Friday, April 07, 2006

ரணம்

உனக்காக
என் சுயத்தை எல்லாம் இழந்தது
போதுமென்று நினைக்கிறேன்.

உனக்கு
உன் வாழ்தலின் மீது
பற்றுதல்.

அதற்காக
இன்னும் எத்தனை முறைதான்
ரணமான என் மனதின் மேல்
திரும்பத் திரும்ப
பிறாண்டுவாய்...!

உன்
ஆசைகளின் வடிவங்களாய்
நீண்டிருக்கும்
கோரப் பற்களையும்
கூரிய நகங்களையும்
நீயுன்
ஆசை தீர்க்க முயலும் கணங்களில்
விரித்த போலித் திரைகளுக்குள்
மூடி மறைத்து வைத்தாலும்

மீண்டும் மீண்டும் அவை
கோரமாக எனை நோக்கி
போதும்...!
இனியும் பிறாண்டாதே!
இழப்பதற்கு என்னிடம்
இனி எதுவுமே இல்லை.

சந்திரவதனா
யேர்மனி
20.3.2002

No comments: