பெண்ணொன்று பிறந்து விட்டால்
பொன் பொருள் சேர்க்க வேண்டும்
என்றெண்ணும் நிலை மாற்றி
தாய் மண் காக்கத் துணிந்திட்ட
மறத் தமிழ்மகளே!
கரங்களில் துப்பாக்கி
கழுத்தினில் சயனைட் குப்பியுடன்
சினங்கொண்டு நீ சீறுகையில்
சிந்தை கலங்கி
பின் களிக்குதடி!
சந்திரவதனா- யேர்மனி - 3.2.1998
பிரசுரம் - களத்தில் - 28.2.1998
No comments:
Post a Comment