூலம்.
இத்தனை விடயங்களும் இந்தப் பெண்கள் சந்திப்பு மலருக்குள் அடங்கியிருக்கின்றன என்னும் போது உண்மையிலேயே வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. எத்தனையோ பிரச்சனைகள், அவசரங்கள், அவசியங்கள், தடைகளின் மத்தியில் மீண்டும் பெண்கள் சந்திப்பு மலர் இத்தனை கனமாக வெளிவந்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விடயமே. வெளியிட்டு வைத்த பெண்கள் சந்திப்புக் குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். கூடவே ஆக்கங்களைத் தந்துதவி பெண்கள் சந்திப்பு மலருக்கு வலுவூட்டி, உறுதுணையாக நின்ற சகோதரிகளுக்கும் மனதார்ந்த நன்றி.
சந்திரவதனா
ஜேர்மனி
18.8.2005
Wednesday, June 22, 2005
புலம் பெயர் வாழ்வில் பெண்களின் உளவியல் பிரச்சனைகள்
உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகிவிட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இந்த உளவியல் பிரச்சனை பெண்களின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் படிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
இங்கு நான் பெற்றோருடன் வாழ்கின்ற திருமணமாகாத எங்கள் பெண்பிள்ளைகள் உளவியல் பிரச்சனையில் மாய்வதற்கான காரணங்களை ஓரளவுக்கோ அல்லது மேலோட்டமாகவோ பார்க்க முயற்சிக்கிறேன்.
எங்களது ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்ததிலிருந்து ஒரேமாதிரி உண்டு உறங்கி வளர்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அதாவது பெண் குழந்தைக்குப் பத்து வயது வந்ததும் எமது வளர்ப்பில் வித்தியாசம் ஏற்படத் தொடங்குகிறது. அப்போதே ஒரு பெண் குழந்தையின் மனதில் விசனங்களும் ஏற்படத் தொடங்கி விடுகின்றது. ஏன் என்ற கேள்வி மனசைக் குடையத் தொடங்கி விடுகின்றது.
ஆண்பிள்ளை வெளியில் போய் விளையாடலாம். நினைத்த நேரம் வெளியில் போய் நினைத்த நேரம் வீட்டுக்குத் திரும்பலாம். ஆனால் ஒரு பெண்பிள்ளை ஏதாவதொரு காரணத்துக்காகப் பத்து நிமிடங்கள் பிந்தினாலே ஏன்...? ஏதற்கு...? என்ற கேள்விகளால் குடைந்தெடுக்கப் படுகின்றாள்.
பெண்பிள்ளைகளைக் கவனமாக வளர்க்கிறோம் என்ற பெயரில் எத்தனை அநாவசியத் தடைகள் போடப் படுகின்றன. இந்தத் தடைகளும் அளவுக்கு மீறிய கண்டிப்பும் பெண்பிள்ளைகளைச் செப்பனிட்டு வளர்த்து விடப் போதுமானவை என்றுதான் அனேகமான பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். இதுதான் பெண்பிள்ளைகளை வளர்க்கும் முறை என்றதொரு ஆழ்ந்த கருத்தை அவர்கள் தமக்குள் பதித்தும் வைத்திருக்கிறார்கள்.
பெற்றோர்களது இந்தச் செயற்பாட்டுக்கான முக்கிய காரணங்களில்
ஒன்று, அவர்கள் தம் பிள்ளைகளின் மேல் வைத்திருக்கும் அளவுக்கதிகமான பாசம். இரண்டாவது, இந்த சமூகத்தின் மேலுள்ள அதீத பயம்.
இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தீர்களானால் இந்த சமூகம் தமது பெண்பிள்ளையை அடக்கமில்லாதவள் என்றோ, ஆட்டக்காரியென்றோ சொல்லி விடும் என்றும், அதனால் தமது மகளுக்கு திருமணம் நடக்காது போய் விடும் என்றும் பெண்ணைப் பெற்றவர்கள் பயப்படுகின்றார்கள். இது போன்று இன்னும் வேறு சில காரணங்களும், அதனால் ஏற்படும் பயங்களும்தான் பெற்றோர்களை இப்படியான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அவர்களின் இந்த முடிவினால் அவர்கள் பெண் பிள்ளைகளின் முன் கட்டி யெழுப்பும் தடைகள் அதிகமாகின்றன.
தடைகள் அதிகமாக அதிகமாகத்தான் அதை உடைத்தெறியும் வீறாப்பு ஏற்படும் என்பதை எந்தப் பெற்றோரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
அதேநேரம் இந்த உடைத்தெறியும் துணிவு எத்தனை பேருக்கு வரும்? உடைத்தெறியும் துணிவு வந்தாலும் அதை செயற்படுத்தும் தைரியம் எத்தனை பேருக்கு வரும்? இந்தத் துணிவு, தைரியம் எதுவும் வராதவர்கள் தான், எல்லாவற்றையும் மனதுக்குள்ளே வைத்து வருந்தி வருந்தி உளவியல் பிரச்சனைக்கு அடிமையாகிறார்கள்.
வீட்டிலே அம்மாவும் அப்பாவும் ஐரோப்பிய ஸ்ரைலில் எல்லாம் செய்வார்கள். ஆனால் அவர்களின் பெண் பிள்ளை வகுப்பு மாணவியின் அல்லது நண்பியின் பிறந்தநாள் விழாவுக்குப் போகவேண்டுமென்று கேட்டால் மட்டும் எமது கலாச்சாரத்தைச் சொல்லித் தடுத்து விடுவார்கள்.
பெண்பிள்ளை பாடசாலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் வீட்டுக்கு வரப்போகும் விருந்தினரை வரவேற்க அவளைக் கொண்டும் வேலைகள் செய்விப்பார்கள். விருந்தினர் வந்தவுடன் அப்பா போத்தலும் கிளாசுமாக இருந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். அம்மா அப்பாவின் நண்பர்களது மனைவியருடன் சமையலறையில் சமையலும் அரட்டையுமாக நிற்பார்.
அண்ணன், தம்பி எல்லோரும் நண்பர்களிடமோ அல்லது விளையாடவோ வெளியில் போய்விடுவார்கள். அந்தப் பெண்பிள்ளை என்ன செய்யும்?
அப்பாவும் அப்பாவின் நண்பர்களும் தொலைக்காட்சியில் என்ன பார்க்கிறார்களோ! அதையே பார்த்து... அம்மாவும் அப்பாவின் நண்பர்களின் மனைவியரும் என்ன அரட்டை அடிக்கிறார்களோ! அதையே கேட்டு... இதுதான் பத்து வயது தாண்டிய ஒரு பெண்பிள்ளையின் அறிவை வளர்க்கும் விடயங்களா? அல்லது அந்த வயதில் அவளின் மனிதில் சிறகடிக்கும் இனிய கனவுகளுக்கும், நினைவுகளுக்கும் போடும் தீனியா?
வீட்டு வேலைகளைப் பிள்ளைகள் பழகத்தான் வேண்டும். ஆனால் அதுதான் அவர்கள் வாழ்க்கை என்றில்லை. அது போகப் பெண்பிள்ளைகள் மட்டும் தான் வீட்டு வேலைகளைப் பழக வேண்டுமென்றுமில்லை. பெண்பிள்ளைகள் வெளியுலகத்தையும் பார்க்க வேண்டும்.
இந்த வயதில் அவர்களிடம் பல ஆசைகள் இருக்கும். ஆனால் அனேகமான பெற்றோர்கள் நினைக்கிறார்கள், இந்த வயதில் பிள்ளைகளிடம் காதல் ஒன்று மட்டும் தான் இருக்குமென்று. அந்த நினைவுகள் அவர்களைப் பயமுறுத்த தவறுகள் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற ஒரே எண்ணத்தைக் கருத்தில் கொண்டு பெண்பிள்ளைகளைக் கட்டிப் போட்டு விடுகிறார்கள். இங்கு கூட பெண்பிள்ளைகளை மட்டுந்தான் கட்டிப் போடுகிறார்கள். ஆண் பிள்ளைகள் தவறினால், அது தவறு இல்லை, இயல்பு என்பது எமது சமூகத்தின் கணிப்பீடு.
பெற்றோர்களினதும், சமூகத்தினதும் இந்தத் தவறான கணிப்பீடு, பெண் பிள்ளைகளின் மனதில் ஒரு வித விரக்தியையும், வேதனையையும் ஏற்படுத்தி அதுவே நாளடைவில் உளவியல் தாக்கமாகி விடுகிறது.
இதனால் அந்தப் பெண்பிள்ளைகளின் மனம் மட்டுமல்லாமல், உடல் கூடப் பாதிக்கப் படுவது ஆராய்ச்சி ரீதியாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஐரோப்பிய மருத்துவர்களும், அமெரிக்க மருத்துவர்களும், ஐரோப்பிய, அமெரிக்கப் பெண்களை விட புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்கள் தோள்மூட்டு வலியாலும், மிக்ரேனே எனப்படும் கபாலஇடியாலும் மிகவும் அவஷ்தைப் படுவதைக் கண்டு பிடித்து ஒரு ஆராய்ச்சியும் செய்தார்கள்.
இந்த ஆராய்ச்சியிலிருந்து அவர்கள் கண்டு கொண்டது புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்களில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான ஆசியத்தமிழ்ப் பெண்கள் ஏதோ ஒரு வித மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அதனால் அவர்களின் தோள் மூட்டில் வலியோ அல்லது தாங்க முடியாத தலை இடியாகிய கபால இடியோ ஏற்படுகின்றது. அல்லது அதையும் மீறி எல்லோர் மீதும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டு அதை வெளியில் கொட்ட முடியாது உள்ளுக்குள்ளேயே அடக்கி, அடக்கி அது மூளையின் சில நரம்புகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க, இரண்டு காதின் பின் புற நரம்புகளும் புடைத்து, அவர்களுக்கே, இது ஏன் என்று தெரியாமல் அவர்கள் நோயாளிகள் ஆகிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயங்களை அனேகமான பெற்றோர்கள் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருப்பது சற்று கவலைக்குரிய விடயம்.
பெற்றோர்கள் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதாவது, பெண்பிள்ளைகளை அளவுக்கதிகமாக அடக்கி வளர்ப்பது தான் அவர்களைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கான வழி இல்லை, என்பதை.
அவர்களுக்கு ஓரளவுக்காவது சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களைப் பேச விட வேண்டும். அவர்களை மற்றவர்களுடன் பழக விட வேண்டும். வாழும் முறை பற்றி அவர்களுக்குப் பக்குவமாய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து
"நீ பெண் - அதனால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்றோ
"நீ பெண் - அதனால் இப்படித்தான் பேச வேண்டும்" என்றோ அல்லது
"நீ பெண் - அதனால் இன்ன இன்னதுதான் செய்யலாம்" என்றோ வரையறைகள் போடுவது மிகவும் தப்பானது.
ஒரு பெண்குழந்தையின் திறமைகள் இப்படியான செயற்பாடுகளால் கட்டிப் போடப்படுகின்றன. அந்த நிலையில், தன் திறமையை வெளிப்படுத்த முடியாத கோபத்தில், அது பற்றிப் பேசக் கூட முடியாத விரக்தியில் அந்தக் குழந்தை உளவியல் நோயாளியாகிறது.
ஆதலால் பெற்றோர்கள் சற்று அல்ல, நிறையவே சிந்திக்க வேண்டும். தமது பிள்ளைகளை தாமே உளவியல் நோயாளியாக்கும் அவல வேலையைச் செய்யாமல், அன்பு, நட்புடன் சுதந்திரத்தையும் கொடுத்து, ஒழுக்கத்தையும் சரியான முறையில் போதித்து அவர்களை வளர்க்க வேண்டும்.
பிள்ளையின் நடத்தையில் தவறு கண்டால், நீ பெண்பிள்ளை என்றோ, எமது கலாச்சாரம் என்றோ அவளைப் பயமுறுத்தாமல், அவளை அன்போடு அணுகி, ஆதரவோடு பேசி, நானிருக்கிறேன் உனக்கு என்ற நம்பிக்கையை அவள் மனதில் விதைக்க வேண்டும்.
அப்போதுதான் அவள் நட்போடு உங்களைப் பார்ப்பாள். பயம் தெளிந்து உங்களுடன் பேசி நல்ல பாதைக்குத் திரும்புவாள். வீட்டுக்குள்ளேயே வைத்து, அடக்கம் என்ற பெயரில் அடக்கி வளர்க்கப் படும் பிள்ளைகளை விட, உங்கள் பிள்ளை நல்லது, கெட்டதைப் பகிர்ந்துணரும் தன்மை கொண்டவளாக இருப்பாள்.
மிக மிக முக்கியமான விடயம், பெற்றோர்கள் தங்கள் நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காகச் செலவு செய்யும் நேரத்தை விடக் கூடிய நேரத்தை தமது பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதற்குச் செலவு செய்ய வேண்டும். அது பிள்ளைகளின் மனதில் ஒரு சந்தோஷத்தையும், பெற்றோரிடம் எதையும் மனம் திறந்து பேசி, ஆலோசனை கேட்கும் தன்மையையும் ஏற்படுத்தும்.
அதை விடுத்து கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளை அடக்க நினைத்தால் இந்த உளவியல் பிரச்சனை எமது பெண்பிள்ளைகளின் மத்தியில் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
சந்திரவதனா
யேர்மனி
2000
ஒலிபரப்பு - ஐபிசி தமிழ் - அக்கினி-கலா (2001)
பிரசுரம் - ஈழமுரசு - பாரிஸ்(27.12.2001-2.1.2002)
இங்கு நான் பெற்றோருடன் வாழ்கின்ற திருமணமாகாத எங்கள் பெண்பிள்ளைகள் உளவியல் பிரச்சனையில் மாய்வதற்கான காரணங்களை ஓரளவுக்கோ அல்லது மேலோட்டமாகவோ பார்க்க முயற்சிக்கிறேன்.
எங்களது ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்ததிலிருந்து ஒரேமாதிரி உண்டு உறங்கி வளர்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அதாவது பெண் குழந்தைக்குப் பத்து வயது வந்ததும் எமது வளர்ப்பில் வித்தியாசம் ஏற்படத் தொடங்குகிறது. அப்போதே ஒரு பெண் குழந்தையின் மனதில் விசனங்களும் ஏற்படத் தொடங்கி விடுகின்றது. ஏன் என்ற கேள்வி மனசைக் குடையத் தொடங்கி விடுகின்றது.
ஆண்பிள்ளை வெளியில் போய் விளையாடலாம். நினைத்த நேரம் வெளியில் போய் நினைத்த நேரம் வீட்டுக்குத் திரும்பலாம். ஆனால் ஒரு பெண்பிள்ளை ஏதாவதொரு காரணத்துக்காகப் பத்து நிமிடங்கள் பிந்தினாலே ஏன்...? ஏதற்கு...? என்ற கேள்விகளால் குடைந்தெடுக்கப் படுகின்றாள்.
பெண்பிள்ளைகளைக் கவனமாக வளர்க்கிறோம் என்ற பெயரில் எத்தனை அநாவசியத் தடைகள் போடப் படுகின்றன. இந்தத் தடைகளும் அளவுக்கு மீறிய கண்டிப்பும் பெண்பிள்ளைகளைச் செப்பனிட்டு வளர்த்து விடப் போதுமானவை என்றுதான் அனேகமான பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். இதுதான் பெண்பிள்ளைகளை வளர்க்கும் முறை என்றதொரு ஆழ்ந்த கருத்தை அவர்கள் தமக்குள் பதித்தும் வைத்திருக்கிறார்கள்.
பெற்றோர்களது இந்தச் செயற்பாட்டுக்கான முக்கிய காரணங்களில்
ஒன்று, அவர்கள் தம் பிள்ளைகளின் மேல் வைத்திருக்கும் அளவுக்கதிகமான பாசம். இரண்டாவது, இந்த சமூகத்தின் மேலுள்ள அதீத பயம்.
இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தீர்களானால் இந்த சமூகம் தமது பெண்பிள்ளையை அடக்கமில்லாதவள் என்றோ, ஆட்டக்காரியென்றோ சொல்லி விடும் என்றும், அதனால் தமது மகளுக்கு திருமணம் நடக்காது போய் விடும் என்றும் பெண்ணைப் பெற்றவர்கள் பயப்படுகின்றார்கள். இது போன்று இன்னும் வேறு சில காரணங்களும், அதனால் ஏற்படும் பயங்களும்தான் பெற்றோர்களை இப்படியான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அவர்களின் இந்த முடிவினால் அவர்கள் பெண் பிள்ளைகளின் முன் கட்டி யெழுப்பும் தடைகள் அதிகமாகின்றன.
தடைகள் அதிகமாக அதிகமாகத்தான் அதை உடைத்தெறியும் வீறாப்பு ஏற்படும் என்பதை எந்தப் பெற்றோரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
அதேநேரம் இந்த உடைத்தெறியும் துணிவு எத்தனை பேருக்கு வரும்? உடைத்தெறியும் துணிவு வந்தாலும் அதை செயற்படுத்தும் தைரியம் எத்தனை பேருக்கு வரும்? இந்தத் துணிவு, தைரியம் எதுவும் வராதவர்கள் தான், எல்லாவற்றையும் மனதுக்குள்ளே வைத்து வருந்தி வருந்தி உளவியல் பிரச்சனைக்கு அடிமையாகிறார்கள்.
வீட்டிலே அம்மாவும் அப்பாவும் ஐரோப்பிய ஸ்ரைலில் எல்லாம் செய்வார்கள். ஆனால் அவர்களின் பெண் பிள்ளை வகுப்பு மாணவியின் அல்லது நண்பியின் பிறந்தநாள் விழாவுக்குப் போகவேண்டுமென்று கேட்டால் மட்டும் எமது கலாச்சாரத்தைச் சொல்லித் தடுத்து விடுவார்கள்.
பெண்பிள்ளை பாடசாலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் வீட்டுக்கு வரப்போகும் விருந்தினரை வரவேற்க அவளைக் கொண்டும் வேலைகள் செய்விப்பார்கள். விருந்தினர் வந்தவுடன் அப்பா போத்தலும் கிளாசுமாக இருந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். அம்மா அப்பாவின் நண்பர்களது மனைவியருடன் சமையலறையில் சமையலும் அரட்டையுமாக நிற்பார்.
அண்ணன், தம்பி எல்லோரும் நண்பர்களிடமோ அல்லது விளையாடவோ வெளியில் போய்விடுவார்கள். அந்தப் பெண்பிள்ளை என்ன செய்யும்?
அப்பாவும் அப்பாவின் நண்பர்களும் தொலைக்காட்சியில் என்ன பார்க்கிறார்களோ! அதையே பார்த்து... அம்மாவும் அப்பாவின் நண்பர்களின் மனைவியரும் என்ன அரட்டை அடிக்கிறார்களோ! அதையே கேட்டு... இதுதான் பத்து வயது தாண்டிய ஒரு பெண்பிள்ளையின் அறிவை வளர்க்கும் விடயங்களா? அல்லது அந்த வயதில் அவளின் மனிதில் சிறகடிக்கும் இனிய கனவுகளுக்கும், நினைவுகளுக்கும் போடும் தீனியா?
வீட்டு வேலைகளைப் பிள்ளைகள் பழகத்தான் வேண்டும். ஆனால் அதுதான் அவர்கள் வாழ்க்கை என்றில்லை. அது போகப் பெண்பிள்ளைகள் மட்டும் தான் வீட்டு வேலைகளைப் பழக வேண்டுமென்றுமில்லை. பெண்பிள்ளைகள் வெளியுலகத்தையும் பார்க்க வேண்டும்.
இந்த வயதில் அவர்களிடம் பல ஆசைகள் இருக்கும். ஆனால் அனேகமான பெற்றோர்கள் நினைக்கிறார்கள், இந்த வயதில் பிள்ளைகளிடம் காதல் ஒன்று மட்டும் தான் இருக்குமென்று. அந்த நினைவுகள் அவர்களைப் பயமுறுத்த தவறுகள் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற ஒரே எண்ணத்தைக் கருத்தில் கொண்டு பெண்பிள்ளைகளைக் கட்டிப் போட்டு விடுகிறார்கள். இங்கு கூட பெண்பிள்ளைகளை மட்டுந்தான் கட்டிப் போடுகிறார்கள். ஆண் பிள்ளைகள் தவறினால், அது தவறு இல்லை, இயல்பு என்பது எமது சமூகத்தின் கணிப்பீடு.
பெற்றோர்களினதும், சமூகத்தினதும் இந்தத் தவறான கணிப்பீடு, பெண் பிள்ளைகளின் மனதில் ஒரு வித விரக்தியையும், வேதனையையும் ஏற்படுத்தி அதுவே நாளடைவில் உளவியல் தாக்கமாகி விடுகிறது.
இதனால் அந்தப் பெண்பிள்ளைகளின் மனம் மட்டுமல்லாமல், உடல் கூடப் பாதிக்கப் படுவது ஆராய்ச்சி ரீதியாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஐரோப்பிய மருத்துவர்களும், அமெரிக்க மருத்துவர்களும், ஐரோப்பிய, அமெரிக்கப் பெண்களை விட புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்கள் தோள்மூட்டு வலியாலும், மிக்ரேனே எனப்படும் கபாலஇடியாலும் மிகவும் அவஷ்தைப் படுவதைக் கண்டு பிடித்து ஒரு ஆராய்ச்சியும் செய்தார்கள்.
இந்த ஆராய்ச்சியிலிருந்து அவர்கள் கண்டு கொண்டது புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்களில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான ஆசியத்தமிழ்ப் பெண்கள் ஏதோ ஒரு வித மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அதனால் அவர்களின் தோள் மூட்டில் வலியோ அல்லது தாங்க முடியாத தலை இடியாகிய கபால இடியோ ஏற்படுகின்றது. அல்லது அதையும் மீறி எல்லோர் மீதும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டு அதை வெளியில் கொட்ட முடியாது உள்ளுக்குள்ளேயே அடக்கி, அடக்கி அது மூளையின் சில நரம்புகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க, இரண்டு காதின் பின் புற நரம்புகளும் புடைத்து, அவர்களுக்கே, இது ஏன் என்று தெரியாமல் அவர்கள் நோயாளிகள் ஆகிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயங்களை அனேகமான பெற்றோர்கள் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருப்பது சற்று கவலைக்குரிய விடயம்.
பெற்றோர்கள் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதாவது, பெண்பிள்ளைகளை அளவுக்கதிகமாக அடக்கி வளர்ப்பது தான் அவர்களைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கான வழி இல்லை, என்பதை.
அவர்களுக்கு ஓரளவுக்காவது சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களைப் பேச விட வேண்டும். அவர்களை மற்றவர்களுடன் பழக விட வேண்டும். வாழும் முறை பற்றி அவர்களுக்குப் பக்குவமாய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து
"நீ பெண் - அதனால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்றோ
"நீ பெண் - அதனால் இப்படித்தான் பேச வேண்டும்" என்றோ அல்லது
"நீ பெண் - அதனால் இன்ன இன்னதுதான் செய்யலாம்" என்றோ வரையறைகள் போடுவது மிகவும் தப்பானது.
ஒரு பெண்குழந்தையின் திறமைகள் இப்படியான செயற்பாடுகளால் கட்டிப் போடப்படுகின்றன. அந்த நிலையில், தன் திறமையை வெளிப்படுத்த முடியாத கோபத்தில், அது பற்றிப் பேசக் கூட முடியாத விரக்தியில் அந்தக் குழந்தை உளவியல் நோயாளியாகிறது.
ஆதலால் பெற்றோர்கள் சற்று அல்ல, நிறையவே சிந்திக்க வேண்டும். தமது பிள்ளைகளை தாமே உளவியல் நோயாளியாக்கும் அவல வேலையைச் செய்யாமல், அன்பு, நட்புடன் சுதந்திரத்தையும் கொடுத்து, ஒழுக்கத்தையும் சரியான முறையில் போதித்து அவர்களை வளர்க்க வேண்டும்.
பிள்ளையின் நடத்தையில் தவறு கண்டால், நீ பெண்பிள்ளை என்றோ, எமது கலாச்சாரம் என்றோ அவளைப் பயமுறுத்தாமல், அவளை அன்போடு அணுகி, ஆதரவோடு பேசி, நானிருக்கிறேன் உனக்கு என்ற நம்பிக்கையை அவள் மனதில் விதைக்க வேண்டும்.
அப்போதுதான் அவள் நட்போடு உங்களைப் பார்ப்பாள். பயம் தெளிந்து உங்களுடன் பேசி நல்ல பாதைக்குத் திரும்புவாள். வீட்டுக்குள்ளேயே வைத்து, அடக்கம் என்ற பெயரில் அடக்கி வளர்க்கப் படும் பிள்ளைகளை விட, உங்கள் பிள்ளை நல்லது, கெட்டதைப் பகிர்ந்துணரும் தன்மை கொண்டவளாக இருப்பாள்.
மிக மிக முக்கியமான விடயம், பெற்றோர்கள் தங்கள் நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காகச் செலவு செய்யும் நேரத்தை விடக் கூடிய நேரத்தை தமது பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதற்குச் செலவு செய்ய வேண்டும். அது பிள்ளைகளின் மனதில் ஒரு சந்தோஷத்தையும், பெற்றோரிடம் எதையும் மனம் திறந்து பேசி, ஆலோசனை கேட்கும் தன்மையையும் ஏற்படுத்தும்.
அதை விடுத்து கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளை அடக்க நினைத்தால் இந்த உளவியல் பிரச்சனை எமது பெண்பிள்ளைகளின் மத்தியில் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
சந்திரவதனா
யேர்மனி
2000
ஒலிபரப்பு - ஐபிசி தமிழ் - அக்கினி-கலா (2001)
பிரசுரம் - ஈழமுரசு - பாரிஸ்(27.12.2001-2.1.2002)
Wednesday, June 15, 2005
புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்
புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் என்று பார்க்கும் போது, எல்லாப் பெண்களின் எதிர்காலமுமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லி விட முடியாது.
புலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் பாதையும் அவளை அண்டியுள்ள அவளது உறவுகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதாவது திருமணமானவளாயின் அவளது கணவனாலும், திருமணமாகதவளாயின் அவளது பெற்றோராலுமே தீர்மானிக்கப் படுகிறது.
ஒரு பெண்ணிடம் முன்னேற்றப் பாதையை நோக்கிய சிந்தனை இருக்கிறதா, இல்லையா என்பதற்கு முன்னர் அவள் பெற்றோரோ, அல்லது அவள் கணவனோ அவளை அவள் எண்ணத்துக்கு ஏற்ப இயங்க விடுகின்றனரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதுதான் கூடுதலான சந்தர்ப்பங்களில் ஒரு பெண்ணின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.
திருமணமானபின், என்னதான் ஒரு பெண்ணிடம் திறமையும் முன்னேற்றப் பாதையை நோக்கிய நல்ல சிந்தனையும் இருந்தாலும், கணவன் என்பவன் அங்கு தடைக்கல்லாக, அவள் எண்ணங்களுக்கு முட்டுக் கட்டையாக நின்று "பெண்ணுக்கு சமையலும் சாப்பாடும் பணிவிடையும்தான் முக்கியம்" என்று சொல்வானேயானால், அந்தப் பெண்ணின் எதிர்காலம் புலம் பெயர் மண்ணிலும் புதுமைகள் எதையும் காணாது சமையலறை நெருப்பில் தீய்ந்து படுக்கையறை விரிப்பில் மாய்ந்து போகும்.
"என்ன புதுமை வேண்டிக்கிடக்கு. பொம்பிளையெண்டால் புருஷனைக் கவனிக்கிறதை விட்டிட்டு...! வேறையென்ன அவவுக்குத் தேவை...?" என்று சொல்லும் ஆண்கள் இன்றும் புலத்தில் இருக்கிறார்கள். இப்படியான எண்ணம் கொண்ட ஆண்களுக்கு வாழ்க்கைப் பட்ட பெண்களின் எதிர்காலம் பற்றிப் பார்ப்போமேயானால் அதில் கூட பல விதம் இருக்கிறது.
அதில் முதலாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், சமைப்பது, சாப்பிடுவது, பணிவிடை செய்வது, தொலைக்காட்சியில் வெறுமனே மகிழ்வூட்டும் சினிமா போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பது.... என்றிருக்கும். இந்தப் பெண்களின் எதிர்காலம் வெளியுலகம் தெரியாமல், பொது அறிவுகளில் அக்கறையில்லாமல், எதற்கும் யாரையாவது தங்கி வாழும் தன்மையுள்ளதாகவும், இதுதான் வாழ்க்கை என்ற எண்ணத்தில் அமைதியாகவும் அதே நேரம் ஒரு வித அர்த்தமற்ற வாழ்க்கைத் தன்மையுள்ளதாகவும் அமைந்திருக்கும்.
இரண்டாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், இவர்கள் முதலாவது ரகப் பெண்கள் செய்வதையே செய்து கொண்டு, ஆனால் அந்த வாழ்க்கையைத் துளி கூட ஏற்றுக் கொள்ள முடியாததொரு மனப் புழுக்கத்தில் வெந்து, மனதுக்குள் மௌனப்போர் நடத்தி மாய்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.
மூன்றாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், இவர்கள் புழுக்கம் தாங்காது பொங்கியெழுந்து, போராடி, தமக்குப் பிடித்தமான பாதையை நோக்கி நடக்கத் தொடங்குவார்கள். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. ஏனெனில் இவர்கள் கணவனுடன் போராடியே இப் பாதையைத் தேர்ந்தெடுப்பதால், வீட்டிலே ஒரு ஆதரவான தன்மை இல்லாமல், கணவன் என்பவனின் அழுத்தம், குத்திக்காட்டல், வீட்டிலே ஏற்படும் சின்னச் சின்னத் தவறுகளுக்கும் "நீ வேலைக்குப்போவதுதான் காரணம்" என்பதான பிரமையை ஏற்படுத்தி மனைவியை குற்ற உணர்வில் குறுகவைக்கும் தன்மை... இத்தனையையும் தாண்டித்தான் இவர்களால் வெளியிலே நடமாடமுடியும். இது இவர்கள் மனதில் நிறையவே பாதிப்பை ஏற்படுத்தி மனஅழுத்தம் நிறைந்ததொரு அமைதியற்ற வாழ்க்கைத் தன்மையைக் கொடுக்கும். இந்த நிலையில் இப்பெண்களின் எதிர்காலமும் நிட்சயம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.
இதைவிட சில கணவன்மார் சுதந்திரம் கொடுப்பது போல் கொடுத்து, நான் ஆண் என்ற ஆங்காரத்திலிருந்து சிறிதேனும் இறங்கிவராமல் வீட்டில் பெண்களை ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களுடனான பெண்களின் எதிர்காலமும் சந்தேகத்துக்கிடமின்றி ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.
இங்கு நான் மேலோட்டமான பெரிய பிரச்சனைகளை மட்டுமே பார்த்தேன்.
இவைகளைவிட இன்னும் சின்னச் சின்னதான எத்தனையோ அழுத்தங்கள் ஆண்களால் பெண்களுக்குக் கொடுக்கப் பட்டு, பெண்கள் பல விதமான பாதிப்புக்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகிறார்கள். இப் பெண்களின் எதிர் காலமும் மிகுந்த ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.
இதே நேரம் சில கணவன்மார் நல்ல ஆரோக்கியமான சிந்தனையுடன்
வீட்டுவேலைகளையும் மனைவியுடன் பகிர்ந்து கொண்டு, பிள்ளைகளை வளர்ப்பதிலும் முமுமையான பங்களிப்பை மனைவியுடன் சோந்து செய்து கொண்டு, மனைவியை வெளி உலகத்திலும் சுயமாக நடமாட விடுகிறார்கள்.
இப்படியான கணவன்மார்களுக்கு மனைவியராக வாய்த்த பெண்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். இந்தப் பெண்களின் எதிர்காலம் நிட்சயம் பிரகாசமானதாகவும் ஆரோக்கியமானதாகவுமே அமையும்.
அடுத்து, பெற்றோருடன் வாழும் திருமணமாகாத பெண் பிள்ளைகளைப் பார்ப்போமேயானால் அவர்களும் எத்தனையோ பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள். அவர்களுக்கும் எத்தனையோ தடைக்கற்கள். முட்டுக் கட்டைகள். இவைகளைத் தாண்டுவதற்கிடையில் அவர்கள் படும் கஸ்டங்கள், துன்பங்கள். அது பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
சந்திரவதனா
ஜேர்மனி
1999
ஒலிபரப்பு - ஐபிசி தமிழ் (அக்கினி-23.5.2001- கலா)
பிரசுரம் - ஈழமுரசு - பாரிஸ் (10-16 ஜனவரி 2002)
புலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் பாதையும் அவளை அண்டியுள்ள அவளது உறவுகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதாவது திருமணமானவளாயின் அவளது கணவனாலும், திருமணமாகதவளாயின் அவளது பெற்றோராலுமே தீர்மானிக்கப் படுகிறது.
ஒரு பெண்ணிடம் முன்னேற்றப் பாதையை நோக்கிய சிந்தனை இருக்கிறதா, இல்லையா என்பதற்கு முன்னர் அவள் பெற்றோரோ, அல்லது அவள் கணவனோ அவளை அவள் எண்ணத்துக்கு ஏற்ப இயங்க விடுகின்றனரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதுதான் கூடுதலான சந்தர்ப்பங்களில் ஒரு பெண்ணின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.
திருமணமானபின், என்னதான் ஒரு பெண்ணிடம் திறமையும் முன்னேற்றப் பாதையை நோக்கிய நல்ல சிந்தனையும் இருந்தாலும், கணவன் என்பவன் அங்கு தடைக்கல்லாக, அவள் எண்ணங்களுக்கு முட்டுக் கட்டையாக நின்று "பெண்ணுக்கு சமையலும் சாப்பாடும் பணிவிடையும்தான் முக்கியம்" என்று சொல்வானேயானால், அந்தப் பெண்ணின் எதிர்காலம் புலம் பெயர் மண்ணிலும் புதுமைகள் எதையும் காணாது சமையலறை நெருப்பில் தீய்ந்து படுக்கையறை விரிப்பில் மாய்ந்து போகும்.
"என்ன புதுமை வேண்டிக்கிடக்கு. பொம்பிளையெண்டால் புருஷனைக் கவனிக்கிறதை விட்டிட்டு...! வேறையென்ன அவவுக்குத் தேவை...?" என்று சொல்லும் ஆண்கள் இன்றும் புலத்தில் இருக்கிறார்கள். இப்படியான எண்ணம் கொண்ட ஆண்களுக்கு வாழ்க்கைப் பட்ட பெண்களின் எதிர்காலம் பற்றிப் பார்ப்போமேயானால் அதில் கூட பல விதம் இருக்கிறது.
அதில் முதலாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், சமைப்பது, சாப்பிடுவது, பணிவிடை செய்வது, தொலைக்காட்சியில் வெறுமனே மகிழ்வூட்டும் சினிமா போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பது.... என்றிருக்கும். இந்தப் பெண்களின் எதிர்காலம் வெளியுலகம் தெரியாமல், பொது அறிவுகளில் அக்கறையில்லாமல், எதற்கும் யாரையாவது தங்கி வாழும் தன்மையுள்ளதாகவும், இதுதான் வாழ்க்கை என்ற எண்ணத்தில் அமைதியாகவும் அதே நேரம் ஒரு வித அர்த்தமற்ற வாழ்க்கைத் தன்மையுள்ளதாகவும் அமைந்திருக்கும்.
இரண்டாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், இவர்கள் முதலாவது ரகப் பெண்கள் செய்வதையே செய்து கொண்டு, ஆனால் அந்த வாழ்க்கையைத் துளி கூட ஏற்றுக் கொள்ள முடியாததொரு மனப் புழுக்கத்தில் வெந்து, மனதுக்குள் மௌனப்போர் நடத்தி மாய்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.
மூன்றாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், இவர்கள் புழுக்கம் தாங்காது பொங்கியெழுந்து, போராடி, தமக்குப் பிடித்தமான பாதையை நோக்கி நடக்கத் தொடங்குவார்கள். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. ஏனெனில் இவர்கள் கணவனுடன் போராடியே இப் பாதையைத் தேர்ந்தெடுப்பதால், வீட்டிலே ஒரு ஆதரவான தன்மை இல்லாமல், கணவன் என்பவனின் அழுத்தம், குத்திக்காட்டல், வீட்டிலே ஏற்படும் சின்னச் சின்னத் தவறுகளுக்கும் "நீ வேலைக்குப்போவதுதான் காரணம்" என்பதான பிரமையை ஏற்படுத்தி மனைவியை குற்ற உணர்வில் குறுகவைக்கும் தன்மை... இத்தனையையும் தாண்டித்தான் இவர்களால் வெளியிலே நடமாடமுடியும். இது இவர்கள் மனதில் நிறையவே பாதிப்பை ஏற்படுத்தி மனஅழுத்தம் நிறைந்ததொரு அமைதியற்ற வாழ்க்கைத் தன்மையைக் கொடுக்கும். இந்த நிலையில் இப்பெண்களின் எதிர்காலமும் நிட்சயம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.
இதைவிட சில கணவன்மார் சுதந்திரம் கொடுப்பது போல் கொடுத்து, நான் ஆண் என்ற ஆங்காரத்திலிருந்து சிறிதேனும் இறங்கிவராமல் வீட்டில் பெண்களை ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களுடனான பெண்களின் எதிர்காலமும் சந்தேகத்துக்கிடமின்றி ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.
இங்கு நான் மேலோட்டமான பெரிய பிரச்சனைகளை மட்டுமே பார்த்தேன்.
இவைகளைவிட இன்னும் சின்னச் சின்னதான எத்தனையோ அழுத்தங்கள் ஆண்களால் பெண்களுக்குக் கொடுக்கப் பட்டு, பெண்கள் பல விதமான பாதிப்புக்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகிறார்கள். இப் பெண்களின் எதிர் காலமும் மிகுந்த ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.
இதே நேரம் சில கணவன்மார் நல்ல ஆரோக்கியமான சிந்தனையுடன்
வீட்டுவேலைகளையும் மனைவியுடன் பகிர்ந்து கொண்டு, பிள்ளைகளை வளர்ப்பதிலும் முமுமையான பங்களிப்பை மனைவியுடன் சோந்து செய்து கொண்டு, மனைவியை வெளி உலகத்திலும் சுயமாக நடமாட விடுகிறார்கள்.
இப்படியான கணவன்மார்களுக்கு மனைவியராக வாய்த்த பெண்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். இந்தப் பெண்களின் எதிர்காலம் நிட்சயம் பிரகாசமானதாகவும் ஆரோக்கியமானதாகவுமே அமையும்.
அடுத்து, பெற்றோருடன் வாழும் திருமணமாகாத பெண் பிள்ளைகளைப் பார்ப்போமேயானால் அவர்களும் எத்தனையோ பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள். அவர்களுக்கும் எத்தனையோ தடைக்கற்கள். முட்டுக் கட்டைகள். இவைகளைத் தாண்டுவதற்கிடையில் அவர்கள் படும் கஸ்டங்கள், துன்பங்கள். அது பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
சந்திரவதனா
ஜேர்மனி
1999
ஒலிபரப்பு - ஐபிசி தமிழ் (அக்கினி-23.5.2001- கலா)
பிரசுரம் - ஈழமுரசு - பாரிஸ் (10-16 ஜனவரி 2002)
Wednesday, April 27, 2005
அவளும் பெண்தானே!
தமாரா விழித்துக் கொண்ட போது அவளோடு சேர்ந்து சோகமும் விழித்துக் கொண்டது. அவளால் தன்னுள்ளே படிந்து விட்ட சோகத்தின் சுமையை எந்த வழியிலும் இறக்க முடியாதிருந்தது. மனசு மிகவும் பாராமாக இருந்தது. பக்கத்துப் படுக்கையைப் பார்த்தாள். அது வெறுமையாகவே இருந்தது. இன்றோடு மூன்று மாதம். காந்தன் அவளை விட்டுச் சென்று மூன்று மாதங்கள் சென்று விட்டன. அவளால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை.
காந்தனைப் பிரிவதென்பது காந்தனும் அவளுமாக முதலே பேசித் தீர்மானித்துக் கொண்ட விடயம்தான். ஆனால் ஐந்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பின்னான அந்தப் பிரிவு நியத்தில் இவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதை அவளால் அப்போது கணிப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.
கணிப்பிட்டுத் தெரிந்து கொண்டிருந்தாலும் கூட அவள் செய்வதற்கும் ஒன்றும் இருக்கவில்லை. காந்தனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவளைப் பிடித்திருந்தாலும், அவள் யேர்மன் பெண்ணாக இருப்பதால் அவளைக் காந்தன் திருமணம் செய்து கொள்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
"எப்பிடிப் பார்த்தாலும் யேர்மன் பொம்பிளை எங்கடை கலாச்சாரத்துக்குள்ளை ஒத்து வர மாட்டாள்." இது காந்தனின் பெற்றோரின் வாய்ப்பாடம். அவர்களை மீற முடியாத காந்தன். இவர்களுக்குள் சிக்கிய தமாரா.
காந்தன் நல்லவன்தான். காந்தனை அவனது பன்னிரண்டாவது வயதிலிருந்தே தமாராவுக்குத் தெரியும். அவள் காந்தன் படிக்கும் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் போய்ச் சேர்ந்த போது, காந்தன் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.
பாடசாலை நிறைந்த வெள்ளை மாணவர்களுக்கு மத்தியில் மாநிறம் கொண்ட காந்தன் பளிச்சென்று வித்தியாசமாகத் தெரிந்தான். அவனது சுருண்ட கேசமும், அழகிய கண்களும் பார்ப்பவர்களை அவன்பால் ஈர்த்தாலும் அவன் எப்போதும் மற்றவர்களிடமிருந்து சற்று ஒதுங்கித் தனிமைப் பட்டே இருந்தான். ஏதோ ஒரு சோகம் அவன் கண்களுக்குள் எப்போதும் ஒளிந்திருந்தது. பாடசாலை வெளிகளில் அவனைக் காணும் வேளைகளில் தமாராவின் கவனத்துக்குள் இவைகள் அகப் படத் தவறவில்லை. ஆனாலும் சின்னப் பெண்ணான அவளுக்கு அப்போது அவனை நெருங்கும் துணிவோ அல்லது அவனது தனிமை பற்றி விசாரிக்கும் தைரியமோ அவ்வளவாக இருக்கவில்லை.
காலப் போக்கில் காந்தனின் திறமையும், படிப்பில் அவன் கொண்டிருந்த கெட்டித்தனமும் எல்லா மாணவர்களுக்கும் அவன் மேல் ஒரு மதிப்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்த ஆசிரியர்களிலிருந்து மாணவர்கள் வரை எல்லோருமே அவனது நிறத்தைப் பற்றி அக்கறைப் படாமல் அவனோடு சரளமாகப் பழகத் தொடங்கினார்கள். இவையெதுவும் காந்தனின் கண்களுக்குள் இருந்த சோகத்துக்கு விடுதலை கொடுக்க வில்லை.
பதினான்கு வயது வரமுன்னரே ஆளாளுக்கு சிகரெட்டும் காதலும் என்று திரிய இவன் மட்டும் தனியாக இருந்தான். இது தமாராவுக்கு இவன் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகமாக்கியது. மெது மெதுவாக இவனை நெருங்கத் தொடங்கினாள். பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள்.
தாயக தேசத்தின் அனர்த்தங்களை சிறு வயதிலேயே பார்த்து விட்டு வந்த பாதிப்பு அவனுள் ஆழமாகப் பதிந்திருப்பதை அவன் பேச்சில் உணர்ந்தாள்.
"நான் என்ரை தாய்நாட்டுக்குத் திரும்போணும். என்ரை தாய்நாட்டின்ரை விடுதலைக்காகப் போராடோணும்." என்ற ஒரு தீவிரத் தன்மை அவனுள் இருப்பதைக் கண்டு இப்படியும் நாட்டுப் பற்று இருக்குமா என வியந்தாள்.
அவன் பேசும் போதெல்லாம் அவனது நாடு பற்றியும் அங்குள்ள அனர்த்தங்கள் பற்றியுமே அவளுடன் பேசினான். "எல்லாரும் ஆளுக்கொரு பெண் நண்பிகளோடை திரிய நீ மட்டுமேன் பிரமச்சாரி மாதிரி இருக்கிறாய்?" என அவள் கேட்ட போது "நான் தமிழனாய் வாழோணும். தமிழ்ப் பெண்ணைக் காதலிக்கோணும். தமிழ்ப் பெண்ணையே திருமணமும் செய்யோணும்." என்றான்.
இவனது இப்படியான பேச்சுக்களால் இவனை ஒரு தீவிரவாதி என்று திட்டித் தீர்த்தவர்களும் இருக்கிறார்கள்.
சொன்னது போலக் காந்தனுக்கு முதலில் ஒரு தமிழ்ப் பெண் மீதுதான் காதல் வந்தது. காதலிப்பதே உலக மகா குற்றம் எனக் கருதும் தமிழ் சமூகம் அந்தக் காதலை ஏற்றுக் கொண்ட விதம்தான் மிகவும் அநாகரீகமாக இருந்தது. கண்களால் மட்டும் கதை பேசிக் கொண்டிருந்த காந்தனும், அந்தத் தமிழ்ப் பெண்ணும் ஒரு புகையிரத நிலையத்தில் எதிர் பாராமல் சந்தித்துக் கொண்டதும் மணிக் கணக்கில் நின்று பேசியதும் எப்படியோ அவளது பெற்றோருக்குத் தெரிய வர அவர்கள் காந்தன் வீட்டுக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு "குய்யோ முறையோ" என்று கத்த... அந்நாளில் ஊரில் சைக்கிளில் பெண்களுக்குப் பின்னால் சுற்றிய காந்தனின் அப்பா கூட "காதல் தப்பானது" என்று கூறி, காந்தனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார். காந்தனின் உணர்வுகளை மதிக்க மறந்தார். சமூகம் அவனைப் பார்த்து "ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்பவன் சீர் கெட்டவன்" என்பது போல எள்ளி நகையாடியது.
முதற் காதல் முளையிலேயே கிள்ளியெறியப் பட்ட ஏமாற்றத்தை எங்காவது கொட்டித் தள்ள வேண்டும் என்ற நிலையில் காந்தன் முதன் முறையாக தமாராவுடன் மனம் விட்டுப் பேசினான். தமிழர் கலாச்சாரம் பற்றியும் அங்கு காதலுக்குள்ள மரியாதை பற்றியும் விளக்கினான். சங்ககாலத்தில் காதல் வரவேற்கப் பட்டாலும், இன்றைய கலாச்சாரத்தில் அவைகள் புறக்கணிக்கப் படுவதற்கான தனக்குத் தெரிந்த காரணங்களை விளக்கினான்.
தமிழ்ப் பெண்களுடன் பழகவோ, பேசவோ, சிரிக்கவோ முடியாத சூழ்நிலை மட்டுமல்லாமல், அவன் வாழும் நகரில் தமிழ் ஆண் நண்பர்களைக் கூட தேடிக் கொள்ள முடியாத நிலையில் அவனது உணர்வுகளுக்கும் கோபங்களுக்கும் வடிகாலாய் அமைந்தது பார்வைகளாலேயே வருடி விடும் தமாராவின் அன்பு ஒன்றுதான்.
அந்த அன்பும் ஆதரவும்தான் கால ஓட்டத்தில் காதலாகி, தமாரா வீட்டில் எந்த விதமான எதிர்ப்புகளும் இல்லாத காரணத்தால், காந்தனின் அப்பாவின் பலமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஆழ வேரூன்றி விட்டது.
காதல் அரும்பி விட்டதை அறிந்ததும், தமாரா காந்தனின் வீட்டுக்கு வருவதற்கு முற்று முழுதான தடை காந்தனின் அப்பாவால் விதிக்கப் பட்டது. அதனால் பாடசாலை தவிர்ந்த வேளைகளில் சந்திப்புகள் தமாரா வீட்டில் தொடர்ந்தன.
ஒரு கட்டத்தில் காந்தன் தமாராவுடன் சேர்ந்து தமாரா வீட்டிலேயே வாழத் தொடங்கி விட்டான். காதலை வேலி போட்டுத் தடுக்க முடியாது என்ற உண்மையை உணர மறந்த அப்பாவின் காட்டுக் கத்தல்களும், குத்தல் கதைகளும் அவனை நோகடித்தாலும் அம்மாவுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டான். "அப்பாதானே..! அவர் கோபம் அவர் நிலையில் நியாயமானதுதானே!" என்று தனக்குத் தானே சமாதானமும் கூறிக் கொண்டான்.
அப்பாவின் கெட்டித்தனம் எப்போதும் அம்மாவின் அன்பை ஆயுதமாக்குவதுதான். அவர் அம்மாவை முடுக்கி விடுவார். அதன் பிரதி பலனாய் அம்மா காந்தனைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எந்தக் கதையில் தொடங்கினாலும் சுற்றி வளைத்துக் கடைசியில் காந்தனின் கல்யாண விடயத்துக்கே வந்து விடுவா. "எப்பிடிப் பார்த்தாலும் யேர்மன் பொம்பிளை எங்கடை கலாச்சாரத்துக்குள்ளை ஒத்து வர மாட்டாள். அவளை விட்டிட்டு வந்திடு... உனக்கு லட்சணமான எங்கடை நாட்டுப் பிள்ளை ஒண்டைக் கட்டித் தந்தால்தான் நான் நிம்மதியாக் கண்ணை மூடுவன்....." என்றுதான் கதையை முடிப்பா.
இப்படியான அம்மாவின் கதைகளும், அதனாலேற்படும் அம்மாவுடனான வாக்கு வாதங்களும், தனியாகச் சிந்தித்து ஒரு தீர்மானத்துக்கு வர முடியாத அளவுக்கு அழுத்தம் கொடுப்பவையாகவும் எரிச்சல் கொடுப்பவையாகவுமே காந்தனுக்கு இருந்தன. இவைகளைக் காந்தன் தமாராவுக்கும் சொல்லத் தவறுவதில்லை. ஆனாலும் என்றைக்கோ ஒரு நாள் மனம் மாறி அவர்கள் தன்னைக் காந்தனின் மனைவியாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்தான் தமாரா காத்திருந்தாள்.
"இஞ்சரும் பார்த்துக் கொண்டிருந்தால் இவன் இப்பிடியே இருப்பான். ஊரிலை இருந்து ஒண்டைக் கூப்பிட்டிட்டம் எண்டால் பேசாமல் தாலியைக் கட்டிப் போட்டு வீட்டோடை இருந்திடுவான்." அப்பா சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் துணிந்து காந்தனுக்கென்று ஒரு பெண்ணை தாயகத்திலிருந்து அழைத்தும் விட்டார். அம்மாவுக்கு காந்தனின் மனதைப் புண்படுத்த விருப்பமில்லா விட்டாலும் அப்பாவை எதிர்க்கும் தைரியமும் இல்லை.
பெண்ணைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு திருமணம் செய்து விடும் படி வற்புறுத்தினார்கள். காந்தனுக்கு இக்கட்டான நிலை. தமாராவை மறக்கவோ, பிரியவோ மனசில்லை. ஆனால் வந்த தாயகத்துப் பெண்ணும் அழகாக, மிக இளமையாக, புத்தம் புது மலராக இருந்தாள். அது போக இவனுக்காக என்று வந்து காத்திருந்தாள்.
இவையெல்லாம் தமாராவுக்குள் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அவள் தனக்கே உரிய பெருந்தன்மையுடன் "காந்தன்..! நீ உன்ரை அம்மா அப்பாவை எதிர்த்து என்னைத் திருமணம் செய்யிறதை விட அவையளுக்குப் பிடித்தமான உனக்கென வரவழைக்கப் பட்ட உன்ரை நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்யிறதுதான் நல்லது. அதுதான் உன்னைப் பெற்றவையளுக்கு நீ செய்யிற நன்றிக் கடன்." என்றாள். உள்ளுக்குள்ளே "தான் அப்படிச் சொன்னாலும் காந்தன் தன்னை விட்டு விட்டு இன்னொருத்தியை மணக்க மாட்டான்" என முழுமையாக நம்பினாள்.
ஆனால் கலாச்சாரம் என்றும் தமிழர் பண்பாடு என்றும் செவிப்பறை அதிரக் கத்தும் காந்தனின் பெற்றோரிடம், தாம் ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்கிறோமே என்ற எண்ணம் ஒரு துளியும் இருக்கவில்லை. தமது மகனோடு சேர்ந்து வாழ்ந்த ஒருத்தியைத் தள்ளி வைத்து விட்டு இன்னொருத்தியை அந்த இடத்தில் அமர்த்தப் போகிறோமே என்ற குற்ற உணர்வு கூட இருக்கவில்லை.
தமது மகன் நன்றாக வாழ வேண்டும். தமது மகன் வேற்று நாட்டுக் காரியை மணம் முடித்தான் என்று ஊர் பேசாதிருக்க வேண்டும்... என்பது போன்றதான சுயநலமான, தற்பெருமை கொண்டதான எண்ணங்களும், தன்மைகளும்தான் அவர்களிடம் இருந்தன.
தமது மகனால் ஒரு ஐரோப்பியப் பெண்ணின் வாழ்வு சிதைக்கப் பட்டிருப்பதோ, மன உணர்வுகள் வதைக்கப் பட்டிருப்பதோ அவர்களுக்குப் புரியவில்லை. அல்லது புரிந்தாலும் அவர்களுக்கு அது பற்றி அக்கறை இல்லை.
ஆனாலும் குற்ற உணர்வுகள் காந்தனுக்குச் சாட்டையடி கொடுத்துக் கொண்டுதானிருந்தன. அதனால்தான் தனக்கென ஒருத்தி நாட்டிலிருந்து வந்த பின்னும் மனம் குழம்பியவனாய் தமாராவை அடிக்கடி சந்தித்தான். திருமணத்திற்கான நாட்கள் நெருங்க நெருங்கத்தான் இனியும் இப்படிச் சந்திப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்தவனாய் முடிந்தவரை "இனி நாம் சந்திக்காமல் இருப்போம்" என்ற முடிவைத் தமாராவுடன் சேர்ந்தெடுத்தான்.
இன்று அவனுக்குத் திருமணம். தமாராவுக்கு ஒன்றையும் நம்ப முடியாமல் இருந்தது. காதல் தோல்வி என்றதும் ஒரு தமிழ்ப் பெண் போல ஓடிப்போய் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவளிடம் கோழைத்தனம் இல்லையென்றாலும், மனசு ஓவென்று அழுது கொண்டே இருந்தது. அவளும் பெண்தானே. வெள்ளைத் தோல் என்றால் மனசு என்ன கல்லாகவா இருக்கும்!
"காந்தன் உண்மையிலேயே என்னைக் காதலிக்க வில்லையா..? காதலித்திருந்தால் நான் போக மாட்டேன் என்று நின்றிருப்பானே..!" என்ற ஆதங்கமான எண்ணங்களும், கேள்விகளும் அவளுள் அடிக்கடி எழுந்தன.
"அவன் என்ன செய்வான்...? பாவம்..!" என்ற சமாதானப் பதில்களும் அவளுக்குள்ளேயே இருந்தன.
கனத்த மனசுடன் கட்டிலில் இருந்து இறங்கினாள். கல்யாண வீட்டுக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்திருந்ததால் அலுமாரிக்குள்ளிருந்து சின்னச் சருகைக் கரை போட்ட வெளிர் நீலச்சேலையை எடுத்துக் கட்டிலில் வைத்து விட்டுக் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
காந்தனுடன் ஸ்ருட்கார்ட்க்குப் போய் பிருந்தா சில்க் கவுசில், அந்தச் சேலை வாங்கிய நாள் நினைவில் வந்தது. வீட்டுக்கு வந்ததும் அதை "உடனேயே உடுத்திக் காட்டு." என்று காந்தன் கரைச்சல் படுத்த அவள் உடுத்தத் தெரியாமல் திண்டாட, காந்தன் தனக்கேதோ தெரிந்த மாதிரி உதவி செய்கிறேனென்று சொருகிக் கிருகி.... அத்தனை சோகத்துக்குள்ளும் தமாராவுக்குச் சிரிப்பு வந்தது.
பிறகு அவள் சேலை எப்படி உடுத்துவது என்பதை VolLkshochschule யில் நடந்த ஒரு வகுப்புக்குப் போய் பழகி விட்டு வந்து காந்தனை அசத்தியது, எல்லாமே காந்தனுடன்தான் தன் வாழ்க்கை என்ற நம்பிக்கையில்தானே! இப்போ எல்லாம் வெறும் நினைவுகளில் மட்டுந்தான்.
குளிக்கும் தண்ணீரோடு கண்ணீரும் கரைந்தோடக் குளித்து விட்டு வந்தவள், சேலையை உடுத்தி, பொட்டு வைத்துக் கொண்டு கல்யாண வீட்டுக்குப் புறப்பட்டாள். போற வழியில் பூக்கடைக்குள் நுழைந்து மிகவும் அழகிய பெரியதொரு பூங்கொத்தைக் கட்டுவித்து வாங்கிச் சென்றாள்.
கல்யாண மண்டபத்துள் தமாரா நுழைந்த போது "இவளென்ன கிரகசாரத்துக்கு இங்கை வாறாள்" என்று மனசுக்குள் முணுமுணுத்த படி காந்தனின் அம்மாவும் அப்பாவும் மலங்க மலங்க விழித்தார்கள்.
அவள் எந்த வித அலட்டலுமில்லாமல் புன்னகை பூத்த முகத்துடன் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி விட்டு, மணப்பந்தலில் அமர்ந்திருந்த காந்தனின் அருகே சென்று, காந்தனையும் அருகிருந்த தமிழ்ப் பெண்ணையும் வாழ்த்தி பூங்கொத்தையும் கொடுத்து விட்டு அவசரமாய் திரும்பினாள்.
அவள் கண்களிலிருந்து சில துளிகள் அவளையறியாமலே கன்னங்களில் வழிந்தன. அந்தத் துளிகளில் ஒரு கடலளவு சோகம் நிறைந்திருப்பதையோ, அது அவள் மனசை அழுத்துவதையோ யாரும் கண்டு கொள்ளவில்லை.
சந்திரவதனா
யேர்மனி
12.12.2002
காந்தனைப் பிரிவதென்பது காந்தனும் அவளுமாக முதலே பேசித் தீர்மானித்துக் கொண்ட விடயம்தான். ஆனால் ஐந்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பின்னான அந்தப் பிரிவு நியத்தில் இவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதை அவளால் அப்போது கணிப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.
கணிப்பிட்டுத் தெரிந்து கொண்டிருந்தாலும் கூட அவள் செய்வதற்கும் ஒன்றும் இருக்கவில்லை. காந்தனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவளைப் பிடித்திருந்தாலும், அவள் யேர்மன் பெண்ணாக இருப்பதால் அவளைக் காந்தன் திருமணம் செய்து கொள்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
"எப்பிடிப் பார்த்தாலும் யேர்மன் பொம்பிளை எங்கடை கலாச்சாரத்துக்குள்ளை ஒத்து வர மாட்டாள்." இது காந்தனின் பெற்றோரின் வாய்ப்பாடம். அவர்களை மீற முடியாத காந்தன். இவர்களுக்குள் சிக்கிய தமாரா.
காந்தன் நல்லவன்தான். காந்தனை அவனது பன்னிரண்டாவது வயதிலிருந்தே தமாராவுக்குத் தெரியும். அவள் காந்தன் படிக்கும் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் போய்ச் சேர்ந்த போது, காந்தன் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.
பாடசாலை நிறைந்த வெள்ளை மாணவர்களுக்கு மத்தியில் மாநிறம் கொண்ட காந்தன் பளிச்சென்று வித்தியாசமாகத் தெரிந்தான். அவனது சுருண்ட கேசமும், அழகிய கண்களும் பார்ப்பவர்களை அவன்பால் ஈர்த்தாலும் அவன் எப்போதும் மற்றவர்களிடமிருந்து சற்று ஒதுங்கித் தனிமைப் பட்டே இருந்தான். ஏதோ ஒரு சோகம் அவன் கண்களுக்குள் எப்போதும் ஒளிந்திருந்தது. பாடசாலை வெளிகளில் அவனைக் காணும் வேளைகளில் தமாராவின் கவனத்துக்குள் இவைகள் அகப் படத் தவறவில்லை. ஆனாலும் சின்னப் பெண்ணான அவளுக்கு அப்போது அவனை நெருங்கும் துணிவோ அல்லது அவனது தனிமை பற்றி விசாரிக்கும் தைரியமோ அவ்வளவாக இருக்கவில்லை.
காலப் போக்கில் காந்தனின் திறமையும், படிப்பில் அவன் கொண்டிருந்த கெட்டித்தனமும் எல்லா மாணவர்களுக்கும் அவன் மேல் ஒரு மதிப்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்த ஆசிரியர்களிலிருந்து மாணவர்கள் வரை எல்லோருமே அவனது நிறத்தைப் பற்றி அக்கறைப் படாமல் அவனோடு சரளமாகப் பழகத் தொடங்கினார்கள். இவையெதுவும் காந்தனின் கண்களுக்குள் இருந்த சோகத்துக்கு விடுதலை கொடுக்க வில்லை.
பதினான்கு வயது வரமுன்னரே ஆளாளுக்கு சிகரெட்டும் காதலும் என்று திரிய இவன் மட்டும் தனியாக இருந்தான். இது தமாராவுக்கு இவன் மீதான ஈர்ப்பை இன்னும் அதிகமாக்கியது. மெது மெதுவாக இவனை நெருங்கத் தொடங்கினாள். பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள்.
தாயக தேசத்தின் அனர்த்தங்களை சிறு வயதிலேயே பார்த்து விட்டு வந்த பாதிப்பு அவனுள் ஆழமாகப் பதிந்திருப்பதை அவன் பேச்சில் உணர்ந்தாள்.
"நான் என்ரை தாய்நாட்டுக்குத் திரும்போணும். என்ரை தாய்நாட்டின்ரை விடுதலைக்காகப் போராடோணும்." என்ற ஒரு தீவிரத் தன்மை அவனுள் இருப்பதைக் கண்டு இப்படியும் நாட்டுப் பற்று இருக்குமா என வியந்தாள்.
அவன் பேசும் போதெல்லாம் அவனது நாடு பற்றியும் அங்குள்ள அனர்த்தங்கள் பற்றியுமே அவளுடன் பேசினான். "எல்லாரும் ஆளுக்கொரு பெண் நண்பிகளோடை திரிய நீ மட்டுமேன் பிரமச்சாரி மாதிரி இருக்கிறாய்?" என அவள் கேட்ட போது "நான் தமிழனாய் வாழோணும். தமிழ்ப் பெண்ணைக் காதலிக்கோணும். தமிழ்ப் பெண்ணையே திருமணமும் செய்யோணும்." என்றான்.
இவனது இப்படியான பேச்சுக்களால் இவனை ஒரு தீவிரவாதி என்று திட்டித் தீர்த்தவர்களும் இருக்கிறார்கள்.
சொன்னது போலக் காந்தனுக்கு முதலில் ஒரு தமிழ்ப் பெண் மீதுதான் காதல் வந்தது. காதலிப்பதே உலக மகா குற்றம் எனக் கருதும் தமிழ் சமூகம் அந்தக் காதலை ஏற்றுக் கொண்ட விதம்தான் மிகவும் அநாகரீகமாக இருந்தது. கண்களால் மட்டும் கதை பேசிக் கொண்டிருந்த காந்தனும், அந்தத் தமிழ்ப் பெண்ணும் ஒரு புகையிரத நிலையத்தில் எதிர் பாராமல் சந்தித்துக் கொண்டதும் மணிக் கணக்கில் நின்று பேசியதும் எப்படியோ அவளது பெற்றோருக்குத் தெரிய வர அவர்கள் காந்தன் வீட்டுக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு "குய்யோ முறையோ" என்று கத்த... அந்நாளில் ஊரில் சைக்கிளில் பெண்களுக்குப் பின்னால் சுற்றிய காந்தனின் அப்பா கூட "காதல் தப்பானது" என்று கூறி, காந்தனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார். காந்தனின் உணர்வுகளை மதிக்க மறந்தார். சமூகம் அவனைப் பார்த்து "ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்பவன் சீர் கெட்டவன்" என்பது போல எள்ளி நகையாடியது.
முதற் காதல் முளையிலேயே கிள்ளியெறியப் பட்ட ஏமாற்றத்தை எங்காவது கொட்டித் தள்ள வேண்டும் என்ற நிலையில் காந்தன் முதன் முறையாக தமாராவுடன் மனம் விட்டுப் பேசினான். தமிழர் கலாச்சாரம் பற்றியும் அங்கு காதலுக்குள்ள மரியாதை பற்றியும் விளக்கினான். சங்ககாலத்தில் காதல் வரவேற்கப் பட்டாலும், இன்றைய கலாச்சாரத்தில் அவைகள் புறக்கணிக்கப் படுவதற்கான தனக்குத் தெரிந்த காரணங்களை விளக்கினான்.
தமிழ்ப் பெண்களுடன் பழகவோ, பேசவோ, சிரிக்கவோ முடியாத சூழ்நிலை மட்டுமல்லாமல், அவன் வாழும் நகரில் தமிழ் ஆண் நண்பர்களைக் கூட தேடிக் கொள்ள முடியாத நிலையில் அவனது உணர்வுகளுக்கும் கோபங்களுக்கும் வடிகாலாய் அமைந்தது பார்வைகளாலேயே வருடி விடும் தமாராவின் அன்பு ஒன்றுதான்.
அந்த அன்பும் ஆதரவும்தான் கால ஓட்டத்தில் காதலாகி, தமாரா வீட்டில் எந்த விதமான எதிர்ப்புகளும் இல்லாத காரணத்தால், காந்தனின் அப்பாவின் பலமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஆழ வேரூன்றி விட்டது.
காதல் அரும்பி விட்டதை அறிந்ததும், தமாரா காந்தனின் வீட்டுக்கு வருவதற்கு முற்று முழுதான தடை காந்தனின் அப்பாவால் விதிக்கப் பட்டது. அதனால் பாடசாலை தவிர்ந்த வேளைகளில் சந்திப்புகள் தமாரா வீட்டில் தொடர்ந்தன.
ஒரு கட்டத்தில் காந்தன் தமாராவுடன் சேர்ந்து தமாரா வீட்டிலேயே வாழத் தொடங்கி விட்டான். காதலை வேலி போட்டுத் தடுக்க முடியாது என்ற உண்மையை உணர மறந்த அப்பாவின் காட்டுக் கத்தல்களும், குத்தல் கதைகளும் அவனை நோகடித்தாலும் அம்மாவுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டான். "அப்பாதானே..! அவர் கோபம் அவர் நிலையில் நியாயமானதுதானே!" என்று தனக்குத் தானே சமாதானமும் கூறிக் கொண்டான்.
அப்பாவின் கெட்டித்தனம் எப்போதும் அம்மாவின் அன்பை ஆயுதமாக்குவதுதான். அவர் அம்மாவை முடுக்கி விடுவார். அதன் பிரதி பலனாய் அம்மா காந்தனைச் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எந்தக் கதையில் தொடங்கினாலும் சுற்றி வளைத்துக் கடைசியில் காந்தனின் கல்யாண விடயத்துக்கே வந்து விடுவா. "எப்பிடிப் பார்த்தாலும் யேர்மன் பொம்பிளை எங்கடை கலாச்சாரத்துக்குள்ளை ஒத்து வர மாட்டாள். அவளை விட்டிட்டு வந்திடு... உனக்கு லட்சணமான எங்கடை நாட்டுப் பிள்ளை ஒண்டைக் கட்டித் தந்தால்தான் நான் நிம்மதியாக் கண்ணை மூடுவன்....." என்றுதான் கதையை முடிப்பா.
இப்படியான அம்மாவின் கதைகளும், அதனாலேற்படும் அம்மாவுடனான வாக்கு வாதங்களும், தனியாகச் சிந்தித்து ஒரு தீர்மானத்துக்கு வர முடியாத அளவுக்கு அழுத்தம் கொடுப்பவையாகவும் எரிச்சல் கொடுப்பவையாகவுமே காந்தனுக்கு இருந்தன. இவைகளைக் காந்தன் தமாராவுக்கும் சொல்லத் தவறுவதில்லை. ஆனாலும் என்றைக்கோ ஒரு நாள் மனம் மாறி அவர்கள் தன்னைக் காந்தனின் மனைவியாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்தான் தமாரா காத்திருந்தாள்.
"இஞ்சரும் பார்த்துக் கொண்டிருந்தால் இவன் இப்பிடியே இருப்பான். ஊரிலை இருந்து ஒண்டைக் கூப்பிட்டிட்டம் எண்டால் பேசாமல் தாலியைக் கட்டிப் போட்டு வீட்டோடை இருந்திடுவான்." அப்பா சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் துணிந்து காந்தனுக்கென்று ஒரு பெண்ணை தாயகத்திலிருந்து அழைத்தும் விட்டார். அம்மாவுக்கு காந்தனின் மனதைப் புண்படுத்த விருப்பமில்லா விட்டாலும் அப்பாவை எதிர்க்கும் தைரியமும் இல்லை.
பெண்ணைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு திருமணம் செய்து விடும் படி வற்புறுத்தினார்கள். காந்தனுக்கு இக்கட்டான நிலை. தமாராவை மறக்கவோ, பிரியவோ மனசில்லை. ஆனால் வந்த தாயகத்துப் பெண்ணும் அழகாக, மிக இளமையாக, புத்தம் புது மலராக இருந்தாள். அது போக இவனுக்காக என்று வந்து காத்திருந்தாள்.
இவையெல்லாம் தமாராவுக்குள் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அவள் தனக்கே உரிய பெருந்தன்மையுடன் "காந்தன்..! நீ உன்ரை அம்மா அப்பாவை எதிர்த்து என்னைத் திருமணம் செய்யிறதை விட அவையளுக்குப் பிடித்தமான உனக்கென வரவழைக்கப் பட்ட உன்ரை நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்யிறதுதான் நல்லது. அதுதான் உன்னைப் பெற்றவையளுக்கு நீ செய்யிற நன்றிக் கடன்." என்றாள். உள்ளுக்குள்ளே "தான் அப்படிச் சொன்னாலும் காந்தன் தன்னை விட்டு விட்டு இன்னொருத்தியை மணக்க மாட்டான்" என முழுமையாக நம்பினாள்.
ஆனால் கலாச்சாரம் என்றும் தமிழர் பண்பாடு என்றும் செவிப்பறை அதிரக் கத்தும் காந்தனின் பெற்றோரிடம், தாம் ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்கிறோமே என்ற எண்ணம் ஒரு துளியும் இருக்கவில்லை. தமது மகனோடு சேர்ந்து வாழ்ந்த ஒருத்தியைத் தள்ளி வைத்து விட்டு இன்னொருத்தியை அந்த இடத்தில் அமர்த்தப் போகிறோமே என்ற குற்ற உணர்வு கூட இருக்கவில்லை.
தமது மகன் நன்றாக வாழ வேண்டும். தமது மகன் வேற்று நாட்டுக் காரியை மணம் முடித்தான் என்று ஊர் பேசாதிருக்க வேண்டும்... என்பது போன்றதான சுயநலமான, தற்பெருமை கொண்டதான எண்ணங்களும், தன்மைகளும்தான் அவர்களிடம் இருந்தன.
தமது மகனால் ஒரு ஐரோப்பியப் பெண்ணின் வாழ்வு சிதைக்கப் பட்டிருப்பதோ, மன உணர்வுகள் வதைக்கப் பட்டிருப்பதோ அவர்களுக்குப் புரியவில்லை. அல்லது புரிந்தாலும் அவர்களுக்கு அது பற்றி அக்கறை இல்லை.
ஆனாலும் குற்ற உணர்வுகள் காந்தனுக்குச் சாட்டையடி கொடுத்துக் கொண்டுதானிருந்தன. அதனால்தான் தனக்கென ஒருத்தி நாட்டிலிருந்து வந்த பின்னும் மனம் குழம்பியவனாய் தமாராவை அடிக்கடி சந்தித்தான். திருமணத்திற்கான நாட்கள் நெருங்க நெருங்கத்தான் இனியும் இப்படிச் சந்திப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்தவனாய் முடிந்தவரை "இனி நாம் சந்திக்காமல் இருப்போம்" என்ற முடிவைத் தமாராவுடன் சேர்ந்தெடுத்தான்.
இன்று அவனுக்குத் திருமணம். தமாராவுக்கு ஒன்றையும் நம்ப முடியாமல் இருந்தது. காதல் தோல்வி என்றதும் ஒரு தமிழ்ப் பெண் போல ஓடிப்போய் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவளிடம் கோழைத்தனம் இல்லையென்றாலும், மனசு ஓவென்று அழுது கொண்டே இருந்தது. அவளும் பெண்தானே. வெள்ளைத் தோல் என்றால் மனசு என்ன கல்லாகவா இருக்கும்!
"காந்தன் உண்மையிலேயே என்னைக் காதலிக்க வில்லையா..? காதலித்திருந்தால் நான் போக மாட்டேன் என்று நின்றிருப்பானே..!" என்ற ஆதங்கமான எண்ணங்களும், கேள்விகளும் அவளுள் அடிக்கடி எழுந்தன.
"அவன் என்ன செய்வான்...? பாவம்..!" என்ற சமாதானப் பதில்களும் அவளுக்குள்ளேயே இருந்தன.
கனத்த மனசுடன் கட்டிலில் இருந்து இறங்கினாள். கல்யாண வீட்டுக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்திருந்ததால் அலுமாரிக்குள்ளிருந்து சின்னச் சருகைக் கரை போட்ட வெளிர் நீலச்சேலையை எடுத்துக் கட்டிலில் வைத்து விட்டுக் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
காந்தனுடன் ஸ்ருட்கார்ட்க்குப் போய் பிருந்தா சில்க் கவுசில், அந்தச் சேலை வாங்கிய நாள் நினைவில் வந்தது. வீட்டுக்கு வந்ததும் அதை "உடனேயே உடுத்திக் காட்டு." என்று காந்தன் கரைச்சல் படுத்த அவள் உடுத்தத் தெரியாமல் திண்டாட, காந்தன் தனக்கேதோ தெரிந்த மாதிரி உதவி செய்கிறேனென்று சொருகிக் கிருகி.... அத்தனை சோகத்துக்குள்ளும் தமாராவுக்குச் சிரிப்பு வந்தது.
பிறகு அவள் சேலை எப்படி உடுத்துவது என்பதை VolLkshochschule யில் நடந்த ஒரு வகுப்புக்குப் போய் பழகி விட்டு வந்து காந்தனை அசத்தியது, எல்லாமே காந்தனுடன்தான் தன் வாழ்க்கை என்ற நம்பிக்கையில்தானே! இப்போ எல்லாம் வெறும் நினைவுகளில் மட்டுந்தான்.
குளிக்கும் தண்ணீரோடு கண்ணீரும் கரைந்தோடக் குளித்து விட்டு வந்தவள், சேலையை உடுத்தி, பொட்டு வைத்துக் கொண்டு கல்யாண வீட்டுக்குப் புறப்பட்டாள். போற வழியில் பூக்கடைக்குள் நுழைந்து மிகவும் அழகிய பெரியதொரு பூங்கொத்தைக் கட்டுவித்து வாங்கிச் சென்றாள்.
கல்யாண மண்டபத்துள் தமாரா நுழைந்த போது "இவளென்ன கிரகசாரத்துக்கு இங்கை வாறாள்" என்று மனசுக்குள் முணுமுணுத்த படி காந்தனின் அம்மாவும் அப்பாவும் மலங்க மலங்க விழித்தார்கள்.
அவள் எந்த வித அலட்டலுமில்லாமல் புன்னகை பூத்த முகத்துடன் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி விட்டு, மணப்பந்தலில் அமர்ந்திருந்த காந்தனின் அருகே சென்று, காந்தனையும் அருகிருந்த தமிழ்ப் பெண்ணையும் வாழ்த்தி பூங்கொத்தையும் கொடுத்து விட்டு அவசரமாய் திரும்பினாள்.
அவள் கண்களிலிருந்து சில துளிகள் அவளையறியாமலே கன்னங்களில் வழிந்தன. அந்தத் துளிகளில் ஒரு கடலளவு சோகம் நிறைந்திருப்பதையோ, அது அவள் மனசை அழுத்துவதையோ யாரும் கண்டு கொள்ளவில்லை.
சந்திரவதனா
யேர்மனி
12.12.2002
Wednesday, April 13, 2005
சத்தமில்லாத யுத்தங்கள்
இந்த உடுப்பு எனக்குப் பிடிக்கேல்லை இதை ஆருக்காவது குடுங்கோ என்று சொல்லிக் கழட்டி எறிவது போல, "அம்மா எனக்கு அவரைப் பிடிக்கேல்லை. நான் தனிய வாழப் போறன்" என்று துளசி சொன்ன போது கோமதிக்குத் தூக்கி வாரிப் போட்டது.
"என்ன நீ விளையாடுறீயே..? அதென்ன பிடிக்கேல்லை எண்டிறதும் அவரை விட்டிட்டுத் தனிய வாழப் போறன் எண்டிறதும்...! எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை. உனக்கென்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிட்டுதே?" கோமதி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய்க் கத்தினாள்.
"இல்லை அம்மா. எனக்குப் பைத்தியமும் இல்லை. கியித்தியமும் இல்லை. அவரோடை வாழத்தான் பிடிக்கேல்லை." துளசி சற்று எரிச்சலுடன் கீச்சிட்டாள்.
`என்ன கிரகசாரமடா இது! ஐநூறு கிலோமீற்றர் தூரத்திலை இருக்கிற ஹனோபர் வரை போய், தில்லையம்பலத்தார் நல்ல சாத்திரி என்று எல்லாரும் சொல்லுகினம் என்று அவரட்டைச் சாதகத்தைக் காட்டி, பொருத்தம் பார்த்து, பிறகு ஐயரிட்டைப் போய் நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்துத்தானே எல்லாம் செய்தது. பிறகேன் இப்படி நடக்குது.` கோமதி குழம்பினாள்.
´ஊர் கூட்டி, உறவுகளுக்கெல்லாம் சொல்லி, உலகின் அந்த அந்தத்திலிருந்து இந்த அந்தம் வரை பார்த்துப் பார்த்து ஈ மெயிலாய் அனுப்பி, ரெலிபோனாய் அடித்து, கடிதங்களாய் எழுதி தம்பட்டம் அடித்து, ஹோல் எடுத்து மணவறை போட்டு, இல்லாத அருந்ததி பார்த்து எல்லாரும் வாழ்த்தத்தானே திருமணம் நடந்தது. ஐந்து மாதங்கள் கூட சரியாக நகரவில்லை. அதற்கிடையில் இவளுக்கு என்ன வந்தது. ஏன் இப்படி அதிரடி முடிவெடுத்தாள்...!` கோமதிக்குத் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.
"நீ கெட்டிக்காரி. மோளுக்கு நல்ல ஒரு பெடியனாப் பார்த்துக் கட்டிக் குடுத்துப் போட்டாய். யேர்மனிலை இப்பிடி படிச்ச நல்ல குடும்பத்து மாப்பிளை கிடைக்கிற தெண்டால் லேசில்லை. நீ கெட்டிக்காரிதான். இனியென்ன? உனக்கு ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரித்தான்." ஏதாவது விழாக்களிலோ அல்லது கடைத் தெருக்களிலோ யாராவது தெரிந்த தமிழ்ப் பெண்களைச் சந்திக்கும் போது அவர்கள் இப்படித்தான் சொல்லி கோமதியின் மனதைக் குளிர வைப்பார்கள்.
"நல்லாத்தான் இப்பப் பாரம் குறைஞ்சிருக்கு. இவள் என்ரை தலையிலை பாறாங்கல்லை எல்லோ தூக்கிப் போட்டிருக்கிறாள்." கோமதியின் மனசு முணுமுணுத்தது.
துளசியோ ஒரு கவலையுமில்லாமல் சீடீ ஸ்ராண்ட் இல் இருந்து சீடீ ஒன்றை எடுத்துப் போட்டு, பாட்டை ஓட விட்டிட்டு இடுப்பை வளைத்து வளைத்து ஆடிக் கொண்டிருந்தாள். கோமதிக்கு அவளின் இந்த அலட்டிக் கொள்ளாத தன்மை எரிச்சலையே தந்தது.
கோமதியும் அந்த நாட்களில் ஆடினவள்தான். ஆனால் அது பரதநாட்டியம். அதுவும் அவளின் கழுத்தில் எப்ப தாலி ஏறிச்சுதோ அன்று வரைக்கும் தான். அதற்குப் பிறகு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுவிட்டது. அவளுக்கும் அந்த நாட்களில் வீட்டில் சில சமயங்களில் ஆடவேண்டும் போல ஆசை வரும். இனி ஆட முடியாதென்னும் போது அழுகையும் வரும்.
ஆடவேண்டும் போல் காலும் கையும் பரபரக்கும் போதெல்லாம் "நீ ஆடுறது எனக்குப் பிடிக்கேல்லை" என்று அவள் கணவன் அதுதான் துளசியின் அப்பா முதலிரவன்றே சொன்ன வார்த்தைகள் நினைவுகளில் ஒலிக்க அப்படியே கண்கள் பனிக்க கோமதி தன்னைக் கட்டிப் போட்டு விடுவாள்.
பரதநாட்டியம் மட்டுமே! இப்படி எத்தனை விடயங்கள் திருமண பந்தத்தில் உருவழிந்து போய் விட்டன. அதற்காக இந்த இருபத்தைந்து வருடத்தில் ஒருக்காலும் அவள் தன் கணவனை விட்டிட்டுப் போக வேண்டும் என்று நினைத்ததில்லையே!
ஆனால் ஐந்தே ஐந்து மாதத்தில் அவள் பத்து மாதம் சுமந்து பெற்ற அவள் மகள் துளசி வந்து வேண்டிக் கொடுத்த பொம்மையை வேண்டாம் என்று சொல்வது போல கணவனை வேண்டாம் என்கிறாளே! என்ன செய்வதென்று தெரியாமல் கோமதி குழம்பினாள்.
இந்தக் காலப் பிள்ளைகளிடம் எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் தன்மையும், எதையும் தூக்கி எறிந்து பேசும் தன்மையும் சற்று மிகையாகவேதான் உள்ளன. அதுவும் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள், ஒரு விதமான இரட்டைக் கலாச்சாரத்துள் அகபபட்டு, அவர்களை அழுத்தும் மன உளைச்சல் காரணமாகவோ அல்லது எதிலும் முழுமையாக ஒட்ட முடியாத இயலாமை காரணமாகவோ தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பெற்றோருடன் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு கோமதியின் மகளும் விதி விலக்கானவளல்ல.
இரவுகளில் பிறந்தநாள் விழாக்களுக்கோ, அல்லது வேறு விழாக்களுக்கோ அல்லது டிஸ்கோவுக்கோ செல்ல அனுமதி மறுக்கப்படும் போது துளசியின் முட்டி மோதலையும் வாக்கு வாதத்தையும் சட்டை செய்யாதவள் போல் கோமதி நடித்திருந்தாலும், இந்த யேர்மனிய வாழ்வில் அது எத்தகையதொரு பாதிப்பை துளசியிடம் ஏற்படுத்தியிருக்கும் என்பதை அவள் உணராமலில்லை.
அதனால் சமயம் வரும் போதெல்லாம் துளசியை தன்னுடன் அழைத்து, அன்பால் அணைத்து, ஆறுதலான வார்த்தைகளால் அறிவுரை சொல்லுவாள். அது துளசியின் ஆதங்கங்களை முற்றாக சமாதானப் படுத்த வில்லை என்பது கோமதிக்குத் தெரிந்தாலும் கோமதியாலும் ஒன்றும் செய்யமுடியாமலே இருந்தது.
கோமதியும் பெண்தானே. அவளும் இந்தக் கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைக்குள் மூச்சடங்கி முக்குளித்தவள் தானே.
ஆனாலும் "இந்தக் கலாச்சாரம் பண்பாடு எல்லாம் உனக்குத் தேவையில்லை. நீ ஐரோப்பியக் கலாச்சாரத்துடன் வாழ்" என்று தன் பெண்ணிடம் சொல்ல எந்தத் தமிழ்த்தாய்தான் மனந்துணிவாள். என்னதான் புதுமை, புரட்சி என்று பேசினாலும், எழுதினாலும் தமது குடும்பம் என்று வரும் போது, என் பெண் இந்தக் கலாச்சாரம் பண்பாடுகளிலிருந்து நழுவி விடக் கூடாதே என்பதுதான் பெண்ணைப் பெற்றவர்கள் எல்லோரதும் கவலை.
இந்த நிலையில் தானுண்டு தன் குடும்பமுண்டு என்றும், சமூகம் என்ன சொல்லும் என்று பயந்தும் வாழும் கோமதியின் நிலை பற்றிச் சொல்லவே தேவையில்லை.
கோமதி கூட ஒரு இரண்டும் கெட்டான் மனநிலையில் போராடுபவள் தான். படித்த, உலகம் தெரிந்த அவள் மனதுக்கும், நான் ஆண் என்ற திமிர்த்தனம் சற்றும் குறையாத கணவனுடனான அவள் வாழ்வுக்கும் இடையில் அவள் நிறையவே போராட்டம் நடத்தி விட்டாள். ஆனால் அவள் போராட்டம் எப்பொழுதுமே அவள் மனதுக்குள் தான். மற்றும் படி கணவன் எள் என்ற உடனே இவள் எண்ணெய்யாக நிற்பாள்.
இந்த மனதோடு ஒரு வாழ்வு, நியத்தில் ஒரு வாழ்வு என்ற இரட்டை வேஷம் கோமதி அறியாமலே கோமதியிடம் ஒரு வித மன உளைச்சலைக் கூட ஏற்படுத்தியிருந்தது. அதனால்தானோ என்னவோ கோமதி துளசியின் விடயத்தில், துளசியின் சின்னச் சின்ன ஏமாற்றங்களையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவளாக இருந்தாள். இருந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்து விட முடியாத நிலையில் துவண்டாள்.
துளசி பெண் என்ற ஒரே காரணத்துக்காக, சில சின்னச் சின்ன விடயங்களில் கூட தடைகள் விதிக்கப்பட்டு அனுமதிகள் மறுக்கப் பட்ட போது, துளசி அப்பா அம்மாவை மீற முடியாத இயலாமையில் பொங்கி எழுந்து, அழுது ஆர்ப்பரிக்கையில் கோமதியும் அழுதாள். நாங்கள் தமிழ்ப் பெண்கள் என்பதையும், பண்பாட்டின் பெருமையையும் விளக்கி அவளைச் சமாதானப் படுத்தினாள்.
ஆனாலும் துளசியின் ரீன்ஏஜ் பருவம் துளசிக்கு மட்டுமல்லாமல், துளசியைத் திருப்திப் படுத்த முடியாத துளசியின் அம்மாவான கோமதிக்கும் கூட மிகுந்த மன உளைச்சலான வேதனையான கால கட்டமாகவே இருந்தது.
அதன் பிரதி பலன்தான் இதுவோ? துளசி கணவனை வேண்டாம் என்று சொல்வது ஏதோ பழி தீர்க்கும் படலம் போலவே கோமதிக்குத் தோன்றியது. கட்டுப்பாடுகளை உடைத்தெறிய அன்று பதினான்கு வயதில் அவளுக்கு முடியவில்லை. இன்று இருபத்தினான்கு வயதில் அவள் அப்பாவை மட்டுமல்ல இந்த சமுகத்தையே பழிவாங்க நினைக்கிறாளோ!
கோமதியின் சிந்தனை பல விதமாக எண்ணியது. இருபத்து நான்கு வயதுப் பெண்ணுக்கு அடித்தோ உதைத்தோ ஒன்றையும் திணிக்க முடியாது. அதுவும் துளசி அப்பா போலவே பிடிவாதக்காரி. அவளிடம் அன்பால் மட்டும்தான் ஏதாவது செய்ய முடியும். கோமதிக்கு அது நன்கு தெரியும்.
என்ன செய்யலாம்...! துளசியை எப்படி வழிக்குக் கொண்டு வரலாம்...! என்ற யோசனைகளோடே அன்றைய இரவு அமைதியின்றிய அரைகுறைத் தூக்கமும், யோசனை கழிந்த விழிப்புமாய் கோமதிக்குக் கழிந்தது.
விடிந்தும் விடியாத பொழுதிலேயே தூக்கம் முழுவதுமாய்க் கலைந்து விட எழுந்து வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டாள். நினைவு மட்டும் துளசியுடன் எப்படிப் பேசலாமென்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தது. கணவருக்குக் கூட இன்னும் நிலைமையைச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஒரு குதி குதித்து ஆர்ப்பாட்டம் பண்ணி "நல்ல வளர்ப்புத்தான் வளர்த்து வைச்சிருக்கிறாய்" என்று கோமதியையும் சாடி விட்டு வேலைக்குப் போயிருப்பார்.
கோமதியின் எண்ணம், கணவரின் காதுக்கு விடயம் எட்டாமலே துளசியின் மனத்தை மாற்றி விட வேண்டுமென்பதுதான்.
கோமதி நினைவுகளுடன் போராடியபடி இருக்க துளசி எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு வந்தாள்.
"அப்பா என்னவாம்?" என்றாள்.
"அப்பாக்கு நானொண்டும் சொல்லேல்லை. சொன்னால் இப்ப ஒரு பிரளயம் எல்லோ நடந்திருக்கும். ஏதோ இண்டைக்கு நேற்றுத்தான் உனக்கு அப்பாவைத் தெரியும் போலை இருக்கு உன்ரை கேள்வி. இதை என்னண்டு அப்பாட்டை நான் சொல்லுறது." கோமதி தனது எரிச்சலையும் கோபத்தையும் வெளியில் காட்டாமல் துளசியின் வினாவுக்குப் பதிலளித்தாள்.
"அம்மா இது மறைக்கிற விசயமில்லை. அப்பா குதிப்பார் எண்டதுக்காண்டி முழுப் பூசணிக்காயை சோத்துக்குள்ளை மறைக்கேலாது" துளசி கத்தினாள்.
"இஞ்சை பார் பிள்ளை. இங்கை கத்துறதிலையோ, ஆர்ப்பாட்டம் பண்ணுறதிலையோ ஒரு அர்த்தமும் இல்லை. கொஞ்சமாவது யதார்த்தத்தை யோசிக்கோணும். கலியாணம் எண்டுறது ஆயிரம் காலத்துப் பயிர். அதை நீ இப்பிடி தூக்கி எறிஞ்சிட்டு வாற விசயமெண்டு மட்டும் நினைக்காதை. ஏன் அவருக்கும் உனக்கும் இடையிலை என்ன பிரச்சனை நடந்தது?இன்னொருக்கால் அவரோடை கதைச்சுப் பார்க்கலாம்தானே!" கோமதி துளசியின் குணம் தெரிந்தவளாய் துளசியை ஆறுதல் படுத்தும் விதமாகக் கதைத்தாள்.
"அம்மா நானும் அவரும் கதைச்சுத் தான் இந்த முடிவுக்கு வந்தனாங்கள். எனக்கும் அவருக்கும் ஒத்து வராது. என்ரை இன்றெஸ்ற் (Interest) வேறை அவற்றை இன்றெஸ்ற் (Interest) வேறை. அது தான்....." துளசி இழுத்தாள்.
"கலியாணம் எண்டு நடந்தால் இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுத்து இன்றெஸ்ற் (Interest) களை மாத்தித்தான் வாழோணும். அதை விட்டிட்டு இதுக்காண்டி ஆரும் எல்லாத்தையும் தூக்கி எறிவினமோ? என்ன ஒரு முட்டாள் தனமான முடிவு எடுத்திருக்கிறாய்...?" வினவினாள் கோமதி.
"பின்னை என்ன உங்களை மாதிரி என்னையும் வாழச் சொல்லுறிங்களே? நீங்கள் ஆசை ஆசையாப் படிச்ச பரத நாட்டியத்தை அப்பாக்காண்டி விட்டது போலை...! அம்மா நான் வாழ ஆசைப்படுறன். ஆருக்காண்டியும் என்ரை ஆசையளை கனவுகளை புதைக்க நான் தயாரா இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக் குடுத்துத்தான் வாழோணும் எண்டு பேச்சுக்குச் சொல்லலாம். ஆனால் வாழுற போது அப்பாக்காண்டி நீங்கள் எல்லாத்தையும் விட்டுக் குடுத்தீங்கள். உங்களுக்காண்டி அப்பா என்னத்தை விட்டுத் தந்தவர் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம். எங்கடை ஆக்கள் ஒருத்தருக் கொருத்தர் விட்டுக் குடுக்கிறது எண்டு சொன்னால் அதுக்கு அர்த்தம் பொம்பிளையள் எல்லாத்தையும் விட்டுக் குடுக்கோணும் எண்டுறதுதான். என்னாலை அது முடியாது." துளசி ஆக்ரோசமாகக் கத்தினாள்.
கோமதி சில நிமிடங்களுக்கு வாயடைத்துப் போனாள். பிறகு நிலைமை விபரீதமாகப் போகப் போவதை உணர்ந்து கொண்டவளாய் "என்ன செய்யிறது துளசி. வாழ்க்கை எண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருக்கும். பொம்பிளையள்தான் ஒரு மாதிரி சமாளிச்சு விட்டுக் குடுத்து கெட்டித்தனமா வாழோணும். இஞ்சை பார் நான் இருபத்தைஞ்சு வருசமா உன்ரை கொப்பரோடை வாழேல்லையே?" என்று சமாளிக்கும் வகையில் பேசினாள்.
"அம்மா நீங்கள் வாழுறது ஒரு வாழ்க்கையே....? நீங்கள் வாழுறிங்களே! அதுக்குப் பேர் வாழ்க்கை யெண்டு மட்டும் சொல்லாதைங்கோ. திருமணம் எண்ட பேரிலை ஒரு அடிமை சாசனம் எழுதி, அதுக்கு வாழ்க்கை எண்டு ஒரு பெயர் வைச்சிருக்கிறீங்கள். எனக்குப் பிடிக்காத, எனக்கு சந்தோசம் தராத வாழ்க்கையை நான் வாழோணுமெண்டு ஏன் என்னைக் கட்டாயப் படுத்திறீங்கள்?" மிகவும் எரிச்சலுடன் துளசி சத்தம் போட்டாள்.
கோமதிக்கு ஒன்று மட்டும் தெரிந்தது. பதினாறு வயதில் கதைத்தே துளசியின் காதலைக் கத்தரித்தது போல, துளசியின் இருபத்து நாலு வயசில் துளசியைக் கதைத்து வெல்வது சுலபமான விடயமல்ல என்பது! கட்டுப்பாடுகள், அதனால் வந்த ஏமாற்றங்கள் மட்டும் என்றில்லாமல், புலம் பெயர் மண்ணின் பல்கலைக்கழகப் படிப்பும் துளசியைப் புடம் போட்டு எடுத்திருந்தது.
இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்தில் கோமதியின் மனம் கவலை கொள்ளத் தொடங்கியது. "மகளை நல்ல இடத்தில் கட்டிக் குடுத்திட்டாய்" என்று வாயாரப் புகழ்ந்தவர்கள் எல்லாரும் இப்ப முன்னாலை நீலிக் கண்ணீர் வடிச்சிட்டு பின்னாலை, முகவாய்க்கட்டையை தோள் மூட்டில் இடிச்சு "பாரன் நல்ல வளர்ப்பு வளர்த்திருக்கிறா" என்று சொல்லி நையாண்டி பண்ணப் போகிறார்கள். என்ற நினைப்பே கோமதிக்குச் சங்கடமாக இருந்தது.
இனி செய்வதற்கொன்றும் இல்லை. கடைசி ஆயதம் இந்த மனுசன் தான். அப்பாவை எதிர்க்கும் தைரியம் துளசியிடம் இருந்ததில்லை. என்று நினைத்துக் கொண்டு கோமதி மௌனமாகி விட்டாள்.
மாலை அப்பா வேலையால் வந்த பின் ஒரு பிரளயமே வீட்டில் நடந்தது. கூடுதலான பேச்சு வேண்டியது கோமதிதான். அது அப்பாவின் றிக்ஸான நடத்தை. தாங்களே பேச்சு வாங்குவதை விட அம்மா பேச்சு வேண்டினால் அது பிள்ளைகளைக் கூடுதலாகப் பாதிக்கும் என்பது மனோதத்துவம். அதை அவர் இப்படியான சந்தர்ப்பங்களில் பயன் படுத்தத் தவறுவதில்லை. கூடவே மானம், மரியாதை, சமூகம், அந்தஸ்து என்று பயமுறுத்தி விடுவார்.
இன்றும் அவர் கடைசி ஆயுதத்தை எடுத்து விட்டார். "நான் எவ்வளவு மானம் மரியாதையா இருக்கிறன் தெரியுமோ? இதெல்லாம் உன்னாலை...! ஒரு பெரிய பிரசங்கமே வைத்து விட்டார்.
அம்மாவோடு நியாயம் பேசிய துளசி அப்பா முன் தோற்றுப் போனாள். தோற்க வைக்கப் பட்டாள். பிறகென்ன...? மீண்டும் துளசி கணவனோடு சேர்ந்து ஒன்றாக வாழ்வதென்பது தீர்மானமாகியது.
கோமதிக்கு துளசியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தனது கண்ணீரும் அப்பாவின் ஆளுமை நிறைந்த தந்திரமான பேச்சும்தான் துளசியை மேற் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் கட்டிப் போட்டு விட்டது என்பதை கோமதியால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் சமூகம், கலாச்சாரம், பண்பாடு இவைகளுக்கு மத்தியில் இதை விட்டு வேறு வழி ஏதும் இருப்பதாகக் கோமதிக்கு தெரியவில்லை.
சமூகத்தின் முன் கணவனின் கெட்டித்தனத்தின் முன் துளசி விடயத்தில் வெற்றி கிடைத்து விட்டதை நினைத்து கோமதி சிரித்துக் கொண்டாள்.
ஆனால் துளசிக்குத் துளியும் பிடிக்காத, சந்தோஷம் தராத வாழ்வை வாழச் சொல்லி துளசியை கட்டாயப் படுத்தி அனுப்பியது தவறு என்று கோமதியின் மனம் கோமதியுடன் சத்தமில்லாமல் யுத்தமொன்றை நடத்திக் கொண்டேயிருந்தது.
சந்திரவதனா
யேர்மனி
பிரசுரம்-ஊடறு (பெண் படைப்பாளிகளின் தொகுப்பு)
May2002
"என்ன நீ விளையாடுறீயே..? அதென்ன பிடிக்கேல்லை எண்டிறதும் அவரை விட்டிட்டுத் தனிய வாழப் போறன் எண்டிறதும்...! எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை. உனக்கென்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிட்டுதே?" கோமதி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய்க் கத்தினாள்.
"இல்லை அம்மா. எனக்குப் பைத்தியமும் இல்லை. கியித்தியமும் இல்லை. அவரோடை வாழத்தான் பிடிக்கேல்லை." துளசி சற்று எரிச்சலுடன் கீச்சிட்டாள்.
`என்ன கிரகசாரமடா இது! ஐநூறு கிலோமீற்றர் தூரத்திலை இருக்கிற ஹனோபர் வரை போய், தில்லையம்பலத்தார் நல்ல சாத்திரி என்று எல்லாரும் சொல்லுகினம் என்று அவரட்டைச் சாதகத்தைக் காட்டி, பொருத்தம் பார்த்து, பிறகு ஐயரிட்டைப் போய் நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்துத்தானே எல்லாம் செய்தது. பிறகேன் இப்படி நடக்குது.` கோமதி குழம்பினாள்.
´ஊர் கூட்டி, உறவுகளுக்கெல்லாம் சொல்லி, உலகின் அந்த அந்தத்திலிருந்து இந்த அந்தம் வரை பார்த்துப் பார்த்து ஈ மெயிலாய் அனுப்பி, ரெலிபோனாய் அடித்து, கடிதங்களாய் எழுதி தம்பட்டம் அடித்து, ஹோல் எடுத்து மணவறை போட்டு, இல்லாத அருந்ததி பார்த்து எல்லாரும் வாழ்த்தத்தானே திருமணம் நடந்தது. ஐந்து மாதங்கள் கூட சரியாக நகரவில்லை. அதற்கிடையில் இவளுக்கு என்ன வந்தது. ஏன் இப்படி அதிரடி முடிவெடுத்தாள்...!` கோமதிக்குத் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.
"நீ கெட்டிக்காரி. மோளுக்கு நல்ல ஒரு பெடியனாப் பார்த்துக் கட்டிக் குடுத்துப் போட்டாய். யேர்மனிலை இப்பிடி படிச்ச நல்ல குடும்பத்து மாப்பிளை கிடைக்கிற தெண்டால் லேசில்லை. நீ கெட்டிக்காரிதான். இனியென்ன? உனக்கு ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரித்தான்." ஏதாவது விழாக்களிலோ அல்லது கடைத் தெருக்களிலோ யாராவது தெரிந்த தமிழ்ப் பெண்களைச் சந்திக்கும் போது அவர்கள் இப்படித்தான் சொல்லி கோமதியின் மனதைக் குளிர வைப்பார்கள்.
"நல்லாத்தான் இப்பப் பாரம் குறைஞ்சிருக்கு. இவள் என்ரை தலையிலை பாறாங்கல்லை எல்லோ தூக்கிப் போட்டிருக்கிறாள்." கோமதியின் மனசு முணுமுணுத்தது.
துளசியோ ஒரு கவலையுமில்லாமல் சீடீ ஸ்ராண்ட் இல் இருந்து சீடீ ஒன்றை எடுத்துப் போட்டு, பாட்டை ஓட விட்டிட்டு இடுப்பை வளைத்து வளைத்து ஆடிக் கொண்டிருந்தாள். கோமதிக்கு அவளின் இந்த அலட்டிக் கொள்ளாத தன்மை எரிச்சலையே தந்தது.
கோமதியும் அந்த நாட்களில் ஆடினவள்தான். ஆனால் அது பரதநாட்டியம். அதுவும் அவளின் கழுத்தில் எப்ப தாலி ஏறிச்சுதோ அன்று வரைக்கும் தான். அதற்குப் பிறகு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுவிட்டது. அவளுக்கும் அந்த நாட்களில் வீட்டில் சில சமயங்களில் ஆடவேண்டும் போல ஆசை வரும். இனி ஆட முடியாதென்னும் போது அழுகையும் வரும்.
ஆடவேண்டும் போல் காலும் கையும் பரபரக்கும் போதெல்லாம் "நீ ஆடுறது எனக்குப் பிடிக்கேல்லை" என்று அவள் கணவன் அதுதான் துளசியின் அப்பா முதலிரவன்றே சொன்ன வார்த்தைகள் நினைவுகளில் ஒலிக்க அப்படியே கண்கள் பனிக்க கோமதி தன்னைக் கட்டிப் போட்டு விடுவாள்.
பரதநாட்டியம் மட்டுமே! இப்படி எத்தனை விடயங்கள் திருமண பந்தத்தில் உருவழிந்து போய் விட்டன. அதற்காக இந்த இருபத்தைந்து வருடத்தில் ஒருக்காலும் அவள் தன் கணவனை விட்டிட்டுப் போக வேண்டும் என்று நினைத்ததில்லையே!
ஆனால் ஐந்தே ஐந்து மாதத்தில் அவள் பத்து மாதம் சுமந்து பெற்ற அவள் மகள் துளசி வந்து வேண்டிக் கொடுத்த பொம்மையை வேண்டாம் என்று சொல்வது போல கணவனை வேண்டாம் என்கிறாளே! என்ன செய்வதென்று தெரியாமல் கோமதி குழம்பினாள்.
இந்தக் காலப் பிள்ளைகளிடம் எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் தன்மையும், எதையும் தூக்கி எறிந்து பேசும் தன்மையும் சற்று மிகையாகவேதான் உள்ளன. அதுவும் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள், ஒரு விதமான இரட்டைக் கலாச்சாரத்துள் அகபபட்டு, அவர்களை அழுத்தும் மன உளைச்சல் காரணமாகவோ அல்லது எதிலும் முழுமையாக ஒட்ட முடியாத இயலாமை காரணமாகவோ தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பெற்றோருடன் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு கோமதியின் மகளும் விதி விலக்கானவளல்ல.
இரவுகளில் பிறந்தநாள் விழாக்களுக்கோ, அல்லது வேறு விழாக்களுக்கோ அல்லது டிஸ்கோவுக்கோ செல்ல அனுமதி மறுக்கப்படும் போது துளசியின் முட்டி மோதலையும் வாக்கு வாதத்தையும் சட்டை செய்யாதவள் போல் கோமதி நடித்திருந்தாலும், இந்த யேர்மனிய வாழ்வில் அது எத்தகையதொரு பாதிப்பை துளசியிடம் ஏற்படுத்தியிருக்கும் என்பதை அவள் உணராமலில்லை.
அதனால் சமயம் வரும் போதெல்லாம் துளசியை தன்னுடன் அழைத்து, அன்பால் அணைத்து, ஆறுதலான வார்த்தைகளால் அறிவுரை சொல்லுவாள். அது துளசியின் ஆதங்கங்களை முற்றாக சமாதானப் படுத்த வில்லை என்பது கோமதிக்குத் தெரிந்தாலும் கோமதியாலும் ஒன்றும் செய்யமுடியாமலே இருந்தது.
கோமதியும் பெண்தானே. அவளும் இந்தக் கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைக்குள் மூச்சடங்கி முக்குளித்தவள் தானே.
ஆனாலும் "இந்தக் கலாச்சாரம் பண்பாடு எல்லாம் உனக்குத் தேவையில்லை. நீ ஐரோப்பியக் கலாச்சாரத்துடன் வாழ்" என்று தன் பெண்ணிடம் சொல்ல எந்தத் தமிழ்த்தாய்தான் மனந்துணிவாள். என்னதான் புதுமை, புரட்சி என்று பேசினாலும், எழுதினாலும் தமது குடும்பம் என்று வரும் போது, என் பெண் இந்தக் கலாச்சாரம் பண்பாடுகளிலிருந்து நழுவி விடக் கூடாதே என்பதுதான் பெண்ணைப் பெற்றவர்கள் எல்லோரதும் கவலை.
இந்த நிலையில் தானுண்டு தன் குடும்பமுண்டு என்றும், சமூகம் என்ன சொல்லும் என்று பயந்தும் வாழும் கோமதியின் நிலை பற்றிச் சொல்லவே தேவையில்லை.
கோமதி கூட ஒரு இரண்டும் கெட்டான் மனநிலையில் போராடுபவள் தான். படித்த, உலகம் தெரிந்த அவள் மனதுக்கும், நான் ஆண் என்ற திமிர்த்தனம் சற்றும் குறையாத கணவனுடனான அவள் வாழ்வுக்கும் இடையில் அவள் நிறையவே போராட்டம் நடத்தி விட்டாள். ஆனால் அவள் போராட்டம் எப்பொழுதுமே அவள் மனதுக்குள் தான். மற்றும் படி கணவன் எள் என்ற உடனே இவள் எண்ணெய்யாக நிற்பாள்.
இந்த மனதோடு ஒரு வாழ்வு, நியத்தில் ஒரு வாழ்வு என்ற இரட்டை வேஷம் கோமதி அறியாமலே கோமதியிடம் ஒரு வித மன உளைச்சலைக் கூட ஏற்படுத்தியிருந்தது. அதனால்தானோ என்னவோ கோமதி துளசியின் விடயத்தில், துளசியின் சின்னச் சின்ன ஏமாற்றங்களையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவளாக இருந்தாள். இருந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்து விட முடியாத நிலையில் துவண்டாள்.
துளசி பெண் என்ற ஒரே காரணத்துக்காக, சில சின்னச் சின்ன விடயங்களில் கூட தடைகள் விதிக்கப்பட்டு அனுமதிகள் மறுக்கப் பட்ட போது, துளசி அப்பா அம்மாவை மீற முடியாத இயலாமையில் பொங்கி எழுந்து, அழுது ஆர்ப்பரிக்கையில் கோமதியும் அழுதாள். நாங்கள் தமிழ்ப் பெண்கள் என்பதையும், பண்பாட்டின் பெருமையையும் விளக்கி அவளைச் சமாதானப் படுத்தினாள்.
ஆனாலும் துளசியின் ரீன்ஏஜ் பருவம் துளசிக்கு மட்டுமல்லாமல், துளசியைத் திருப்திப் படுத்த முடியாத துளசியின் அம்மாவான கோமதிக்கும் கூட மிகுந்த மன உளைச்சலான வேதனையான கால கட்டமாகவே இருந்தது.
அதன் பிரதி பலன்தான் இதுவோ? துளசி கணவனை வேண்டாம் என்று சொல்வது ஏதோ பழி தீர்க்கும் படலம் போலவே கோமதிக்குத் தோன்றியது. கட்டுப்பாடுகளை உடைத்தெறிய அன்று பதினான்கு வயதில் அவளுக்கு முடியவில்லை. இன்று இருபத்தினான்கு வயதில் அவள் அப்பாவை மட்டுமல்ல இந்த சமுகத்தையே பழிவாங்க நினைக்கிறாளோ!
கோமதியின் சிந்தனை பல விதமாக எண்ணியது. இருபத்து நான்கு வயதுப் பெண்ணுக்கு அடித்தோ உதைத்தோ ஒன்றையும் திணிக்க முடியாது. அதுவும் துளசி அப்பா போலவே பிடிவாதக்காரி. அவளிடம் அன்பால் மட்டும்தான் ஏதாவது செய்ய முடியும். கோமதிக்கு அது நன்கு தெரியும்.
என்ன செய்யலாம்...! துளசியை எப்படி வழிக்குக் கொண்டு வரலாம்...! என்ற யோசனைகளோடே அன்றைய இரவு அமைதியின்றிய அரைகுறைத் தூக்கமும், யோசனை கழிந்த விழிப்புமாய் கோமதிக்குக் கழிந்தது.
விடிந்தும் விடியாத பொழுதிலேயே தூக்கம் முழுவதுமாய்க் கலைந்து விட எழுந்து வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டாள். நினைவு மட்டும் துளசியுடன் எப்படிப் பேசலாமென்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தது. கணவருக்குக் கூட இன்னும் நிலைமையைச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஒரு குதி குதித்து ஆர்ப்பாட்டம் பண்ணி "நல்ல வளர்ப்புத்தான் வளர்த்து வைச்சிருக்கிறாய்" என்று கோமதியையும் சாடி விட்டு வேலைக்குப் போயிருப்பார்.
கோமதியின் எண்ணம், கணவரின் காதுக்கு விடயம் எட்டாமலே துளசியின் மனத்தை மாற்றி விட வேண்டுமென்பதுதான்.
கோமதி நினைவுகளுடன் போராடியபடி இருக்க துளசி எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு வந்தாள்.
"அப்பா என்னவாம்?" என்றாள்.
"அப்பாக்கு நானொண்டும் சொல்லேல்லை. சொன்னால் இப்ப ஒரு பிரளயம் எல்லோ நடந்திருக்கும். ஏதோ இண்டைக்கு நேற்றுத்தான் உனக்கு அப்பாவைத் தெரியும் போலை இருக்கு உன்ரை கேள்வி. இதை என்னண்டு அப்பாட்டை நான் சொல்லுறது." கோமதி தனது எரிச்சலையும் கோபத்தையும் வெளியில் காட்டாமல் துளசியின் வினாவுக்குப் பதிலளித்தாள்.
"அம்மா இது மறைக்கிற விசயமில்லை. அப்பா குதிப்பார் எண்டதுக்காண்டி முழுப் பூசணிக்காயை சோத்துக்குள்ளை மறைக்கேலாது" துளசி கத்தினாள்.
"இஞ்சை பார் பிள்ளை. இங்கை கத்துறதிலையோ, ஆர்ப்பாட்டம் பண்ணுறதிலையோ ஒரு அர்த்தமும் இல்லை. கொஞ்சமாவது யதார்த்தத்தை யோசிக்கோணும். கலியாணம் எண்டுறது ஆயிரம் காலத்துப் பயிர். அதை நீ இப்பிடி தூக்கி எறிஞ்சிட்டு வாற விசயமெண்டு மட்டும் நினைக்காதை. ஏன் அவருக்கும் உனக்கும் இடையிலை என்ன பிரச்சனை நடந்தது?இன்னொருக்கால் அவரோடை கதைச்சுப் பார்க்கலாம்தானே!" கோமதி துளசியின் குணம் தெரிந்தவளாய் துளசியை ஆறுதல் படுத்தும் விதமாகக் கதைத்தாள்.
"அம்மா நானும் அவரும் கதைச்சுத் தான் இந்த முடிவுக்கு வந்தனாங்கள். எனக்கும் அவருக்கும் ஒத்து வராது. என்ரை இன்றெஸ்ற் (Interest) வேறை அவற்றை இன்றெஸ்ற் (Interest) வேறை. அது தான்....." துளசி இழுத்தாள்.
"கலியாணம் எண்டு நடந்தால் இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுத்து இன்றெஸ்ற் (Interest) களை மாத்தித்தான் வாழோணும். அதை விட்டிட்டு இதுக்காண்டி ஆரும் எல்லாத்தையும் தூக்கி எறிவினமோ? என்ன ஒரு முட்டாள் தனமான முடிவு எடுத்திருக்கிறாய்...?" வினவினாள் கோமதி.
"பின்னை என்ன உங்களை மாதிரி என்னையும் வாழச் சொல்லுறிங்களே? நீங்கள் ஆசை ஆசையாப் படிச்ச பரத நாட்டியத்தை அப்பாக்காண்டி விட்டது போலை...! அம்மா நான் வாழ ஆசைப்படுறன். ஆருக்காண்டியும் என்ரை ஆசையளை கனவுகளை புதைக்க நான் தயாரா இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக் குடுத்துத்தான் வாழோணும் எண்டு பேச்சுக்குச் சொல்லலாம். ஆனால் வாழுற போது அப்பாக்காண்டி நீங்கள் எல்லாத்தையும் விட்டுக் குடுத்தீங்கள். உங்களுக்காண்டி அப்பா என்னத்தை விட்டுத் தந்தவர் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம். எங்கடை ஆக்கள் ஒருத்தருக் கொருத்தர் விட்டுக் குடுக்கிறது எண்டு சொன்னால் அதுக்கு அர்த்தம் பொம்பிளையள் எல்லாத்தையும் விட்டுக் குடுக்கோணும் எண்டுறதுதான். என்னாலை அது முடியாது." துளசி ஆக்ரோசமாகக் கத்தினாள்.
கோமதி சில நிமிடங்களுக்கு வாயடைத்துப் போனாள். பிறகு நிலைமை விபரீதமாகப் போகப் போவதை உணர்ந்து கொண்டவளாய் "என்ன செய்யிறது துளசி. வாழ்க்கை எண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருக்கும். பொம்பிளையள்தான் ஒரு மாதிரி சமாளிச்சு விட்டுக் குடுத்து கெட்டித்தனமா வாழோணும். இஞ்சை பார் நான் இருபத்தைஞ்சு வருசமா உன்ரை கொப்பரோடை வாழேல்லையே?" என்று சமாளிக்கும் வகையில் பேசினாள்.
"அம்மா நீங்கள் வாழுறது ஒரு வாழ்க்கையே....? நீங்கள் வாழுறிங்களே! அதுக்குப் பேர் வாழ்க்கை யெண்டு மட்டும் சொல்லாதைங்கோ. திருமணம் எண்ட பேரிலை ஒரு அடிமை சாசனம் எழுதி, அதுக்கு வாழ்க்கை எண்டு ஒரு பெயர் வைச்சிருக்கிறீங்கள். எனக்குப் பிடிக்காத, எனக்கு சந்தோசம் தராத வாழ்க்கையை நான் வாழோணுமெண்டு ஏன் என்னைக் கட்டாயப் படுத்திறீங்கள்?" மிகவும் எரிச்சலுடன் துளசி சத்தம் போட்டாள்.
கோமதிக்கு ஒன்று மட்டும் தெரிந்தது. பதினாறு வயதில் கதைத்தே துளசியின் காதலைக் கத்தரித்தது போல, துளசியின் இருபத்து நாலு வயசில் துளசியைக் கதைத்து வெல்வது சுலபமான விடயமல்ல என்பது! கட்டுப்பாடுகள், அதனால் வந்த ஏமாற்றங்கள் மட்டும் என்றில்லாமல், புலம் பெயர் மண்ணின் பல்கலைக்கழகப் படிப்பும் துளசியைப் புடம் போட்டு எடுத்திருந்தது.
இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்தில் கோமதியின் மனம் கவலை கொள்ளத் தொடங்கியது. "மகளை நல்ல இடத்தில் கட்டிக் குடுத்திட்டாய்" என்று வாயாரப் புகழ்ந்தவர்கள் எல்லாரும் இப்ப முன்னாலை நீலிக் கண்ணீர் வடிச்சிட்டு பின்னாலை, முகவாய்க்கட்டையை தோள் மூட்டில் இடிச்சு "பாரன் நல்ல வளர்ப்பு வளர்த்திருக்கிறா" என்று சொல்லி நையாண்டி பண்ணப் போகிறார்கள். என்ற நினைப்பே கோமதிக்குச் சங்கடமாக இருந்தது.
இனி செய்வதற்கொன்றும் இல்லை. கடைசி ஆயதம் இந்த மனுசன் தான். அப்பாவை எதிர்க்கும் தைரியம் துளசியிடம் இருந்ததில்லை. என்று நினைத்துக் கொண்டு கோமதி மௌனமாகி விட்டாள்.
மாலை அப்பா வேலையால் வந்த பின் ஒரு பிரளயமே வீட்டில் நடந்தது. கூடுதலான பேச்சு வேண்டியது கோமதிதான். அது அப்பாவின் றிக்ஸான நடத்தை. தாங்களே பேச்சு வாங்குவதை விட அம்மா பேச்சு வேண்டினால் அது பிள்ளைகளைக் கூடுதலாகப் பாதிக்கும் என்பது மனோதத்துவம். அதை அவர் இப்படியான சந்தர்ப்பங்களில் பயன் படுத்தத் தவறுவதில்லை. கூடவே மானம், மரியாதை, சமூகம், அந்தஸ்து என்று பயமுறுத்தி விடுவார்.
இன்றும் அவர் கடைசி ஆயுதத்தை எடுத்து விட்டார். "நான் எவ்வளவு மானம் மரியாதையா இருக்கிறன் தெரியுமோ? இதெல்லாம் உன்னாலை...! ஒரு பெரிய பிரசங்கமே வைத்து விட்டார்.
அம்மாவோடு நியாயம் பேசிய துளசி அப்பா முன் தோற்றுப் போனாள். தோற்க வைக்கப் பட்டாள். பிறகென்ன...? மீண்டும் துளசி கணவனோடு சேர்ந்து ஒன்றாக வாழ்வதென்பது தீர்மானமாகியது.
கோமதிக்கு துளசியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தனது கண்ணீரும் அப்பாவின் ஆளுமை நிறைந்த தந்திரமான பேச்சும்தான் துளசியை மேற் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் கட்டிப் போட்டு விட்டது என்பதை கோமதியால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் சமூகம், கலாச்சாரம், பண்பாடு இவைகளுக்கு மத்தியில் இதை விட்டு வேறு வழி ஏதும் இருப்பதாகக் கோமதிக்கு தெரியவில்லை.
சமூகத்தின் முன் கணவனின் கெட்டித்தனத்தின் முன் துளசி விடயத்தில் வெற்றி கிடைத்து விட்டதை நினைத்து கோமதி சிரித்துக் கொண்டாள்.
ஆனால் துளசிக்குத் துளியும் பிடிக்காத, சந்தோஷம் தராத வாழ்வை வாழச் சொல்லி துளசியை கட்டாயப் படுத்தி அனுப்பியது தவறு என்று கோமதியின் மனம் கோமதியுடன் சத்தமில்லாமல் யுத்தமொன்றை நடத்திக் கொண்டேயிருந்தது.
சந்திரவதனா
யேர்மனி
பிரசுரம்-ஊடறு (பெண் படைப்பாளிகளின் தொகுப்பு)
May2002
Sunday, April 10, 2005
அவர்கள் வரவில்லை
காற்றோடு கை கோர்த்து ஊர்க்கோலம் போகின்ற மகரந்தத் துகள்களுக்கு என் நாசித்துவாரமும் பாதையாகிப் போனதில் தொண்டைக்குழி வரை மசமசத்தது. விடுப்புப் பார்ப்பதே வேலையாக இருந்ததில் விழிகளும் சிவந்தன.
"அக்கா சித்திரைக்குப் பொங்கியாச்சே... "
பாதையில் ஒரு தமிழன் பாசமாய்க் கேட்டான்.
"...ம்ம்ம்..."
காலைப் பரபரப்பில் பாணைக் கடிக்கவே மறந்தேன் என்றால் நம்புவானா...! பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுக்காய் அழுதேன் என்றால் நம்புவானா...! கற்தரையில் எம்மவர் நித்திரை கொள்வதை ஊர்க்கடிதம் சொன்னதில் தொடங்கி இந்திய வல்லூறுகள் எம்மவரை உயிர் வதம் செய்வதில் தொடர்ந்து... செம்மணிப் புதைகுழியில் எம் பெண்மணிகள் புதைந்தது வரை... சத்தியமாக நான் சித்திரைக்குப் பொங்கவில்லை என்றால் நம்புவானா...!
2002இல் பாதை திறந்த பின் எல்லோரும் மனசு பொங்க பானைகளிலும் பொங்கிய போது கூட நான் பொங்கவில்லை என்றால் இவன் நம்புவானா...!
பொங்கினேன்தான். ஒரேயொரு தரம். அது 1987இல். அதுதான் முதலும் கடைசியுமாய் நான் யேர்மனியில் பொங்கியது.
அப்போது ஜேர்மனிக்கு வந்து பதினொரு மாதங்கள்தான் ஓடியிருந்தன. ஜேர்மனியில் தமிழர்களே அதிகமில்லாத காலகட்டமது. இப்படி ஏதாவது தினங்களில்தான் ஆங்காங்கு இருக்கும் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள். தமிழ்க் குடும்பங்கள் குறைவாயும் தமிழ் இளைஞர்கள் கூடுதலாயும் இருந்ததால் ஏதாவது ஒரு குடும்பத்தோடு ஒரு ஏழெட்டுப் பெடியள் கூடுவார்கள். அப்படித்தான் எங்கள் வீட்டுக்கும் சித்திரைப் பொங்கலைச் சாட்டிக் கொண்டு எனது கணவரோடு அகதி முகாம்களில் இருந்த ஏழெட்டுப் பேர் எட்டுத் திக்குகளிலும் இருந்து வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் வரப்போவதாக தொலைபேசியில் அழைத்துச் சொன்ன போதே "பொங்கோணுமெண்டால் எங்கையாவது, சர்க்கரையும், தேங்காயும், பயறும் வேண்டிக் கொண்டு வாங்கோ" என்று எனது கணவர் சொல்லி விட்டார்.
நாங்கள் வாழும் நகரில் அப்போது எங்களை விட்டால் மருந்துக்குக் கூட வேறு தமிழ்வாசம் இல்லை. தமிழ்க்கடை - அப்படியும் எதுவும் இல்லை. தேங்காய் - அதைப் பார்த்தும் 11 மாதங்களாகி விட்டன. எனது பிள்ளைகளின் நிறைவேறாத ஆசைகளிகளின் வரிசையில் சம்பலும், பிட்டும் முதல் பத்துக்குள் இடம் பிடித்திருந்தன. பாவம் பிள்ளைகள் என்று நினைத்து ஒருதரம், ஒரு பக்கற் தேங்காய்ப்பூ வாங்கி அதையும் அரைக்க அம்மியோ, இடிக்க உரலோ இல்லாமல், கையால் பிசைந்து கொடுக்க, "இது சம்பலில்லை அம்மா.. " என்று அவர்கள் கண்களில் நீர் முட்டி நிற்க... எத்தனை தரம் "திரும்பிப் போய் விடுவோமா...!" என்று மனசு சஞ்சலப் பட்டிருக்கிறது.
பொங்கலுக்கு வந்த நண்பர்கள் பயறு, சர்க்கரை, தேங்காய்.. என்று எல்லாம் கொண்டு வந்தார்கள். அவைகளைப் பார்த்ததும் இன்னுமே ஜேர்மனியுடன் ஒட்ட முடியாமல் வரண்ட மனசோடு வாழ்ந்த எனது மனத்திலும், என் பிள்ளைகளின் முகங்களிலும் மெதுவான குதூகலக்களை எட்டிப் பார்த்தது.
விடிய என்னை விட வேளைக்கே பிள்ளைகள் எழும்பி விட்டார்கள். ஊரில் போலத் தொங்கி விளையாட முடியாவிட்டாலும், பொங்கிக் களிக்கலாம் என்பதில் கொஞ்சம் பிரகாசமாய் இருந்தார்கள்.
சாணத்தால் மெழுகிக் கல்லு வைத்துப் பொங்க முற்றத்துக்கு எங்கே போவது! அதுதான் மின்சார அடுப்பை மினுக்கி, பொங்கல் ஆயத்தங்களைத் தொடங்கினோம். உடைக்கப் போகும் தேங்காயிலிருந்து கிடைக்கப் போகும் இளநீருக்காக எனது பிள்ளைகள் ஆளுக்கொரு கிளாஸை ஏந்திக் கொண்டு நின்றார்கள். காற்றுப் போல இருக்கும் தேங்காயிலிருந்து வரப்போகும் இளநீரை எப்படி மூவருக்கும் பிரித்துக் கொடுப்பது என்ற யோசனையில் நான் இருந்தேன்.
வந்தவர்களில் ஒருவர் "அக்கா நான் தேங்காயை உடைச்சுத் திருவித் தாறன்" என்று சொல்லி சுத்தியலால் அடித்து உடைத்தார். உள்ளே தேங்காய் இருக்கவில்லை. காய்ந்து கறுத்துப் போன ஏதோ ஒன்று இருந்தது. இளநீர் வராத தேங்காயின் உள்ளீட்டைப் பார்த்த எனது பிள்ளைகளின் முகத்தில் தெரிந்த அந்த ஏமாற்றம்... அது என்றைக்குமே எனக்கு மறக்காது.
இனி என்ன செய்வது...! ஓடிப் போய் இன்னொரு தேங்காய் வாங்கிக் கொண்டு வர பக்கத்தில் என்ன இரத்தினத்தின் கடையா இருக்கிறது! பேசாமல் பசுப்பாலை விட்டுப் பொங்கினோம். வாழையிலையோ, வெற்றிலை, பாக்கோ இல்லை. சூரியன் கூட எந்தத் திசையில் உதிக்கிறது என்று தெரியவில்லை. அதனால் படையலுமில்லை. காகம் அதைக் கண்டும் 11மாதங்களாகி விட்டன. ஒரு நண்பன் யன்னலைத் திறந்து "கா... கா..." என்று சும்மா விளையாட்டுக்குக் கத்தி விட்டு ஒரு பிடி பொங்கலை வெளியில் எறிந்தான். "ஏய் பொலிஸ் கண்டால் பிறகு ஃபைன் கட்டுவாய்." இன்னொருவன் கத்தினான்.
எல்லோரும் கூடியிருந்து சாப்பிட்டோம். எல்லா வெறுமைகளையும் மீறிய ஒரு குதூகலம். அன்றைய அந்தக் குதூகலம்... அது இரண்டு மணி நேரமாவது நீடித்திருக்குமா..! தெரியவில்லை. ஊரிலிருந்து கடிதம் தேடி வந்தது.
"சித்திரைப் பொங்கலன்று பார்த்துக் கடிதம் வந்திருக்கு. வாழ்த்து அனுப்பியிருக்கினம் போலை." நண்பர்கள் என்னைச் சந்தோசிக்க வைத்தார்கள். எனக்கு ஊர்க்கடிதம் கண்டதில் சந்தோசப் படபடப்பு. அவசரமாய் பிரித்தேன்.
வந்த கடிதம் ஊரிலிருக்கும் வீட்டிலிருந்து வந்திருந்தால் நிலைமையில் பெரியளவான மாற்றம் ஏற்பட்டிருக்காது. வந்ததோ களத்திலிருந்து. தம்பிதான் எழுதியிருந்தான். அவன் அதை மை தோய்த்து எழுதவில்லை. அன்பைத் தோய்த்து எழுதியிருந்தான். உணர்வுகளை வரிகளாக்கியிருந்தான். ஆயுதந் தூக்கிய அவனுக்குள்ளா இத்தனை ஈரம்! வாசிக்கும் போதே கண்கள் குளமாகி விட்டன. அதற்கு மேல் என்னால் முடியவில்லை. எங்கோ கல்லிலும் முள்ளிலும் எங்கள் உடன் பிறப்புக்களின் காலடிகள் நோக, இங்கு எமக்குப் பொங்கல் தேவையோ என்று மனசு விம்மியது.
அதன் பின் எத்தனையோ தைப்பொங்கல்களும், சித்திரைப் பொங்கல்களும் வந்து வந்து போய் விட்டன. என் மனசில் மட்டும் பொங்கும் எண்ணம் வரவேயில்லை. "எமது சகோதரர்கள் எல்லோருமே எம்மிடம் திரும்பி வரவேண்டும்" என்ற மந்திரம் மட்டும் எனக்குள் மீண்டும் மீண்டுமாய் உச்சரிக்கப் பட்டது.
2000 இல் ஆனையிறவு மீட்கப் பட்ட போது அனேகமானோர் கூடிக் களித்தார்கள். அப்போதும் என்னால் முடியவில்லை. போர்க்களத்திலே வீழ்ந்தும், குருதி வெள்ளத்திலே சாய்ந்தும் போனவர்களின் தியாகமும் அவர்கள் ஈன்றவர்கள் மனதை பற்றி நிற்கும் சோகமும் என்னையும் தொற்றிக் கொண்டன. திரும்பி வராத சகோதரர்களை எண்ணி மனசு அழுதது.
2002இல் ஏ9 பாதை திறந்த போதும் பொங்கும் எண்ணம் வரவில்லை. வன்னி எப்படி இருக்கிறது? போர் எப்படி எமது மக்களைச் சிதைத்திருக்கிறது? நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்? என்று பார்க்கவேண்டும், உதவவேண்டும் என்ற ஆசைதான் எழுந்தது. போனேன். அப்போதுதான் போரின் உக்கிரம், ஆறாத வடுக்களாய் மனிதர்கள் மேல் பதிந்திருப்பதைக் கண்டேன்.
எத்தனை இல்லங்கள்! அத்தனைக்குள்ளும்... அங்கவீனர்களாய்.. பார்வையிழந்தவர்களாய்.. உறவை இழந்தவர்களாய்... மனநோயாளிகளாய்..... யேர்மனி திரும்பியபின்னும் அந்த நினைவுகள் மனசைத் திருகின. பொங்கும் எண்ணம் வரவேயில்லை.
ஆனால் வேறொரு எண்ணம் வந்தது. எனக்குத் தெரிந்த நம்பிக்கையான குடும்பங்களிடம் பணம் அனுப்பினேன். "ஏதாவது இல்லங்களுக்குப் போய் அங்கு பொங்கி அந்த உறவுகளோடு களிக்கும் படி" சொன்னேன். அதன் தொடராய் இம்முறையும் அந்தக் குடும்பம் வன்னியில் உள்ள ஏதாவதொரு இல்லத்தில் பொங்கியிருக்கும். அங்கு சில உள்ளங்களும் சந்தோசங்களில் பொங்கியிருக்கும். அந்த நினைப்பே எனக்குப் போதுமாயிருந்தது.
இதையெல்லாம் சொன்னால் இவன் நம்புவானா..? என் வீட்டில் பாலும், சர்க்கரையும், பயறும் மணக்க நான் பொங்கவில்லை. ஆனால் என் தாயகத்தில் பொங்கல் மணத்திருக்கும் என்ற நினைப்பில் என் மனசு பொங்கியது என்றால் இவன் நம்புவானா?
அதனால்தான் கூசாமல் பொய் சொன்னேன்.
"ஓம் தம்பி பொங்கியாச்சு."
என் பொய்யில் முகம் மலர்ந்து முன்னேறிப் போறவனும் மூக்கைத்தான் தேய்க்கிறான் கண்களையும் கசக்குகிறான் அழகிய மலர்களின் நுண்ணிய மகரந்தக்களுக்கு இவன் மூக்கும் பலிதானோ...!
சந்திரவதனா
ஜேர்மனி
10.4.2005
"அக்கா சித்திரைக்குப் பொங்கியாச்சே... "
பாதையில் ஒரு தமிழன் பாசமாய்க் கேட்டான்.
"...ம்ம்ம்..."
காலைப் பரபரப்பில் பாணைக் கடிக்கவே மறந்தேன் என்றால் நம்புவானா...! பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுக்காய் அழுதேன் என்றால் நம்புவானா...! கற்தரையில் எம்மவர் நித்திரை கொள்வதை ஊர்க்கடிதம் சொன்னதில் தொடங்கி இந்திய வல்லூறுகள் எம்மவரை உயிர் வதம் செய்வதில் தொடர்ந்து... செம்மணிப் புதைகுழியில் எம் பெண்மணிகள் புதைந்தது வரை... சத்தியமாக நான் சித்திரைக்குப் பொங்கவில்லை என்றால் நம்புவானா...!
2002இல் பாதை திறந்த பின் எல்லோரும் மனசு பொங்க பானைகளிலும் பொங்கிய போது கூட நான் பொங்கவில்லை என்றால் இவன் நம்புவானா...!
பொங்கினேன்தான். ஒரேயொரு தரம். அது 1987இல். அதுதான் முதலும் கடைசியுமாய் நான் யேர்மனியில் பொங்கியது.
அப்போது ஜேர்மனிக்கு வந்து பதினொரு மாதங்கள்தான் ஓடியிருந்தன. ஜேர்மனியில் தமிழர்களே அதிகமில்லாத காலகட்டமது. இப்படி ஏதாவது தினங்களில்தான் ஆங்காங்கு இருக்கும் தமிழர்கள் ஒன்று கூடுவார்கள். தமிழ்க் குடும்பங்கள் குறைவாயும் தமிழ் இளைஞர்கள் கூடுதலாயும் இருந்ததால் ஏதாவது ஒரு குடும்பத்தோடு ஒரு ஏழெட்டுப் பெடியள் கூடுவார்கள். அப்படித்தான் எங்கள் வீட்டுக்கும் சித்திரைப் பொங்கலைச் சாட்டிக் கொண்டு எனது கணவரோடு அகதி முகாம்களில் இருந்த ஏழெட்டுப் பேர் எட்டுத் திக்குகளிலும் இருந்து வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் வரப்போவதாக தொலைபேசியில் அழைத்துச் சொன்ன போதே "பொங்கோணுமெண்டால் எங்கையாவது, சர்க்கரையும், தேங்காயும், பயறும் வேண்டிக் கொண்டு வாங்கோ" என்று எனது கணவர் சொல்லி விட்டார்.
நாங்கள் வாழும் நகரில் அப்போது எங்களை விட்டால் மருந்துக்குக் கூட வேறு தமிழ்வாசம் இல்லை. தமிழ்க்கடை - அப்படியும் எதுவும் இல்லை. தேங்காய் - அதைப் பார்த்தும் 11 மாதங்களாகி விட்டன. எனது பிள்ளைகளின் நிறைவேறாத ஆசைகளிகளின் வரிசையில் சம்பலும், பிட்டும் முதல் பத்துக்குள் இடம் பிடித்திருந்தன. பாவம் பிள்ளைகள் என்று நினைத்து ஒருதரம், ஒரு பக்கற் தேங்காய்ப்பூ வாங்கி அதையும் அரைக்க அம்மியோ, இடிக்க உரலோ இல்லாமல், கையால் பிசைந்து கொடுக்க, "இது சம்பலில்லை அம்மா.. " என்று அவர்கள் கண்களில் நீர் முட்டி நிற்க... எத்தனை தரம் "திரும்பிப் போய் விடுவோமா...!" என்று மனசு சஞ்சலப் பட்டிருக்கிறது.
பொங்கலுக்கு வந்த நண்பர்கள் பயறு, சர்க்கரை, தேங்காய்.. என்று எல்லாம் கொண்டு வந்தார்கள். அவைகளைப் பார்த்ததும் இன்னுமே ஜேர்மனியுடன் ஒட்ட முடியாமல் வரண்ட மனசோடு வாழ்ந்த எனது மனத்திலும், என் பிள்ளைகளின் முகங்களிலும் மெதுவான குதூகலக்களை எட்டிப் பார்த்தது.
விடிய என்னை விட வேளைக்கே பிள்ளைகள் எழும்பி விட்டார்கள். ஊரில் போலத் தொங்கி விளையாட முடியாவிட்டாலும், பொங்கிக் களிக்கலாம் என்பதில் கொஞ்சம் பிரகாசமாய் இருந்தார்கள்.
சாணத்தால் மெழுகிக் கல்லு வைத்துப் பொங்க முற்றத்துக்கு எங்கே போவது! அதுதான் மின்சார அடுப்பை மினுக்கி, பொங்கல் ஆயத்தங்களைத் தொடங்கினோம். உடைக்கப் போகும் தேங்காயிலிருந்து கிடைக்கப் போகும் இளநீருக்காக எனது பிள்ளைகள் ஆளுக்கொரு கிளாஸை ஏந்திக் கொண்டு நின்றார்கள். காற்றுப் போல இருக்கும் தேங்காயிலிருந்து வரப்போகும் இளநீரை எப்படி மூவருக்கும் பிரித்துக் கொடுப்பது என்ற யோசனையில் நான் இருந்தேன்.
வந்தவர்களில் ஒருவர் "அக்கா நான் தேங்காயை உடைச்சுத் திருவித் தாறன்" என்று சொல்லி சுத்தியலால் அடித்து உடைத்தார். உள்ளே தேங்காய் இருக்கவில்லை. காய்ந்து கறுத்துப் போன ஏதோ ஒன்று இருந்தது. இளநீர் வராத தேங்காயின் உள்ளீட்டைப் பார்த்த எனது பிள்ளைகளின் முகத்தில் தெரிந்த அந்த ஏமாற்றம்... அது என்றைக்குமே எனக்கு மறக்காது.
இனி என்ன செய்வது...! ஓடிப் போய் இன்னொரு தேங்காய் வாங்கிக் கொண்டு வர பக்கத்தில் என்ன இரத்தினத்தின் கடையா இருக்கிறது! பேசாமல் பசுப்பாலை விட்டுப் பொங்கினோம். வாழையிலையோ, வெற்றிலை, பாக்கோ இல்லை. சூரியன் கூட எந்தத் திசையில் உதிக்கிறது என்று தெரியவில்லை. அதனால் படையலுமில்லை. காகம் அதைக் கண்டும் 11மாதங்களாகி விட்டன. ஒரு நண்பன் யன்னலைத் திறந்து "கா... கா..." என்று சும்மா விளையாட்டுக்குக் கத்தி விட்டு ஒரு பிடி பொங்கலை வெளியில் எறிந்தான். "ஏய் பொலிஸ் கண்டால் பிறகு ஃபைன் கட்டுவாய்." இன்னொருவன் கத்தினான்.
எல்லோரும் கூடியிருந்து சாப்பிட்டோம். எல்லா வெறுமைகளையும் மீறிய ஒரு குதூகலம். அன்றைய அந்தக் குதூகலம்... அது இரண்டு மணி நேரமாவது நீடித்திருக்குமா..! தெரியவில்லை. ஊரிலிருந்து கடிதம் தேடி வந்தது.
"சித்திரைப் பொங்கலன்று பார்த்துக் கடிதம் வந்திருக்கு. வாழ்த்து அனுப்பியிருக்கினம் போலை." நண்பர்கள் என்னைச் சந்தோசிக்க வைத்தார்கள். எனக்கு ஊர்க்கடிதம் கண்டதில் சந்தோசப் படபடப்பு. அவசரமாய் பிரித்தேன்.
வந்த கடிதம் ஊரிலிருக்கும் வீட்டிலிருந்து வந்திருந்தால் நிலைமையில் பெரியளவான மாற்றம் ஏற்பட்டிருக்காது. வந்ததோ களத்திலிருந்து. தம்பிதான் எழுதியிருந்தான். அவன் அதை மை தோய்த்து எழுதவில்லை. அன்பைத் தோய்த்து எழுதியிருந்தான். உணர்வுகளை வரிகளாக்கியிருந்தான். ஆயுதந் தூக்கிய அவனுக்குள்ளா இத்தனை ஈரம்! வாசிக்கும் போதே கண்கள் குளமாகி விட்டன. அதற்கு மேல் என்னால் முடியவில்லை. எங்கோ கல்லிலும் முள்ளிலும் எங்கள் உடன் பிறப்புக்களின் காலடிகள் நோக, இங்கு எமக்குப் பொங்கல் தேவையோ என்று மனசு விம்மியது.
அதன் பின் எத்தனையோ தைப்பொங்கல்களும், சித்திரைப் பொங்கல்களும் வந்து வந்து போய் விட்டன. என் மனசில் மட்டும் பொங்கும் எண்ணம் வரவேயில்லை. "எமது சகோதரர்கள் எல்லோருமே எம்மிடம் திரும்பி வரவேண்டும்" என்ற மந்திரம் மட்டும் எனக்குள் மீண்டும் மீண்டுமாய் உச்சரிக்கப் பட்டது.
2000 இல் ஆனையிறவு மீட்கப் பட்ட போது அனேகமானோர் கூடிக் களித்தார்கள். அப்போதும் என்னால் முடியவில்லை. போர்க்களத்திலே வீழ்ந்தும், குருதி வெள்ளத்திலே சாய்ந்தும் போனவர்களின் தியாகமும் அவர்கள் ஈன்றவர்கள் மனதை பற்றி நிற்கும் சோகமும் என்னையும் தொற்றிக் கொண்டன. திரும்பி வராத சகோதரர்களை எண்ணி மனசு அழுதது.
2002இல் ஏ9 பாதை திறந்த போதும் பொங்கும் எண்ணம் வரவில்லை. வன்னி எப்படி இருக்கிறது? போர் எப்படி எமது மக்களைச் சிதைத்திருக்கிறது? நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்? என்று பார்க்கவேண்டும், உதவவேண்டும் என்ற ஆசைதான் எழுந்தது. போனேன். அப்போதுதான் போரின் உக்கிரம், ஆறாத வடுக்களாய் மனிதர்கள் மேல் பதிந்திருப்பதைக் கண்டேன்.
எத்தனை இல்லங்கள்! அத்தனைக்குள்ளும்... அங்கவீனர்களாய்.. பார்வையிழந்தவர்களாய்.. உறவை இழந்தவர்களாய்... மனநோயாளிகளாய்..... யேர்மனி திரும்பியபின்னும் அந்த நினைவுகள் மனசைத் திருகின. பொங்கும் எண்ணம் வரவேயில்லை.
ஆனால் வேறொரு எண்ணம் வந்தது. எனக்குத் தெரிந்த நம்பிக்கையான குடும்பங்களிடம் பணம் அனுப்பினேன். "ஏதாவது இல்லங்களுக்குப் போய் அங்கு பொங்கி அந்த உறவுகளோடு களிக்கும் படி" சொன்னேன். அதன் தொடராய் இம்முறையும் அந்தக் குடும்பம் வன்னியில் உள்ள ஏதாவதொரு இல்லத்தில் பொங்கியிருக்கும். அங்கு சில உள்ளங்களும் சந்தோசங்களில் பொங்கியிருக்கும். அந்த நினைப்பே எனக்குப் போதுமாயிருந்தது.
இதையெல்லாம் சொன்னால் இவன் நம்புவானா..? என் வீட்டில் பாலும், சர்க்கரையும், பயறும் மணக்க நான் பொங்கவில்லை. ஆனால் என் தாயகத்தில் பொங்கல் மணத்திருக்கும் என்ற நினைப்பில் என் மனசு பொங்கியது என்றால் இவன் நம்புவானா?
அதனால்தான் கூசாமல் பொய் சொன்னேன்.
"ஓம் தம்பி பொங்கியாச்சு."
என் பொய்யில் முகம் மலர்ந்து முன்னேறிப் போறவனும் மூக்கைத்தான் தேய்க்கிறான் கண்களையும் கசக்குகிறான் அழகிய மலர்களின் நுண்ணிய மகரந்தக்களுக்கு இவன் மூக்கும் பலிதானோ...!
சந்திரவதனா
ஜேர்மனி
10.4.2005
Monday, April 04, 2005
பால்வினைத் தொழில்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் விபச்சாரம் வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது.
தற்போது இந்த 21ம் நூற்றாண்டில் வெளிப்படையான அதாவது அங்கீகாரத்துடனான விபச்சாரமும், அங்கீகாரமற்ற அனுமதியில்லாமல் செய்யப்படும் விபச்சாரமும் மிகவும் மலிந்து கொட்டிக் கிடக்கின்றன.
பின்லாந்தில் விபச்சாரம் தவறான கண்கொண்டு பார்க்கப் படுவதே இல்லை.
இங்கு யேர்மனியில் பல இடங்களில் அங்கீகாரம் பெற்ற விபச்சார விடுதிகள் இருந்தாலும், அங்கீகாரம் பெறாத விபச்சார விடுதிகள் அதை விட அதிகமாய் உள்ளன. பாவனையில் இல்லாத வீடுகள் கூட இதற்குப் பயன் படுத்தப் படுகின்றன.
இவைகளில் ஏறக்குறைய 400000 பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பால்வினைத் தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஒரு வகையினர் தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்கள். இரண்டாவது வகையினர் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப் படுபவர்கள்.
இந்த முதலாவது வகையினரில் பாடசாலைப் பிள்ளைகளும் பல்கலைக் கழகப் பிள்ளைகளும் அடங்குவர். அம்மா அப்பாவிடமிருந்து கிடைக்கும் பொக்கற் மணி போதாத பட்சத்திலும், படிப்பதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியாத பட்சத்திலும் - வேறு வேலைகள் செய்வதை விட இந்த வேலையில் சுலபமாகப் பணத்தைச் சம்பாதித்து விடலாம் என்பது இவர்கள் கருத்து. இவர்கள் பெரும்பாலும் வீதிகளின் ஓரங்களில் காத்து நின்று, தம்மை இனம் காட்டுவார்கள். இவர்களில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அதை விட வசதியான வாழ்க்கைக்காக பாடசாலை விடுமுறைக்கு உல்லாசப் பயணிகள் நிறைந்த பணக்கார நாடான சைப்பிரசுக்குச் சென்று பால்வினைத்தொழில் செய்து சம்பாதித்து வருவார்கள்.
இரண்டாவது வகையினர் கூடுதலாக போலந்து, செக்கொஸ்லொவோக்கியா, உக்ரையின் போன்ற நாடுகளிலிருந்து தரகர்களால் கடத்திக் கொண்டு வரப்பட்டு கட்டாயப் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.
இப்படி கடத்தி வரப் படுபவர்கள் விரும்பினால் கூட மீள முடியாத படி, துப்பாக்கி முனையிலும், குண்டர்கள் மத்தியிலும் காவல் வைக்கப் பட்டுத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் சொற்பமே. இவர்களின் உடலுக்காகக் கிடைக்கும் பணத்தில் 70 வீதத்தைத் தரகர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். மிகுதி 30 வீதமே இவர்களிடம் கொடுக்கப் படுகிறது.
இது ஒரு துன்பியல் நிறைந்த நரக வாழ்க்கை. கட்டாயத்தின் பேரில் ஒருத்தி தன் உடலை ஒருவனின் இச்சைக்கு இரையாக்க பெண்களை நாடு கடத்தி விற்கும் இடைத் தரகரும், பெண்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து இச்சை தீர்க்க வரும் ஆண்களுக்கு பெண்களைக் காட்சிப் பொருளாகக் காட்டிப் பேரம் பேசி சிலமணி நேரங்களுக்கோ அல்லது ஒரு இரவுக்கோ வாடகைக்கு விடும் தலைமைத் தரகரும் அதில் பணம் சம்பாதிக்கும் அவலம் மிகவும் கொடுமையானது.
அனேகமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வாலிப வயதுப் பெண்கள் நினைக்கிறார்கள் யேர்மனி பணக்காரநாடு. அங்கு போனால் நல்ல வேலையுடன் வசதியாக வாழலாமென்று. அதனால் பத்திரிகைகளில் வேலைக்கான விளம்பரங்களைத் தேடி யேர்மனியின் உணவு விடுதிகளில் உணவு பரிமாறுபவருக்கான வேலைக்கோ, அல்லது பிள்ளைகளைப் பராமரிக்கும் பேபிமைண்டர் வேலைக்கோ அல்லது இது போன்ற இன்னும் வேறு வேலைகளுக்கோ விண்ணப்பிக்கிறார்கள்.
இது கூடுதலாகத் எமது தாயகத்திலிருந்து சவுதி போன்ற கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிப் போகும் எமது தமிழ் சிங்களப் பெண்கள் செய்வது போன்ற ஒரு ஒப்பந்தத்துடனான ஒரு வருட அல்லது இன்னும் கூடிய காலங்களுக்கான வேலையாகவே கருதப் படும்.
ஆனால் தாமும் பணம் சம்பாதிக்கும் காலம் ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இப்படி விண்ணப்பித்து வேலைக்கென யேர்மனிக்கு வந்து சேரும் வாலிபவயதுப் பெண்களுக்கு யேர்மனியில் காத்திருப்பது ஒரு பயங்கரமான, அருவருப்பான துயரம் தோயந்த எதிர்காலமே!
கூடுதலாக பேர்லினிலோ அல்லது ஹம்பேர்க்கிலோ தான் அவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். அங்கு சென்ற பின்தான் அவர்கள் கட்டாய பால்வினைத் தொழில் செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு விளங்கப் படுத்தப் படும். அவர்கள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் பலாத்காரப் படுத்தி பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்தப் படுவார்கள்.
இதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வாய்ப்பே இல்லை. கடத்தி வந்தவர்களைக் காவலில் வைத்திருப்பது போலவே இவர்களும் தப்பியோட முடியாத படி துப்பாக்கி முனைகளும் குண்டர்களும் காவலுக்கு நிற்பார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இப் பெண்கள் தப்பியோடினால் அவர்களது தாய்நாட்டில் இருக்கும் அவர்களது பெற்றோர்களும் சகோதரர்களும் துன்புறுத்தப் படுவார்கள், அல்லது கொலை செய்யப்படுவார்கள் என்று சொல்லிப் பயமுறுத்தப் படுவார்கள். இந்திய தமிழ் சினிமாக்களில் வரும் பிளாக்மெயில் தனமான வில்லத்தனம் போலவே அந்தப் பயமுறுத்தல் இருக்கும்.
இந்தத் தரகர்கள் கொடுக்கும் இப்படியான அதீதமான அழுத்தங்களினால் பொலீசிடம் போய் முறையிடும் துணிவு கூட இந்தப் பெண்களுக்கு இல்லாது போய்விடும்.
அதுமட்டுமல்லாமல் இந்த விபச்சார விடுதிகளை நடாத்துபவர்களின் முறைப் படி, தலைமைத் தரகரால் அப் பெண்கள் சில இரவுகிளப்புகளுக்கும் அரைகுறை ஆடைகளுடனோ அல்லது ஆடைகளே இல்லாமலோ நடனமாட கட்டாயமாக அனுப்பி வைக்கப் படுவார்கள்.
பல பெண்கள் உக்ரையின், லிற்றவ்வன், லெற்லாண்ட், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து விசாவுக்கென ஏஜென்சியிடம் 1500டொச்சமார்க் கொடுத்து எதிர்காலத்தைப் பற்றியதான பலத்த நம்பிக்கையுடன் இங்கு யேர்மனிக்கு வந்து சேருகிறார்கள். ஆனால் இங்கே வந்ததும் தான் தாம் ஏஜென்சியால் ஏமாற்றப் பட்டதை உணர்ந்து தெரிந்து நம்பிக்கைகள் எல்லாம் தவிடு பொடியாக மனமுடைந்து, ஆனாலும் விடுதலையோ அதை விட்டு வெளியேற ஒரு வழியோ தெரியாமல் துவண்டு போகிறார்கள்.
இவர்களைக் கூட்டி வந்த தரகர்கள் இவர்களை விபச்சார விடுதிக்கு விற்பனை செய்வார்கள். இவர்களின் பெறுமதி சிலசமயங்களில 25000யூரோ வரை கூட உயர்ந்திருக்கும். உக்ரையின் நாட்டுப் பெண்கள் அழகானவர்களாம். அவர்கள்தான் அதிகம் விலை போவார்கள்.
இடைத் தரகர் அந்தப் பணத்தை முக்கிய தரகரிடம் பெற்றுக் கொண்டு போன பின்னர் அந்த முக்கிய தரகர் தான் கொடுத்த 25000யூரோவையும் இந்தப் பெண்களிடமே பெற்றுக் கொண்டு விடுவார். அதாவது இந்தப் பெண்கள் தமது உடலை இன்னொரு ஆடவனின் இச்சைக்கு இரையாக்கும் போது வரும் பணத்தில் அந்த 25000யூரோ கணக்கு வைத்துக் கழிக்கப் படும்.
எப்படியானதொரு கொடுமை இது என்பது எத்தனை பேருக்குப் புரியும்.
புரிந்த ஆண்கள் கூட தமது இச்சை தீர்ந்தால் போதுமென்ற எண்ணத்துடன் இப்படியான சிவப்பு விளக்குப் பகுதிகளுக்குச் சென்று இந்தக் கொடுமைகளுக்கு உரமும் வலுவும் கொடுப்பது எத்துணை அவலமானது.
யேர்மனியில் மட்டும் ஒரு நாளைக்கு பத்துஇலட்சம் ஆண்கள் விலைமாதர்களிடம் போய் வருகிறார்களாம்.
இதே நேரம் எல்லாப் பெண்களுமே கடத்தப் பட்டு பலாத்காரத்தின் பேரில்தான் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. போலந்து, செக்கொஸ்லொவோக்கியா போன்ற நாட்டுப் பெண்களில் பலருக்கு இங்கு யேர்மனியில் வேலை என்ற பெயரில் என்ன காத்திருக்கிறது என்பது தெரியும்.
ஆனாலும் வறுமை, எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் போன்ற காரணங்களால் யேர்மனிக்கு வந்து இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
சிலகாலங்களுக்கு உழைத்து விட்டு, அந்தப் பணத்துடன் தாய் நாடுகளுக்குத் திரும்பி நல்லதொரு வசதியான வாழ்வைத் தொடங்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை நிறைந்த ஆசை. அதற்காக ஏஜென்சிக்கு 750யூரோ கொடுத்து சட்டத்துக்கு முரணாக விசா பெற்று அவர் மூலமாகவே இங்கு யேர்மனிக்கு வந்து சேர்ந்து பால்வினைத் தொழிலை பணத்துக்கான ஒரு தொழிலாகச் செய்கிறார்கள்.
இப்படித் தாம் விரும்பி இத்தொழிலில் ஈடுபடும் கிழக்கு ஐரோப்பியப் பெண்கள் 30 வீதமானவர்கள் மட்டுமே! மிகுதி 70 வீதமான கிழக்கு ஐரோப்பியப் பெண்களும் ஏஜென்சிமார்களால் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டு விபச்சார விடுதி நடத்துனர்களாலும், இரண்டாவது தரகர்களாலும் கட்டாய பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது யேர்மனிய அரச நிறுவனங்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த இரண்டாவது வகைப் பால்வினைத்தொழில் செய்யும் பெண்களில் தாய்லாந், பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாட்டுப் பெண்களும் அடங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஆண்களால் ஏமாற்றப் பட்டே இங்கு அழைத்து வரப் படுகிறார்கள். ஐரோப்பிய ஆண்கள் இந்தக் கொடுமையைச் செய்வதற்கென்றே உல்லாசப் பயணிகளாக தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளுக்குப் போகிறார்கள். அங்கு வறிய அழகிய பெண்கள் மேல் காதல் கொண்டது போல நடித்து, திருமணம் செய்வதாகப் பொய் சொல்லி இங்கு கூட்டி வந்து பால்வினைத் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்துகிறார்கள். இந்த ஆண்களில் பெண்களை இங்கு கொண்டு வந்து விற்பவர்களும் இருக்கிறார்கள். சொந்தமாகவே விபச்சாரவிடுதி வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அதை விட பெண்களை ஏமாற்ற முடியாத பட்சத்தில் கடத்தியும் கொண்டு வருகிறார்கள். கடத்தலுக்கு இடைத்தரகராக நின்று உதவி செய்பவர்கள் பெரும்பாலும் தாய்லாந்து பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்களாகவே இருக்கிறார்கள்.
சீனாவைச் சேர்ந்த ஒரு விலைமாது சொல்கிறார். "நான் எனக்குப் 17 வயதாக இருந்த போது எனது ஒன்று விட்ட சகோதரியுடன், வேலை எடுத்துத் தருவதாகச் சொன்ன ஒரு உறவு மாமாவுடன் பஸ் ஏறினேன். நான்கு மணித்தியாலப் பயணம் என்றார் மாமா. ஆனால் நான்கு நாட்கள் காடுகள் மேடுகள் கடந்த பயணம் அது. அது கடத்தல் என்று தெரிய முன்னமே பயத்தில் வீடு திரும்ப மன்றாடினேன். மாமா விடவில்லை. பர்மா எல்லையில் நாமிருவரும் விலைபேசப் பட்டோம். அவர்கள் எம்மை ஒரு சட்டைத்துணி போல, ஒரு ரவிக்கை போல ஆராய்ந்து பார்த்தார்கள். கன்னி கழியாமல் இருக்கிறோமா என்பதைக் கூட கவனமாக ஆராயந்தார்கள். இப்போ நான் இந்த வாழ்வில் இருந்து மீளமுடியாதவளாகி விட்டேன். " என்று.
2002 மாசி பிற்பகுதியில் பேர்லினில் அங்கீகாரம் பெற்ற ஒரு விபச்சாரவிடுதியில் ஏறக்குறைய 1000 வெளிநாட்டுப் பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதும், அவர்களால் அவர்களை வாடிக்கையாளர்களிடம் வாடகைக்கு விடும் தலைமைத் தரகர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்தப் பெண்கள் பாதிக்கப் பட்டவர்களாகவே கண்டு கொள்ளப்பட்டார்கள்.
சிலபெண்கள் - இவர்களைப் பெண்கள் என்று சொல்வதை விட சிறுமிகள் குழந்தைகள் என்று கூடச் சொல்லலாம். அவ்வளவு இளம் வாலிப வயதுப்பெண்கள் இவர்கள். தரகர்களிடம் முரண்படும் சமயங்களில் தரகர்களால் அடித்துத் துன்புறுத்தப் படுகிறார்கள்.
பேர்லினில் இந்த வருட பெப்பரவரி மாத இறுதியில் ஒரு ரஷ்ய இளநங்கை மிகவும் கொடுமைப் படுத்தப் பட்ட நிலையில் பொலீசாரால் விடுவிக்கப் பட்டிருக்கிறாள். இவளை 3 ரஷ்யர்கள் 8மணி நேரமாகத் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அந்த ரஷ்யர்களில் ஒருவருக்கு அன்று பிறந்தநாளாம். அதைக் கொண்டாடு முகமாகவே அந்த இளநங்கை சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறாள்.
எல்லோரும் நினைப்பது போல போலந்து நாட்டையோ ரஷ்ய நாட்டையோ சேர்ந்த தரகர்கள்தான் பெண்களை கட்டாய பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலான விபச்சார விடுதிகளின் சொந்தக் காரர்களும், தலைமைத் தரகர்களும் யேர்மனியர்களாகவே இருக்கிறார்கள். ரஷ்சியர்கள் அனேகமாக இடைத் தரகர்களாகத்தான் இருக்கிறார்கள்.
விபச்சார விடுதிகளிலும் தரகர்கள் மத்தியிலும் பெண்கள் கடைச்சரக்குகளாகத் தான் பாவிக்கப் படுகிறார்கள். இந்தப் பெண்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் குறைவானதே. சராசரியாக
அரைமணித்தியாலத்துக்கு ஒரு அறைக்கு 50யூரோ என்றே வசூலிக்கப் படுகிறது. இதில் அந்த அரைமணி நேரமும் யாரோ ஒரு காமுகனின் இச்சைக்கு எந்த உணர்வுகளுமின்றிய ஒரு ஜடம் போல தன் உடலை பலியாக்கிய பெண்ணுக்குக் கிடைப்பது வெறும் 15யூரோ மட்டுமே.
கூடுதலான பெண்கள் தமக்குக் கிடைக்கும் இப்பணத்தைச் சேமிக்கிறார்கள். சில பெண்கள் இதைத் தாய் நாட்டில் வறுமையில் வாழும் தமது தாய்தந்தையருக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்தப் பணத்தை பெற்றோருக்கு அனுப்புவதைத் தவிர்த்து சேமிக்க வேண்டுமென தலைமைத் தரகர்களால் வற்புறுத்தப் படுகிறார்கள். ஏனெனில் இவர்கள் ஒரு யேர்மனிய ஆணை மணமுடிக்கும் பட்சத்தில்தான் விசாப் பிரச்சனையின்றி தொடர்ந்தும் யேர்மனியில் வாழ்வதற்கான வாய்ப்பும், இவர்களின் உடல்கள் மூலம் தரகர்கள் பணம் சம்பாதிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கிறது.
ஒரு விலைமாதை திருமணம் செய்து கொள்ள ஒரு யேர்மன் ஆண்
7500யூரோவை எதிர்பார்க்கிறான். அப்பணத்தை இப்பெண்களே சேமித்து, ஒரு யேர்மனிய ஆணைத் திருமணம் செய்து, தமக்கு உழைத்துத் தர வேண்டுமென இவர்கள் தரகர்களால் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.
இது ஒரு அடிமைத் தனம் போன்றதுதான். முற்காலத்தில் மனிதர்கள் விற்கப் பட்டு அடிமைகளாக வாழ்ந்தது போன்றுதான் இன்றைய விலைமாதர்களும் வாழ்கிறார்கள். இவர்களின் உணர்வுகள் மதிக்கப் படுவதில்லை. பெரும்பாலான சமயங்களில் தரகர்களால் மிதிக்கப் படுகிறார்கள்.
தரகர்களால் மட்டுமல்ல. உடலுறவு பணத்துக்காக என்பதால் இவர்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் என்ன செய்தாலும் வாய் பேசாது வலிகளைத் தாங்க வேண்டிய அவலத்திலும் இருக்கிறார்கள்.
எந்த உண்மையையும் வெளியில் சொல்ல தைரியமில்லாத படி அச்சப் படுத்தியே வாழ வைக்கப் படுகிறார்கள்.
இந்த விலைமாதர்கள் மீது அங்கு வந்து போகும் வாடிக்கையாளர்களில் யாருக்காவது விருப்பமோ காதலோ வந்தால், விலைமாதின் வயதுக்கும், உடல்வாகுக்கும், அழகுக்கும் முக்கியமாக அவளால் விடுதிக்கும் தரகருக்கும் வரும் வருமானத்துக்கும் ஏற்ப பேரம் பேசப்பட்டு, அவள் வாடிக்கையாளருக்கு விற்கப் படுவாள். அவள் தன்னை ஒரு கடைச்சரக்காக, அழுக்குத் துணியாக உணர்ந்து கொண்ட போதும், அவளின் பெறுமதி பல்லாயிரக்கணக்காக இருக்கும். அவளின் இந்தப் பெறுமதி 25000யூரோ வைக் கூடத் தாண்டியிருப்பதாக பேர்லினைச் சேர்ந்த பெண்கள் சங்கத்துக்கான காரியதரிசி Helga Korthaase சொல்கிறார்.
இவர்களில் ஓரிருவர் வாடிக்கையாளர்களால் நியமாகவே காதலிக்கப் பட்டு விடுதலை பெற்று குடும்பம் குழந்தையென்று வாழும் நிகழ்வுகளும் அபூர்வமாக நடந்துள்ளன.
இந்த வருட ஆரம்பத்தில் விலைமாதர்கள் தமது பால்வினைத்தொழிலை பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றதொரு சட்டம் யேர்மனியில் அமுல் படுத்தப் பட்டது. பதிவு செய்வதால் அவர்களுக்கான எல்லா காப்புறுதிகளும் செய்யப் பட்டு, அவர்களது எதிர்காலம் செழுமைப் படுத்தப் படும் என்பதும், பதிந்து பால்வினைத் தொழிலைச் செய்யும் போது தரகர்களினதும் விபச்சாரவிடுதி நடத்துனர்களதும் அவர்கள் மீதான அராயஜகம் தவிர்க்கப்படும் என்பதும் யேர்மன் அரசின் நம்பிக்கையான நன்நோக்கம்.
இந்தக் காப்புறுதிகளில் சுகவீனக்காப்புறுதி, பென்சன்காப்புறுதி... போன்ற பல நல்ல விடயங்கள் அடங்குகின்றன. ஆனாலும் இதுவரையில் எந்தப் விலைமாதரும் வந்து இதற்கான அலுவலகத்தில் தம்மைப் பதிந்து கொள்ளவில்லையென இவர்களுக்கான சட்டங்களுக்கும், தேவைகளுக்கும் பொறுப்பான Juanita Henning கவலை தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒரு விலைமாது கொடுத்த பதில் பத்திரிகைச் செய்தியாக வந்துள்ளது. அவர் கூறுவதாவது "பால்வினைத்தொழிலில் நேரடியாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதால் அந்த வேலை செய்பவர்களை மற்றைய வேலைகள் செய்பவர்கள் போலக் கருதாமல் ஒரு வர்த்தக நிறுவனம் வைத்திருப்பவர் போலவே கருதுகிறார்கள். அதனால் அதற்காக வசூலிக்கப் படும் வரிகளும் வர்த்தகர்களுக்குப் போலவேதான் வசூலிக்கப் படும். அதாவது ஒரு விலைமாது ஒருநாளைக்கு 250யூரோ உழைப்பதாகக் கணக்குப் போட்டு அதன் படியே எல்லா வரிகளும் காப்புறுதிகளுக்கான பணங்களும் அறவிடப்படும். இது மிகவும் அதிகம். இதன் காரணமாகவே நானுறுஆயிரம் விலைமாதர்களில் ஒருவர் கூடப் பதிந்து கொள்ள முன்வரவில்லை."
இந்த விபச்சாரம் யேர்மனியில் மட்டுந்தான் என்று சொல்வதற்கில்லை. உலகளாவப் பரந்து கிடக்கிறது. மேற்கு ஆபிரிக்காவில் உள்நாட்டுச் சண்டை காரணமாக கென்யா, சீராலியோன்... போன்ற நாடுகளிலிருந்து தப்பியோடி வரும் பெண்குழந்தைகள் அவர்களுக்கான உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு பின்னர் விலைமாதர்கள் ஆக்கப் படுகிறார்கள்.
பெண்குழந்தைகள் பாலுறவுக்கு இணங்கும் பட்சத்திலேயே அவர்களுக்கு உண்ண உணவும், நோய்களுக்கான மருந்தும் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களால் வழங்கப் படுகிறது. கிட்டத்தட்ட 40 நிறுவனங்களில் வேலைசெய்யும் 70 பேர்கள், இந்தத் துர்வேலையைச் செய்து கொண்டிருந்ததை UNO உதவி நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.
இதற்கு ஃபறீ ரவுணைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறார். "இது ஒன்றும் புதிதல்ல. இங்கு உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுடன் பாலுறவு கொள்வதால்தான் அகதிகளாகத் தப்பியோடி வந்த சிறுமிகள் பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். " என்று.
UNHCR சொல்கிறது. "ஆபிரிக்காவில் மிகவும் பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகளே. இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் முதலில் இராணுவத்தாலும் பின்னர் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலும் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கோ அல்லது பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னர் உணவு உடை மருந்து பாடசாலை போன்றவற்றுக்காக பாலுறவுக்கு வற்புறுத்தப் படுகிறார்கள். அதன் பின் விலைமாதர்களாக்கப் படுகிறார்கள்." என்று
பால்வினை என்னும்
பாழ் கிணற்றுக்குள்
வாழ்விழந்த பெண்கள்
மீள வழி உண்டா.........!
ஏழ்மையினாலும்
சில மனிதர்களின் இச்சையினாலும்
சூழ உள்ளவர்களின் சூழ்ச்சியினாலும்
ஊனமானது உடல்கள் மட்டுமல்ல!
இவர்கள் உள்ளங்களும்தான்!
சந்திரவதனா
யேர்மனி
May - 2002
பிரசுரம் - பெண்கள் சந்திப்பு மலர் - 2002
தற்போது இந்த 21ம் நூற்றாண்டில் வெளிப்படையான அதாவது அங்கீகாரத்துடனான விபச்சாரமும், அங்கீகாரமற்ற அனுமதியில்லாமல் செய்யப்படும் விபச்சாரமும் மிகவும் மலிந்து கொட்டிக் கிடக்கின்றன.
பின்லாந்தில் விபச்சாரம் தவறான கண்கொண்டு பார்க்கப் படுவதே இல்லை.
இங்கு யேர்மனியில் பல இடங்களில் அங்கீகாரம் பெற்ற விபச்சார விடுதிகள் இருந்தாலும், அங்கீகாரம் பெறாத விபச்சார விடுதிகள் அதை விட அதிகமாய் உள்ளன. பாவனையில் இல்லாத வீடுகள் கூட இதற்குப் பயன் படுத்தப் படுகின்றன.
இவைகளில் ஏறக்குறைய 400000 பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பால்வினைத் தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஒரு வகையினர் தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்கள். இரண்டாவது வகையினர் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப் படுபவர்கள்.
இந்த முதலாவது வகையினரில் பாடசாலைப் பிள்ளைகளும் பல்கலைக் கழகப் பிள்ளைகளும் அடங்குவர். அம்மா அப்பாவிடமிருந்து கிடைக்கும் பொக்கற் மணி போதாத பட்சத்திலும், படிப்பதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியாத பட்சத்திலும் - வேறு வேலைகள் செய்வதை விட இந்த வேலையில் சுலபமாகப் பணத்தைச் சம்பாதித்து விடலாம் என்பது இவர்கள் கருத்து. இவர்கள் பெரும்பாலும் வீதிகளின் ஓரங்களில் காத்து நின்று, தம்மை இனம் காட்டுவார்கள். இவர்களில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அதை விட வசதியான வாழ்க்கைக்காக பாடசாலை விடுமுறைக்கு உல்லாசப் பயணிகள் நிறைந்த பணக்கார நாடான சைப்பிரசுக்குச் சென்று பால்வினைத்தொழில் செய்து சம்பாதித்து வருவார்கள்.
இரண்டாவது வகையினர் கூடுதலாக போலந்து, செக்கொஸ்லொவோக்கியா, உக்ரையின் போன்ற நாடுகளிலிருந்து தரகர்களால் கடத்திக் கொண்டு வரப்பட்டு கட்டாயப் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.
இப்படி கடத்தி வரப் படுபவர்கள் விரும்பினால் கூட மீள முடியாத படி, துப்பாக்கி முனையிலும், குண்டர்கள் மத்தியிலும் காவல் வைக்கப் பட்டுத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் சொற்பமே. இவர்களின் உடலுக்காகக் கிடைக்கும் பணத்தில் 70 வீதத்தைத் தரகர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். மிகுதி 30 வீதமே இவர்களிடம் கொடுக்கப் படுகிறது.
இது ஒரு துன்பியல் நிறைந்த நரக வாழ்க்கை. கட்டாயத்தின் பேரில் ஒருத்தி தன் உடலை ஒருவனின் இச்சைக்கு இரையாக்க பெண்களை நாடு கடத்தி விற்கும் இடைத் தரகரும், பெண்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து இச்சை தீர்க்க வரும் ஆண்களுக்கு பெண்களைக் காட்சிப் பொருளாகக் காட்டிப் பேரம் பேசி சிலமணி நேரங்களுக்கோ அல்லது ஒரு இரவுக்கோ வாடகைக்கு விடும் தலைமைத் தரகரும் அதில் பணம் சம்பாதிக்கும் அவலம் மிகவும் கொடுமையானது.
அனேகமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வாலிப வயதுப் பெண்கள் நினைக்கிறார்கள் யேர்மனி பணக்காரநாடு. அங்கு போனால் நல்ல வேலையுடன் வசதியாக வாழலாமென்று. அதனால் பத்திரிகைகளில் வேலைக்கான விளம்பரங்களைத் தேடி யேர்மனியின் உணவு விடுதிகளில் உணவு பரிமாறுபவருக்கான வேலைக்கோ, அல்லது பிள்ளைகளைப் பராமரிக்கும் பேபிமைண்டர் வேலைக்கோ அல்லது இது போன்ற இன்னும் வேறு வேலைகளுக்கோ விண்ணப்பிக்கிறார்கள்.
இது கூடுதலாகத் எமது தாயகத்திலிருந்து சவுதி போன்ற கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிப் போகும் எமது தமிழ் சிங்களப் பெண்கள் செய்வது போன்ற ஒரு ஒப்பந்தத்துடனான ஒரு வருட அல்லது இன்னும் கூடிய காலங்களுக்கான வேலையாகவே கருதப் படும்.
ஆனால் தாமும் பணம் சம்பாதிக்கும் காலம் ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இப்படி விண்ணப்பித்து வேலைக்கென யேர்மனிக்கு வந்து சேரும் வாலிபவயதுப் பெண்களுக்கு யேர்மனியில் காத்திருப்பது ஒரு பயங்கரமான, அருவருப்பான துயரம் தோயந்த எதிர்காலமே!
கூடுதலாக பேர்லினிலோ அல்லது ஹம்பேர்க்கிலோ தான் அவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். அங்கு சென்ற பின்தான் அவர்கள் கட்டாய பால்வினைத் தொழில் செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு விளங்கப் படுத்தப் படும். அவர்கள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் பலாத்காரப் படுத்தி பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்தப் படுவார்கள்.
இதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வாய்ப்பே இல்லை. கடத்தி வந்தவர்களைக் காவலில் வைத்திருப்பது போலவே இவர்களும் தப்பியோட முடியாத படி துப்பாக்கி முனைகளும் குண்டர்களும் காவலுக்கு நிற்பார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இப் பெண்கள் தப்பியோடினால் அவர்களது தாய்நாட்டில் இருக்கும் அவர்களது பெற்றோர்களும் சகோதரர்களும் துன்புறுத்தப் படுவார்கள், அல்லது கொலை செய்யப்படுவார்கள் என்று சொல்லிப் பயமுறுத்தப் படுவார்கள். இந்திய தமிழ் சினிமாக்களில் வரும் பிளாக்மெயில் தனமான வில்லத்தனம் போலவே அந்தப் பயமுறுத்தல் இருக்கும்.
இந்தத் தரகர்கள் கொடுக்கும் இப்படியான அதீதமான அழுத்தங்களினால் பொலீசிடம் போய் முறையிடும் துணிவு கூட இந்தப் பெண்களுக்கு இல்லாது போய்விடும்.
அதுமட்டுமல்லாமல் இந்த விபச்சார விடுதிகளை நடாத்துபவர்களின் முறைப் படி, தலைமைத் தரகரால் அப் பெண்கள் சில இரவுகிளப்புகளுக்கும் அரைகுறை ஆடைகளுடனோ அல்லது ஆடைகளே இல்லாமலோ நடனமாட கட்டாயமாக அனுப்பி வைக்கப் படுவார்கள்.
பல பெண்கள் உக்ரையின், லிற்றவ்வன், லெற்லாண்ட், ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து விசாவுக்கென ஏஜென்சியிடம் 1500டொச்சமார்க் கொடுத்து எதிர்காலத்தைப் பற்றியதான பலத்த நம்பிக்கையுடன் இங்கு யேர்மனிக்கு வந்து சேருகிறார்கள். ஆனால் இங்கே வந்ததும் தான் தாம் ஏஜென்சியால் ஏமாற்றப் பட்டதை உணர்ந்து தெரிந்து நம்பிக்கைகள் எல்லாம் தவிடு பொடியாக மனமுடைந்து, ஆனாலும் விடுதலையோ அதை விட்டு வெளியேற ஒரு வழியோ தெரியாமல் துவண்டு போகிறார்கள்.
இவர்களைக் கூட்டி வந்த தரகர்கள் இவர்களை விபச்சார விடுதிக்கு விற்பனை செய்வார்கள். இவர்களின் பெறுமதி சிலசமயங்களில 25000யூரோ வரை கூட உயர்ந்திருக்கும். உக்ரையின் நாட்டுப் பெண்கள் அழகானவர்களாம். அவர்கள்தான் அதிகம் விலை போவார்கள்.
இடைத் தரகர் அந்தப் பணத்தை முக்கிய தரகரிடம் பெற்றுக் கொண்டு போன பின்னர் அந்த முக்கிய தரகர் தான் கொடுத்த 25000யூரோவையும் இந்தப் பெண்களிடமே பெற்றுக் கொண்டு விடுவார். அதாவது இந்தப் பெண்கள் தமது உடலை இன்னொரு ஆடவனின் இச்சைக்கு இரையாக்கும் போது வரும் பணத்தில் அந்த 25000யூரோ கணக்கு வைத்துக் கழிக்கப் படும்.
எப்படியானதொரு கொடுமை இது என்பது எத்தனை பேருக்குப் புரியும்.
புரிந்த ஆண்கள் கூட தமது இச்சை தீர்ந்தால் போதுமென்ற எண்ணத்துடன் இப்படியான சிவப்பு விளக்குப் பகுதிகளுக்குச் சென்று இந்தக் கொடுமைகளுக்கு உரமும் வலுவும் கொடுப்பது எத்துணை அவலமானது.
யேர்மனியில் மட்டும் ஒரு நாளைக்கு பத்துஇலட்சம் ஆண்கள் விலைமாதர்களிடம் போய் வருகிறார்களாம்.
இதே நேரம் எல்லாப் பெண்களுமே கடத்தப் பட்டு பலாத்காரத்தின் பேரில்தான் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. போலந்து, செக்கொஸ்லொவோக்கியா போன்ற நாட்டுப் பெண்களில் பலருக்கு இங்கு யேர்மனியில் வேலை என்ற பெயரில் என்ன காத்திருக்கிறது என்பது தெரியும்.
ஆனாலும் வறுமை, எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் போன்ற காரணங்களால் யேர்மனிக்கு வந்து இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
சிலகாலங்களுக்கு உழைத்து விட்டு, அந்தப் பணத்துடன் தாய் நாடுகளுக்குத் திரும்பி நல்லதொரு வசதியான வாழ்வைத் தொடங்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை நிறைந்த ஆசை. அதற்காக ஏஜென்சிக்கு 750யூரோ கொடுத்து சட்டத்துக்கு முரணாக விசா பெற்று அவர் மூலமாகவே இங்கு யேர்மனிக்கு வந்து சேர்ந்து பால்வினைத் தொழிலை பணத்துக்கான ஒரு தொழிலாகச் செய்கிறார்கள்.
இப்படித் தாம் விரும்பி இத்தொழிலில் ஈடுபடும் கிழக்கு ஐரோப்பியப் பெண்கள் 30 வீதமானவர்கள் மட்டுமே! மிகுதி 70 வீதமான கிழக்கு ஐரோப்பியப் பெண்களும் ஏஜென்சிமார்களால் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டு விபச்சார விடுதி நடத்துனர்களாலும், இரண்டாவது தரகர்களாலும் கட்டாய பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது யேர்மனிய அரச நிறுவனங்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்த இரண்டாவது வகைப் பால்வினைத்தொழில் செய்யும் பெண்களில் தாய்லாந், பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாட்டுப் பெண்களும் அடங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஆண்களால் ஏமாற்றப் பட்டே இங்கு அழைத்து வரப் படுகிறார்கள். ஐரோப்பிய ஆண்கள் இந்தக் கொடுமையைச் செய்வதற்கென்றே உல்லாசப் பயணிகளாக தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளுக்குப் போகிறார்கள். அங்கு வறிய அழகிய பெண்கள் மேல் காதல் கொண்டது போல நடித்து, திருமணம் செய்வதாகப் பொய் சொல்லி இங்கு கூட்டி வந்து பால்வினைத் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்துகிறார்கள். இந்த ஆண்களில் பெண்களை இங்கு கொண்டு வந்து விற்பவர்களும் இருக்கிறார்கள். சொந்தமாகவே விபச்சாரவிடுதி வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அதை விட பெண்களை ஏமாற்ற முடியாத பட்சத்தில் கடத்தியும் கொண்டு வருகிறார்கள். கடத்தலுக்கு இடைத்தரகராக நின்று உதவி செய்பவர்கள் பெரும்பாலும் தாய்லாந்து பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்களாகவே இருக்கிறார்கள்.
சீனாவைச் சேர்ந்த ஒரு விலைமாது சொல்கிறார். "நான் எனக்குப் 17 வயதாக இருந்த போது எனது ஒன்று விட்ட சகோதரியுடன், வேலை எடுத்துத் தருவதாகச் சொன்ன ஒரு உறவு மாமாவுடன் பஸ் ஏறினேன். நான்கு மணித்தியாலப் பயணம் என்றார் மாமா. ஆனால் நான்கு நாட்கள் காடுகள் மேடுகள் கடந்த பயணம் அது. அது கடத்தல் என்று தெரிய முன்னமே பயத்தில் வீடு திரும்ப மன்றாடினேன். மாமா விடவில்லை. பர்மா எல்லையில் நாமிருவரும் விலைபேசப் பட்டோம். அவர்கள் எம்மை ஒரு சட்டைத்துணி போல, ஒரு ரவிக்கை போல ஆராய்ந்து பார்த்தார்கள். கன்னி கழியாமல் இருக்கிறோமா என்பதைக் கூட கவனமாக ஆராயந்தார்கள். இப்போ நான் இந்த வாழ்வில் இருந்து மீளமுடியாதவளாகி விட்டேன். " என்று.
2002 மாசி பிற்பகுதியில் பேர்லினில் அங்கீகாரம் பெற்ற ஒரு விபச்சாரவிடுதியில் ஏறக்குறைய 1000 வெளிநாட்டுப் பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதும், அவர்களால் அவர்களை வாடிக்கையாளர்களிடம் வாடகைக்கு விடும் தலைமைத் தரகர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்தப் பெண்கள் பாதிக்கப் பட்டவர்களாகவே கண்டு கொள்ளப்பட்டார்கள்.
சிலபெண்கள் - இவர்களைப் பெண்கள் என்று சொல்வதை விட சிறுமிகள் குழந்தைகள் என்று கூடச் சொல்லலாம். அவ்வளவு இளம் வாலிப வயதுப்பெண்கள் இவர்கள். தரகர்களிடம் முரண்படும் சமயங்களில் தரகர்களால் அடித்துத் துன்புறுத்தப் படுகிறார்கள்.
பேர்லினில் இந்த வருட பெப்பரவரி மாத இறுதியில் ஒரு ரஷ்ய இளநங்கை மிகவும் கொடுமைப் படுத்தப் பட்ட நிலையில் பொலீசாரால் விடுவிக்கப் பட்டிருக்கிறாள். இவளை 3 ரஷ்யர்கள் 8மணி நேரமாகத் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அந்த ரஷ்யர்களில் ஒருவருக்கு அன்று பிறந்தநாளாம். அதைக் கொண்டாடு முகமாகவே அந்த இளநங்கை சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறாள்.
எல்லோரும் நினைப்பது போல போலந்து நாட்டையோ ரஷ்ய நாட்டையோ சேர்ந்த தரகர்கள்தான் பெண்களை கட்டாய பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலான விபச்சார விடுதிகளின் சொந்தக் காரர்களும், தலைமைத் தரகர்களும் யேர்மனியர்களாகவே இருக்கிறார்கள். ரஷ்சியர்கள் அனேகமாக இடைத் தரகர்களாகத்தான் இருக்கிறார்கள்.
விபச்சார விடுதிகளிலும் தரகர்கள் மத்தியிலும் பெண்கள் கடைச்சரக்குகளாகத் தான் பாவிக்கப் படுகிறார்கள். இந்தப் பெண்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் குறைவானதே. சராசரியாக
அரைமணித்தியாலத்துக்கு ஒரு அறைக்கு 50யூரோ என்றே வசூலிக்கப் படுகிறது. இதில் அந்த அரைமணி நேரமும் யாரோ ஒரு காமுகனின் இச்சைக்கு எந்த உணர்வுகளுமின்றிய ஒரு ஜடம் போல தன் உடலை பலியாக்கிய பெண்ணுக்குக் கிடைப்பது வெறும் 15யூரோ மட்டுமே.
கூடுதலான பெண்கள் தமக்குக் கிடைக்கும் இப்பணத்தைச் சேமிக்கிறார்கள். சில பெண்கள் இதைத் தாய் நாட்டில் வறுமையில் வாழும் தமது தாய்தந்தையருக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்தப் பணத்தை பெற்றோருக்கு அனுப்புவதைத் தவிர்த்து சேமிக்க வேண்டுமென தலைமைத் தரகர்களால் வற்புறுத்தப் படுகிறார்கள். ஏனெனில் இவர்கள் ஒரு யேர்மனிய ஆணை மணமுடிக்கும் பட்சத்தில்தான் விசாப் பிரச்சனையின்றி தொடர்ந்தும் யேர்மனியில் வாழ்வதற்கான வாய்ப்பும், இவர்களின் உடல்கள் மூலம் தரகர்கள் பணம் சம்பாதிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கிறது.
ஒரு விலைமாதை திருமணம் செய்து கொள்ள ஒரு யேர்மன் ஆண்
7500யூரோவை எதிர்பார்க்கிறான். அப்பணத்தை இப்பெண்களே சேமித்து, ஒரு யேர்மனிய ஆணைத் திருமணம் செய்து, தமக்கு உழைத்துத் தர வேண்டுமென இவர்கள் தரகர்களால் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.
இது ஒரு அடிமைத் தனம் போன்றதுதான். முற்காலத்தில் மனிதர்கள் விற்கப் பட்டு அடிமைகளாக வாழ்ந்தது போன்றுதான் இன்றைய விலைமாதர்களும் வாழ்கிறார்கள். இவர்களின் உணர்வுகள் மதிக்கப் படுவதில்லை. பெரும்பாலான சமயங்களில் தரகர்களால் மிதிக்கப் படுகிறார்கள்.
தரகர்களால் மட்டுமல்ல. உடலுறவு பணத்துக்காக என்பதால் இவர்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் என்ன செய்தாலும் வாய் பேசாது வலிகளைத் தாங்க வேண்டிய அவலத்திலும் இருக்கிறார்கள்.
எந்த உண்மையையும் வெளியில் சொல்ல தைரியமில்லாத படி அச்சப் படுத்தியே வாழ வைக்கப் படுகிறார்கள்.
இந்த விலைமாதர்கள் மீது அங்கு வந்து போகும் வாடிக்கையாளர்களில் யாருக்காவது விருப்பமோ காதலோ வந்தால், விலைமாதின் வயதுக்கும், உடல்வாகுக்கும், அழகுக்கும் முக்கியமாக அவளால் விடுதிக்கும் தரகருக்கும் வரும் வருமானத்துக்கும் ஏற்ப பேரம் பேசப்பட்டு, அவள் வாடிக்கையாளருக்கு விற்கப் படுவாள். அவள் தன்னை ஒரு கடைச்சரக்காக, அழுக்குத் துணியாக உணர்ந்து கொண்ட போதும், அவளின் பெறுமதி பல்லாயிரக்கணக்காக இருக்கும். அவளின் இந்தப் பெறுமதி 25000யூரோ வைக் கூடத் தாண்டியிருப்பதாக பேர்லினைச் சேர்ந்த பெண்கள் சங்கத்துக்கான காரியதரிசி Helga Korthaase சொல்கிறார்.
இவர்களில் ஓரிருவர் வாடிக்கையாளர்களால் நியமாகவே காதலிக்கப் பட்டு விடுதலை பெற்று குடும்பம் குழந்தையென்று வாழும் நிகழ்வுகளும் அபூர்வமாக நடந்துள்ளன.
இந்த வருட ஆரம்பத்தில் விலைமாதர்கள் தமது பால்வினைத்தொழிலை பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றதொரு சட்டம் யேர்மனியில் அமுல் படுத்தப் பட்டது. பதிவு செய்வதால் அவர்களுக்கான எல்லா காப்புறுதிகளும் செய்யப் பட்டு, அவர்களது எதிர்காலம் செழுமைப் படுத்தப் படும் என்பதும், பதிந்து பால்வினைத் தொழிலைச் செய்யும் போது தரகர்களினதும் விபச்சாரவிடுதி நடத்துனர்களதும் அவர்கள் மீதான அராயஜகம் தவிர்க்கப்படும் என்பதும் யேர்மன் அரசின் நம்பிக்கையான நன்நோக்கம்.
இந்தக் காப்புறுதிகளில் சுகவீனக்காப்புறுதி, பென்சன்காப்புறுதி... போன்ற பல நல்ல விடயங்கள் அடங்குகின்றன. ஆனாலும் இதுவரையில் எந்தப் விலைமாதரும் வந்து இதற்கான அலுவலகத்தில் தம்மைப் பதிந்து கொள்ளவில்லையென இவர்களுக்கான சட்டங்களுக்கும், தேவைகளுக்கும் பொறுப்பான Juanita Henning கவலை தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒரு விலைமாது கொடுத்த பதில் பத்திரிகைச் செய்தியாக வந்துள்ளது. அவர் கூறுவதாவது "பால்வினைத்தொழிலில் நேரடியாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதால் அந்த வேலை செய்பவர்களை மற்றைய வேலைகள் செய்பவர்கள் போலக் கருதாமல் ஒரு வர்த்தக நிறுவனம் வைத்திருப்பவர் போலவே கருதுகிறார்கள். அதனால் அதற்காக வசூலிக்கப் படும் வரிகளும் வர்த்தகர்களுக்குப் போலவேதான் வசூலிக்கப் படும். அதாவது ஒரு விலைமாது ஒருநாளைக்கு 250யூரோ உழைப்பதாகக் கணக்குப் போட்டு அதன் படியே எல்லா வரிகளும் காப்புறுதிகளுக்கான பணங்களும் அறவிடப்படும். இது மிகவும் அதிகம். இதன் காரணமாகவே நானுறுஆயிரம் விலைமாதர்களில் ஒருவர் கூடப் பதிந்து கொள்ள முன்வரவில்லை."
இந்த விபச்சாரம் யேர்மனியில் மட்டுந்தான் என்று சொல்வதற்கில்லை. உலகளாவப் பரந்து கிடக்கிறது. மேற்கு ஆபிரிக்காவில் உள்நாட்டுச் சண்டை காரணமாக கென்யா, சீராலியோன்... போன்ற நாடுகளிலிருந்து தப்பியோடி வரும் பெண்குழந்தைகள் அவர்களுக்கான உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு பின்னர் விலைமாதர்கள் ஆக்கப் படுகிறார்கள்.
பெண்குழந்தைகள் பாலுறவுக்கு இணங்கும் பட்சத்திலேயே அவர்களுக்கு உண்ண உணவும், நோய்களுக்கான மருந்தும் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களால் வழங்கப் படுகிறது. கிட்டத்தட்ட 40 நிறுவனங்களில் வேலைசெய்யும் 70 பேர்கள், இந்தத் துர்வேலையைச் செய்து கொண்டிருந்ததை UNO உதவி நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.
இதற்கு ஃபறீ ரவுணைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறார். "இது ஒன்றும் புதிதல்ல. இங்கு உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுடன் பாலுறவு கொள்வதால்தான் அகதிகளாகத் தப்பியோடி வந்த சிறுமிகள் பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள். " என்று.
UNHCR சொல்கிறது. "ஆபிரிக்காவில் மிகவும் பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகளே. இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் முதலில் இராணுவத்தாலும் பின்னர் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலும் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கோ அல்லது பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னர் உணவு உடை மருந்து பாடசாலை போன்றவற்றுக்காக பாலுறவுக்கு வற்புறுத்தப் படுகிறார்கள். அதன் பின் விலைமாதர்களாக்கப் படுகிறார்கள்." என்று
பால்வினை என்னும்
பாழ் கிணற்றுக்குள்
வாழ்விழந்த பெண்கள்
மீள வழி உண்டா.........!
ஏழ்மையினாலும்
சில மனிதர்களின் இச்சையினாலும்
சூழ உள்ளவர்களின் சூழ்ச்சியினாலும்
ஊனமானது உடல்கள் மட்டுமல்ல!
இவர்கள் உள்ளங்களும்தான்!
சந்திரவதனா
யேர்மனி
May - 2002
பிரசுரம் - பெண்கள் சந்திப்பு மலர் - 2002
Thursday, March 31, 2005
தகைமை
ஏதாவது அதிசயம் நிகழ்ந்து, தபாற்பெட்டியினுள் பணத்தோடு கடிதமோ அல்லது பணம் வென்றிருப்பதாய் கடிதமோ வந்திருக்காதோ என மைதிலியின் மனம் அவாப்பட்டது. அவ்வளவு பணமுடை மைதிலிக்கு.
சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். "யேர்மனிக்கு வந்து எவ்வளவு காலம். புருசனும், பெண்சாதியுமாக ஓடி ஓடி உழைக்கினம். எங்கை போகுது காசெல்லாம்..?" என்று ஒரு சாராரும், "அவையிட்டை நல்ல காசிருக்கும்...!" என்று இன்னொரு சாராரும் பேசிக் கொள்வார்கள்.
மைதிலிக்குத்தான் தெரியும் அவள் படும்பாடு. முகுந்தன் வேலை செய்வதோடு சரி. அவனது சம்பளம் வங்கிக்கு வரும். அதனுடன் தனது கடமை முடிந்து விட்டதாக அவன் நினைப்பு. கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுப்புகளெல்லாம் மைதிலியின் தலையில் பெரும் சுமைகளாகி விட்டன. பணமுடை வரும் போதெல்லாம் "என்னப்பா செய்யிறீர்..? நானும் மாடு மாதிரி உழைச்சுக் கொண்டு வந்து போடுறன். நீர் சும்மா செலவழிச்சுப் போட்டு இருக்கிறீர். என்னை அழிக்கிறதுக்கெண்டே வந்திருக்கிறீர்." முகுந்தன் கத்துவான்.
மைதிலி என்ன செய்வாள். எப்படித்தான் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் முகுந்தனின் உழைப்பு, வீட்டு வாடகை, மின்சாரம், காப்புறுதிகள்..., முகுந்தன் வாங்கிய புதுக்காருக்கான கட்டுக்காசு... போன்றவைகளுக்கே காணாது. மைதிலியின் சம்பளத்திலும் மாதாமாதம் கொஞ்சம் போட்டால்தான் வங்கி நிலை ஓரளவுக்காவது சரிவரும்.
ஆரம்பத்தில் திட்டமிட்டதென்னவோ மைதிலியின் சம்பளம் சாப்பாட்டுச் செலவுகளுக்கும், பிள்ளைகளின் பாடசாலை, உடுப்புச் செலவுகளுக்குமென்றுதான். ஆனால் முகுந்தனிடம் மெது மெதுவாகத் தலை காட்டத் தொடங்கிய டாம்பீகம், புதுக்கார்.. புதிய தளபாடங்கள்... என்றானதில் செலவுகள் கட்டுக்கடங்க மறுத்தன. இருந்தாலும் மைதிலி இரண்டு வேலைகள் செய்து, வரும் தனது இரு சம்பளத்தையும் சேர்த்து ஒருமாதிரி இதுவரை சமாளித்து வந்தாள்.
ஆனால் இந்த யூரோவும் வந்த பின், மார்க்கில் இருந்த சம்பளம் யூரோவாகிய போது சம்பளம் எண்ணிக்கையில் அரைவாசியானது. பொருட்களின் விலைகள் மட்டும் அப்படியே மார்க் என்பது யூரோ என்று மட்டும் மாற்றப் பட்டன. சம்பளத்தோடு பார்க்கும் போது பொருட்களின் விலைகளெல்லாம் உச்சமாக இருந்ததால், மைதிலியால் செலவுகளை ஒரு வழிக்கும் சமாளிக்க முடியாமல் போகத் தொடங்கியது. இந்த நிலை மைதிலிக்கு மட்டுமல்ல. அனேகமான நடுத்தர வர்க்கக் குடும்பத்தவர் எல்லோருக்கும்தான்.
ஆனாலும் யாரும் மைதிலியிடம் பணமில்லை என்பதை நம்பத் தயாராக இல்லை. ஊரவர்தான் புரிந்து கொள்ளவில்லையென்றால் உற்றவனும் கூடப் புரிந்து கொள்வதில்லை. புரிந்துணர்வில்லாது அவனுள்ளிருந்து எழும் சினங்களும், கோபங்களும் மைதிலியை பணமுடைக்கு மேலால் மனமுடைய வைத்தன.
அதிகமான பெரிய செலவுகள் முகுந்தனாலும், பிள்ளைகளாலும்தான் என்றாலும் பணப்பற்றாக்குறைக்கான காரணி மைதிலி என்பது போலத்தான் வீட்டுக்குள் எப்போதும் குத்தல் கதைகளும், எரிச்சல்களும்.. அதனோடு கூடிய சண்டைகளும் எழுந்தன.
வங்கியில் பணமில்லாத காரணத்தால் திருப்பப்படும் கணக்குகளை, தண்டனைப் பணத்துடன் கட்ட மைதிலி மெதுமெதுவாகக் கடன் படத் தொடங்கினாள். இப்போ கடனும் முட்டி விட்டது. வங்கியும் நெருக்குகிறது. முகுந்தன் கத்துகிறான்.
அதுதான் மைதிலி வேலை தேடுகிறாள். என்ன... வேலை..? பெரிதாய் ஒன்றும் இல்லை. அவள் திறமைக்கோ, தகைமைக்கோ ஏற்றதாய் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே இரண்டு வேலைகள் செய்வதால் மூன்றாவது வேலையையும் பதிந்து செய்வதில் அர்த்தமும் இல்லை. அறாவரி கட்டுவதிலேயே ஒரு சம்பளம் போய்விடும். பதியாமல் கள்ளமாக வேலை செய்யவதென்றால், ஆண்களுக்குக் கைகொடுப்பது உணவுவிடுதிகளும், பிற்சேரியாக்களும் என்றால், பெண்களுக்கோ வீடுகள் மட்டுந்தான். வீடுகளைத் துப்பரவாக்கிக் கொடுக்கும் Putzen (புட்ற்சன்) வேலையை விட்டால் வேறு எதுவும் பெரிதாக யேர்மனியில் இல்லை.
ஊரில் வேலைக்காரர்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டு வாழ்ந்து பழகிய தமிழ்ப் பெண்களில் பலர் இங்கு யேர்மனியில் யேர்மனியரின் வீடுகளில் அவர்களது மலசலகூடங்களைக் கழுவி, படுக்கையை விரித்து, குளியலறைகளைக் கழுவி, சட்டி பானைகளை மினுக்கி... வேறு வழிகள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஆரம்பத்தில் இதை யாரும் செய்வினையோ..! என்று முகம் சுளித்த மைதிலியும் இப்போ அதையே தேடத் தொடங்கி விட்டாள். இதற்குக் கூட நேர்முகப் பரீட்சை நடப்பதுதான் தவிர்க்க முடியாதது.
மைதிலி செய்தித்தாள்களில் வேலை தேடி, அவர்களுடன் தொலைபேசி.. நேரம் குறித்து இப்போ நூற்றுக்கு மேற்பட்ட நேர்முகப் பரீட்சைகளில் தோற்றி விட்டாள். நடந்து நடந்து கால்கள்தான் ஓய்ந்தனவே தவிர வேலை இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் எதிர் பார்த்த தகைமைகளில் அவளுக்கு பாடசாலைக்குச் செல்லும் வயதில் பிள்ளைகள் இருப்பதுவும், ஏற்கெனவே இரண்டு வேலைகள் செய்வதுவும் பெரும் குறையாக இருந்தன.
பல தடவைகள் அலைந்து உலைந்து பின் ஏமாறுவதில் இனி வேலை தேடுவதில்லை என்று சபதம் எடுப்பாள். அவள் என்ன கதைகளில் வரும் திரெளபதியா..? கூந்தலை அள்ளி முடித்துச் சபதம் எடுக்க..! வங்கியிலிருந்து திரும்பும் காசோலையும், முகுந்தனின் சினப்பும் போதும் அவள் சபதம் தவிடு பொடியாக.
நேற்றும் காலையே தினசரிப்பத்திரிகையைப் பார்த்து அதிகாலையே தொலைபேசி, நேரங் குறித்து அந்த வீட்டுக்கு நடந்தே போயிருந்தாள். பேரூந்தில் போயிருப்பாள். அந்தப் பக்கத்துக்கான பேரூந்து ஓட்டம் சற்று நீண்ட நேர இடைவெளிகளோடு என்பதால் நடந்தாள்.
குறித்த நேரத்துக்கு டாண்.. என்று அவள் அழைப்பு மணியை அழுத்திய போது அந்த வீட்டு யேர்மனியப் பெண் கதவைத் திறந்து விட்டு வியந்து நின்றாள். "நீ ஒரு வெளிநாட்டுக்காரி. இத்தனை கச்சிதமாக குறித்த நேரத்துக்கு வந்து நிற்கிறாய்" என்று பாராட்டினாள். தன்னை "ரெகினா" என்று அறிமுகப் படுத்தினாள்.
வீடு நான்கு மாடிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மாடியும் விஸ்தாரமானதாய் இருந்தன. ரெகினா ஒவ்வொரு அறையாகக் காட்டிய போது ஒவ்வொரு மாடியிலுமிருந்த மலசலகூடங்களும், குளியலறைகளும், படுக்கையறைகளினுள்ளான படுக்கைகளும் மைதிலியின் மனதை மலைக்க வைத்தன. எப்படி மூன்று மணித்தியாலங்களுக்குள் நான்கு மாடிகளையும் துப்பரவாக்கி முடிப்பது என்று பயமாகக் கூட இருந்தது. ஆனாலும் அவள் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. கொஞ்சக்காலத்துக்காவது செய்து பணப்பிரச்சனையைத் தீர்த்தால் போதும் என்று மனசு கணக்குப் போட்டது. ஒவ்வொரு நாளும் மூன்று மணித்தியாலங்கள் என்னும் போது ஒருவாறு செய்து முடித்து விடலாம் என்ற நம்பிக்கையும் ஒரு புறமிருந்தது.
ஆனாலும் ஏற்கெனவே இரண்டு வேலைகளுடன், வீட்டு வேலைகளையும் செய்து முடிக்கவே அவளுக்கு போதும் போதுமென்றிருக்கும். இப்போ இந்த வேலையுமென்றால் பிள்ளைகளைக் கூடச் சரியாகக் கவனிக்க முடியாது போகலாம். மனதுக்குள் சங்கடமாகத்தான் இருந்தது. சில காலத்துககுச் செய்து விட்டு, பிறகு இந்த வேலையை விட்டு விடலாம். எண்ணிக் கொண்டாள்.
"நான் ஒண்டுமே சொல்ல மாட்டன். என்ன செய்யோணுமெண்டு நீயே பார்த்து அதுகளைச் செய்யோணும். ஒரு மாதத்துக்கு ஒருக்கால் எல்லா யன்னல் கண்ணாடியளையும் கழுவிப் போடோணும். 3 மாதத்துக்கு ஒருக்கால் யன்னல் சீலைகளையெல்லாம் நீயே கழற்றி வோசிங்மெசினில் போட்டு எடுத்து திரும்பவும் கொழுவீடோணும். குசினி அலுமாரியள் எல்லாத்தையும் கிழமைக்கொருக்கால் பழிச்செண்டு துடைச்சு விடோணும். புத்தகங்களை நான் எடுத்து வாசிச்சுப் போட்டு அப்பிடி இப்பிடி எங்கையாவது வைப்பன். நீ அதுகளைப் பார்த்து எடுத்து, சரியான இடங்களிலை அடுக்கி வைக்கோணும். புத்தகங்களிலையோ, புத்தக அலுமாரிகளிலையோ தூசி கொஞ்சமும் இருக்கக் கூடாது. அதிலை நீ கவனமாக இருக்கோணும். அடிக்கடி பார்த்துத் துடைச்சுப் போடோணும்." ரெகினா சொல்லிக் கொண்டே நடந்தாள்.
அங்கிருந்த புத்தக இறாக்கைகளும் அலுமாரிகளும், மட்டும் மைதிலியை வெகுவாகக் கவர்ந்தன. புத்தகங்களைக் பார்க்கும் போது மைதிலியின் கண்களில் தெறித்த ஆர்வத்தை ரெகினாவும் கண்டிருக்க வேண்டும்.
"உனக்கு புத்தகங்கள் என்றால் பிடிக்குமோ..? வாசிப்பியோ..? " உடனேயே கேட்டும் விட்டாள்.
"ஓம் ஓம் எனக்கு நல்லாப் பிடிக்கும்."
ரெகினா சில புத்தகங்களை இறாக்கையில் இருந்து இழுத்து மேசையில் போட்டாள். ஒரு புத்தக அட்டை அழகும் அமைதியும் குடிகொண்ட இந்திரா காந்தியின் முகத்துடன். மற்றது வாலில் நெருப்பு எரிய அனுமாருடன்...
"இதெல்லாம் வாசிப்பியோ..?" வியப்புடன் மைதிலி வினாவினாள்.
"ம்.. ம். நான் பல தடவைகள் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் போயிருக்கிறன்."
ரெகினா வீட்டின் ஒவ்வொரு பகுதியாகக் காட்டிக் கொண்டு போகும் போது தனது வாழ்க்கையின் சில பகுதிகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது கணவன் கடந்த வருடம் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டாராம். அவளுக்கு வயது ஐம்பதாம். பார்த்தால் நாற்பது, நாற்பத்தைந்துதான் மதிக்கலாம். தற்போது தன்னை விட ஐந்து வருடங்கள் இளைய ஒரு நண்பனுடன் வாழ்கிறாளாம். பிள்ளைகள் எல்லாம் தனித்தனியே வெவ்வேறு நகரங்களில் குடியேறி குடும்பம் குழந்தை என்று வாழ்கிறார்களாம். அவர்கள் இங்கு இவளைப் பார்க்க என்று வரும் போது தங்க இடம் வேணுமென்றுதான் இத்தனை பெரிய வீட்டை வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறாளாம்.
அறிமுகம் எல்லாம் முடிய "சரி.. இன்னும் 29 பெண்கள் நேர்முகப் பரீட்சைக்கு வருவார்கள். எழுபது பேர் மட்டிலை தொலைபேசியிலை அழைத்தார்கள். அவர்களிலை 30 பேரைத்தான் அழைச்சனான். நீதான் முதல் ஆள். நாளைக்குக் காலைமை எட்டு மணிக்கு முடிவு சொல்லுறன்" என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள்.
மைதிலிக்கு அந்த வீட்டுக்குள் குவிந்திருக்கும் வேலையை நினைத்து மலைப்பாக இருந்தாலும் மாதம் மாதம் கிடைக்கப் போகும் 400யூரோவின் அவசியம் அதிகமாக இருந்தது. வீட்டுக்குள் இருந்த ஏதோ ஒன்று அந்த வேலை கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியது.
அந்த நம்பிக்கையோடுதான் அன்றைய தூக்கம். தூக்கத்தில், சின்னவன் சயந்தன் கேட்ட அடிடாஸ் சப்பாத்தை வாங்கிக் கொடுப்பது போலவும், பெரியவனின் பள்ளிக்கூட ரூறுக்கு அனுமதி வழங்குவது போலவும், அரவிந்தன் சினப்பை மறந்து சிரித்துச் சந்தோசமாகக் கதைப்பது போலவும் ஏதேதோ இனிய கனவுகள். ஒருவித சந்தோசமான எதிர்பார்ப்புடன்தான் அவளது இன்றைய பொழுது விடிந்தது. ரெகினா கதைத்ததை நினைத்துப் பார்க்கையில் கண்டிப்பாக வேலை கிடைக்கும் போலவே இருந்தது.
எட்டுமணிக்கு எதிர்பார்த்தபடி தொலைபேசி அழைத்தது. "மைதிலி உன்னை எனக்கு நல்லாப் பிடிச்சுது. ஆனாலும் நான் வேறையொரு பெண்ணை வேலைக்கு எடுத்திட்டன். புத்தகங்களைப் பார்க்கிற பொழுது உன்ரை கண்களிலை தெரியிற ஒளியும், காணுற புத்தகத்தையெல்லாம் சடாரென்று வாசிக்கத் தொடங்கிற உன்ரை ஆர்வமும்.... நீ புட்ற்சனுக்கு ஏற்ற பெண்ணில்லையென்று எனக்கு உடனையே தெரிய வைச்சிட்டுது. உனக்கு வேறையேதும் நல்ல வேலைதான் சரி. வேணுமெண்டால் நீ அடிக்கடி என்ரை வீட்டுக்கு வா. இந்தப் புத்தகங்களிலை விருப்பமானதை எடுத்துக் கொண்டு போய் வாசி...." அதற்கு மேல் மைதிலிக்கு அவள் சொன்னவை எதுவும் காதில் விழவில்லை.
நம்பிக்கைகள் மீண்டும் தவிடு பொடியாகின. வாசிப்பின் மீதான ஆர்வம் கூட இப்போது புட்ற்சன் செய்வதற்கு இருக்க வேண்டிய தகைமைகளில் மூன்றாவது குறையாக.. அவளைக் கலங்க வைக்க, ஏதாவது அதிசயம் நிகழ்ந்து, தபாற்பெட்டியினுள் பணத்தோடு கடிதமோ அல்லது பணம் வென்றிருப்பதாய் கடிதமோ வந்திருக்காதா என்ற அங்கலாய்ப்போடு தபாற்பெட்டியைத் திறந்தாள்.
வீட்டுவாடகை கட்டுப்படாததற்கான கண்டனக் கடிதம் எச்சரிக்கைப் பணத்தோடு சேர்த்துக் கணக்குப் போட்டு வந்திருந்தது.
சந்திரவதனா
யேர்மனி
19.8.2004
சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். "யேர்மனிக்கு வந்து எவ்வளவு காலம். புருசனும், பெண்சாதியுமாக ஓடி ஓடி உழைக்கினம். எங்கை போகுது காசெல்லாம்..?" என்று ஒரு சாராரும், "அவையிட்டை நல்ல காசிருக்கும்...!" என்று இன்னொரு சாராரும் பேசிக் கொள்வார்கள்.
மைதிலிக்குத்தான் தெரியும் அவள் படும்பாடு. முகுந்தன் வேலை செய்வதோடு சரி. அவனது சம்பளம் வங்கிக்கு வரும். அதனுடன் தனது கடமை முடிந்து விட்டதாக அவன் நினைப்பு. கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுப்புகளெல்லாம் மைதிலியின் தலையில் பெரும் சுமைகளாகி விட்டன. பணமுடை வரும் போதெல்லாம் "என்னப்பா செய்யிறீர்..? நானும் மாடு மாதிரி உழைச்சுக் கொண்டு வந்து போடுறன். நீர் சும்மா செலவழிச்சுப் போட்டு இருக்கிறீர். என்னை அழிக்கிறதுக்கெண்டே வந்திருக்கிறீர்." முகுந்தன் கத்துவான்.
மைதிலி என்ன செய்வாள். எப்படித்தான் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் முகுந்தனின் உழைப்பு, வீட்டு வாடகை, மின்சாரம், காப்புறுதிகள்..., முகுந்தன் வாங்கிய புதுக்காருக்கான கட்டுக்காசு... போன்றவைகளுக்கே காணாது. மைதிலியின் சம்பளத்திலும் மாதாமாதம் கொஞ்சம் போட்டால்தான் வங்கி நிலை ஓரளவுக்காவது சரிவரும்.
ஆரம்பத்தில் திட்டமிட்டதென்னவோ மைதிலியின் சம்பளம் சாப்பாட்டுச் செலவுகளுக்கும், பிள்ளைகளின் பாடசாலை, உடுப்புச் செலவுகளுக்குமென்றுதான். ஆனால் முகுந்தனிடம் மெது மெதுவாகத் தலை காட்டத் தொடங்கிய டாம்பீகம், புதுக்கார்.. புதிய தளபாடங்கள்... என்றானதில் செலவுகள் கட்டுக்கடங்க மறுத்தன. இருந்தாலும் மைதிலி இரண்டு வேலைகள் செய்து, வரும் தனது இரு சம்பளத்தையும் சேர்த்து ஒருமாதிரி இதுவரை சமாளித்து வந்தாள்.
ஆனால் இந்த யூரோவும் வந்த பின், மார்க்கில் இருந்த சம்பளம் யூரோவாகிய போது சம்பளம் எண்ணிக்கையில் அரைவாசியானது. பொருட்களின் விலைகள் மட்டும் அப்படியே மார்க் என்பது யூரோ என்று மட்டும் மாற்றப் பட்டன. சம்பளத்தோடு பார்க்கும் போது பொருட்களின் விலைகளெல்லாம் உச்சமாக இருந்ததால், மைதிலியால் செலவுகளை ஒரு வழிக்கும் சமாளிக்க முடியாமல் போகத் தொடங்கியது. இந்த நிலை மைதிலிக்கு மட்டுமல்ல. அனேகமான நடுத்தர வர்க்கக் குடும்பத்தவர் எல்லோருக்கும்தான்.
ஆனாலும் யாரும் மைதிலியிடம் பணமில்லை என்பதை நம்பத் தயாராக இல்லை. ஊரவர்தான் புரிந்து கொள்ளவில்லையென்றால் உற்றவனும் கூடப் புரிந்து கொள்வதில்லை. புரிந்துணர்வில்லாது அவனுள்ளிருந்து எழும் சினங்களும், கோபங்களும் மைதிலியை பணமுடைக்கு மேலால் மனமுடைய வைத்தன.
அதிகமான பெரிய செலவுகள் முகுந்தனாலும், பிள்ளைகளாலும்தான் என்றாலும் பணப்பற்றாக்குறைக்கான காரணி மைதிலி என்பது போலத்தான் வீட்டுக்குள் எப்போதும் குத்தல் கதைகளும், எரிச்சல்களும்.. அதனோடு கூடிய சண்டைகளும் எழுந்தன.
வங்கியில் பணமில்லாத காரணத்தால் திருப்பப்படும் கணக்குகளை, தண்டனைப் பணத்துடன் கட்ட மைதிலி மெதுமெதுவாகக் கடன் படத் தொடங்கினாள். இப்போ கடனும் முட்டி விட்டது. வங்கியும் நெருக்குகிறது. முகுந்தன் கத்துகிறான்.
அதுதான் மைதிலி வேலை தேடுகிறாள். என்ன... வேலை..? பெரிதாய் ஒன்றும் இல்லை. அவள் திறமைக்கோ, தகைமைக்கோ ஏற்றதாய் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே இரண்டு வேலைகள் செய்வதால் மூன்றாவது வேலையையும் பதிந்து செய்வதில் அர்த்தமும் இல்லை. அறாவரி கட்டுவதிலேயே ஒரு சம்பளம் போய்விடும். பதியாமல் கள்ளமாக வேலை செய்யவதென்றால், ஆண்களுக்குக் கைகொடுப்பது உணவுவிடுதிகளும், பிற்சேரியாக்களும் என்றால், பெண்களுக்கோ வீடுகள் மட்டுந்தான். வீடுகளைத் துப்பரவாக்கிக் கொடுக்கும் Putzen (புட்ற்சன்) வேலையை விட்டால் வேறு எதுவும் பெரிதாக யேர்மனியில் இல்லை.
ஊரில் வேலைக்காரர்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டு வாழ்ந்து பழகிய தமிழ்ப் பெண்களில் பலர் இங்கு யேர்மனியில் யேர்மனியரின் வீடுகளில் அவர்களது மலசலகூடங்களைக் கழுவி, படுக்கையை விரித்து, குளியலறைகளைக் கழுவி, சட்டி பானைகளை மினுக்கி... வேறு வழிகள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஆரம்பத்தில் இதை யாரும் செய்வினையோ..! என்று முகம் சுளித்த மைதிலியும் இப்போ அதையே தேடத் தொடங்கி விட்டாள். இதற்குக் கூட நேர்முகப் பரீட்சை நடப்பதுதான் தவிர்க்க முடியாதது.
மைதிலி செய்தித்தாள்களில் வேலை தேடி, அவர்களுடன் தொலைபேசி.. நேரம் குறித்து இப்போ நூற்றுக்கு மேற்பட்ட நேர்முகப் பரீட்சைகளில் தோற்றி விட்டாள். நடந்து நடந்து கால்கள்தான் ஓய்ந்தனவே தவிர வேலை இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் எதிர் பார்த்த தகைமைகளில் அவளுக்கு பாடசாலைக்குச் செல்லும் வயதில் பிள்ளைகள் இருப்பதுவும், ஏற்கெனவே இரண்டு வேலைகள் செய்வதுவும் பெரும் குறையாக இருந்தன.
பல தடவைகள் அலைந்து உலைந்து பின் ஏமாறுவதில் இனி வேலை தேடுவதில்லை என்று சபதம் எடுப்பாள். அவள் என்ன கதைகளில் வரும் திரெளபதியா..? கூந்தலை அள்ளி முடித்துச் சபதம் எடுக்க..! வங்கியிலிருந்து திரும்பும் காசோலையும், முகுந்தனின் சினப்பும் போதும் அவள் சபதம் தவிடு பொடியாக.
நேற்றும் காலையே தினசரிப்பத்திரிகையைப் பார்த்து அதிகாலையே தொலைபேசி, நேரங் குறித்து அந்த வீட்டுக்கு நடந்தே போயிருந்தாள். பேரூந்தில் போயிருப்பாள். அந்தப் பக்கத்துக்கான பேரூந்து ஓட்டம் சற்று நீண்ட நேர இடைவெளிகளோடு என்பதால் நடந்தாள்.
குறித்த நேரத்துக்கு டாண்.. என்று அவள் அழைப்பு மணியை அழுத்திய போது அந்த வீட்டு யேர்மனியப் பெண் கதவைத் திறந்து விட்டு வியந்து நின்றாள். "நீ ஒரு வெளிநாட்டுக்காரி. இத்தனை கச்சிதமாக குறித்த நேரத்துக்கு வந்து நிற்கிறாய்" என்று பாராட்டினாள். தன்னை "ரெகினா" என்று அறிமுகப் படுத்தினாள்.
வீடு நான்கு மாடிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மாடியும் விஸ்தாரமானதாய் இருந்தன. ரெகினா ஒவ்வொரு அறையாகக் காட்டிய போது ஒவ்வொரு மாடியிலுமிருந்த மலசலகூடங்களும், குளியலறைகளும், படுக்கையறைகளினுள்ளான படுக்கைகளும் மைதிலியின் மனதை மலைக்க வைத்தன. எப்படி மூன்று மணித்தியாலங்களுக்குள் நான்கு மாடிகளையும் துப்பரவாக்கி முடிப்பது என்று பயமாகக் கூட இருந்தது. ஆனாலும் அவள் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. கொஞ்சக்காலத்துக்காவது செய்து பணப்பிரச்சனையைத் தீர்த்தால் போதும் என்று மனசு கணக்குப் போட்டது. ஒவ்வொரு நாளும் மூன்று மணித்தியாலங்கள் என்னும் போது ஒருவாறு செய்து முடித்து விடலாம் என்ற நம்பிக்கையும் ஒரு புறமிருந்தது.
ஆனாலும் ஏற்கெனவே இரண்டு வேலைகளுடன், வீட்டு வேலைகளையும் செய்து முடிக்கவே அவளுக்கு போதும் போதுமென்றிருக்கும். இப்போ இந்த வேலையுமென்றால் பிள்ளைகளைக் கூடச் சரியாகக் கவனிக்க முடியாது போகலாம். மனதுக்குள் சங்கடமாகத்தான் இருந்தது. சில காலத்துககுச் செய்து விட்டு, பிறகு இந்த வேலையை விட்டு விடலாம். எண்ணிக் கொண்டாள்.
"நான் ஒண்டுமே சொல்ல மாட்டன். என்ன செய்யோணுமெண்டு நீயே பார்த்து அதுகளைச் செய்யோணும். ஒரு மாதத்துக்கு ஒருக்கால் எல்லா யன்னல் கண்ணாடியளையும் கழுவிப் போடோணும். 3 மாதத்துக்கு ஒருக்கால் யன்னல் சீலைகளையெல்லாம் நீயே கழற்றி வோசிங்மெசினில் போட்டு எடுத்து திரும்பவும் கொழுவீடோணும். குசினி அலுமாரியள் எல்லாத்தையும் கிழமைக்கொருக்கால் பழிச்செண்டு துடைச்சு விடோணும். புத்தகங்களை நான் எடுத்து வாசிச்சுப் போட்டு அப்பிடி இப்பிடி எங்கையாவது வைப்பன். நீ அதுகளைப் பார்த்து எடுத்து, சரியான இடங்களிலை அடுக்கி வைக்கோணும். புத்தகங்களிலையோ, புத்தக அலுமாரிகளிலையோ தூசி கொஞ்சமும் இருக்கக் கூடாது. அதிலை நீ கவனமாக இருக்கோணும். அடிக்கடி பார்த்துத் துடைச்சுப் போடோணும்." ரெகினா சொல்லிக் கொண்டே நடந்தாள்.
அங்கிருந்த புத்தக இறாக்கைகளும் அலுமாரிகளும், மட்டும் மைதிலியை வெகுவாகக் கவர்ந்தன. புத்தகங்களைக் பார்க்கும் போது மைதிலியின் கண்களில் தெறித்த ஆர்வத்தை ரெகினாவும் கண்டிருக்க வேண்டும்.
"உனக்கு புத்தகங்கள் என்றால் பிடிக்குமோ..? வாசிப்பியோ..? " உடனேயே கேட்டும் விட்டாள்.
"ஓம் ஓம் எனக்கு நல்லாப் பிடிக்கும்."
ரெகினா சில புத்தகங்களை இறாக்கையில் இருந்து இழுத்து மேசையில் போட்டாள். ஒரு புத்தக அட்டை அழகும் அமைதியும் குடிகொண்ட இந்திரா காந்தியின் முகத்துடன். மற்றது வாலில் நெருப்பு எரிய அனுமாருடன்...
"இதெல்லாம் வாசிப்பியோ..?" வியப்புடன் மைதிலி வினாவினாள்.
"ம்.. ம். நான் பல தடவைகள் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் போயிருக்கிறன்."
ரெகினா வீட்டின் ஒவ்வொரு பகுதியாகக் காட்டிக் கொண்டு போகும் போது தனது வாழ்க்கையின் சில பகுதிகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது கணவன் கடந்த வருடம் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டாராம். அவளுக்கு வயது ஐம்பதாம். பார்த்தால் நாற்பது, நாற்பத்தைந்துதான் மதிக்கலாம். தற்போது தன்னை விட ஐந்து வருடங்கள் இளைய ஒரு நண்பனுடன் வாழ்கிறாளாம். பிள்ளைகள் எல்லாம் தனித்தனியே வெவ்வேறு நகரங்களில் குடியேறி குடும்பம் குழந்தை என்று வாழ்கிறார்களாம். அவர்கள் இங்கு இவளைப் பார்க்க என்று வரும் போது தங்க இடம் வேணுமென்றுதான் இத்தனை பெரிய வீட்டை வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறாளாம்.
அறிமுகம் எல்லாம் முடிய "சரி.. இன்னும் 29 பெண்கள் நேர்முகப் பரீட்சைக்கு வருவார்கள். எழுபது பேர் மட்டிலை தொலைபேசியிலை அழைத்தார்கள். அவர்களிலை 30 பேரைத்தான் அழைச்சனான். நீதான் முதல் ஆள். நாளைக்குக் காலைமை எட்டு மணிக்கு முடிவு சொல்லுறன்" என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள்.
மைதிலிக்கு அந்த வீட்டுக்குள் குவிந்திருக்கும் வேலையை நினைத்து மலைப்பாக இருந்தாலும் மாதம் மாதம் கிடைக்கப் போகும் 400யூரோவின் அவசியம் அதிகமாக இருந்தது. வீட்டுக்குள் இருந்த ஏதோ ஒன்று அந்த வேலை கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியது.
அந்த நம்பிக்கையோடுதான் அன்றைய தூக்கம். தூக்கத்தில், சின்னவன் சயந்தன் கேட்ட அடிடாஸ் சப்பாத்தை வாங்கிக் கொடுப்பது போலவும், பெரியவனின் பள்ளிக்கூட ரூறுக்கு அனுமதி வழங்குவது போலவும், அரவிந்தன் சினப்பை மறந்து சிரித்துச் சந்தோசமாகக் கதைப்பது போலவும் ஏதேதோ இனிய கனவுகள். ஒருவித சந்தோசமான எதிர்பார்ப்புடன்தான் அவளது இன்றைய பொழுது விடிந்தது. ரெகினா கதைத்ததை நினைத்துப் பார்க்கையில் கண்டிப்பாக வேலை கிடைக்கும் போலவே இருந்தது.
எட்டுமணிக்கு எதிர்பார்த்தபடி தொலைபேசி அழைத்தது. "மைதிலி உன்னை எனக்கு நல்லாப் பிடிச்சுது. ஆனாலும் நான் வேறையொரு பெண்ணை வேலைக்கு எடுத்திட்டன். புத்தகங்களைப் பார்க்கிற பொழுது உன்ரை கண்களிலை தெரியிற ஒளியும், காணுற புத்தகத்தையெல்லாம் சடாரென்று வாசிக்கத் தொடங்கிற உன்ரை ஆர்வமும்.... நீ புட்ற்சனுக்கு ஏற்ற பெண்ணில்லையென்று எனக்கு உடனையே தெரிய வைச்சிட்டுது. உனக்கு வேறையேதும் நல்ல வேலைதான் சரி. வேணுமெண்டால் நீ அடிக்கடி என்ரை வீட்டுக்கு வா. இந்தப் புத்தகங்களிலை விருப்பமானதை எடுத்துக் கொண்டு போய் வாசி...." அதற்கு மேல் மைதிலிக்கு அவள் சொன்னவை எதுவும் காதில் விழவில்லை.
நம்பிக்கைகள் மீண்டும் தவிடு பொடியாகின. வாசிப்பின் மீதான ஆர்வம் கூட இப்போது புட்ற்சன் செய்வதற்கு இருக்க வேண்டிய தகைமைகளில் மூன்றாவது குறையாக.. அவளைக் கலங்க வைக்க, ஏதாவது அதிசயம் நிகழ்ந்து, தபாற்பெட்டியினுள் பணத்தோடு கடிதமோ அல்லது பணம் வென்றிருப்பதாய் கடிதமோ வந்திருக்காதா என்ற அங்கலாய்ப்போடு தபாற்பெட்டியைத் திறந்தாள்.
வீட்டுவாடகை கட்டுப்படாததற்கான கண்டனக் கடிதம் எச்சரிக்கைப் பணத்தோடு சேர்த்துக் கணக்குப் போட்டு வந்திருந்தது.
சந்திரவதனா
யேர்மனி
19.8.2004
Subscribe to:
Posts (Atom)